தேர்தல் சீர்திருத்தம் – தஞ்சை இறையரசன்

தேர்தல்  சீர்திருத்தம் தேர்தல் நெருங்கிவிட்டது; சாலைகள் போடுகிறார்கள்; ஊர் ஊராக தெருத்  தெருவாக மக்களைச் சந்திக்கிறார்கள்; குடிசைக்குள் நுழைந்து கிழவிகளோடு படம்  எடுத்துக் கொள்கிறார்கள். தேநீர்க்கடைக்காரர் “இனி வருசம் ஒரு தேர்தல் வந்தாலும் நல்லதுதான்; தேர்தல் வரும் என்றதும் உடனே சாலை போடுகிறார்களே!” என்றார். பால் ஊற்ற வந்த உள்ளூர் ஆசிரியர் சொன்னார்: “இந்தத் தெருச் சாலை முன்று முறை போட்டதாச் சொல்லிப் பங்குபோட்டுக்கொண்டார்கள். அதிலே ஆளுக்குக் கொஞ்சம்பணம் போட்டு இப்ப இந்தச் சாலை!” “எவ்வளவு பெரிய பணக்காரர்களும் சேற்றிலே காலை வைத்துக் குடிசையிலே…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 6. நல்லினஞ் சேர்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 5 இன் தொடர்ச்சி) 6. நல்லினஞ் சேர்தல் நன்றெலாந் தருவது நல்லினத் தொடர்பே. நல்லவர்களின் நட்பு நன்மைகளை எல்லாம் தரும். நல்லவர் மெய்ந்நிலை நண்ணி நிற்போர். நல்லவர் என்பவர் உண்மையைச் சார்ந்து நிற்பவர்கள். அகத்துற வுற்றுமெய் யறிந்து நிற்போர். உண்மையைப் புரிந்து பற்றற்ற உள்ளத்துடன் இருப்பவர்கள். தவமு மொழுக்கமுந் தாங்கி நிற்போர். தவத்தையும் நல்லொழுக்கத்தையும் காத்து நிற்பவர்கள் . நன்னினைப் புரைசெயன் மன்னி நிற்போர். நல்ல நினைப்பு, சொல், செயல் மூன்றிலும் நிலைத்து நிற்பவரே நல்லினத்தார். உலகிய லெல்லா முணர்ந்து…

எங்கள் சமஉ – முனைவர் க.தமிழமல்லன்

எங்கள் சமஉ எங்கள் சமஉ இணையே  யற்றவர்! தங்கக் கடத்தல் தலைவர்! மாற்றான் மனைவியைக் கைப்பிடித்து மகளையும் மணந்தவர்! மனைவணி கத்தில் மாபெரும் கொள்ளையர்! ஒருமனை காட்டி இருவர்க்குப் பேசி! உருப்படி யாக உயர்த்தி விற்பவர்! காலில் விழுவதைக் கைகழுவி விட்டவர்! காலைக் காட்டிக் கவிழ்ந்திடச் சொல்லுவார்! மற்றவர் பணத்திலே பதாகை நட்டவர்! கற்றவர் நல்லவர் கறையிலா அறிஞரைப் பார்த்தால் பதறுவார்! வேர்த்துத் தம்மின் அறைக்குள் பதுங்குவார்! அண்ணன் தம்பி, கறைமது விற்பவன், காலைச் சொறிபவன், தேடித் தேடித் திறத்தைப் போற்றி விருதுகள் வழங்குவார்!…

15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 – ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் காந்தி ஊரகப்பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 மாநாட்டில் பங்கு பெற  ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) (15ஆவது) உலகத் தமிழ் இணைய மாநாடு ஆவணி 24,25&26, 2047 / 2016 செப். 9,10,11 ஆகிய நாள்களில் திண்டுக்கல் காந்தியூர் ஊரக (கிராமிய)ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள து  . 2016 மாநாட்டின் முதன்மைத் தலைப்பாகக்  “கணிணியெங்கும் தமிழ்! கணிணியெதிலும் தமிழ்!” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில்…

யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியல் கல்லூரி, முத்தமிழ் விழா 2016

வீரசங்கிலி முத்தமிழ்விழா மலர் வெளியீடு சித்திரை 24, 2047 / மே 07, 2016 காலை 8.30   தரவு; பாலசிங்கம் பாலகணேசன்

முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி – இலக்குவனார் திருவள்ளுவன்

முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி     வழக்கமாக இரு கட்சிகளுக்கு வாக்களிப்போரில் பலரிடம் மாற்று எண்ணம் தோன்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு முன்பும் இத்தகைய எண்ணம் தோன்றி, ஆனால், நம்பிக்கையின்றி முதன்மைக்கட்சிகளில் ஒன்றிற்கே வாக்களித்தனர். இந்த முறை, வெற்றி பெறுவார்களா  என எண்ணாமல் மக்கள் மன மாற்றத்தை முதலிரு கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவாவது மாற்றி வாக்களிக்க எண்ணியுள்ளார்கள். இந்த மாற்று எண்ணத்தை அறுவடை செய்வதில் முதலிடம் மக்கள் நலக்கூட்டணிக்கு உள்ளது.   எல்லாக் கட்சிகளும் மாறிமாறி, முதலிரு கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு இப்பொழுது…

இலங்கை வேந்தன் கல்லூரியின் 5 நாள் இயல் இசை நாடக விழா புதன்கிழமை தொடங்கும்

இலங்கை வேந்தன் கல்லூரியின்  5 நாள் இயல் இசை நாடக விழா புதன்கிழமை  தொடங்கும்  யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியின் இயல் இசை நாடக விழா சித்திரை 21, 2017 / மே 04  புதன்கிழமை அன்று  தொடங்குகின்றது. தொடாந்து ஐந்து நாட்களுக்கு யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகில் நீராவியடிப் பிள்ளையார் கோவிலை இணைக்கும் கல்லூரி வீதியில் உள்ள இந்த மண்டபத்தில் இடம்பெறவுள்ள கலைவிழா மூன்றாவது தடவையாக இடம்பெறுகின்றது. நுழைவு இலவசம் எனவும் யாழ். கலைஞர்களின் முயற்சிகளில் பங்கேற்று ஆதரவு நல்குமாறும் ஏற்பாட்டாளரான இலங்கை…

தாழ்த்தப்பட்ட தமிழினம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

தாழ்த்தப்பட்ட தமிழினம்! உயர்ந்தவ ரென்றும், தாழ்ந்தவ ரென்றும், உனக்குள் பகைமையை ஊதி வளர்த்து, இயன்ற வரையினில் திருடிப் பொருள்சேர்க்க, இலக்குகள் வைத்துச் செயல்படும் கூட்டத்தை, வியந்து பாராட்டி, வாய் உலரப் பேசி, வறண்ட சுனைபோல வாடும் தமிழா! பயந்து பயந்து நீ வாழ்ந்தது போதும், பணிந்து குனிந்து நெஞ்சம் பாழ்பட வேண்டா. அயர்ந்து கண்தூங்கி அழிந்தது போதும், அடர்ந்த அமிலமாய்ப் பொங்கிட வேண்டும்! இயங்கித் துணிவோடு களத்தில் நம்முடன், இறங்கிச் செயலாற்றி இன்னல் களைந்திட, முயன்று முனைப்புடன் முன்வரும் ஒருவனை, முதல்வன் ஆக்கினால் மாற்றம்…

உன்பிள்ளை குட்டிகளைக் காப்பதுன் பொறுப்பு! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

உன்பிள்ளை குட்டிகளைக் காப்பதுன் பொறுப்பு! சண்டாளக் காசுவந்து செந்தமிழர் ஒற்றுமையைத், துண்டாடிக் கூசாமல் வெந்தழித்து நாசமாக்க, வண்டாடுஞ் சோலைகளும் வாவிகளும் செத்துவீழ, அன்றாடச் சோற்றுக்கு அல்லாடித் திரிந்தாலும், பங்காளிச் சண்டையிலே பகுத்தறிவை இழந்து, இரண்டாக நிற்கின்ற என்னன்புத் தமிழா! குண்டூசி அளவேனும் சிந்தித்துப் பாரடா! முண்டாசுக் கவிஞன் சொன்ன சொற்களை மறந்தாய், மண்டூகப் பேய்களுக்கு வாக்களித்து ஒழிந்தாய்! திண்டாடிச் சீரழியும் தமிழினத்தின் நிலைமைக்கு, என்றேனும் காரணம்யார் என்றெண்ணிப் பார்த்தாயா? வெண்டாக உடல்வெடித்து ஓடாகத் தேய்ந்தாலும், என்போடு சதையொட்டி கூடாக ஆனாலும், “என்பாடு” இதுவல்ல என்று…

இக்கரைக்கு அக்கரை பச்சை! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

இக்கரைக்கு அக்கரை பச்சை! இக்கரைக்கு அக்கறை பச்சையென்று எண்ணியே, இக்கறை படிந்து நிற்கும் கட்சிகளை நம்பியே, திக்கினை இழந்து தமிழர் நட்டாற்றில் தவிக்கிறோம்! சக்கரைக்குள் நஞ்சினை மறைத்து வைத்து ஊட்டியே, சிக்கலின்றித் தமிழனின் சிரம் அறுக்கும் துணிவுடன், மெத்தனத் தனத்துடன் வலம்வரும் பகைவரை, உக்கிரக் கொளுந்துவிட் டுதித்திடுஞ் செந்தீயிலே, இட்டழிக்குஞ் சக்திவாய்ந்த தமிழனுக்குத் தேர்தலில், மொத்தமாக வாக்களித்துத் தலைவனாக ஆக்குவோம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதிமலர் வாடாமல் மைவிரல் வாள்வீசு! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதிமலர் வாடாமல் மைவிரல் வாள்வீசு! மழலையர் பாலுக்கு அழுது ஏங்க, மறுசிலர் மதுவினால் வயிறு வீங்க, முதியவர் நோய்நீக்கும் மருந்து வாங்க, முடியாமல் முதுமையில் சுருண்டு தூங்க, முடைநாற்ற அரசியல் செழித்து ஓங்க, மங்கையர் மனத்துயர் மேலும் ஓங்கும்! மண்குடிசை வீட்டுக்குள் பாம்புகள் ஓட, மாளிகை முற்றத்தில் தோகைமயில் ஆடும்! மழைவளம் இல்லாமல் மண்வயல் வாட, மந்திரிகள் வீட்டிலோ பொன்னூஞ்சல் ஆடும்! மனநலம் திரிந்துலவி மேன்மக்கள் வாட, மணிமுடி தரித்தவர் மீத்தேனை நாட, மட்கலம் போலுடைந்து நொறுங்கும் தமிழா! மதிமலர் வாடாமல் எழுந்து வா!…