என் இனிய தமிழ்மொழி – சக்தி சக்திதாசன், இங்கிலாந்து

என்னைத் தாலாட்டிய மொழி எனதருமைத் தாய் மொழி என் இனிய தமிழ் மொழி எண்ணமெல்லாம் நிறைந்த மொழி என்னை நான் தொலைத்த போது என்னுள்ளே புதைந்த போது எண்ணெய் ஆக மிதந்து என் எண்ணங்களை ஒளிரச் செய்த மொழி இதயத்தின் நாளங்கள் முகாரி மீட்டினாலும் இனிமையான கல்யாணப் பண் பாடினாலும் இதயத்தின் வலி மறக்க உதவும் மருந்தாய் இனிய என் தாய் மொழி என்றும் என்னுடனே முகமிழந்து போனாலும் இக்கொடிய உலகில் முதுமையில் வீழ்ந்து அமிழ்ந்து போனாலும் முகவரி இழக்காது இலக்கிய உலகில் முத்தாக…

பார்வதித்தாயே! பார் வதியும் தாய் நீயே! -செந்தமிழினி பிரபாகரன்

தாய் என்ற சொல்லுக்கே தாயே நீ தானே? தாளாமல் அழுகின்றோம் தாயே வருவாயே! வீரத்தின் இலக்கணத்தைப் பெற்றெடுத்த பெரும் பேறே பார் போற்றும் பார்வதியே! பார் வதியும் தாய் நீயே! பேரெடுத்த பிள்ளை தனை மடி ஏந்திய தமிழ்த் தாயே.. இன வலி சுமந்து நீ பட்ட பாடு… வரலாறு பாடும்.. விழி நீர் சுமந்து என்றும்! உற்ற துயர் புற்றெடுக்க வெற்றுடலாய் உணர்விழந்து உலகெல்லாம் உறவாட உறவிழந்து உயிர் வாடினாய் பட்ட பாடு போதுமம்மா போய் வாடி தாயே! கொடியோர் முன் உயிர்…

ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம் !

பங்குனி 01, 20147 / மார்ச்சு 14, 2016 14:00 – 18:00 மணி போருக்கு முடிவு உண்டு ஆனால் எமது போராட்டத்துக்கு முடிவில்லை! செனீவா தொடக்கமும் இல்லை முள்ளிவாய்க்கால் முடிவும் இல்லை! ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழின அழிப்புக்கு –  படுகொலைக்கு நீதி கேட்டு  செனீவா,  ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம் அணி திரள்வோம்! காலத்தின் தேவை கருதி கை கோத்து நீதி கேட்போம்! வாரீர்! வாரீர்! செனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகில் 14/03/2016 நேரம் 14:00 – 18:00 மணி  ஈகைப்போராளி…

“வேரோடும் விழுது” கவி ஏடு வெளியீடு – கவிமகன்.இ

மாசி 08, 2047 / பிப்.20, 2016 பிற்பகல் 2.30 கரவெட்டி கிழக்கு   கவிமகனின்  “வேரோடும் விழுது” கவி ஏடு வெளியீடு வரும் சனிக்கிழமை 20.02.2016 அன்று கரவெட்டி கிழக்கு அரசு தமிழ்க் கலைவன் பாடசாலையில் மாலை 2,30 மணியளவில் முருகுவெளியீட்டகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற உள்ளது இந்த நிகழ்வில் அனைத்து ஊடகவியலாளர்கள், கவிஞர்கள் மற்றும் நண்பர்கள் உறவுகள் அனைவரும் கலந்து எனது கவிதை புத்தக வெளியீட்டை சிறப்பிக்கும் வண்ணம் அன்புரிமையோடு கேட்டு நிற்கிறேன். வாருங்கள் வந்து நிகழ்வை சிறப்பியுங்கள். நன்றியுடனும் நட்புடனும்  இரத்தினம்…

அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)

அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான  சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)   துபாயில் செயல்பட்டு வரும்  தூதஞ்சல் நிறுவனமான எம்ஃச்டார் (EMSTAR COURIER & CARGO LLC) அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் தூது அஞ்சல் சேவையினை வழங்கி வருகிறது. சரக்கு(கார்கோ)க்கு அயிரைக்கல்(கிலோ) ஒன்றுக்கு 10 திர்ஃகாம்  கட்டணமாகப் பெறப்படுகிறது.   பொதிவுச்சிப்பம் (packing).வான்வழிக் கட்டணம் தனி. அமீரகம், வளைகுடா, இந்தியா முதலான உலகின் பல்வேறு பகுதிகளுக்கும்  தூதஞ்சல் பணி இருந்து வருகிறது. மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள எம்ஃச்டார்  தூதஞ்சல் பணியூழியத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு வேண்டிய…

வையகத் தமிழ் வாழ்த்து – சி. செயபாரதன்

வையகத் தமிழ் வாழ்த்து   பாரதக் கண்டச் சீரிளம் தமிழே ! ஓரினம் நாமெலாம் ஒரு தாய் மக்கள் வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே ! தாரணி மீதில் உன் வேர்களை விதைத்தாய் வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின ஈழத் தீவில் இணைமொழி நீயே சிங்கப் பூரினில் துணைமொழி நீயே மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் காசினி மீதில் தமிழர் பரப்பிய காவியத் தமிழே ! வாழ்த்துவம் உனையே ! வையகத் தமிழே ! வணங்குவம் உனையே ! ஆத்திசூடி ஓளவையார், ஆண்டாள்,…

இதயம் இரும்பால் ஆனதில்லை! – ஈழத்துப் பித்தன்

அகம் கனக்க அகன்று போனேன்! முல்லைத்தீவு போயிருந்தேன் – அந்த முள்ளிவாய்க்கால் தாண்டிப் போனேன் இறங்கி நின்று படமெடுக்க – என் இதயம் ஒன்றும் இரும்பால் ஆனதில்லை விசுமடு தாண்டிப் போக நான் தொழுத வீரர் புதைந்த குழி மேடாய் கண்ட பின்னர் வீதி வழி விடுப்புப் பார்த்து மனம் கனக்க விருப்பம் இன்றி பூனை போல ஆகி நின்றேன் ஆனந்தபுரமும் மாத்தளனும் பெயர்ப் பலகையிலே அருகிருந்த தம்பி தட்டி அதன் கதை சொல்லிக் காட்ட ஆவி அடங்கி அத்தனை உயிர் கொடுத்த இடத்தை…

சிங்கப்பூரில் அண்ணா வாசகர் அறிவகம் தொடக்கம்

உலகத் தமிழருக்கு உறவாக விளங்கியவர், பேரறிஞர் அண்ணா அவர்கள். அவர்களின் நிணைவாக ‘அண்ணா வாசகர் அறிவகம்’  தை 24, 2047 / 7.2.2016 ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30மணியளவில் , தமிழர்பேரவை பன்னோக்குக் கூட்டுறவுக் கழக பணிமனையில் #02-19 , சிராங்கூன் தேக்கா குட்டி இந்தியா வணிக வளாகத்தில் தோற்றுவிக்கப்பட்டது.   அறிஞர் அண்ணாவின், இலக்கியப் பங்களிப்பில் ஆர்வம் கொண்டுள்ள நண்பர்களால் உருவானதுதான்  ‘அண்ணா வாசகர் அறிவகம்’.  கவிதை, கதை, கட்டுரை வழியாக, கன்னித் தமிழின் சுவையைப் பரப்புதல், பேசுதல், படைத்தல் என்பதே இதன் நோக்கமாகும்….

முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு, பிரித்தானியா

“ஈகைப்பேரொளி” முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியா   உலகத்தேயத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு ஈகத்தின் உச்சமாய் தன்னையே தீக்கு இரையாக்கி வீரமரணமடைந்த “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் மாசி 17, 2047 / 28.02.2016 அன்று இலண்டனில் காலிண்டேல் நகரில் (St Matthias church, Rush-grove Avenue, Colindale, Landon Nw9 6QY என்னும் இடத்தில்) நடை பெற உள்ளது.  புலம்பெயர் தேசத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்டு வீரமரணத்தைத்…

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து – செயராமர்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து .. வள்ளுவன் தன்னையுலகினுக்கே தந்துவான்புகழ் கொண்டநாடென தெள்ளுதமிழ் கொண்டு செப்பிநின்றான் பாரதியும் அள்ளவள்ளக் குறையாத அமுதமாம் சுரங்கமென வள்ளுவரின் குறளெமக்கு வாய்த்தெல்லோ விருக்கிறது ! பாவளவில் குறுகிடினும் பாரெல்லாம் பயனுறவே நீழ்கருத்தைச் சொல்லியதால் நிமிர்ந்துகுறள் நிற்கிறது யார்மனதும் நோகாமல் நல்லதெலாம் சொல்லுவதால் பார்முழுக்க உள்ளாரும் பார்க்கின்றார் வள்ளுவத்தை ! சமயமெலாம் கடந்துநிற்கும் சன்மார்க்க நூலெனவே இமயமென இருக்கிறது எங்களது திருக்குறளும் சமயமெலாம் கடந்தாலும் தங்களது நூலெனவே மனமாரக் கொண்டாடி மதித்திடுவார் திருக்குறளை ! அறம்பற்றிச் சொன்னாலும் அழகாகச் சொல்கிறது…

சார்சா இரோலா பகுதியில் முதல் வாரந்தோறும் பல்மருத்துவ முகாம்

  சார்சா இரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள தமிழ் பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்வகை மருத்துவமனையில் பல் மருத்துவ   இலவச முகாம் அனைத்து மாதமும் முதல் வாரம் நடைபெற இருக்கிறது.   இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சிராசுதீன் பற்களுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சைகள் குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர், 06 – 5685 022 , 0562861120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   அனைவரும் பயன்பெறும் வகையில்…

பிழைப்பு மொழிக்காய் உயிர்ப்பு மொழி துறப்பாயோ? – செந்தமிழினி பிரபாகரன்

உருச் சிதைந்த சிந்தனையில் தாய் மொழி தகர்த்து பிற மொழியால் முலாமிடும் செருக்கெடுத்த தருக்கருக்கு ஏதடா முகம்? முகமிழந்த முண்டங்கள் முகவரியும் தொலைத்த பின்னால் எதற்கடா வாழ்வு? ஏதடா வனப்பு? பிறப்பதில் பெறுவதல்ல இன அடையாளம்! பேறாய் பெற்ற தாய் மொழியே எம் முக அடையாளம்! மூத்த மொழி சரிந்து போக சொத்தை தமிழனாய் பார்த்திருப்பாயோ? தமிழன்னைக்கோர் துயர் என்றால் உனக்கென்று நினையாயோ? நேற்று வந்த மொழியெல்லாம் சேற்று வெள்ளமாய் அள்ளி செல்ல காற்றடித்தால் தொலைந்து போகும் துரும்போடா தமிழா நீ? பண்டைத் தமிழர்…