தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 5 : இலக்குவனார் திருவள்ளுவன்

  (பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.] ஆகாசவாணி – வெற்றியாய்க் காட்டப்படும் தோல்வி:-             வானொலியில் ‘ஆகாசவானி’ என்று கூறுவதற்குப் பெரும் எதிர்ப்பு கிளப்பினோம். நீறுபூத்த நெருப்பு, என நம்மை நாமே கூறிக்கொண்டாலும் உண்மையில் நாம் பெட்டைப் பனைமரங்கள்தாம். இந்த ஒலிக்கெல்லாம் நடுவனரசு அஞ்சாது….

செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்!

செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்!     செம்மொழித்தமிழுக்கான விருதுகள் 2011-2012, 2012-2013 ஆகிய ஈராண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.    2011-12-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் செ.வை. சண்முகத்துக்கும், குறள் பீட விருது செருமன் நாட்டைச் சேர்ந்த இவா மரியா வில்டெனுக்கும், இளம் தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள் கே. ஐயப்பன், எழில் வசந்தன், கே. சவகர் ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளனர். .   இதேபோல, 2012-13-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது “தினமலர்’ ஆசிரியர் முனைவர் இரா. கிருட்டிணமூர்த்திக்கும்,…

மத்திய அரசும் தமிழகக் கட்சிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தித்திணிப்பில் உறுதி கொண்ட மத்திய அரசும் ஆரவார முழக்கங்களால் தடுமாறும் தமிழகக் கட்சிகளும்     மத்திய அரசிற்கு மக்கள் நலம் சார்ந்த கொள்கைகளில் உறுதிப்பாடு இல்லை. ஆனால், இந்தித்திணிப்பில் விடாப்பிடியான உறுதிப்பாடு உள்ளது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் மத்திய அரசின் இந்தித் திணிப்பு என்பது திட்டமிட்டுச் சீராக நடைபெற்றுக் கொண்டு பிற தேசிய மொழிகளை அழித்து வருகின்றது. இத்தகைய பிற மொழித் தேசிய இன அழிப்பு வேலையின் அரங்கேற்றக் காட்சிதான் அண்மையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.   உலகின்…

யாருக்கும் வெட்கமில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

யாருக்கும் வெட்கமில்லை! (இளந்தமிழறிஞர்களுக்கான  குடியரசுத் தலைவரின் செம்மொழி விருது வழங்கப்படாமை குறித்த வினாக் கணைகள்)     தன்மானமும் தன்மதிப்பும் மிக்க  வீரப் பரம்பரை என நாம் நம்மைச்  சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும். மொழி காக்கவும் இனம் காக்கவும் உயிர் நீத்த வீர வணக்கத்திற்குரியோர் பிறந்த குலத்தில்தான் நாமும் பிறந்துள்ளோம் என்பதைத் தவிர நமக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை முதலான பண்புகள் இல்லை என்பதே உண்மை. ஈழத்தில் இனப்படுகொலை புரிந்தவர்களை அரியணையில் ஏற்றியதில் நமக்கும் பங்கு உள்ளது என்பதே நம் இழிந்த நிலையை…

கலைச்சொல் தெளிவோம்! 114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள்

கலைச்சொல்  114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள் எமி யேந்துணிந்த வேமஞ்சா லருவினை (குறிஞ்சிப். 32). எமியம் (8), எமியேம்(1), எமியேன்(1), தமி (3) தமித்தது(1), தமிய(3), தமியம்(2), தமியர்(11), தமியள்(6), தமியன்(5), தமியார் (1), தமியென்(1), தமியேம்(1), தமியேன்(1), தமியை(4), தமியோர்(3), தமியோன்(1), தனி(27), தனித்தலை(1), தனித்து(4), தனித்தனி(1), தனிப்போர்(1), தனிமை(3), தனியவர்(1), தனியன்(2), தனியே(3), தனியை(2), தனியோர்(2) ஆகிய சொற்கள் தனி என்னும் அடிப்படையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. தனிமையினால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம். தனியர் வெருளி-Anuptaphobia எமிய வெருளி- Eremo…

கலைச்சொல் தெளிவோம்! 113. தற்பாலுறவு வெருளி-Homophobia

கலைச்சொல் 113. தற்பாலுறவு வெருளி-Homophobia    தன் (319), தன்முன் (1), தனக்கு(14), ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பெற்றுள்ளன. பால் என்னும் சொல் 152 இடங்களில் பயன்படுத்தப் பெற்றிருந்தாலும், பசும்பால், கள்ளிப்பால் போன்ற பால் நீர்மங்களையும், பகுத்தல் என்னும் பொருளிலும்தான் கையாளப்பட்டுள்ளன.   பகுத்தலைக் குறிக்கும் பால் என்பதன் அடிப்படையில்தான், ஆண்பால் முதலான ஐந்து பால்பாகுபாடுகளும் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, பால் என்பது பாலினத்தைக் குறிக்கும் நடைமுறை சங்கக் காலத்திலும் இருந்துள்ளது. உறவு என்னும் சொல் ஓரிடத்தில் கையாளப்பட்டுள்ளது.   தன் கடைத் தோன்றி,…

கலைச்சொல் தெளிவோம்! 105. கீறல் வெருளி 106. குருதி வெருளி107. கூட்ட வெருளி 108. கோழி வெருளி

கலைச்சொல்  105.கீறல் வெருளி-Amychophobia பொதியில் முனிவன் புரை வரைக் கீறி (பரிபாடல் : 11.11) என வருகிறது. கீறு>கீறல்+வெருளி கீறல் வெருளி-Amychophobia கலைச்சொல்  106. குருதி வெருளி-Hemophobia/Hematophobia குருதி என்னும் சொல்லை 66 இடங்களிலும், குருதித்து(1), குருதிய(1) ஆகியசொற்களையும் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ளனர். குருதியைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய குருதி வெருளி-Hemophobia/Hematophobia   கலைச்சொல்  107. கூட்ட வெருளி-Ochlophobia/Demophobia/Enochlophobia ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து (பதிற்றுப்பத்து : 72.12) மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய (பதிற்றுப்பத்து : 88.24)…

கலைச்சொல் தெளிவோம்! 109. சல வெருளி;110. சாவு வெருளி;111. சிவப்பு வெருளி;112. சூன்று வெருளி

கலைச்சொல் 109. சல வெருளி-Hydrophobia  தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார் (பரிபாடல் : 90) சல சல என்று ஓடிச் செல்வதால் நீருக்குச் சலம் எனப் பெயர் வந்ததென்பர் அறிஞர்கள். சலத்தைக்கண்டு ஏற்படும் இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் சல வெருளி-Hydrophobia [சல வெருளி என்பது நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்குத் தண்ணீரைக் கண்டால் ஏற்படும் பேரச்சம். இதனைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி சல பய ரோகம் என்று குறிக்கிறது.] கலைச்சொல்  110. சாவு வெருளி -Necro Phobia/Thanato Phobia/ Thantophobia…

கலைச்சொல் தெளிவோம்! 101. கருதுபு வெருளி 102. கழுது வெருளி 103. காற்று வெருளி104. பறத்தல் வெருளி

  101. கருதுபு வெருளி/கருத்து வெருளி-Allodoxaphobia/ Ideophobia  கருதி (2), கருதிய (1), கருதியது (1), கருதியாய் (1), கருதின் (1), கருதுபு(1), கருதும் (2), கருதுவிர்(1) என்னும் சொற்களைச் சங்கப் பாடல்களில் பயன்படுத்தி உள்ளனர். எண்ணிக் கருதுவதால் வருவதுதானே கருத்து. சிலருக்குக் கருத்தைக் கேட்டாலேயே தேவையற்ற பேரச்சம் ஏற்படும். கருத்துகள், அறிவாராய்ச்சித் திறன் ஆகியவற்றால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் கருதுபு வெருளி/கருத்து வெருளி-Allodoxaphobia/ Ideophobia 102. கழுது வெருளி-Demonophobia/Daemonophobia   கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக்காஞ்சி 633) கழுது புகவயர…

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 4 இலக்குவனார் திருவள்ளுவன்.

(மாசி 24, 2046 / மார்ச்சு 08,2015 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.] பெயர்ப் பலகை:-             பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும்; அல்லது முதலில் தமிழில் 5 பங்கு, அடுத்து ஆங்கிலத்தில் 3 பங்கு, தேவையெனில் பிற மொழியில் 2 பங்கு என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என அரசாணை உள்ளதை…

தாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்!

குடும்பச்சிக்கலைத் தமிழ்த்தேசியச் சிக்கலாகத் திரிக்கலாமா?     இல்லறம் என்பது அன்பும் அறனும் இணைந்த நல்லறமாகும். நம்பிக்கை, புரிதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருந்தால்தான் அமைதியான வாழ்க்கை காணமுடியும். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பது எல்லாக் குடும்பங்களிலும் சண்டையும் பிணக்கும் உள்ளமையை உணர்த்துவதே! எனவே, குடும்பத்தலைவன், தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மன வேறுபாடாக மாறும் முன்னரே இணங்கிப்போய் இணைந்து வாழ்வதுதான் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் ஏற்றதாய் அமையும்.  கருத்து வேறுபாடுகளையும் கருத்து மோதல்களையும் இயல்பாக எடுத்துக் கொள்ளாமல் பகையாக நோக்குவதால்தான்…

கலைச்சொல் தெளிவோம்! 99& 100. ஒளி வெருளி-Photo Phobia; ஒளிர்வு வெருளி-Photoaugliaphobia

99& 100. ஒளி வெருளி-Photo Phobia ஒளிர்வு வெருளி-Photoaugliaphobia   ஒள் (118), ஒள்வானமலை(1), ஒளி(76), ஒளிக்கும் (6), ஒளித்த (6), ஒளித்தன்று (1), ஒளித்தாள் (1), ஒளித்தி (1), ஒளித்து (9), ஒளித்தென (1), ஒளித்தேன் (1), ஒளித்தோள் (2), ஒளிப்ப (3), ஒளிப்பன (1), ஒளிப்பார் (1), ஒளிப்பான் (1), ஒளிப்பின் (1), ஒளிப்பு (1), ஒளிப்பேன் (1), ஒளியர் (1), ஒளியவை (1), ஒளியோர் (1), ஒளிர் (13), ஒளிர்வரும் (3), ஒளிரும் (1), ஒளிவிட்ட (2), ஒளிறு (41),…