சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – அ

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம் சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 1.            மன்னார் கோயிற் புராணம்            1855                 ⁠மகாவித்துவான் கோவிந்தபிள்ளை 2.            அளவு நூல் (சிற்பநூல்) இரண்டாம் புத்தகம்            1857                 பூதாமசு லுண்டு, 3.            இலக்கணச் சுருக்கம் – மழவை. மகாலிங்க ஐயர்     1861 4.            சிவதருமோத்தரம் மூலமும் உரையும்                        பூமறைஞான சம்பந்த நாயனார்                 ⁠உரை, குறிப்புரை : சாலிவாடீசுர ஓதுவா மூர்த்திகள்               5.            இந்து கைமை…

சட்டச் சொற்கள் விளக்கம் 221-225 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 216-220 : இலக்குவனார் திருவள்ளுவன் -தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 221-225 221. absolute owner   முழுச்‌ சொந்தக்காரன் ;   தனி உரிமையாளர்   முழுச்‌சொத்துரிமையர் முழு உரிமையாளர்.   தளவாடங்கள், கட்டடங்கள், நிலம், ஊர்திகள் போன்ற சொத்துகளின் ஒரே உரிமையாளர்.   வில்லங்கத்திற்கோ பிணைப்பொறுப்பிற்கோ உட்பட்டிருந்த போதிலும் சொத்தின் முழு உரிமையையும் மாற்றி வழங்கும் தகுதியுடையவர். 222. Absolute owners of all property . அனைத்துச் சொத்து முழு உரிமையாளர்கள்   ஒன்றின்மீதான அனைத்து…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : கலைமகள் திருக்கோயில்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அபய வார்த்தை – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 49 கலைமகள் திருக்கோயில் மாயூரத்தில் வசந்தோற்சவம் ஆன பிறகு சுப்பிரமணிய தேசிகர்திருவாவடுதுறைக்குப் பரிவாரங்களுடன் திரும்பி வந்தனர். அவருடன்பிள்ளையவர்களும் நாங்களும் திருவாவடுதுறை வந்து சேர்ந்தோம். வழக்கப்படிமடத்திலே பாடங்கள் நடைபெற்று வந்தன. தேசிகரின் பொழுது போக்கு சுப்பிரமணிய தேசிகர் காலை எழுந்தது முதல் இரவில் துயிலச் செல்லும்வரையிற் பாடம் சொல்வது, வித்துவான்களோடு சம்பாசணை செய்வது,மடத்திற்கு வருபவர்களுடைய குறைகளை விசாரித்து வேண்டிய உதவிகளைச்செய்வது ஆகிய விசயங்களிலே பெரும்பாலும் பொழுதைப் போக்கி வந்தார்….

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 9 : ஓரியின் புகழ்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 8 : தமிழ்நாட்டுக் கோட்டைகள் – தொடர்ச்சி) தமிழர் வீரம்ஓரியின் புகழ் படைத்திறமும் கொடைத்திறமும் வாய்ந்த வல்வில் ஓரியைப் பாராட்டிப் பாடினார், வன்பரணர். அவரது பாட்டின் சுவையறிந்து மகிழ்ந்தது பழந்தமிழ் உலகம். செஞ்சிக் கோட்டை திண்டிவனத்திற்கு மேற்கே உள்ளது செஞ்சிக் கோட்டை. அஃது இயற்கையான மலைக்கோட்டை. ஒன்றோடு ஒன்று இணைந்த மூன்று குன்றுகளால் அரண் செய்யப்பட்டுள்ள அக்கோட்டையின் சுற்றளவு ஏழு கல் என்பர். அவற்றுள் உயர்ந்தது இராசகிரி யென்னும் கொடுமுடி. செங்குத்தாக அறுநூறடி எழுந்து அண்ணாந்து நிற்பது அக்குன்றம்….

வள்ளுவர் சொல்லமுதம் 13 : அ. க. நவநீத கிருட்டிணன் : கூ. அறிவும் ஒமுக்கமும்

(வள்ளுவர் சொல்லமுதம் 12 : அ. க. நவநீத கிருட்டிணன் : கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் அறிவும் ஒமுக்கமும் கற்றும் கேட்டும் தெளிந்தும் பழகியும் பெற்ற அறிவே நிறைந்த அறிவாகும். “கல்வியின் பயன் அறிவு” என்று கற்றறிந்தோர் கூறுவர். தெய்வப் புலவராய திருவள்ளுவர் அறிவின் இலக்கணத்தைத் திறம்பட இயம்பியுள்ளார். கல்வி கேள்விகளின் நிறைவே அறிவு பெறுதற்கு உறுதுணை என்பதை அறிவுறுத்தக் கல்வி கேள்விப் பகுதிகளை அடுத்து அறிவுடைமை என்னும் அதிகாரத்தை அமைத் துள்ளார். நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ளவாறு…

சட்டச் சொற்கள் விளக்கம் 216-220 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 211-215 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 216-220 216. absolute monarch முழு முடியாட்சியர்   முழுமை முடியாட்சி என்பது மன்னர் அல்லது ஆட்சித் தலைவர் தம் சொந்த உரிமை அல்லது அதிகாரத்தில் ஆட்சி செய்யும் அமைப்பாகும். 217. absolute monopoly முழு முற்றுரிமை   தனி வல்லாண்மை முழு வணிக உரிமை முழு நிறைவுத் தனியுரிமை முழுத் தனி வல்லாண்மை   தொழிலில் அல்லது வணிகத்தில் அல்லது துறையில் விற்பனையாளர் அல்லது உற்பத்தியாளர் முழு உரிமையுடன்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 42 : தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 41 : 8. கடல்நகரில் தங்கிய காதை-தொடர்ச்சி) பூங்கொடி தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல் தகவுரை கேட்டோர் அகமிக வுருகிஇன்னுஞ் சின்னாள் இருந்திடல் வேண்டும்என்ன நயந்தனர்; எழிற்பூங் கொடியும்ஆண்டுளார் பண்பொடு அவர்தம் அரசியல் 30காண்டகு நெஞ்சினள் கனிவோ டிசைந்தனள்;சின்னாள் இருந்து செந்தமிழ் பரப்பிப்பின்னர் மீளுவள் பேதுறல் தவிர்நீ’இன்னணம் தாமரைக் கண்ணி இசைத்தலும் அருண்மொழி மனநிலை கலங்கினள் ஆயினும் `கன்னித் தமிழின்விலங்குபடை படஅவ் வீரங் காட்டினள்;வாழ்கஎன் மகளே! வாழ்கஎன் மகளே!வாழ்கஎன் தமிழே! வாழ்கஎன் தமிழே!’ 40எனுமுரை கூறி இறுமாந் திருந்தனள்மனமொழி…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1121-1135 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144 (கவிஞர் சுரதா கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) ★ இதழ் : சனவிநோதினி (1910)கட்டுரையாளர் : இசைத்தமிழ்★ நூல் : நாகரீகப் போர் (1925), அதிகாரம் 4 – மாயா மித்திரம், பக்கம்…

சட்டச் சொற்கள் விளக்கம்  211-215 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம்  206-210 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  211-215 211.absolute justice முழுமை நீதி   முழுமையான நீதி என்பதை ஒரு கோட்பாடாகக் கருதுகின்றனர். குறிப்பாகக் கடற்படையினர், கடல்சார் சோட்பாட்டின் மையக் கொள்கையாகக் கருதுகின்றனர்.   முழுமை நீதி ஆதரவாளர்கள் அனைத்துத் தீய, சட்டஎதிர் செயல்களை ஒழிப்பதையும் அரசாங்கத்தின் சட்டங்களை மீறுபவர்கள் மீது வழக்கு தொடுப்பதையும் மிக உயர்ந்த முன்னுரிமையாகக் கருதுகிறார்கள்.   “எந்த இடர்ப்பாடு குறைபாடு அல்லது ஊறுபாடுகளினால் ஏற்படும் தீங்கிலிருந்து காப்பாற்றும் முழுமை நீதி என்று…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அபய வார்த்தை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் : அத்தியாயம்- 48 : சில சங்கடங்கள்-தொடர்ச்சி) என் சரித்திரம்அபய வார்த்தை ஓதுவார், “ஐயா, அவரைச் சொன்னால் நாக்கு அழுகிப்போம்.இருந்திருந்து பரம சாதுவாகிய அவரைச் சொல்ல உமக்கு எப்படி ஐயா மனம்வந்தது!” என்றார். அம் மனிதர் ஒன்றும் சொல்ல மாட்டாமல் எழுந்து போய்விட்டார். அபய வார்த்தை அந்த மூவர் வார்த்தைகளையும் நான் கேட்டேன். “நல்ல வேளை,பிழைத்தோம்” என்ற ஆறுதல் எனக்கு உண்டாயிற்று. உடனே எழுந்தேன்.“இவ்வளவு நேரம் என்னைப் பற்றி நடந்த சம்பாசணையைக் கவனித்தேன்.எனக்கு முதலில் உண்டான சங்கடத்தை நீங்கள் நீக்கி…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 8 : தமிழ்நாட்டுக் கோட்டைகள்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 7 : கடலாண்ட காவலர்-தொடர்ச்சி) தமிழர் வீரம் 8தமிழ்நாட்டுக் கோட்டைகள்அரண்மனை நாட்டைக் காப்பவன் அரசன்; அவனைக் காப்பது அரண்மனை. அரசன் வாழும் இடம் அரண்மனை எனப்படும். அரண் என்பது கோட்டை. எனவே, அரணுடைய மனையே அரண்மனையாகும். தமிழகத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்தது மதுரை மாநகரம். நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாகப் பாண்டியர் அத்தலைநகரில் அரசு வீற்றிருந்தனர். அங்கு அமைந்திருந்த ஓர் அரண்மனையின் சிறப்பினைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.1 மாளிகையைச் சூழ்ந்து நின்றது நெடுமதில். பலவகைப் பொறிகள் அம் மதிலில் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றாரை…

வள்ளுவர் சொல்லமுதம் 12 : அ. க. நவநீத கிருட்டிணன் : கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி

(வள்ளுவர் சொல்லமுதம் 11 : அ. க. நவநீத கிருட்டிணன் : அ. கொடைநலமும் படைவலமும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர்’என்பர் சிவப்பிரகாசர். ஒப்புரவு செய்யும் உயர்ந்த உள்ளமுடையார் பிறர்க்கு உதவுவதைத் தமது கடப் பாடு என்று கருதினர். அவர்கள் கைம்மாறு கருதிப் பிறர்க்கு உதவுபவர் அல்லர். மாநிலத்து உயிர்கட்கு மழைவளம் சுரக்கும் மேகம் அவ்வுயிர்கள்பால் எந்தப் பயனையும் எதிர்நோக்குவது இல்லே. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு) என்னாற்றும் கொல்லோ உலகு” என்பது…