குறுஞ்செயலி உருவாக்கப் பயிலரங்கம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி

சித்திரை 26 – வைகாசி 02, 2047  / மே 09- மே15, 2016   கணித்தமிழ்ப்பேரவை தமிழ் இணையக்கல்விக்கழகம்

நீரோடு நிலம் காப்பவனை ஆட்சியில் அமர்த்து! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

தமிழினத்தின் பொற்காலம்! வாரங்கள் ஒன்றிரண்டு மட்டும் தான் உள்ளதடா, ஊரெங்கும் பரப்புரை ஒளிவேகம் எடுக்குதடா, கூரம்பாய் சிந்தனையை நீ கொஞ்சம் தீட்டிடடா, பாரங்கள் தீர்ப்பவர்கள் யாரென்று தேர்ந்திடடா! வீரங்கொண் டிதுவரையில் வசனங்கள் பேசியவர், கோரப்பல் சிரிப்பாலே கொடுங்கோலாய்ச் சீறியவர், வேரின்றி வீழ்கின்ற மரம்போலுன் காலடியில், பேரன்புச் சாயமிட்டு வீழ்வார்கள் புறந்தள்ளடா! ஈரங்கொண் டுள்ளத்தில் எரிமலையாய் வெடிப்பவனை, மாரெங்கும் தமிழனென்னும் பெருமிதத்தில் திளைப்பவனை, பாரெங்கும் தமிழகத்தின் பெருமைகளை வளர்ப்பவனை, நீரோடு நிலம் காக்கப் போராடும் நல்லவனை, யாரென்ன சொன்னாலும் தடுமாற்றம் இல்லாமல், ஆராய்ந்து பார்த்தபின் ஆட்சியில்…

அம்மிக்கல் தமிழனும், ‘ஆட்சி’ என்னும் மிளகாயும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

அம்மிக்கல் தமிழனும், ‘ஆட்சி’ என்னும் மிளகாயும்! அவலங்கள் ஆயிரம் அரங்கேற்றி, மக்களின் கவனத்தை வேறிடம் திசைமாற்றித் துணிவுடன், எவருக்கும் அஞ்சாமல் பாதகம் செய்வோரை, ஆண்டாண்டு காலமாய் ஆட்சியில் ஏற்றி, அடையாளம் தெரியாமல் போகின்ற தமிழா! அடிமைக்கும் அடிமைபோல் முதுகுத் தண்டுடைந்து, அல்லல்கொண் டழிவதிலே ஆனந்தம் கண்டாயோ? அடைகாக்கும் கோழிகூட அன்னியரைக் கண்டால், அடையாளம் கண்டுடனே தற்காத்துக் கொள்ளும்! அரைநூறு ஆண்டுகளைக் கடந்த பின்னும்கூட, அம்மிக்கல் போல்நீயும் அசையாமல் இருந்தால், அன்றாடம் மிளகாயை அரைத்துந்தன் தலைமீது, ‘ஆட்சி’ என்னும் பெயரிலே பூசுவார்கள் என்றும்! அறிவுக்கண் திறந்துந்தன்…

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200: இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175  தொடர்ச்சி)   காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200   செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் : 24. பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம் 8.2   சில பகல் கடந்து சென்று செந்தமிழ்த் திருநாடு எய்தி – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் : 25. காரைக்கால் அம்மையார் புராணம் : 43.1   அந் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து…

வாக்குச் சீட்டு காகிதமா ? ஆயுதமா ? – இரவி கல்யாணராமன்

வாக்குச் சீட்டு காகிதமா? ஆயுதமா? நெஞ்சைப் பிழிந்து கண்ணீர் மல்கக் கெஞ்சிக் கேட்கிறேன் அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் அடிமையாகி வீழ்ந்தது போதும் கொஞ்சம் நிமிர்ந்து நோக்குங்கள் எங்கும் உங்கள் குரலொலிக் கட்டும் தானம் இலஞ்சம் மறுத்து விடுங்கள் – தன் மானம் காக்க வாக்களியுங்கள் நேர்மை, துணிவு, பணிவெல்லாம் தேர்வு செய்து வாக்களியுங்கள் உங்களுக் காக உழைப்பேன் என்று வேலை கேட்டு வருகிறார்கள் வேட்பாளர்களாய் வீதிதோறும் வாக்கு கேட்டு வருகிறார்கள் பரப்புரையை நிறுத்தி விட்டுச் சிக்கல்களைக் கேட்கச் சொல்லுங்கள் அடக்கமாக வரச் சொல்லுங்கள்…

‘வட்டுக்கோட்டை தீர்மானம் 40′ : தமிழ்த்தேசியக்கருத்தரங்கு, செருமனி

‘வட்டுக்கோட்டை தீர்மானம் 40′ யேர்மனியில் தமிழ்த் தேசியக் கருத்தரங்கு – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை. ‘ வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதன் 40ஆவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு சிறப்பு பெற்றுள்ளது. தந்தை செல்வநாயகம் தலைமையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் விடுதலைத் தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிலையான தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும்…

மதி படைத்த யானை! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதி படைத்த யானை   குள்ளநரிகள் கள்ளவெறியில் தேர்தல் மணியை அடிக்குதாம், குருட்டு மறிகள் அந்த ஒலியில் பழசையெல்லாம் மறக்குதாம், குருதி வெறியில் நரிகளோடு கழுதைப்புலிகள் சேருதாம், குற்றுயிராய்க் குலையுயிராய் மறிகள்சாகு மென்றறிந்து, கொல்லும் அலகுக் கழுகுகளும் ஆசையோடு பறக்குதாம்! உள்ளம் குமுறிக் கண்டவர்கள் என்னசொல்லித் தடுத்த போதும், உண்மை அறியும் ஆற்றலின்றி ஊனமறிகள் சிரிக்குதாம்! மறிகளுக்கு அறிவையூட்டி, நல்வழியைக் காட்ட, மதிபடைத்த யானைஒன்று, தரை நடுங்க வருகுதாம்! தமிழ் நலம்பெருக்க வருகுதாம்! தன் நலம்மறந்து வருகுதாம்! தேர்தல் களம்வெல்ல வருகுதாம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22 தொடர்ச்சி) 23 இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23   அண்ணாவின் சிறப்பு   அறிவுடைய ஒருவரை அயல்நாட்டவரும் மதித்துப் போற்றுவர் என் பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்றாகும். கற்போர்க்குச் சென்ற இடமொல்லாம் சிறப்பு என்னும் முதுமொழி உண்மையான்றோ? ஞாயிற்றின் ஒளியை மறைப்பவர் இஞ்ஞாலத்தில் எவரும் உண்டோ? இலர் என்று கூறலாம். ‘           அறிவுடை ஒருவரை அயலரும் போற்றுவர்             ஞாயிறு தன்னை நற்குடை மறைக்குமோ’ 58 ஐந்து நாட்கள் அன்புமிக்க தோழராய் விளங்கினார்…

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 இன் தொடர்ச்சி) [இனிவரும் பகுதிகளில் கொழும்பு நான்காம் மாடியில் தான் எதிர்கொண்ட  இன்னல்களையும், தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் தான் மேற்கொண்டு வரும் பணிகளையும் விவரிக்கின்றார். தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமையான இன அழிப்பிற்குப் பன்னாட்டு நீதி உசாவலின் (விசாரணையின்) மூலமே தீர்வு கிட்ட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துவதோடு, உள்நாட்டு உசாவல் (விசாரணை) எந்தப் பயனையும் தராது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறுகின்றார். ‘ஈழமுரசு’ இதழுக்காக அவரைச் செவ்வி கண்டவர் கலாநிதி இர.சிறீகந்தராசா.] இர.சிறீகந்தராசா: நீங்கள் கிளிநொச்சி தடுப்பு…

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175: இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 126-150 தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175   செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 325.2 ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால் – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 326.3 மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச் – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22….

தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல் – முள்ளிவாய்க்கால் பேரவல 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்

  மே 18 அன்று, முள்ளிவாய்க்காலை நோக்கிப் பெரும் மக்கள் கூட்டமாக திரண்டு வாருங்கள். இனப்படுகொலை நடத்தப்பட்ட மண்ணில் நின்றுகொண்டு, தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோருவோம். வவுனியா மக்கள் குழு, முல்லைத்தீவு மாவட்ட  மக்கள் உரிமைக்கான அமையம், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கங்கள் (FSHKFDR – Tamil Homeland)   கூட்டாக அறைகூவல் ! கூட்டு ஊடக அறிக்கை: மே 18 அன்று, முள்ளிவாய்க்காலை நோக்கிப் பெரும் மக்கள் கூட்டமாக திரண்டு வாருங்கள்! இனப்படுகொலை நடத்தப்பட்ட மண்ணில்…