வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 1/3 – இராம.கி.

    1/3   சிலப்பதிகாரத்தில் வழக்காடுகாதையென்பது உச்சக்கட்டமாகும். உச்சத்திற்கடுத்து வருவது வஞ்சினமாலை. ஏறத்தாழ மாலை 6.30 மணியளவில் பாண்டியன்மனைக்குள் (அரசவையல்ல.) நுழைந்த கண்ணகி; ”தன் கணவன் குற்றமற்றவன்; அரசனின் நெறிமுறை பிழைத்தது; தன் சிலம்பினுள்ளிருப்பது மாணிக்கமே” என நெடுஞ்செழியனுக்குணர்த்தி வழக்காடுகிறாள். தவறுணர்ந்த அரசன், “யானோ அரசன் யானே கள்வன்; மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது; கெடுக என் ஆயுள்” என மயங்கிவீழ்கிறான். இணையடிதொழும் கோப்பெருந்தேவியும் உடன் வீழ்கிறாள். கண்ணகியின் கொடுவினையாட்டம் மேலுந்தொடர்கிறது.   [இங்கோர் இடைவிலகல். அடியார்க்குநல்லாருரை ஊர்சூழ்வரி வரையேயுண்டு. அதற்கப்புறம் அரும்பதவுரை மட்டுமேயுண்டு….

கி. பாரதிதாசனின் ‘சொல்லோவியம்’ -மு.இளங்கோவன் அணிந்துரை

கவிஞர் கி. பாரதிதாசனின் சொல்லோவியம்   மண்மணம் குழைத்து மரபுப்பாடல் வரைவோர் அருகிவரும் வேளையில் பிரான்சில் வாழும் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் ‘சொல்லோவியம்‘ என்னும் நூலினைச் சுவைக்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமும், உவமைக்கவிஞர் சுரதா அவர்களிடமும் அமைந்துகிடக்கும் சொல்வளமை இந்த நூல்முழுவதும் அமைந்துள்ளமை பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும். நூறு சொல்லோவியங்கள் இந்த நூலை அழகுசெய்கின்றன. பெண்ணொருத்தியின் உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் அகவுணர்வு பாட்டுவடிவில் பக்குவமாக வெளிப்பட்டு நிற்கின்றது. தம் உள்ளங் கவர்ந்து உறவாடியவனை நினைத்துப், பேதைப் பெண்ணொருத்தி வெளிப்படுத்தும் அன்புமொழிகளைப்…

தயாமோகன் விளக்கும் கருணாவின் இரண்டகம் – பா.ஏகலைவன்

  விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண அரசியல்துறை பொறுப்பாளர் தயாமோகனின் மனம் திறந்த பேட்டி..   விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதியாகவும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கச் செல்லும்போது துப்பாக்கியை உடன் கொண்டுசெல்ல இசைவளிக்கப்பட்ட புலிகள் தளபதிகளில் ஒருவருமான கருணா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றபோது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர் தயாமோகன்; விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 20ஆண்டு காலம் பணியாற்றியவர்.   2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து சூன் மாதம் இசுலாமிய நண்பர்…

அக்கினிக் குஞ்சினைத் தமிழினம் தாங்கட்டும்! – புகழேந்தி தங்கராசு

விடுதலையின் முகவரி நகர மறுக்கிற நதியென உறங்குகிற கடற்கரை – வல்வெட்டித்துறை. பேசும் அலைகளின்றி பேராரவாரமின்றி அமைதி காக்கிற அதன் மூச்சுபேச்செல்லாம் விடுதலைப் பெருமூச்சு. அந்தக் கரையில்தான் உயிரெழுத்தின் நீட்சியென அவதரித்தான் அவன்! அந்த ஆயுத எழுத்தின் உக்கிரத்தால்தான் அடங்கிக் கிடந்தது வக்கிர இலங்கை! பிரபாகரன் – என்பது ஒரு மனிதனின் பெயரில்லை… அது விடுதலையின் விலாசம்! எமது இனத்தின் அறுபதாண்டுக் கால அவல வரலாற்றில் பிரபாகரனும் பிரபாகரனின் தோழர்களும் எழுதியது மட்டும்தான் பவள வரலாறு. கையில் ஏந்திய ஆயுதங்களுடன் அவர்கள் மெய்யில் தாங்கிய…

கண்டுபிடிக்கப்பட்டது இனஅழிப்பு வதை முகாம் : நாம் என்ன செய்யப் போகிறோம்?

கண்டுபிடிக்கப்பட்டது இனஅழிப்பு வதை முகாம் : நாம் என்ன செய்யப் போகிறோம்?   திருகோணமலையில் இயங்கிய கமுக்க முகாம் என்பது தடுப்பு முகாம் அல்ல. அது.இனஅழிப்பு வதை முகாம்.   வகைதொகையில்லாமல் ஓர் இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கமுக்க இடத்தில் வைத்து ஒரு வேற்றின அரசின் படைகள் சித்திரவதை செய்து படுகொலை செய்வதென்பது இனஅழிப்பு உள்ளடக்கங்களைக் கொண்டது.  யூதர்களை இனஅழிப்பு செய்ய கிட்லர் பயன்படுத்திய ஆசுட்டுவிச்சு படுகொலை முகாமிற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் திருகோணமலை இனஅழிப்பு வதைமுகாம்.   பலவந்தமாகக் காணாமற்போகச் செய்யப்பட்டோர்…

‘நாங்கள்’ யார்? – அ.ஈழம் சேகுவேரா

‘நாங்கள்’ புசிப்பது தசை புணர்வது பிணம் முகர்வது இரத்தம் நாற் சுவர்களுக்குள் நடப்பதை நாற்சந்தியில் நடத்துவோம் அது ‘தாரமாக’ இருந்தாலும், மூலை முடுக்கெல்லாம் தேடி ஒதுங்கமாட்டோம் ‘தங்கை’ ஒருத்தி இருந்தால் அம்மணமாக்கி இரசிப்போம் ‘தோழி’ ஒருத்தி கிடைத்தால் அதிரப்புணர்வோம் நண்பர்கள் குழுவாகச் சேர்ந்தால் ‘தாயையும்’ கூட்டாகப் புணர்வோம் ‘அக்காளை’ நீலப்படம் எடுத்து காசு பார்ப்போம் ‘நாங்கள்’ யார்? பிரித்தானியாவின் ‘அலைவரிசை 4’ பார்த்திருந்தால், எங்கள் ‘குலம் கோத்திரம்’ பற்றியெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை! தாயகக் கவிஞர் அ.ஈழம் சேகுவேரா (இலங்கை, முல்லைத்தீவிலிருந்து) கருத்துகள் மற்றும்…

வல்லானை வாழ்த்துவேன் -புலவர்மணி இரா.இளங்குமரன்

நறுந்தமிழைப் புத்துலகச் சொத்தாக்க முன்னிற்கும் முதன்மையர் உலகத்தார் பெரும்புகழுக் கிலாக்காவீர் என்றறிந்தோ, இன்றமிழுக் கிணையற்ற இலக்காவீர் என்றறிந்தோ, இலக்கியத்தில் தோய்ந்துதோய்ந் திதழ்களுடன் உயர்நூல்கள் இலக்குவணம் படைத்தருள்வீர், இனிதளிப்பீர் என்றறிந்தோ, நிலவுலகில் நேரற்ற நேயத்தொல் காப்பியமாம் இலக்கணத்தை மொழிபெயர்த தாய்ந்தற் களிப்பார்கள் பட்டமெனும் பாங்கறிந்தோ நும்பெயரை இலக்குவனென் றிட்டுள்ளார் நும்பெற்றோர் இசைபெற்ற பெற்றோரே‚ அவர்வாழ்வுப் பயனாகத், தவமாக, முகிழ்த் தோங்கும் ஐம்பதிற்று ஐந்தாண்டுப் பேரிளைஞ‚ பேரறிஞ‚ கைம்மாறு கருதாமல் கடனாற்றும் கடமைவீர‚ தாய்த்தமிழைக் கண்போலத் தனிக் காக்கும் தண்டமிழ‚ தாய்மொழியைக் கப்பார்க்குத் தலைவணங்கு தகவாள‚ தாய்மொழியைப்…

இனிதே இலக்கியம் – 11 : தமிழே இன்பம்! – முடியரசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

 11 : தமிழே இன்பம்! – முடியரசன்   தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு இலை என்றால் இன்பம் எனக்கு ஏது?   பாவேந்தர் மரபுக்கவிஞரான முடியரசன் அவர்களின் ‘முடியரசன் கவிதைகள்’ தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்.   “பிறவிகளுக்கெல்லாம் காரணமாகும் தாயைப்போன்று எங்களின் தாயாய் விளங்கும் மொழிகளின் தாயே! எங்களை இயக்கும் உயிரே! உன்னை வழங்கும் குழந்தையாகிய நான் பெறுதவற்கு அரிய பேறாய் எனக்குக் கிடைத்த செல்வமே!…

‘தந்தையுமான தாய் நூல்’ ஆய்வுரை -வா.மு.சே.திருவள்ளுவர்

கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் அவர்களின் தந்தையுமான தாய் நூல் ஆய்வுரை   சென்னையில் சித்திரை 19, 2046 / 2-5-2015 அன்று கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் அவர்களின் ‘தந்தையுமான தாய்’ நூல் வெளீயீட்டு விழாவில்    தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளூவர் ஆற்றிய      நூல் ஆய்வுரை: நிலவு முத்துகிருட்டிணன் என் உள்ளம் கவர்ந்த நண்பர். உள்ளதை உணர்வதை கள்ளமில்லாமல் கூறும் நெஞ்சர். தம் குழந்தைப் பருவம் முதல் இன்றுவரை பகுத்தறிவு போற்றும் பாவலர். சமுகம் சுற்றத்தார் நண்பர் குடும்பம் என அனைத்து நிலைகளிலும் செயலாற்றும்…

தமிழோடு வந்தோம்! தமிழோடு வாழ்வோம்! – வசந்தகுமார்

கொஞ்சு தமிழே… என் நாவில் தித்தித்தாய் தமிழாலே நமது புதிய வாழ்வை நாம் இன்று படைப்போம் உயிரொன்று பிறந்தது ஆதி காலத்தில் மனிதனாய்த் திரிந்தது பரிணாமத்தில் அவர் நாகரிகமடைந்தது தமிழ்ச் சங்கக் காலத்தில் மனிதனை வடித்தது மொழியே அந்த மொழிகளில் மூத்தது தமிழே தமிழே  முதலே அரைகுறை மொழிகளுக்கிடையே முழு இலக்கணம் கண்டது முதலே தமிழே உயர்வே காதல் வந்தால் நம் கன்னித் தமிழால் கவிதை பாடு கைகூடும் ஒரு நாள் உலகினுக்கே தமிழ் பழமை அந்தப் பழமையினும் தமிழ் இளமை மாற்றார் உணர்வார்…

சோறு போடுமா தமிழென்று கேட்கலாமோ? – யாழ்ப்பாவாணன்

தமிழ் சோறு போடுமா என்றே தமிழர் தான் பாடுகிறார் இன்றே                             (தமிழ்)   வழித்தோன்றல் வழிவந்து வாழ்நாளில் பேசிநின்று வழிநெடுக நடைபோட முயன்றால் தமிழனென்று ஆளுயர அறிவுயரத் தலைநிமிரத் துணைநின்று ஒத்துழைத்த தமிழைச் சோறுபோடு என்கிறாயே! நானும் தான் கேட்கிறேன் இங்கே!                                            (தமிழ்)   சுற்றும் உலகில் பிறமொழி பேசிநின்று உலகம் சுற்றி வருகையில் தமிழனென்று வயிற்றை நிரப்ப வழியேதும் இல்லையென்று சோறு போடுமா தமிழென்று கேட்கலாமோ? நானும் தான் கேட்கிறேன் இங்கே!                                            (தமிழ்)  …

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3   தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தியதால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைவாழ்க்கை பெற்ற பேராசிரியர்(1965), தமிழ்க்கல்வித்திட்டம் பற்றியும் பின்வருமாறு அகநானூற்றுப் பாடல் 55 இல் வரும் வெண்ணிப்போர் விளக்கம் மூலம் வலியுறுத்துகிறார்.   வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ , ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. . . . இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப்…