கலைச்சொல் தெளிவோம்! 124 : அதரி-valve

 வால்வு (valve) என்பதற்குக் கால்நடையியலிலும் மீனியலிலும் தடுக்கிதழ் என்றும், வேளாணியலில் தடுக்கிதழ், ஒருபாற்கடத்தி என இருவகையாகவும், பொறிநுட்பவியலில் தடுக்கிதழ், அடைப்பிதழ், ஓரதர், கவாடம் என நால்வகையாகவும், மருத்துவயியலில் ஒருவழி மடல், கதவம் தடுக்கிதழ், கவாடம் என நால்வகையாகவும், மனையியலில் ஓரதர், வேதியியலில் கவாடம், வால்வு என இருவகையாகவும் பயன்படுத்துகின்றனர்.  அதர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 43 இடங்களில் வருகின்றது. பெரும்பாலும் வாயில் என்னும் பொருளே கையாளப்படுகின்றது. ஆனினம் கலித்த அதர்பல கடந்து (புறம் 138:1) மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளித்தோர் (நற்றிணை :…

கலைச்சொல் தெளிவோம்! 123. தேரை வெருளி-Bufonophobia

தேரை(10) என்னும் உயிரினமும் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். தேரைஅல்லது தேரையினம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் தேரை வெருளி-Bufonophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள் : Haptephobia, Aphephobia & Chiraptophobia

கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள் தீண்ட(3), தீண்டல்(1), தீண்டலின்(4), தீண்டவர்(1), தீண்டற்கு(1), தீண்டா(1), தீண்டாது(1), தீண்டி(21), தீண்டிய(3), தீண்டு(1)தீண்டு்ம் (1), தொடு(10), தொடுதல்(2), எனப் பல சொற்கள் தொடுதலைக்குறிக்கும் வகையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. பிறரால் தொடப்படுவது குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் தீண்டுகை வெருளி-Haptophobia/Haphephobia/ Haptephobia அல்லது தொடுகை வெருளி–Aphephobia/ Aphenphosmphobia அல்லது தீண்டல் வெருளி-Chiraptophobia எனப்பெறும். [தீண்டு > தீண்டுகை+ வெருளி; தொடு> தொடுகை+ வெருளி] – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 6 : இலக்குவனார் திருவள்ளுவன்

 (பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி)   [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.]   இந்தியா என்றால் ‘இந்தி’ யா?             நடுவணரசின் நோக்கம் ‘இந்தியா’ என்றால் ‘இந்தி’ என்பதுதான். காற்றில் வீசும் வாள் வீச்சைப் போன்ற நம் எதிர்ப்பைக் கண்டு நடுவணரசு மிரளாது. எந்த அளவிற்கு நாம் பொங்கி எழுகிறோமோ…

எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! – 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015  தொடர்ச்சி)   பெரும்பான்மைத் தமிழறிஞர்கள் எழுத்துச் சிதைவிற்கு எதிரான கருத்தையே தெரிவித்து வருகின்றனர். ஆனால், இவ்வாறு எதிர்ப்பவர்கள் – தம் வாதத்தை எடுத்துரைக்கும் பொழுது தெரிவிக்கும் சில கருத்துகளைக் கொண்டு அவர்களும் – எழுத்துச் சிதைவை ஆதரிப்பதாக எழுத்துச் சிதைவாளர்கள் தவறாகக் கூறுகின்றனர். சான்றாக அறிஞர் வா.செ.கு. அவர்கள், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பன்மொழியறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முதலிய சிலர் எழுத்துச் சிதைவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். எழுத்துச் சீரமைப்புக் குழுவில் இருந்தாலும் மீனாட்சி சுந்தரனார், எழுத்துச்சிதைவிற்கு…

எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! – 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

      தமிழைப் பாதுகாப்பதாகவும் பரப்புவதாகவும் கூறிக் கொண்டு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு எழுத்துச் சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையில் பிற அனைத்து மொழிகளுடனும் ஒப்பிடுகையில் மிகச் சிறந்ததாயும் அறிவியல் முறையில் அமைந்ததாயும் உள்ள ஒரே வடிவப் பாங்கு தமிழ் மொழிக்குரிய வரி வடிவ அமைப்பாகும். இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளாத சிலர் தாங்களும் குழம்பிப் பிறரையும் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகையோர் மிகச் சிலராய் இருப்பினும் இவர்கள் செல்வாக்கு உள்ள இடங்களில் உள்ளமையாலும் திரும்பத்…

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 5 : இலக்குவனார் திருவள்ளுவன்

  (பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.] ஆகாசவாணி – வெற்றியாய்க் காட்டப்படும் தோல்வி:-             வானொலியில் ‘ஆகாசவானி’ என்று கூறுவதற்குப் பெரும் எதிர்ப்பு கிளப்பினோம். நீறுபூத்த நெருப்பு, என நம்மை நாமே கூறிக்கொண்டாலும் உண்மையில் நாம் பெட்டைப் பனைமரங்கள்தாம். இந்த ஒலிக்கெல்லாம் நடுவனரசு அஞ்சாது….

செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்!

செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்!     செம்மொழித்தமிழுக்கான விருதுகள் 2011-2012, 2012-2013 ஆகிய ஈராண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.    2011-12-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் செ.வை. சண்முகத்துக்கும், குறள் பீட விருது செருமன் நாட்டைச் சேர்ந்த இவா மரியா வில்டெனுக்கும், இளம் தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள் கே. ஐயப்பன், எழில் வசந்தன், கே. சவகர் ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளனர். .   இதேபோல, 2012-13-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது “தினமலர்’ ஆசிரியர் முனைவர் இரா. கிருட்டிணமூர்த்திக்கும்,…

மத்திய அரசும் தமிழகக் கட்சிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தித்திணிப்பில் உறுதி கொண்ட மத்திய அரசும் ஆரவார முழக்கங்களால் தடுமாறும் தமிழகக் கட்சிகளும்     மத்திய அரசிற்கு மக்கள் நலம் சார்ந்த கொள்கைகளில் உறுதிப்பாடு இல்லை. ஆனால், இந்தித்திணிப்பில் விடாப்பிடியான உறுதிப்பாடு உள்ளது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் மத்திய அரசின் இந்தித் திணிப்பு என்பது திட்டமிட்டுச் சீராக நடைபெற்றுக் கொண்டு பிற தேசிய மொழிகளை அழித்து வருகின்றது. இத்தகைய பிற மொழித் தேசிய இன அழிப்பு வேலையின் அரங்கேற்றக் காட்சிதான் அண்மையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.   உலகின்…

யாருக்கும் வெட்கமில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

யாருக்கும் வெட்கமில்லை! (இளந்தமிழறிஞர்களுக்கான  குடியரசுத் தலைவரின் செம்மொழி விருது வழங்கப்படாமை குறித்த வினாக் கணைகள்)     தன்மானமும் தன்மதிப்பும் மிக்க  வீரப் பரம்பரை என நாம் நம்மைச்  சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும். மொழி காக்கவும் இனம் காக்கவும் உயிர் நீத்த வீர வணக்கத்திற்குரியோர் பிறந்த குலத்தில்தான் நாமும் பிறந்துள்ளோம் என்பதைத் தவிர நமக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை முதலான பண்புகள் இல்லை என்பதே உண்மை. ஈழத்தில் இனப்படுகொலை புரிந்தவர்களை அரியணையில் ஏற்றியதில் நமக்கும் பங்கு உள்ளது என்பதே நம் இழிந்த நிலையை…

கலைச்சொல் தெளிவோம்! 114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள்

கலைச்சொல்  114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள் எமி யேந்துணிந்த வேமஞ்சா லருவினை (குறிஞ்சிப். 32). எமியம் (8), எமியேம்(1), எமியேன்(1), தமி (3) தமித்தது(1), தமிய(3), தமியம்(2), தமியர்(11), தமியள்(6), தமியன்(5), தமியார் (1), தமியென்(1), தமியேம்(1), தமியேன்(1), தமியை(4), தமியோர்(3), தமியோன்(1), தனி(27), தனித்தலை(1), தனித்து(4), தனித்தனி(1), தனிப்போர்(1), தனிமை(3), தனியவர்(1), தனியன்(2), தனியே(3), தனியை(2), தனியோர்(2) ஆகிய சொற்கள் தனி என்னும் அடிப்படையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. தனிமையினால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம். தனியர் வெருளி-Anuptaphobia எமிய வெருளி- Eremo…

கலைச்சொல் தெளிவோம்! 113. தற்பாலுறவு வெருளி-Homophobia

கலைச்சொல் 113. தற்பாலுறவு வெருளி-Homophobia    தன் (319), தன்முன் (1), தனக்கு(14), ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பெற்றுள்ளன. பால் என்னும் சொல் 152 இடங்களில் பயன்படுத்தப் பெற்றிருந்தாலும், பசும்பால், கள்ளிப்பால் போன்ற பால் நீர்மங்களையும், பகுத்தல் என்னும் பொருளிலும்தான் கையாளப்பட்டுள்ளன.   பகுத்தலைக் குறிக்கும் பால் என்பதன் அடிப்படையில்தான், ஆண்பால் முதலான ஐந்து பால்பாகுபாடுகளும் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, பால் என்பது பாலினத்தைக் குறிக்கும் நடைமுறை சங்கக் காலத்திலும் இருந்துள்ளது. உறவு என்னும் சொல் ஓரிடத்தில் கையாளப்பட்டுள்ளது.   தன் கடைத் தோன்றி,…