644 மாணவர்கள் சிறப்பிப்பு – நுவரெலியா

க.பொ.த  இயல்புத்தரத் தேர்வில்  5 அ சித்திகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட 644 மாணவர்கள்  சிறப்பிப்பு  மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த இயல்புத்தரத் தேர்வில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட 644 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கும் நிகழ்வு   இன்று (ஆனி 19, 2047 / 25.06.2016) காலை 8.30 மணிமுதல் நடைபெற்றது.   மாநிலக்கல்வி அமைச்சின் ஏற்பாட்டில்  வாணாள்காப்புறுதிக்கழகத்தின் (எல்ஐ.சி.) காப்புறுதி நிறுவனத்தின்  ஒத்துழைப்புடன் இவ்விழா நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது….

யாழ்.சிறையில் தமிழ்க் கைதிகள் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி!

யாழ்.சிறையில் தமிழ்க் கைதிகள் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி!   யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுவதால் பெரும்  இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதாகத் தமிழ் அரசியல் கைதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.   மேலும், மன ஆற்றுப்படுத்தலுக்கான வசதிகள் எதுவும் யாழ் சிறையில் வழங்கப்படாததால் தாம் மன  நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 12 பேர் வரையிலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலை 7 மாதங்களுக்கு முன்னர் நவீன மயப்படுத்தப்பட்டது.  ஆனாலும் இங்குக் கைதிகளின் மன ஆற்றுப்படுத்தலுக்கான தொலைக்காட்சி  முதலான…

காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதிகள் : ஐ.நாவில் கண்காணிப்பு பொறுப்புடைமைக் குழாம் தெரிவிப்பு !

காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதிகள் : ஐ.நாவில் கண்காணிப்பு பொறுப்புடைமைக் குழாம் [Monitoring Accountability Panel (MAP)]   தெரிவிப்பு !   ஐ.நா. மனித உரிமையவைக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை எனப் பன்னாட்டு  வல்லுநர் குழு ஐ.நா. மனித உரிமை யவையில் குற்றஞ்சாட்டியுள்ளது.   சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பன்னாட்டு  வல்லுநர்கள் குழுவே Monitoring Accountability Panel (MAP)  இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.  பன்னாட்டு நீதிபதியாகவும்,  உசாவல்- மேல்முறையீட்டு வழக்கறிஞராகவும் இருக்கின்ற  செப்ரி…

மல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும்

மல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும்   “கடந்த காலங்களில் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்டபொழுது அதில் பாகுபாடு காட்டப்பட்டது. பெரும்பான்மைக் கல்விக்கூடங்களுக்கு ஒரு மாதிரியாகவும் சிறுபான்மைக் கல்விக்கூடங்களுக்கு வேறு மாதிரியாகவும் நிதி பகிரப்பட்டது. ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. அனைத்துக் கல்விக்கூடங்களுக்கும் ஒரே அளவான நிதி ஒதுக்கப்படுகின்றது. அதற்காகத் தமிழ் அமைச்சர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார். எனவே, எமது கல்வியின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை. இதனை எமது மாணவர்களும் ஆசிரியர்களும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன்…

முல்லைத்தீவில் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறப்பு

முல்லைத்தீவில்  தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறப்பு [கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு]   முல்லைத்தீவு உடையார்கட்டு பெரும் கல்விக்கூடத்தின் (மகா வித்தியாலயத்தின்) தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் ஆனி 02, 2047 / 16.06.2016 அன்று காலை திறந்து வைத்தார்.   இதன்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சிவமோகன், சாந்தி சிறிகந்தராசா ஆகியோரும் கலந்து கொண்டனர். கல்விக்கூடத் தலைவர் வி.சிறீகரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. விருந்தினர்கள் மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதையும் ஆய்வுக்கூடம் திறந்து வைக்கப்படுவதையும் கலந்து கொண்டவர்களையும் மாணவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடுவதையும் படங்களில்…

வெள்ளவத்தையில் பரிசளிப்பு விழா

வெள்ளவத்தையில் பரிசளிப்பு விழா    வெள்ளவத்தை இராமகிருட்டிணா கல்விக்கூடத்தின் பரிசளிப்பு விழா அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது.    இந்நிகழ்விற்குத் தலைமை விருந்தினர்களாகத் தேசிய இணைவாழ்வு – கலந்துரையாடல் – அரசவினை மொழிகள் அமைச்சர் மனோ.கணேசன், கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன், மேல் மாகாண அவை உறுப்பினர் சண். குகவரதன், இடைநிலைக் கல்விப் பணிப்பாளர் திருவாட்டி த.இராசரத்தினம், கொழும்பு தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருவாட்டி சீ.கே.இலங்கதிலக முதலான பலர் கலந்து கொண்டார்கள்.   இத்துடன் மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.   [படங்களை…

அறவோர் உள்ளனரா? குற்றமற்றவர்களைத் தண்டிப்பது குறித்துக் கவலைப்படவில்லையா?

அறவோர் உள்ளனரா? குற்றமற்றவர்களைத் தண்டிப்பது குறித்துக் கவலைப்படவில்லையா?   தன்நாட்டுக்குடிமகள் ஒருத்தியின் கற்பிற்குக் களங்கம் வரக்கூடாது என்பதற்காக அனைவர் வீட்டுக் கதவுகளையும் தட்டியதாக விளக்கம் அளிக்காமல் மன்னனாயிருந்தும் தன் கையை வெட்டிக் கொண்ட பொற்கைப்பாண்டியன் என்னும் மன்னன்ஆட்சி செய்த தமிழ்நாடு இது. ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர் பாண்டியன்  எனக் ‘குணநாற்பது’ என்னும் இலக்கியத்தில் நமக்குக் கிடைத்த ஒரே பாடலில் இடம்பெற்ற இவ்வடிகள் இவ்வரலாற்றை நமக்குத் தெரிவிக்கின்றன. வச்சிரத் தடக் கை அமரர் கோமான் உச்சிப் பொன் முடி ஒளி…

பண்பாளருக்குப் பரிசு -செல்வி

பல்கேரிய நாட்டுச் சிறுகதை பண்பாளருக்குப் பரிசு   கதிரவன் மறைந்து நிலவு வந்தது. தன் வருகையை மகிழ்வுடன் வரவேற்காமல் கதிரவன் மறைவிற்குப் பூமி வருத்தமாக கருப்பு ஆடையை அணிந்து கொண்டு இருக்கிறதே என நிலா சினங்கொண்டு முகில் கூட்டத்தில் மறைந்தது.   இருள் சூழ்ந்த  இந்த நேரத்தில் ஏழ்மைத் தோற்றத்தில் இருந்த முதியவர் ஒருவர் அந்த ஊருக்குள் நுழைந்தார். ஊரின் தொடக்கத்தில் தெரிந்த பெரிய மாளிகை ஒன்றினுள் நுழைந்தார். அவ் வீட்டில் இருந்த பெண்மணியிடம்  ”அம்மா இன்று இரவு மட்டும் தங்கிக் கொள்கின்றேன்”  என்று…

இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது! – மெல்பேண் செயராமர்

இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது!    கருங்கூந்தல் நிறைந்திருக்க கன்னமதில் குழிகள்விழ விளியிரண்டும் மீனெனவே வெண்மைநிற முகத்தினிலே    மருண்டோடி பார்த்திருக்க    வட்டநிலா வருவதுபோல் இடைஇருந்தும் தெரியாமல் அவள்வருவாள் நடைபயின்று    அதைக்காண ஆவலுடன்   அன்றாடம் காத்திருப்பேன் !    பலபேர்கள் வந்தாலும்    பார்த்துவிடா என்பார்வை    இவள்மட்டும் வந்தவுடன்    எனைமீறிச் சென்றுவிடும்    நினைவெல்லாம் அவளாக    நிறைந்திருக்கும் காரணத்தால்    அவள்வருகை மட்டுமெந்தன்    அகத்தினுள்ளே புகுந்துவிடும் !    சிலவேளை அவள்பார்ப்பாள்    பலவேளை நான்பார்ப்பேன்  …

வஞ்சகன் பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? – பழ. நெடுமாறன் கண்டனம்

வஞ்சகன்(துரோகியின்) பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை   யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட்டு துரையப்பா என்பவரின் பெயரைச் சிங்கள அரசு சூட்டி, இந்தியத் தலைமையளார நரேந்திரர்(மோடி)யைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியத் தலைமையாளர் இரையானது வருந்தத்தக்கதாகும்.  1975ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண  மாநகரத்தலைவராக இருந்த ஆல்பர்ட்டு துரையப்பா தீவிர…

புதுச்செருசியில் தமிழ்விழா 2016

ஆனி 17 – ஆனி 20, 2047 / சூலை 01 –  சூலை 04, 2016 பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆவது பிறந்தநாள் விழா தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா பேரவைத்தமிழ்விழா 2016 இயல், இசை, நாடகக் கலை நிகழ்ச்சிகள் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நியூசெர்சி தமிழ்ச்சங்கம்    

செயா அம்மையாருக்கு நன்றியும் வினாவும் : சொல்வீர்கள்! செய்வீர்களா? – செந்தமிழினி பிரபாகரன்

செயா அம்மையாருக்கு நன்றியும் வினாவும் சொல்வீர்கள்! செய்வீர்களா? செந்தமிழினி பிரபாகரன் மோடியை சந்தித்த செயா அம்மையார் தமிழ் நாட்டில் அகதிகளாக உள்ள ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி உள்ளமைக்கு அம்மாவுக்கு ஈழத் தமிழர்களின் மனமார்ந்த நன்றி. அதே போல் ஈழத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டமைக்கும் நன்றி. சந்தித்தீர்கள் மோடியை. கோரிக்கைகளை வலியுறுத்தினீர்கள். அதற்கு மேல்?? வழமை போல் எதுவும் நடக்காது என்பது எமக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் தெரியும் என…