நாகப்பட்டினம் தமிழ்ச்சங்கத்தின் முப்பெரு விழா
ஆவணி 03, 2046 / ஆகத்து 28, 2015 ஒன்பதாம் ஆண்டுத் தொடக்க விழா மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா கண்ணதாசன் பிறந்தநாள் விழா தொல்.திருமாவளவன் மறை. தாயுமானவன்
இலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்கள்!
தமிழினப் பகைவர்களை வீழ்த்துங்கள்! இலங்கையில் ஆனி 11, 2046 / சூன் 26, 2015 அன்று அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன 14 ஆவது நாடாளுமன்றத்தைப் பதவிக் காலத்திற்குப் பத்துத் திங்கள் முன்கூட்டியே கலைத்தார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆடி 32, 2016 / ஆகத்து 17, 2015 திங்கள் கிழமை நடைபெறுகிறது. அமைய உள்ள 15 ஆவது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்கள் தெரிவாகஉள்ளனர். இத்தேர்தலில் ஈழ வாக்காளர்கள் சலனங்களுக்கு ஆட்படாமல் இனக் கொலையாளிகளையும் இனப்பகைவர்களையும் வீழ்த்த வேண்டும். இராசபக்சேவை வீழ்த்தியதுபோல்…
வைகை அனிசு தாயார் மும்தாசு பேகம் மறைவு
‘அகரமுதல’ இதழின் சிறப்புச் செய்தியாளரும் கட்டுரையாளரும், தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உடையவருமான தமிழ்நாடு இதழ்கள் ஊடகச் செய்தியாளர்கள் ஒன்றியத்தின் தேனி மாவட்டச் செயலாளரும், இதழ்கள், தொலைக்காட்சிகளின் செய்தியாளரும், வரலாற்றுக் கட்டுரையாளரும் கல்வெட்டு ஆய்வாளரும் தொல்லியல் சார் படைப்பாளருமான வைகை அனிசு அவர்களின் தயாரும் காலஞ்சென்ற ஆசிரியர் அப்துல்வகாப்பின் மனைவியுமான ஓய்வு பெற்ற ஆசிரியர் மும்தாசு பேகம் அவர்கள் இன்று (ஆடி 31, 2046 / ஆகத்து 16, 2015) காலை 8.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவருடைய உடல் நல்லடக்கம் தேவதானப்பட்டி…
வகுப்புரிமை நாள் (14.8.1950) சிந்தனை…. இழிவுக்குரியதல்ல இட ஒதுக்கீடு!
அகில இந்திய பா.ச.க. தலைவர் திரு.அமித்சா கலந்துகொண்ட மதுரை மாநாடு முதன்மை வாய்ந்தது என்ற பீடிகையோடு ‘தி இந்து’ (தமிழ்) ஏட்டில் வெளி வந்துள்ள கட்டுரை (12.8.2015) நயன்மைக்கும்(நியாயத்துக்கும்), சமூகநீதிக்கும் எதிரான வித்துகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. எந்த இட ஒதுக்கீட்டின் பெயரால் சமூகநீதியை நிலைநாட்ட முயல்கிறோமோ அதே இட ஒதுக்கீடு அவர்களைக் காயப்படுத்தவும் செய்கிறது. “சாதி ஒழிப்பைப்பற்றி வாய் கிழியப் பேசும் நம்முடைய அரசமைப்புதான் மறுபுறம் தொடக்கப் பள்ளிகளிலேயே உன் சாதி என்ன? என்று பகிரங்கமாகக் கேட்டு வடுவை மேலும் கிளறிக்…
பேரா.அ.இராமசாமி, நூல் வெளியீடும் திறனாய்வும் – வெள்ளி விழா நிகழ்வு
ஆவணி 02, 2046 / ஆக.19, 2015 மு.ப.11.45 – பி.ப.04.00 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 023. ஈகை
(அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல் தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 023. ஈகை ஏழையர்க்கு, வேண்டியன எல்லாம், கொடுக்கும் பயன்கருதாத் தனிக்கொடை. வறியார்க்(கு)ஒன்(று) ஈவதே ஈகை,மற்(று) எல்லாம், குறியெதிர்ப்பை நீர(து) உடைத்து. எதையும் எதிர்பார்க்காமல், ஏழையர்க்குக் கொடுப்பதே, ஈகை ஆகும். 222.நல்ஆ(று) எனினும், கொளல்தீதே; மேல்உலகம் இல்எனினும், ஈதலே நன்று. நல்செயலுக்காக் கொள்வதும் தீதே; மேல்உலகு இல்எனினும், கொடு. 223. “இலன்”என்னும், எவ்வம் உரையாமை ஈதல், குலன்உடையான் கண்ணே உள. “இல்லாதான்”எனச் சொல்லும் முன்னர் ஈதல்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 022. ஒப்புரவு அறிதல்
(அதிகாரம் 021. தீ வினை அச்சம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல் பொதுநல உணர்வோடு, இருப்பதைப் பகிர்ந்து கொடுத்துதவும் பேர்அறம். 211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு), என்ஆற்றும் கொல்லோ உலகு? எதிர்பார்ப்பைக் கருதாத மழைக்கு, இவ்உலகு, எந்நன்றி செய்யுமோ? 212. தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம், தக்கார்க்கு, வேளாண்மை செய்தல் பொருட்டு. உழைத்துப் பெற்ற பொருள்எல்லாம், தகுதியர்க்கு எல்லாம் உதவவே. 213. புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல்அரிதே, ஒப்புரவின் நல்ல பிற. பொதுக் கொடையைவிடப்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 021. தீ வினை அச்சம்
(அதிகாரம் 020. பயன் இல சொல்லாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 021. தீ வினை அச்சம் தீயைப் போன்று சுட்[டு]அழிக்கும் தீய செயல்களுக்கு அஞ்சுதல். 201. தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர், தீவினை என்னும் செருக்கு. தீயோர், தீச்செயல்களுக்கு அஞ்சார்; தூயோர் அவற்றிற்கு அஞ்சுவார். 202. தீயவை, தீய பயத்தலால், தீயவை, தீயினும் அஞ்சப் படும். தீயைவிடத், தீமைதரும் தீய செயல்களைச் செய்தற்கு, அஞ்சுக. 203. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப, தீய, செறுவார்க்கும் செய்யா விடல்….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 020. பயன் இல சொல்லாமை
(அதிகாரம் 019. புறம் கூறாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 020. பயன் இல சொல்லாமை எதற்குமே பயன்படாத வீண்சொற்களை என்றுமே சொல்லாத நல்பண்பு. 191. பல்லார் முனியப், பயன்இல சொல்லுவான், எல்லாரும் எள்ளப் படும். வெறுப்பினை ஊட்டும் வீண்சொற்களைச் சொல்வாரை, எல்லாரும் இகழ்வார். 192. பயன்இல, பல்லார்முன் சொல்லல், நயன்இல, நட்டார்கண் செய்தலின் தீது. நண்பரிடம் விரும்பாதன செய்வதைவிட, வீண்சொல் கூறல் தீது. 193. நயன்இலன் என்பது சொல்லும், பயன்இல, பாரித்(து) உரைக்கும் உரை….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 019. புறம் கூறாமை
(அதிகாரம் 018. வெஃகாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 019. புறம் கூறாமை ஒருவர் இல்லாத பொழுது அவரைப் பற்றிக் கோள்கூறாமை. 181. அறம்கூறான், அல்ல செயினும், ஒருவன், புறம்கூறான் என்றல் இனிது. அறத்தைக் கூறாது, தீமைகளைச் செய்யினும், கோள்கூறாமை இனிது. 182. அறன்அழீஇ, அல்லவை செய்தலின் தீதே, புறன்அழீஇப், பொய்த்து நகை. பின்னே பழிப்பும், முன்னே பொய்ச்சிரிப்பும், அறஅழிப்பினும் தீது. 183. புறம்கூறிப், பொய்த்(து)உயிர் வாழ்தலின், சாதல், அறம்கூறும் ஆக்கம் தரும். பழிசொல்லும் பொய்வாழ்வைவிட, இறத்தல்,…
உழைப்பு உயர்வுக்கு அழைப்பு – வெ. அரங்கராசன்
உழைப்பு உயர்வுக்கு அழைப்பு…. உழைப்பு ஊக்கத்தின் விழிப்பு…. உழைப்பு பிறப்பின் ஓர்உறுப்பு…. உழைப்பு சமுதாயப் பொறுப்பு…. உழைப்பு இல்லாப் பிறப்பு, இறப்பு…. உழைப்பு இன்றி இல்லை உயர்வு…. உழைப்பு தருமே உடல்நலக் காப்பு…. உழைப்பு ஒப்பிலா எதிர்காலச் சேமிப்பு…. உழைப்பு இன்றேல், எல்லாரிடமும் பல்இளிப்பு…. உடன்வந்து உட்கார்ந்து கொள்ளும் அவமதிப்பு…. உழையார்க்கு உண்ணும் உரிமையும் பறிப்பு…. உலகமும் அளிக்காது மன்னிப்பு; மறப்பு…. உழைப்பு இல்லாத இருப்பு, தப்பு…. உழைப்பு நிறைந்தால் நிறையாது கொழுப்பு…. உழையார் உடலில் நோயின் படையெடுப்பு…. உழைப்பு மலர்ந்தால் பற்பல படைப்பு…….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 018. வெஃகாமை
(அதிகாரம் 017. அழுக்காறாமை தொடர்ச்சி) 01அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 018. வெஃகாமை எந்தக் காரணத்தாலும் பிறரது பொருள்களைப் பறிக்க விரும்பாமை. நடு(வு)இன்றி நல்பொருள் வெஃகின், குடிபொன்றிக், குற்றமும் ஆங்கே தரும். பிறரது பொருளைப் பறிக்க விரும்பின், குடிகெடும்; குற்றம்மிகும். படுபயன் வெஃகிப், பழிப்படுவ செய்யார், நடுஅன்மை நாணு பவர் வருபயன் விரும்பிப், பழிப்புச் செயல்களை நடுநிலையார் செய்யார். சிற்றின்பம் வெஃகி, அறன்அல்ல செய்யாரே,…