கலைச்சொல் தெளிவோம் 36 : உயிர்மி – cell

உயிர்மி-cell நம் உடலில் கோடிக்கணக்கான நுண்ணறைகள் அமைந்துள்ளன. சிறு அறை என்னும்பொருளில்  இலத்தீனி்ல் செல்லுலர் என்று அழைத்தனர். இதை இராபர்ட்டு ஊக்கி என்னும் அறிஞர்(1560) சுருக்கிச் செல் என்று குறிப்பிட்டார். அதனை நாம் தமிழில் பெரும்பாலும் செல் என்றே குறிப்பிடுகிறோம். நுண்ணறை என்றும் உயிரணு என்றும் ஒரு சாரார் அழைத்து வருகின்றனர். செந்து என்றும் முன்பு உயிரணுவை அழைத்துள்ளனர்(பிங்கல நிகண்டு பா.3561). செங்கற்களை அடிப்படையாகக் கொண்டு கட்டடம் எழுப்பப்டுகின்றது. அது போல் உயிர்(209) உறையும் உடல் கட்டுமானத்திற்கு அடிப்படையான இதனை உயிர்மி என்று சொல்லலாம்….

நாள்தோறும் நினைவில் 8 : வெளி உலகை உள்வாங்கு – சுமதி சுடர்

வெளி உலகை உள்வாங்கு பல மொழி கல் சமூக அறிவியலை அறி பல தொழில் பயில் அறிவியலைத் தெரிந்துகொள் பொது அறிவைப் பெறு நிர்வாகத்தை கற்றுக்கொள் ஐம்புலங்களில் உணர் நடு நிலையோடு ஏற்றுக்கொள் பொழுதுபோக்கில் இன்புறு துறவுநிலை நில்  – சுமதி சுடர், பூனா      

கருவிகள் 1600 : 281-320 : இலக்குவனார் திருவள்ளுவன்

கருவிகள் 1600 : 281-320 : இலக்குவனார் திருவள்ளுவன் 281. உள்ளகவரைவி – tomograph:  குறிப்பிட்ட  திசு அடுக்கு சிறப்புக் கதிர் வீச்சு வரைவி எனச் சொல்லப்படுவது கலைச்சொல்லாக அமையாது. திசு என்பதைத் தமிழில் மெய்ம்மி எனச் சொல்ல வேண்டும். கூறு கூறாக ஆராய உதவுவது என்றாலும் ‘டோமோ’ என்பதற்குத் தளம் என்னும் நேர்பொருளில் சிலர் கையாள்கின்றனர். அவ்வாறு இதன் அடிப்படையில் தளவரைவி என்னும்பொழுது தரைத்தளம் என்பதுபோல் வேறுபொருள் வந்துவிடுகின்றது. உடலின் உட்பகுதியைக் கதிர்வீச்சுமூலம் பதியும் வரைவி. எனவே, உள்ளகவரைவி எனலாம். 282. உளநிலை…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14: தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை   மாணவர் ஆற்றுப்படை என்னும் இக்கவியைப் பாடியவர் காலஞ் சென்ற பேராசிரியர் இலக்குவனார் ஆவர். செந்தமிழ்ப் பற்றும் நுண்மாண் நுழைபுலமும் நிரம்பப் பெற்றவர். தம் வாழ்க்கையைப் பெரிதெனக் கருதாதவர். தமிழ் மொழியின் வளர்ச்சியே தம்முடைய வாழ்வெனக் கருதி வாழ்ந்தவர். இடுக்கண் பல உற்ற போதும் எவர்க்கும் அஞ்சாது ஏறுபோல் வாழ்ந்து காட்டியவர். வறுமையிலும் வாய்மைநெறி போற்றிய செம்மல் அவர். பெரியார் ஈ.வே. ராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கையைப் பெரிதெனப் போற்றியவர். எழுத்திலும் பேச்சிலும்…

பன்னாட்டு வேட்டி நாள் கருத்தரங்கம் – விண் தொலைக்காட்சி : பங்கேற்கிறேன்

இன்று மார்கழி 22,2045 / திசம்பர் 06, 2014 காலை 11.00 – 12.00 மணி நேரத்தில் வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில் பன்னாட்டு வேட்டி நாளை முன்னிட்டு நடைபெறும் தமிழ்ப்பண்பாடு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். http://wintvindia.com. மின்வரியில் இணையத்திலும் காணலாம்.   வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன்.   நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

கலைச்சொல் தெளிவோம் 35 : தாழி மரம் – bonsai

தாழி மரம் – bonsai போன்சாய் (bonsai) என்றால் குறுஞ்செடி வளர்ப்பு, குறுமர வளர்ப்பு என மனையறிவியலில் கையாளுகின்றனர். பொருள் சரியாக இருந்தாலும் சங்கச் சொல் அடிப்படையில் நாம் புதுச் சொல் உருவாக்குவது நன்றல்லாவா? பானையைக் குறிக்கும் தாழி என்னும் சொல் சங்க இலக்கியங்களில்   எட்டு இடங்களில் கையாளப்பட்டுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்க வரி பின்வருமாறு ஆகும். தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்தி (குடவாயில் கீரத்தனார்ர : அகநானூறு 129: 7) தாழியாகிய மட்பாண்டத்தில் வளர்க்கப்படும் பருத்திச் செடியை இது குறிக்கிறது. மண்தொட்டிகளில் சிறு செடிகளை…

கலைச்சொல் தெளிவோம் 34 : துயின்மை – hibernation

34 : துயின்மை-hibernation இன்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க் (பெரும்பாணாற்றுப்படை : 440) இன்றுயில் வதியுநற் காணா டுயருழந்து (முல்லைப் பாட்டு : 80) கம்புட் சேவல் இன்றுயில் இரிய (மதுரைக்காஞ்சி : 254) வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும் (குறிஞ்சிப்பாட்டு: 242) ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின் (நற்றிணை : 87.2) இவைபோல் சங்க இலக்கியங்களில் 62 இடங்களில் துயில் என்னும் சொல்லும் 31 இடங்களில் துயில் என்பதன் அடிப்படையிலான சொல்லும் பயின்றுள்ளன. அவற்றுள் ஒன்று துயின்று என வரும் பின்வரும்…

கலைச்சொல் தெளிவோம் 33 : வலசை – migration

33 : வலசை – migration   இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்லும் பறவைகள் புலம் பெயர் பறவைகள்/transit birds எனப்படும். இவற்றை அயல் புலத்திலிருந்து வருவன, அயற்புலத்திற்குச் செல்வன என இருவகையாகப் பிரிப்பர். இடம் பெயராமல் தாய்மண்ணிலேயே தங்கும் பறவைகளும் உள்ளன.    மைகிரேசன் (migration) எனில் குடிப்பெயர்ச்சி எனத் தொல்லியல், வங்கியியல், பொருளியல் ஆகியவற்றிலும் புலப்பெயர்ச்சி என வேதியியல், தகவல் நுட்பவியல் ஆகியவற்றிலும் வலசைபோதல் என மீனியல், உயிரியல், காலநடைஅறிவியல் ஆகியவற்றிலும் புலம்பெயர்தல் என மனையியலிலும் சட்டவியலிலும் இடம்பெயர்தல் என அரசியலிலும்…

கலைச்சொல் தெளிவோம் 32 : புகைக்கொடி- comet

  32 :புகைக்கொடி– comet   இன்றைக்கு நாம் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படுவதன் கிரேக்கப் பெயர் கோமெட்(டு) (komete) என்பதாகும். இதிலிருந்தே காமெட் (comet) என்னும் ஆங்கிலப் பெயர் தோன்றியது. நீண்ட முடி என்பது இதன் பொருள். கிரேக்க அறிவியலாளர் அரிசுடாடில் (Aristotle) தலைமுடி போல் தெரிவதாகக் கூறி இதனை அப்பொருளில் முதலில் குறிப்பிட்டார். வால் போல் நீண்டுள்ள விண்பொருள் என்னும் பொருளிலேயே பலர் குறிப்பிடுகின்றனர்.   இதனைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என்றே அயல்நாட்டார் தொடக்கத்தில் கருதி வந்துள்ளனர். அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னரே…

கருவிகள் 1600 : 241-280 : இலக்குவனார் திருவள்ளுவன்

  241.  உப்புமானி –   salinometer/ salimeter/ salometer :  கரைசலில் உள்ள உப்பின் செறிவை அளவிடும் மின்கடத்திப் பயன்படுத்தப்படும் கருவி. நீர்ம உப்பியல்புமானி, நீர்ம உப்பியல்பு அளவி என உப்புக் கரைசலை நீர்ம உப்பு என்பதும் சரியான சொல்லாட்சி அல்ல. உப்புமானி எனலாம். 242. உமிழ் மின்னணு நுண்ணோக்கி – emission electron microscope 243. உமிழ்வு நிறமாலைமானி  – emission spectrometer 244.  உயர் நிகழ்வெண் மின்வலி மானி  – high-frequency voltmeter 245. உயர் பகுதிற மின்னணு நுண்ணோக்கி  …

இலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது!

இலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது!   வரும் மார்கழி 24 ,2045 / சனவரி 8, 2015 அன்று இலங்கையில் அரசுத்தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இலங்கையில் தலைவர் பதவிக்காலம் 6 ஆண்டுகள். எனவே 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் தேர்தல் நிகழ வேண்டும். ஆனால், இரண்டாம் முறையாக 2010 இல் தலைரவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொடுங்கோலன் இராசபக்சே எதிர்ப்புகள் வலுத்து வருவதால், முன்கூட்டியே தேர்தல் நடத்துகிறான்.   பொதுவாகத் தேர்தல் என்றால் தகுதியுடையவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டாமல் போகிறது. போட்டியிடுபவர்களில் குறைந்த…

கலைச்சொல் தெளிவோம் 31: கோளுதிரி – asteroid

கோளுதிரி – asteroid   விண்ணியலிலும் கணக்கியலிலும் அசுட்டிராய்டு/asteroid என்பதற்குச் சிறுகோள் என்றும் பொறிநுட்பவியலிலும் புவியியலிலும் குறுங்கோள் என்றும் குறிப்பிடுகின்றனர். இவற்றைச் சிறுகோள்கள் என்று சொல்வதை விட வேறு பொருத்தமான சொல்லால் அழைப்பதே பொருத்தமாகும். கோள் பற்றி 105 இடங்களிலும் கோள்மீன் 5 இடங்களிலும் சங்க இலக்கியங்களில் வருகின்றன.    உதிர்பு(4), உதிர்க்கும்(4), உதிர்த்த(20), உதிர்த்தலின்(1), உதிர்த்து(3), உதிர்தரு(1), உதிர்ந்த(6), உதிர்ந்தன(1), உதிர்ந்து(4), உதிர்ந்தென(1)உதிர்ப்ப(3), உதிர்பு(2), உதிர்வ(1), உதிர்வன(5), உதிர்வை(1), உதிர (22) என உதிர் தொடர்பான சொற்கள் உள்ளன. உதிர் + இ…