பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 – வித்தியாசாகர்
பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் 1/3 இணையத்திலும், இலக்கிய உலகிலும் பல்வேறு அன்பர்களைத் தன் சுவைஞர்களாகக் கொண்டு, தமிழ் மண்ணை விட்டுக் குவைத்தில் பணிசெய்யும் பொழுதும், தமிழிலக்கிய வானில் நட்சத்திரமாய் மின்னும் எழுத்தாளர், கவிஞர் திரு வித்யாசாகர் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட செவ்வி. ?. வணக்கம். குவைத்தில் இருந்து பணியாற்றும் நீங்கள், தமிழ்மொழியின் மீது அளவற்ற காதல் கொண்டுள்ளதற்கான பின்புலம் என்ன? …
இனமானப் புலி எங்கே? – காசி ஆனந்தன்
இனமானப் புலி எங்கே? இன்றிருந்த பகல்தனிலே ஞாயிறில்லை! இரவினிலும் நிலவில்லை! விண்மீன் இல்லை! இன்றெரிந்த விளக்கினிலே வெளிச்சம் இல்லை! எண்டிசையும் செடிகொடியில் பூக்கள் இல்லை! இன்றிதழ்கள் ஒன்றிலுமே முறுவல் இல்லை! இன்றெமது நாட்டினிலே பெரியார் இல்லை! எவர்தருவார் ஆறுதல்? இங் கெவரும் இல்லை! கோல்தரித்து நேற்றுலகைத் தமிழன் ஆண்டான்! கொற்றவனை அவனை இழி வாக்கி மார்பில் நூல்தரித்து மேய்ப்போராய் நுழைந்த கூட்டம் நூறு கதை உருவாக்கி “பிரம்ம தேவன் கால்தரித்த கருவினிலே தமிழன் வந்தான் காணீர் என்றுரைத்தமொழி கேட்டுக் கண்ணீர் வேல்தரித்து நெஞ்சில்…
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 – க.வி.விக்கினேசுவரன்
(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 கேரத்தீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எம்மைப் புறக்கணித்து மத்திய அரசு எமது வட மாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குவதன் உட்பொருள் என்ன? போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னரும் (சிங்களப்) படையினர் பல காணி (ஏக்கர்) நிலங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, அவற்றில் பயிர் செய்து…
‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – சென்னையில் நடைபெற்ற தமிழ் உலகச் சந்திப்பு!
‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – சென்னையில் நடைபெற்ற தமிழ் உலகச் சந்திப்பு! (புரட்டாசி 15, 2047 / 01-10-2016 அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள உமாபதி அரங்கில் உலகத் தமிழர் பேரவை நடத்திய ‘தமிழ் உலகச் சந்திப்பு’ நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஈழம் முதலான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்த் தேசத்தவர்களும், தமிழகம், ஆந்திரா, மகாராட்டிரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசத்துப் பற்றாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்; சிறப்பித்தனர். உலகத் தமிழர்…
துபாயில் சிறுநீரகப்பாதிப்புற்ற தமிழ்ச்சிறுவனுக்கு மருத்துவப் பொருளுதவி தேவை!
துபாய் மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்பினால் மருத்துவம் பெற்று வரும் தமிழகச் சிறுவன் சிகிச்சைக்கான கட்டணம் செலுத்த முடியாமல் வேலையில்லாமல் தவித்து வரும் தந்தை, உதவிட வேண்டுகோள் துபாய் : துபாய் மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்பினால் தமிழகச் சிறுவன் (இ)ரீகன் பெய்த்து பால் (அகவை 7) பண்டுவம்பெற்று வருகிறார். இவரது மருத்துவக் கட்டணததைச் செலுத்த முடியாமல் வேலையில்லாமல் இருந்து வரும் அவரது தந்தை தவித்து வருகிறார். நல்ல மனம் கொண்டவர்கள் இந்த மருத்துவத்திற்காக உதவிடவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில்…
சிகாகோவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா
சிகாகோவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா புலம் பெயர்ந்த நாட்டில் புத்துணர்வூட்டிய புதுமைப் புரட்சியாளர்கள் பிறந்தநாள் செப்டம்பர் 18: தந்தை பெரியார், அறிவுச் சூரியன் அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள்களைத் ‘தன்மானஎழுச்சி’ நாளென்று கொண்டாடினர் சிகாகோநகர் வாழ் தமிழர்கள்.. சிகாகோ பெருநகர் பெரியார் பன்னாட்டமைப்புச் செயலாளர் திருவாட்டி அருள்செல்வி வீரமணி தலைமையில், உதவி இயக்குநர் திரு.வ.ச.பாபு, சிந்தனைச் சிறப்பு உரையாளர் முனைவர் திரு.பிரான்சி சு.சவரிமுத்து ஆகியோர் முன்னிலையில் இந்த நாள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. பல்துறை…
பௌத்த மயமாகும் தமிழர் தாயகம்-ஐ.நா.மன்றத்தில் அம்பலப்படுத்திய பி.த.பேரவை
பௌத்த மயமாகும் தமிழர் தாயகம் ஐ. நா. சிறப்பு நிகழ்வில் மறைக்கப்பட்ட உண்மைகளை மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம் அனைவர் கவனத்தையும் ஈர்த்த பிரித்தானியத் தமிழர் பேரவை செனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைக் கழகத்தின் 33 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள், பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானியத் தமிழர் பேரவை அளித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய “நல்லாட்சி” அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது. நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள்…
புற்றுநோய் போக்க மருத்துவச் செலவு உதவி வேண்டல்
அன்பான நண்பர்களுக்கு! கீழ்க்குறிப்பிடப்படும் பெயர் விபரங்களையுடைய இப்பெண் புற்றுநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் மருத்துவச் செலவுக்கு ஏறத்தாழ எண்ணூறாயிரம் உரூபாய்கள் தேவைப்படுகிறது. அவரின் குடும்பச் சூழ்நிலையால் அவர்களால் அப்பெரிய தொகைப்பணத்தை திரட்ட முடியவில்லை. எம்மைப்போன்ற சில அமைப்புகளின் உதவியுடன் அவர்களின் பெற்றோரால் ஏறத்தாழ ஐந்நூறாயிரம் உரூபாய்கள் தற்சமயம் திரட்டப்பட்டுள்ளது. அப்பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாகி வருவதால் உடனடியாக மருத்துவம் அளிக்கப்படவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மேலதிகமாகத் தேவைப்படும் முந்நூறாயிரம் உரூபாய்களை உங்களின் உதவியுடன் துயர் துடைப்போம் குழுமத்தின் ஊடாக…
கூப்பிடு கூப்பிடு வீரர்களை! – காசி ஆனந்தன்
கூப்பிடு கூப்பிடு வீரர்களை! பாண்டிய மன்னவன் சோழன் பனிவரை பாய்ந்து கலக்கிய சேர மகன் ஈண்டு முளைத்த குலத்தில் எழுந்தனை! ஏடா தமிழா! எடடா படை! கூண்டுக் கிளிநிலை எத்தனை நாள்வரை? கூப்பிடு கூப்பிடு வீரர்களை! ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை? கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு! குருவிக்குக் கூடு மரத்திலுண்டு! காட்டு வயற்புற நண்டுக்குப் பொந்துண்டு! கஞ்சல் எலிக்கோர் குழியுமுண்டு! கோட்டை அமைத்துக் கொடியொடு வாழ்ந்தவர் குலத்துக்கொரு புகல் இங்கிலையோ? நாட்டை அமைப்பாய் தமிழ்மகனே! புவி…
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 – க.வி.விக்கினேசுவரன்
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 ஆசானே தெய்வம்! எனதருமைத் தமிழ் பேசும் உடன்பிறப்புகளே! ‘எழுக தமிழ்’ப் பேரணியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் சார்ந்த எதிர்பார்ப்புகளை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே! இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி! ஆட்சியில் அல்லது செல்வாக்கில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி இல்லை இது. நாம் எமது…
இதழ்களின் மேல் கருவண்டு – அபிநயா, துபாய்
இதழ்களின் மேல் கருவண்டு வீட்டினுள் விழுந்தன வளர்பிறை வெண்மதிகள் வெட்டிய நகங்கள்’. பூச்சிக்கொல்லி மருந்தையும் குடிப்போம் அயல்நாட்டுப்பானம்! கோயிலுக்குக் குந்தகமென்றால் கருவறையும் அகற்றலாம் கருப்பை! இறைவனும் இறைவியும் இணக்கத்துடன் இணைந்தார்கள் அரவாணிகள்! நாத்திகனுக்குக் கோவிலிலென்ன வேலை? அன்னதானம்! இதழ்களின் மேல் கருவண்டு மச்சம்! அறைந்தாள் முத்தம் கொடுத்தான் அப்பா! இயற்கையும் உறைகூழ் கொடுத்தது நுங்கு! கூட்டமாய் வந்து உள்ளாடை திருடினார்கள் மணல் கொள்ளை! – அபிநயா, துபாய். தரவு : முதுவை இதயத்து
இலக்கியப் பெருவிழா 2016, மியான்மர்
நந்தவனம் பீடம் தமிழ்க்கல்வி வளர்ச்சி மையம், மியான்மர் புரட்டாசி 29, 2047 / அட்டோபர் 15, 2016 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 6.00 வரை வரவேற்புரை : நந்தவனம் சந்திரசேகரன் தொடக்கவுரை: நீதிபதி வள்ளிநாயகம் வாழ்த்துரை : மு.க.முனியாண்டி சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன் ‘நான்கண்ட மியான்மர்‘ நூல் வெளியீடு கலைநிகழ்ச்சிகள் கவியரங்கம் தலைமை : முனைவர் கீரைத்தமிழன் விருது வழங்கல் & நிறைவுரை : மேனாள் அமைச்சர் நல்லுசாமி நன்றியுரை : ஆர்.ஏ.செல்வக்குமார் நந்தவனம் சந்திரசேகரன் ஆர்.ஏ.செல்வக்குமார் ஆறுமுகம்…
