உருத்திரகுமாரனின் முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு நினைவுரைக் காணொளி

  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர்  உருத்திரகுமாரன் வழங்கிய நினைவுரைக் காணொளி https://www.youtube.com/watch?v=kp6pzZ2PAjY

முள்ளி வாய்க்காலும் நமது முன்னேற்றமும்! – சோம இளங்கோவன்

முள்ளி வாய்க்காலும் நமது முன்னேற்றமும்!   அருமைத் தமிழ் நெஞ்சங்களே !   ஆறாத வடு ! மாறாத அவமானம் ! சொல்லொன்னாத் துயரம் ! அதன் பெயர் முள்ளிவாய்க்கால். இன்று தமிழர்கள் வெறி பிடித்தத் தீவிரவாதிகள் அல்லர்; இனப் போராட்டதின் அடையாளங்கள் என்பதை உலகைப் புரிந்து கொள்ள வைத்துள்ளோம். அடைந்த  இன்னல்களைக் கேலம் மெக்ரேவின் உதவியுடன் உலகுக்குக் காட்டியுள்ளோம். இன்றைய தேவை, இனி என்ன செய்யப் போகின்றோம் என்பது தான்! துன்பத்தில் வாழும் உடன் பிறப்புகளைத் தத்தெடுத்துக் கொள்வோம். ஈழத்தில் தமிழர் முன்னேற…

வீடுகள் வெடிப்பு, நிலம் தாழ் இறக்கம் காரணமாக 37 குடும்பங்கள் இடம் பெயர்வு

வீடுகள் வெடிப்பு,  நிலம் தாழ் இறக்கம் காரணமாக 37 குடும்பங்கள் இடம் பெயர்வு     கலஃகா,  மேல் கலஃகா தோட்டத்தில் வீடுகள் பாரிய அளவில் வெடிப்பதினாலும் தாழ் இறங்குவதினாலும் 37 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் இடம் பெயர்ந்து தோட்டப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   குறித்த  பகுதியில் வரிசை இலக்கம் 03, இலக்கம் 04 ஆகியன பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.  வரிசை இலக்கம் 01, வரிசை இலக்கம் 02, 04 குடியிருப்புகள் உள்ள இன்னொரு வீட்டுத் தொகுதி, 02 தனி வீடுகள்…

வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்தின் மருத்துவ உதவிகள்

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.   கடந்த காலப் போரின் போது தனது ஒரு காலினை இழந்து இருப்பதற்கு ஒழுங்கான வீடு இன்றிப் படுக்கைப் புண்ணுடன் அவதியுற்று வந்த கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு பாரதிபுரத்தைச் சேர்ந்த சந்தானம் சசிக்குமார் அவர்களுக்கு எமது புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த தி.இலக்சனா, நந்தனா ஆகியோரின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது தந்தை மருத்துவர் செ. திலகன் அவர்களின் நிதி அன்பளிப்பின் ஊடாக இவ் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.   இதன்…

பாரிய நிலவெடிப்பு 48 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் இடம் பெயர்வு

பாரிய நிலவெடிப்பு 48 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் இடம் பெயர்வு   கல ஃகா, துனாலி, மல்பேரி பிரிவு  ஊரில் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட பாரிய நில வெடிப்பின் காரணமாக 48 குடும்பங்களைச் சேர்ந்த 191 பேர் இடம் பெயர்ந்து  துனாலி  தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர். குறித்த  பகுதியில் பல இடங்கில் பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீடுகள் வெடித்துள்ளன மரங்கள் சாய்துள்ளன. சில மரங்கள் சாயும் நிலையில் காணப்படுகின்றன. நீர் ஓட்டம் மற்றும் கசிவு அதிகமாகக் காணப்படுகின்றன. இதனால் இவர்களைக்…

மிசிசாகா தமிழர் திறன்காண் இறுதிச்சுற்று

     வைகாசி 23, 2047 / சூன் 05, 2016 மிசிசாகா தமிழர் திறன்காண் இறுதிச்சுற்று     இளையோர் நல மேம்பாட்டுக்குழு மிசிசாகா தமிழ் ஒன்றியம்

இலங்கையில் நல்லாட்சியா ? பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் !

இலங்கையில் நல்லாட்சியா ? பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ! நல்லாட்சி என்ற மாயைக்குள் இலங்கைத்தீவில் தொடர்ந்தும் நடந்தேறும் மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தி  இலண்டனில்  கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும், வெள்ளைஊர்தி(வான்) கடத்தலுக்கு எதிராகவும், புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றவர்களைத் திருப்ப அனுப்ப வேண்டா எனத் தெரிவித்தும் இக்கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறுகின்றது. பிரித்தானிய அரசிற்கு இக் கோரிக்கைகளை  முன் வைக்கும் அதேநேரம், பிரித்தானிய அரசாங்கம்  சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று…

கனடா : முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் மருத்துவர் வரதராசா ஆற்றிய உரை

  கனடாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது களத்திலே வைத்திய பணியாற்றிய  மருத்துவர் வரதராசா ஆற்றிய உரை,கண்ணீர் மல்க வைக்கும் வாக்குமுலம். https://www.facebook.com/eelamranjanvot/posts/10157045139000637?notif_t=like&notif_id=14637860392190   ஈழம் இரஞ்சன்

மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! -இலக்குவனார் திருவள்ளுவன்

: மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487)    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த நிலப்பகுதி, பெருங்கடல்கோள்களால் தனித்தீவாக மாறிய நிலப்பகுதி, அதுவே இலங்கை என்றும் ஈழம் என்றும் அழைக்கப்பெறும் தமிழர்க்கான நிலப்பகுதி. இங்கோ சாதி வேறுபாடுகளையும் உயர்வு தாழ்வுகளையும் கற்பித்த ஆரியச் சமயத்தால் அழிவினைச் சந்தித்தது தமிழகம். அங்கோ வந்தவர்க்கு அடைக்கலம் கொடுத்ததால், அருள்நெறி போற்றும் புத்தச் சமத்தினரின் இன வெறியால் சிங்களம் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தித்…

அழிந்து வரும் நிலையில் ஃகெல்சிரிகம பேருந்து நிலையம் – பா.திருஞானம்

அழிந்து வரும் நிலையில்  பேருந்து நிலையம்  கொத்(து)மலை  பகுதிக்குட்பட்ட  ஃகெல்பொட தோட்டம்  ஃகெல்சிரிகம  பகுதியில் காணப்படும்  பேருந்து நிலையம் அண்மைக் காலமாக உடைந்து காணப்படுகின்றது. இதனால் இந்தப் பேருந்து தரிப்பிடத்தைப் பாவித்து வரும் பயணிகள், பாடசாலை மாணவர்கள், பல இன்னல்களைத் துய்த்து வருகின்றனர்.   இந்தப் பேருந்து தரிப்பிடத்தில் நுவரெலியா, வெளிமடை, பண்டாரவலை, பதுளை, தியத்தலாவ, கதிர்காமம், பூண்டுலோயா பகுதிகளில் இருந்து கண்டி, கொழும்பு, யாழ்ப்பானம், கம்பளை போன்ற இடங்களுக்குச் செல்லும்  பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. நாளாந்தம் 1000 த்திற்கு மேற்பட்ட பயனிகள் பாவித்தும் வருகின்றனர்….

சின்னம் அணிவித்தலும் நீர் வழங்கலும்

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] பாடசாலை மாணவர்களுக்குச் சின்னம் அணிவித்தலும் பாடசாலைக்கான  நீர்  வழங்கலும்       நுவரெலியா கல்வி வலையத்திற்கு உட்பட்ட கிகிலியம்மான மகா வித்தியாலயம் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தல், கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கபட்ட பாடசாலைக்கான நீர்  வழங்கல் திட்டத்தைப் பாடசாலை மாணவர்களுக்குக் கையளித்தல் ஆகிய நிகழ்வு சித்திரை 26, 2047 / மே 09,.2016  அன்று   மாநிலக்கல்வியமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.  இதன்போது பாடசாலை அதிபர், நுவரெலியா கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகள்,…

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 06 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – இன்  தொடர்ச்சி) 6/6 இர.சிறீகந்தராசா: நீங்கள் எவ்வளவு காலம் மொத்தமாக உள்ளே இருந்தீர்கள்? து.வரதராசா: மூன்றரை மாதங்கள் இருக்கும். இர.சிறீகந்தராசா: நீங்கள் வெளியில் வந்ததும் அங்கே என்ன செய்தீர்கள்? து.வரதராசா:  நாங்கள் வெளியில் வந்தவுடன் கடமையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. ஏனென்றால், எங்களை மீண்டும் கடமையாற்ற விடுவதற்குப் பாதுகாப்பு அமைச்சு, இராணுவ அமைச்சு ஆகியவற்றிடம் இருந்து நலவாழ்வுத் திணைக்களத்திற்கு ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கையை எடுப்பதற்குக் கொஞ்ச காலம் எடுத்தது. அதன் பின்புதான்…