திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர் பாலா

கவிஞர் பாலா என அழைக்கப்பெறும் பேராசிரியர் இரா.பாலச்சந்திரன் பிறந்த நாள் : மார்கழி 30, 1977 / சனவரி 13, 1946 நினைவு நாள் : புரட்டாசி 06, 2040 / செப்.22, 2009 பெற்றோர்: மா.இராமதாசு – ஞானாம்பாள் மனைவி: மஞ்சுளா மகள்: பிரியா மகன்: கார்த்திக்கு பிறப்பிடம் – கல்வி   கவிஞர் பாலா மார்கழி 30, 1977 / 1946 ஆம் ஆண்டு சனவரி 13 ஆம் நாள் சிவகங்கையில் பிறந்தார்; சிவகங்கை அரசர் உயர் நிலைப்பள்ளியில் படித்தார்; பள்ளிப்பருவத்தில்…

பொங்கல் விழாக்கள் – சில நெருடல்கள் : வி. சபேசன்

பொங்கல் விழாக்கள் – சில நெருடல்கள்   இம் முறை புலம்பெயர் நாடுகளில் பொங்கல் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இந்தக் கொண்டாட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.   தமிழர்களிடம் எஞ்சியுள்ள தமிழர் திருநாளான பொங்கலுக்கு விழா எடுத்துக் கொண்டாடியவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.   ஆயினும் சில செய்திகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். அடுத்த ஆண்டு பொங்கலை இன்னும் சிறப்பாக, ஒரு தமிழர் திருநாள் விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காகச் சிலவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.   பொங்கல் விழா என்பது தமிழர்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: ம. இராமச்சந்திரன்

 (இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16: தொடர்ச்சி)  17   மாணவர் ஆற்றுப்படை, புதுக்கோட்டையில் வாழும் வள்ளல் பு.அ. சுப்பிரமணியனார் மீது பாடப்பெற்ற கவிதையாகும். பு.அ. சுப்பிரமணியனார் மணிவிழா மலரில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது.29 இக்கவிதை எழுதப்பெற்ற காலம் சனவரித் திங்கள் 1959. நூற்றுத்தொண்ணூறு அடிகளை உடைய அகவல் கவிதை இது. ஆசிரியப்பா இனத்தில் நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்து. ஈற்றியலடி நாற்சீர் பெற்றும், ஈற்றடியின் இறுதிச்சீர் ஏகார ஓசையுடனும் முடிந்துள்ளது. ஆற்றொழுக்குப் போல சீரான நடையைக் கொண்டு விளங்குகிறது இம்மாணவர் ஆற்றுப்படை….

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 08 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 07 தொடர்ச்சி) 08 தொழிலில் மேம்படுக! கல்வியுடன் தொழிலும் தேவையன்றோ? உழவுக்கும்தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில் உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம் (பக்கம் 57 / சுதந்திரப்பாட்டு) ஆயுதம் செய்வோம்! நல்ல காகிதம் செய்வோம்! ஆலைகள் வைப்போம்! கல்விச்சாலைகள் வைப்போம்! (பக்கம் 22 / பாரத தேசம்) பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் (பக்கம் 206 / முரசு) இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே! இயந்திரங்கள் வகுத்திடு வீரே! (பக்கம் 213 / தொழில்) கூடும் திரவியத்தின் இவைகள் – திறன் கொள்ளும்…

இந்திய வரலாற்றில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது – கே.கே.பிள்ளை

  தமிழ்ச் சமுதாயம் மிகவும் பழமையான ஒன்றாகும். பண்டைய எகிப்து, பாபிலோனியா, கிரீசு, உரோம் ஆகிய நாடுகள் நாகரீகத்தில் மிகவும் சிறந்து விளங்கிய பண்டைக்காலத்திலேயே தமக்கென ஒரு நாகரிகத்தையும் சிறந்த பண்பாட்டையும் வளர்த்து வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். இந்திய நாட்டு வரலாற்றில் இதுவரையில் தமிழகத்துக்குச் சிறப்பிடம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாடு என்று ஒரு நாடு இருப்பதாகவே வரலாற்று ஆசிரியர்கள் கருதியதில்லை. சென்ற நூற்றாண்டில் ஆர்.(ஞ்)சி.பந்தர்க்கார் என்பார் இந்திய வரலாறு ஒன்று எழுதி வெளியிட்டார். அதில் அவர் தமிழ்நாட்டைப் பற்றியே குறிப்பிடவில்லை.   இக்குறைப்பாட்டை வின்செண்டு சுமித்…

கிரேக்க, எகிப்திய நாகரிகங்கள் தமிழ் நாகரிகத்தின் கிளைகளே! – இராமச்சந்திர(தீட்சித)ர்

  கிரேக்க, எகிப்திய நாட்டுத் தொல்பழம் நாகரிகத்தின் வடிவமைப்பாளர்கள் யாவர்? காரணகர்த்தர் யாவர்?. அவை ஆரியமொழி எதையும், அதாவது ஆரிய அடிப்படை எதையும் பேசவில்லை. அங்ஙனமாகவே, அவை தொல்பழங்காலத் தமிழ் நாகரிக மரத்தின் கிளைகளே என்பதுதான் கொள்ளக் கிடப்பதாம். கிரீட், பித்தளை, செப்பு நாகரிகத்திலிருந்து எத்தகைய இடையூறும் இல்லாமல் இரும்பு நாகரிகத்துக்குச் சென்றுவிட்டது. இந்தியாவிலும் நடந்தது சரியாக இதுவே. பித்தளை நாகரிகம் என்பது போலும் ஒரு நாகரிகம், இந்தியாவில் இருந்திருக்கவில்லை. இச் சூழ்நிலைகளை யெல்லாம் கணக்கில் கொண்டு கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால், மத்தியத் தரைக்…

நாட்டாரியல் பேராசிரியர் கரு.அழ.குணசேகரன் இயற்கை எய்தினார்

(சித்திரை 29, 1986 /12 மே 1955 – தை 06, 2047 / 17 சனவரி 2016) ஓய்ந்தது உரிமைக்குரல்   நாட்டரியல் ஆய்வாளரும் நாட்டுப்புறக்கலைஞரும் நாடக ஆசிரியரும் நடிகரும் நாடகத்துறைப் பேராசிரியருமான முனைவர்  உடல்நலக் குறைவால் இன்று தன் 60 ஆம் அகவையில் புதுச்சேரியில் கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.   கே.ஏ.குணசேகரன் என அழைக்கப்பெறும் இவர், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை சிற்றூரில் பிறந்தவர்; இளையான்குடி உயர்நிலைப்பள்ளி, இளையான்குடி முனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை அரசு…

உ.வே.சா.வுக்கு முந்தைய பதிப்பாசிரியர்கள் – அரிஅர வேலன்

உ.வே.சா.வுக்கு முந்தைய பதிப்பாசிரியர்கள் 1992ஆம் ஆண்டு நாட்குறிப்பை புரட்டியபொழுது கிடைத்த தகவல் இது. ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழிலக்கியங்களை அச்சுச்சுவடிகளாக வெளியிட்டவர் உ.வே.சா.தான் என்றும் முதன்முதலில் வெளியிட்டவர் அவர்தான் என்றும் பலரும் பேசுகின்றனர்; எழுதுகின்றனர். அவர் மட்டும்தான் அம்முயற்சிக்கு மூலவரா என்னும் வினா 1992ஆம் ஆண்டில் எனக்குள் எழுந்திருக்கிறது, அதுபற்றி நூலகவியலாளர் வே.தில்லைநாயகத்திடம் கேட்டபொழுது, “இல்லை. உ..வே.சா. பிறப்பதற்கு முன்னரே தமிழிலக்கியங்கள் அச்சிடப்பட்டு இருக்கின்றன. உ.வே.சா. அதிகமான நூல்களை அச்சிட்டார்” எனக் கூறிவிட்டுத், தனது நினைவிலிருந்து அவர் கூறிய பதிப்பாசிரியர்களின் பட்டியல்தான் இது: ஆறுமுகநாவலர் 02….

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 ) நிற்றலும் அவர்கள் நிலையை உணர்ந்து                 கெஞ்சினர் பின்னர் கிளந்தனர் பணிமொழி சேவகர் நிலையில் சிறிதும் மாறிலர் “பணமெனிற் பிணமும் பல்லைக் காட்டும்” என்பதை யுணர்ந்த இவ்வணி கருடன், ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வோ ராயிரம் பொற்கா சுகளைப் பொழிவதாய்க் கூறினர் பொற்கா சுகளோ போற்றப் படுவன ஆயிரம் என்றால் யார்மனந் திரியா? ஒன்றின் மேற் காசை என்றுங் காணாச் சேவகர் மயங்குதல் செப்பவும் வேண்டுமோ “நன்று நன்று நல்குவீர் ” என்றனர் வணிகரில் ஒருவனை வல்விலங்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: தொடர்ச்சி) 16 மாணவர் ஆற்றுப்படையும் மற்றைய ஆற்றுப்படைகளும்   பத்துப்பட்டுள் கூறப்பெற்ற ஆற்றுப்படை நூல்கள் ஐந்தனுள் திருமுருகாற்றுப்படை மட்டும் சிறிது வேறுபட்ட தன்மையுடையது எனலாம். இறையருள் பெற்ற புலவன் ஒருவன், இறையருள் பெறச் செல்லும் புலவன் ஒருவனுக்கு, இறைவன் உறையும் இடங்கள், இறைவனைக் காணச் செல்லும் வழிகள், அடியவனை நோக்கி இறைவனே நாடிவந்து, காட்சி தந்து இன்பம் நல்கி இன்னருள் வழங்குகின்ற செய்திகளைக் கூறும் ஒப்பற்ற நூலாகும். மாணவர் ஆற்றுப்படையோ, வறுமை காரணமாக இளமையிற் கல்விச்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 07 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 06 தொடர்ச்சி) 07 கல்வியைத் தேடு!     உடல்நலத்துடன் கூடிய வலிமை எதற்குத் தேவை? அயலவரை அழிக்கவா? அல்ல அல்ல! நம்மைக் காத்துப் பயன்பாட்டுடன் திகழ! இதற்கு அடிப்படை கல்வி கற்றலும் கற்றபடி நிற்றலும். கல்வித்தேவையையும் கல்விக்கண்களை அனைவரும் பெறவேண்டும் என்பதையும் பாரதியார் பல பாடல்களில் வலியுறுத்தியுள்ளார். திறமை கொண்ட தீமையற்ற தொழில்புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே (பக்கம் 56 / விடுதலை) தேடுகல்வியிலாத தொரூரைத் தீயினுக்கிரை யாக மடுத்தல் (பக்கம்…

தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே! : குடிஅரசு – தலையங்கம்

தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே!   உழுது பாடுபட்ட பாட்டாளி உழுபயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்!! மழையென்றும் வெயில் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் – எதிர்பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும், பாம்புகளுக்கும் பச்சை இரத்தம் பரிமாறிய உழவன், நெளியும் நெற் குலைகண்டு நீண்ட நெட்டுயிர்ப்போடு, ஆனந்த பரவசனாய் அடையும் அமைதிக்கு எதனைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும்?   இரட்டைப்…