சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 இன் தொடர்ச்சி) 5 இர.சிறீகந்தராசா: நீங்கள் அங்கு இருந்தபொழுது உடனிருந்த கைதிகள் உடலளவிலோ உளவியலளவிலோ ஏதேனும் வதைகளுக்கு உட்பட்ட காட்சிகளைக் காண முடிந்ததா? து.வரதராசா: உளவியல் தாக்குதல் எல்லாருக்குமே இருந்தது. எனக்குக் கூட! மற்றைய மருத்துவர்களுக்கும் எல்லாம். தொடக்கத்தில் நாங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் நம்ப மறுத்திருந்தார்கள். மறுத்திருந்த பொழுது அவர்களுடைய சித்திரவதை முறைகளைச் சொல்வார்கள், உண்மையைச் சொல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்கும் என்று. இர.சிறீகந்தராசா: எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறுங்கள்! து.வரதராசா: எங்களை அந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போவதாகக் கூறுவார்கள்….

மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார்.

மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கதிர்.மகாதேவன் (80) மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (சித்திரை 09, 2047 / ஏப்.22) காலை இயற்கை எய்தினார்.   இவர் எழுதியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களுள் ‘ஒப்பிலக்கிய நோக்கில் சங்கக் காலம்’ என்ற நூல் குறிப்பிடத்தகுந்தது. இந்நூலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. ஆங்கிலத்திலும் தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதித் தமிழ்த்தொண்டாற்றினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் இலக்குவனார்…

தமிழனின் தனிக்குணம்! – இடைமருதூர் கி.மஞ்சுளா

தமிழனின் தனிக்குணம்!    சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த  முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் “உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு” என்றான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்துக் கேட்டார். “எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா?…

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

இர.சிறீகந்தராசா: நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கிளிநொச்சிக் கமுக்க (இரகசிய) முகாமில் உங்களிடம் என்ன விதமான கேள்விகள் கேட்கப்பட்டன? து.வரதராசா:: அங்கு வைத்து ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. முதல் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த என்னை அவர்களுடைய ஊர்தியில் வவுனியா மருத்துவமனைக்குப் பண்டுவத்துக்காக அனுப்புவதாகத்தான் கூறியிருந்தார்கள். அன்று இரவு கிளிநொச்சியில் இறக்கி விடப்பட்டேன். அடுத்த நாள் அவர்களுடைய பேருந்திலே கண்ணைக் கட்டி ஏற்றினார்கள். அதில் வேறு யாரும் இருந்தார்களா, எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஏற்றிய சிறிது நேரத்தில் திரும்பி…

விகித அடிப்படையிலான சார்பாளர் முறை என்றால் என்ன? – விடுதலை இராசேந்திரன்

விகித அடிப்படையிலான சார்பாளர் முறை (விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை) என்றால் என்ன?   தேர்தலில் வேட்பாளர் செலவுத் தொகைக்கு ஆணையம் உச்சவரம்பு இட்டுள்ளது. அதைத் தாண்டி, கணக்கில் காட்டாமல் கோடிக் கோடியாக அள்ளி வீசப்படுகிறது.   இதைக் கட்டுப்படுத்தத் தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவை எனப் பல்வேறு கட்சியினரும் பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.   இப்போது தொகுதி வாரியாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர் போட்டி என்கிற நடைமுறை உள்ளது. இதில் மாற்றம் செய்து, ‘விகித அடிப்படையிலான சார்பாளர் முறை’ (விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை)…

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 02 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

சிங்கள வதைமுகாம் கமுக்கங்கள் – அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் து.வரதராசா! 2/6 இர.சிறீகந்தராசா: இந்த இறுதிப் போரிலே எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்கிற சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால், “1,46,000 பேருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது” என்ற கருத்து மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதே நேரத்திலே, ஐக்கிய நாடுகள் அவை 40,000 பேர் இறந்தார்கள், 30,000 பேர் இறந்தார்கள் என்று சில இடங்களிலே கூறியது. நான் சென்ற ஓர் இடத்தில், ஐ.நா.,வின் முன்னாள் அலுவலர்…

எதற்கு எழுதுகிறேன்? – பாவலர் மா.வரதராசன்

எதற்கு எழுதுகிறேன்? கைக்காசைச் செலவழித்துப் புகழைச் சேர்க்கும் கவிஞர்கள் பல்லோரில் ஒருவ னல்லேன் மொய்க்கின்ற வண்டாக விருதைத் தேடி முனைப்போடு சுற்றுகின்ற சிறுமை கொள்ளேன் பைக்குள்ளே பணத்தோடும் புகழ்ப்பாட் டோடும் பலரிடத்தே அடிவருடும் பண்பைக் கொள்ளேன் தைக்கின்ற சொல்வீசிப் பகைவர் கட்குச் சாட்டையடி கொடுக்கின்ற பாவ லன்நான்! விருதுக்கும் பதவிக்கும் பட்டத் திற்கும் “விலைபோனால்” நானெதற்கிங் கெழுத வேண்டும்? எருமைகளாய் நாலைந்து தடியர் தம்மை எனக்காக அடியாளாய் வைத்தி ருந்தால் பெருமைகளும் மாலைமரி யாதை யெல்லாம் பெற்றிடுதல் மிகவெளிதே..அதைநான் வேண்டேன் கருத்துள்ள கவிதைகளால் குமுகா…

ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசு தரப்போகும் ஒளிப்படப் போட்டி!

ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசு தரப்போகும்  ஒளிப்படப் போட்டி!   கோவை  இலட்சுமி இயந்திரப்பணிகள் (Lakshmi Machine Works Limited/LMW) நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் மறைந்த  முனைவர் செயவர்த்தனவேலு நினைவாக கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்பட்டுவரும் தே.செ (D.J.) நினைவு  ஒளிப்படப்போட்டி ஆறாவது முறையாக இப்போது நடத்தப்படுகிறது.  போட்டிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.  எந்த அகவையினரும் கலந்து கொள்ளலாம்.  யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். படங்கள் இந்தியாவில் எடுத்ததாக இருக்கவேண்டும். அனுப்பும் படத்திற்குக் கட்டாயமாகத் தலைப்பு கொடுக்கப்பட வேண்டும். படங்களை  இணையவழியில்தான் அனுப்பவேண்டும்.   இயற்கை…

அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்புப் பள்ளிகள்!

அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்புப் பள்ளிகள்   வெளியூர்  பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்ய அரசு ஆணை உள்ளது. ஆனால், மாநிலத்திற்குள் மட்டுமே பயணிக்க முடியும். பிற மாநிலங்களுக்குச் செல்லும்  பேருந்துகளில் சலுகைக் கட்டணத்தில் பயணிக்க  இசைவில்லை.   மாற்றுத்திறனாளிகளாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக்குக் குழு அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. அரசுப் பேருந்தில் பெங்களூரு சென்றால், ஓசூரில் இறக்கி விட்டு விடும் அவலம் உள்ளது. மீதிக் கட்டணம் செலுத்த முன்வந்தாலும் ஏற்பதில்லை.   அதே நேரத்தில், சென்னையில்…

அறிவியலை மூட்டை கட்டி விண்வெளிக்கே அனுப்புங்கள்! – தி.வே.விசயலட்சுமி

அறிவியலாளர்கட்கு அறைகூவல்! விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைத்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளவேண்டா! ‘எங்கள் ஊரில் விண்ணுக்குப் ‘பறக்கும் விலைவாசி ஏற்றத்தை இந்த மண்ணுக்குக் கொண்டுவர ஏதேனும் வழிமுறைகள் சொல்லுங்கள்! இல்லையெனில் உங்கள் அறிவியலை மூட்டை கட்டி விண்வெளிக்கே அனுப்புங்கள்! தி.வே.விசயலட்சுமி

தொல்லைக்காட்சிகள் வேண்டா! – மறைமலை இலக்குவனார்

தொல்லைக்காட்சிகள் வேண்டா!     ஊடகம் என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்தது.  மனித மனங்களை ஊடுருவித் தாக்கும் மின்சாரம் போன்றது.  தனி மனித மனங்களை மட்டுமன்று ஒரு சமுதாயத்தின் போக்கையே மாற்றிக் காட்டும் பேராற்றல் வாய்ந்தது என்பதனை வியத்துநாம் போர் முதல் சிரியாத்து தாக்குதல் வரை நிகழ்ந்த நிகழ்வுகள் மெய்ப்பித்துள்ளன. இதனால் ஊடகங்கள் பெரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியுள்ளது.பெரும்பான்மையும் அத்தகைய பொறுப்புணர்வை நம் நாட்டு ஊடகங்களிடம் நன்கு காணமுடிகிறது.   சில சமயங்களில் பரபரப்புக்காக சிறிய செய்திகள்தானே என்று ஒளி/ஒலிபரப்பிவிட்டால் அவற்றின் தாக்கம் பேரளவில்…

புலம்பெயர்ந்தோர் நாடு திரும்புவது நல்லதில்லை – சீ.வி.கே.சிவஞானம்

புலம்பெயர்ந்தோர் நாடு திரும்புவது நல்லதில்லை! – சீ.வி.கே.சிவஞானம் “வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படவில்லை” என்று வட மாகாண அவையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.   புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் நாடு திரும்பி முதலீட்டு, வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. ஆனால், இதற்கான பொருத்தமான சூழல் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இஃது அரசின் நேர்மை மீது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.   எனவே, புலம்பெயர்ந்த மக்கள் யாரும் நாடு திரும்பவோ, இலங்கையில் வணிக முயற்சிகளில் ஈடுபடவோ விரும்ப மாட்டார்கள்…