தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது
தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது இணையம் வழியாகத் தமிழ்ப்பணி ஆற்றுநர்க்கு ‘அகரமுதல’ சார்பில் இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக்கழகமும் இணைந்து இலக்குவனார் விருது வழங்க உள்ளன. மரபுத்தமிழில் பாடல்கள் எழுத ஊக்குவித்தும் கற்பித்தும் எழுதியும் சிலர் முகநூல் குழுக்கள் அல்லது பிற தளங்கள் வழித் தொண்டாற்றி வருகிறார்கள். பிழையின்றி எழுதுவதற்கு வழிகாட்டி நல்ல தமிழை வளர்க்கச் சிலர் உறுதுணையாக உள்ளனர். மிகச்சிலர் பிழையின்றியும் அயற்சொல், அயலெழுத்து கலக்காமலும் நல்ல தமிழில் எழுதி வருகின்றனர். சிலர் தமிழ் வளர்ச்சிக்காக வலைப்பூ அல்லது இணையத்தளங்கள் நடத்தி வருகின்றனர். சிலர்,…
மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே! ஈழமலர்ச்சிக்காகவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே! ஈழமலர்ச்சிக்காகவே! தமிழீழத்தை மனக்கண்களில் கண்டவர்கள்! தங்கள் நெஞ்சில் சுமந்தவர்கள்! மனக்கண்களில் கண்ட தமிழீழம் உருவாகும்; அங்கே ஈழத்தமிழ் மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தன்னுரிமையுடனும் தன்மதிப்புடனும் வாழ்வார்கள்; அடிமைத்தளையறுந்து, பட்ட துயரங்கள் மறைந்து, இன்னல்கள் நீங்கி, இன்பவாழ்வு வாழ்வர்; தமிழும் தனக்குரிய இடத்தை நாட்டிலும் உலகத்திலும் பெறும்; என்னும் நம்பிக்கையில், தங்கள் இன்னுயிரை நீத்தவர்கள் மாவீரர்கள்! இவர்களை வணங்குவது நமக்காகத்தான்! ஆம்! நமக்காக மறைந்தவர்களை – புகழால் வாழ்பவர்களை – நாம் வணங்குவது அவர்கள் கனவுகளை நாம்…
போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே! தமிழ்நாடான இலங்கை, ஒற்றை நாடாகவே மலர்ந்து தமிழினமும் இனஉரிமையும் இணைஉரிமையும் பெற்றுத் திகழும் என்னும் கனவு சிங்களர்களால் அழிக்கப்படத் தொடங்கிய நாளிலிருந்தே தமிழர்நாடு மலர வேண்டிய தேவையை இலங்கைத்தமிழர்கள் உணர்ந்தனர். அடக்குமுறைகளும் ஒடுக்கு முறைகளும் அவற்றிற்கு எதிரான தொடர் போராட்டங்களும் வாழ்க்கையாய் மாறின. விடுதலை விதைகள் பலரது உள்ளங்களிலும் ஊன்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே “தமிழீழம் தமிழர்களின் தாயகம்“ என்னும் மந்திர உண்மை ஈழத்தமிழர்களை வழிநடத்தியது. மூத்ததலைவர்கள் வழியில் போராட்டக் களத்தில் ஈடுபட்டாலும் தேவை உணர்ந்து விடுதலைப்படை…
சிகரம் தொடுவோம் – புத்தக வெளியீடு , மசுகட்டு
சிகரம் தொடுவோம் – புத்தக வெளியீடு வல்லமை வலைத்தளத்தில் 28 வாரங்களாக வெளிவந்த ‘சிகரம் நோக்கி‘ எனும் கட்டுரைகள், மணிமேகலை பிரசுர மேலாண்மை இயக்குநர் திருவாளர் இரவி தமிழ்வாணன் உதவியுடன் அழகிய புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதன் வெளியீட்டு விழா, ஓமான் தலைநகர் மசுகட்டில் சீரோடும் சிறப்போடும் கடந்த கார்த்திகை 04, 2018 : 20-11-2017 திங்கள் கிழமை மாலை நடைபெற்றது. ஓமனுக்கான இந்தியத்தூதர் மேதகு இந்திரமணி பாண்டே நிகழ்ச்சியைக் குத்துவிளக்கு ஏற்றி, நம் மரபுப் படித் தொடக்கி…
வவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்!
வவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்! தமிழர் தேசத்தின் இதயமாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்திச் சிறப்பிக்கின்ற – மதிப்பளிக்கின்ற ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2017’ எழுச்சி நினைவேந்தல், வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லச் சூழலில், வவுனியா மாவட்ட மக்கள் குழுவின் ஒழுங்கமைப்பில் திங்கள்கிழமை மாலை 6.00 மணிக்குக் கடைப்பிடிக்கப்படவுள்ளது. குறித்த…
தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 3/3 : சிறுமி பேரரசி முத்துக்குமார்
[தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 2/3 தொடர்ச்சி] தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 3/3 நல்வாழ்வுத் தொலைத்தகவல் (Health Telematics) இது மனிதனின் உடல் நலத்தைப் பேண உதவுகிறது. பொதுவாகத் தொலைமருத்துவம் அல்லது தொலை நல்வாழ்வு (tele-medicine or tele-health) எனவும் அழைக்கப்படுகிறது. நல்வாழ்வுத் தொலைத்தகவல், நல்வாழ்வு நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவுகிறது. நல்வாழ்வுத் தொலைத்தகவல் நுட்பத்தின் மூலம் உடல் எடை, மனித நல்வாழ்வு, குழந்தைப் பேறு போன்றவற்றை முறையாகக் கையாளலாம். மேலும் தொலைவிலுள்ள நல்வாழ்வுத் தகவல்கள், மருத்துவ வளர்ச்சி ஆகியனவற்றை அறிந்து பயன் பெறலாம்….
பெயரிடாத நட்சத்திரங்கள், நூல் வெளியீட்டு விழா , மும்பை
கார்த்திகை 09, 2048 – சனி – நவம்பர் 25, 2017 மாலை 6.00 மாதுங்கா, மும்பை ஈழப்பெண்போராளியின் கவிதைகள் பெயரிடாத நட்சத்திரங்கள், நூல் வெளியீட்டு விழா அன்புடையீர், வணக்கம். நிகழ்வுக்கு உங்கள் வாழ்த்துகளும் பங்களிப்பும் பெருமை சேர்க்கும் புதியமாதவி மும்பை பேச: 091 9969647854 இலெமூரியா அறக்கட்டளை
தமிழ் இளையோர் அமைப்பு – கற்க கசடற
2018 தமிழ் இளையோர் அமைப்பு கற்க கசடற தொல்காப்பியம் திருக்குறள் ஆத்திசூடி போட்டிகள் அறிவதற்கு 07427261785 அல்லது 07915379101 எண்ணுக்கு அழையுங்கள். சுசிதா / Sujitha
மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள் கரு உருவாவதில் இருந்து குழந்தையாகப் பிறக்கும் வரை இயற்கையாகவே பல இடையூறுகள் நேருகின்றன. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு தாக்குதல்களில் இருந்து தப்பித்தால்தான் நிறைவான நலமான மகப்பேறு நிகழும். இதனை முன்னைத் தமிழ் மக்கள் நன்கறிந்திருந்தனர். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இறைவனைப் போற்றிப் பாடும்பொழுது இத்தகைய இடையூறுகளில் இருந்தெல்லாம் பிழைத்து வந்தமைக்காக நன்றிகூறிப் பாராட்டுகிறார். மானுடப் பிறப்பினுள் மாதர் உதரத்து ஈனம்இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும மும்மதி…
வேண்டா வரன் கொடை! – சி. செயபாரதன்
வேண்டா வரன் கொடை! பேயும் இரங்குமாம் பெண்ணென்றால் ! கருப்பிணித் தாயோ கருவழிப்பாள் தான்விரும்பி ! – காயிலே பெண்கருவைத் தாயழித்தால் பின்னெங்கே ஆண்வருக்கம் ? கண்ணிரண்டும் போன கதை ! ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை சூழத்தீ இட்டது கண்ணகிக்கு ! – வாழாது மீண்டும் நகைச்சண்டை ! மேனியில்தீ தங்கைக்கு ! வேண்டாம் வரதட் சணை ! தாலிகட்ட நூறுபவுன் ! தாயாக்க வேறுபவுன் ! கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும் – வாலிப ஆண்மகனும்…
இரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது? நேர்மையாளர்களே விடையிறுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது? நேர்மையாளர்களே விடையிறுங்கள்! உத்தமம் (உலகத்தமிழ்த்தகவல் தொழில் நுட்ப மன்றம் – International Forum for Information Technology in Tamil – INFITT) என்னும் அமைப்பு தகவல்தொழில்நுட்பம் மூலமாகத் தமிழை வளர்ப்பதற்காகத் தோன்றிய அமைப்பு. 1997இல் முதல் தமிழ் இணைய மாநாட்டை நடத்தியிருந்தாலும் 2000இல்தான் முறையாக இவ்வமைப்பு வடிவம் பெற்றது. இதுவரை 16 தமிழ் இணைய மாநாடுகளை 5 நாடுகளில் நடத்தி 800க்கு மேற்பட்ட கட்டுரைகள் அரங்கேற்றியுள்ளது. எனினும் இவ்வமைப்பில் கணிநுட்பர்களுக்கு முதன்மை அளித்துத் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும்…
தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 2/3 : சிறுமி பேரரசி முத்துக்குமார்
(தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 1/3 தொடர்ச்சி) தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 2/3 இந்த ஆய்வு பயிற்சி ஆசிரியர்கள் தேவையான விவரங்களைப் பெற்றுக் கற்பித்தலில், தொலைத்தகவல்பயன்பாட்டினை வளர்த்துக் கொள்ள உதவியது மலேசியக் கல்வியில் தொலைத்தகவல் 21 ஆம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பம் படிநிலை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது தொலைத்தகவல். இதுவானது தொழில்நுட்பத்தையும் தகவல்களையும் இணைக்கும் மாபெரும் ஆற்றலாக விளங்குகிறது. கல்வித் துறையிலும் இதன் பயன்பாடு அளப்பரிய சேவையாற்றுகின்றது. மலேசியக் கல்விக் கொள்கைகளில் இதன் பயன்பாடு பல வடிவங்களில் செயலாக்கம்முதன்மை காண்கிறது….
