இயற்கை எழில் !
வான்மிதந்து சென்றடையும் கதிரவனைத் தான்தழுவி ஒளிஉமிழும் தண்நிலவில் கண்நிறைந்த காட்சிகாண கடல்வெளியில் மண்மீது படுத்தேன்என் கண்முன்னே தொங்கிச் சுழலும்இப் பூமிப்பந்தில் தங்கிவாழும் மக்கள்குலம் தழைக்க பொங்கிவழியும் அழகுடன்நம் பூமித்தாய் இங்கிருக்கும் மக்களுக்கே படைத்தாள் குறிஞ்சிமுல்லை குறையாத மருதத்துடன்நாம் அறிந்த நெய்தல்பாலை எனப் படைத்தாளே ! ஐவகைநிலத்தை அழகுடன் பார்த்தேன் மூவகைத் தமிழுடன் முத்திரைபதித்து பாவகையுடன் பைந்தமிழ்ப் புலவர்கள் பாடக்கேட்டேன் இயற்கை எழில்பற்றி ! எங்கு பார்க்கினும் மக்களெல்லாம் பொங்கும் மகிழ்ச்சியால் பூரித்ததையும் வறுமையைப் புறந்தள்ளி வாழும் வளமையும் கண்டேன் நாட்டில் ! இயற்கை அன்னை …
என் தாய்
– திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன் 92802 53329 தாயுனைத் தொழுதுன் திருவடி பணிவேன் தன்னலச் சேற்றினில் மாயேன்! கோயிலில் உறையும் கொற்றவை போலே குடியினைக் காப்பவள் நீயே! சேயெமைக் காக்க சீரலொ மிழந்தாய்! செல்வமே பிள்ளைக ளென்றாய்! ஓயுத லின்றி உழைப்பினைத் தந்தாய்! உனக்கிலை ஒருவரு மீடே! பற்பல தெய்வம் படைத்தன ரெனினும் பண்புடை தாய்முதற் தெய்வம் நற்றவம் செய்தேன் நானுனைத் தாயாய் நல்லறப் பேற்றினால் பெற்றேன்! வெற்றுரை யில்லை வெடித்தெழும் நெஞ்சின் விழைவது அம்மையே…
தமிழைப் போற்ற வாருங்கள்!
– இளவல் அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! பாடம் படிப்போம் வாருங்கள்! பாரில் உயர்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! கலைகள் பயில்வோம் வாருங்கள்! களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! ஒன்றாய் ஆட வாருங்கள்! நன்றாய்ச் சிறக்க வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! நாளும் அறிவோம் வாருங்கள்! நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம்…
சாகித்திய அக்காதெமி போக்கை மாற்றிக்கொள்ள பேரா. மறைமலை வேண்டுகோள்!
சாகித்ய அகாதெமி 2013- ஆம் ஆண்டுக்கான படைப்பிலக்கிய விருதுகளை அறிவித்துள்ளது. இவற்றுள், தமிழ்க்கவிதைப் படைப்பிற்கான விருது எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்துக் கண்டித்துப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், சாகித்ய அகாதெமி, இனியேனும் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகை வருமாறு :- தமிழ் ஒரு கவிதைமொழி எனப் போற்றுகிறோம். மென்மையும் நுண்மையும் பண்பாட்டு மேன்மையும் கொண்ட தமிழ்க்கவிதை உலகெங்கும் போற்றப்பட்டுவருகிற சூழல் மகிழ்வளிக்கிறது. ஏனைய மொழிப்பிரிவுகளில் அடிக்கடி கவிதைநூல்கள் சாகித்திய அக்காதெமி விருது பெறுவதைக்…
புதிது புதிதாய் சிந்தனை செய்
-கல்வியாளர் வெற்றிச்செழியன் புதிது புதிதாய் சிந்தனை செய் – நீ உலகம் புதிதாய் எழுந்திட செய் – நம் உலகம் புதிதாய் எழுந்திட செய். புதிய தென்பது பழையதன் வளர்ச்சி புவியில் நிகழ்ந்திடும் புதுமறு மலர்ச்சி விதையும் செடியும் இயற்கையின் சுழற்சி வினைவழி மாற்றும் மக்களின் முயற்சி புதிது தனி ஒரு செயலே மாற்றமென்றில்லை தனி சிறு விசையின்றி மாற்றங்கள் இல்லை முழுவதும் திடுமென மாறு வதில்லை முயற்சிகள் இன்றி, மேல் ஏறுவதில்லை. புதிது உள்ளது சிறத்தல் வளர்ச்சியின்…
கரிகாலன் மகனே! தமிழுரிமை பறித்தாரை மாய்ப்போம்!
– திருக்குறள்பாவலன் தமிழ்மகிழ்நன் விழித்தவிழி இமையாமல் வீணர்கண் கண்டான்! வெங்களத்தில் மார்மீது விழுப்புண்கள் பெற்றான்! அழியாத புகழுடம்பு ஐயனவன் பெற்றான்! ஐயமின்றித் தமிழீழம் ஆளவுயிர் தந்தான்! பழிசுமந்த சிங்களரைப் பசும்மழலைக் கண்கள் பார்த்தபடி படமாகப் பாரெங்கும் கண்டார்! எழிலூறும் இருவிழியால் எரிதழலை யெழுப்பும் ஏந்தலவன் நினைவேந்தி இனியென்று மிருப்போம்! வெறித்தபிள்ளை விழிகளிலே வாழ்வச்சம் இல்லை வாழ்நாளில் இதுபோலே வையகமெங்கும் உண்டா? எறிந்தவேலை இமையாமல் எதிர்த்துவிழி நோக்கும் இணையில்லாக் கரிகாலன் இளையமக னிவனே! பறித்தவாழ்வை யார்தருவார்? பாவிகளே! பிள்ளை பெற்றவளின் வயிறெரியப் பச்சை மண்ணைச் சுட்டீர்!…
எந்நாளோ? – இறைக்குருவனார்
கனலுகின்ற உள்ளக் கனவெல்லாம் நனவாகிப் புனலுறுபூம் பொய்கையெனப் பொலியுநாள் எந்நாளோ? அந்தமிழாம் நந்தாயை அரியணையின் மேலிருத்தி வெந்திறல்சேர் பெருமையுடன் விளங்குநாள் எந்நாளோ? கல்விக் கழகமெலாங் கவின்றமிழே கமழ்வித்துப் பல்கலையும் நந்தமிழர் பயிலுநாள் எந்நாளோ? திருநெறியாஞ் செந்நெறியின் திறனெல்லாம் உலகறிந்தே அருமையுணர்ந் ததன்வழிவாழ்ந் தகமகிழ்தல் எந்நாளோ? அடிமைவிலங் கொடித்தே அரியணையில் நந்தமிழன் முடிபுனைந்து கொடியுயர்த்தி முழங்குநாள் எந்நாளோ? கொத்தடிமை யாங்கறையைக் குருதிகொண்டும் நாங்கழுவி முத்தமிழின் சீர்மை முழங்குநாள் எந்நாளோ? நாடும்இனமும் நன்மொழியும் நந்தமிழர் பீடும் பெருமையுமாய்ப் பிறங்குவித்தல் எந்நாளோ? உழைத்தும் பயன்காணா(து) உலைவுறு நெஞ்சினரெல்லாம்…
அயல்மொழி எதற்கடா தமிழா?
– கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அன்னைத் தமிழில் அனைத்தும் இருக்கையில் அயல்மொழி எதற்கடா? – தமிழா அயல்மொழி எதற்கடா? முன்னைய மொழியாம் மூவா மொழியெனும் முத்தமிழ் நமதடா! – அது எத்துணைச் சிறந்ததடா! வீட்டிற்கொரு மொழி நாட்டிற்கொரு மொழி ஆட்சிக் கொரு மொழியா? -வழி பாட்டுக் கொரு மொழியா? பாட்டிற்கொரு மொழி படிப்புக்கொரு மொழி பலமொழி எதற்கடா? – தமிழா பலமொழி எதற்கடா? தமிழில் பேசு தமிழில் எழுது தமிழில் பாட்டிசைப்பாய் – இன்பத் தமிழில் வழிபடுவாய்! தமிழில் கல்வியைக் கற்பதே…
வழி சொல்வீர்! – தங்கப்பா
உப்பினிலே உப்பென்னும் சாரம் அற்றால் உலர் மண்ணின் பயன்கூட அதனுக்கில்லை குப்பயைிலே கொட்டி அதை மிதித்துச்செல்வார்! குணம்கெட்ட பொருளுக்கு மதிப்பும் உண்டோ? தமிழன்பால் தமிழின்றேல் அவனும் இல்லை தலைநின்றும் இழிந்தமயிர் ஆவானன்றே! உமிழ்ந்திடுமே நாய்கூட அவன் முகத்தில். உணராமல் தமிழ்மறந்து கிடக்கின்றானே! பிறவினத்தர் தம்மைத்தாம் காத்துக் கொள்ளப் பேதையிவன் எலும்பில்லாப் புழுவேயானான்! மறவுணர்ச்சி முழுதழிந்தான்; மானங் கெட்டான்; வன்பகையின் கால்கழுவிக் குடிக்கின்றானே! நெருப்பிருந்தால் சிறுபொறியும் மலைத்தீ யாகும் நீறாகிப்…
எல்லாளன் வாழ்க! –
– திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன் 92802 53329 எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் அறிக ஈழத்தின் இடர்நீக்க ஈங்கெழுந்தார் தெளிக! “இல்லையினி எல்லாளன்” என்று சொல்லு மெதிரி இடந்தேடி ஓடும்நாள் இனிவிரைவில் வருமே!
இணைய இதழ்!
இளையவன் செயா (கந்தையா) பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை ; பறிக்கக் காத்திருக்கும் ரோசாமலர் கவின்தென்ற லிலாடும் பார்த்திருக்கும் பாவையவள் பக்குவமாய்ப் பூக்கொய்ய சேர்த்திருந்தாள் மகிழ்வைத்தன் செம்முகத்தில் ! பறிப்பவர் இலக்கணம் பாவைக்குத் தெரியும் ஓரிதழ் உதிர்ந்தாலும் ஓர்குறையே ; அவளுக்கு இதழ்உதிராப் பூவேபூவைக்கு இதயம்நிறை மகிழ்ச்சி இதழ் நடத்துவதும் இதற்கொப்பானதே ! இணையஇதழ் கண்டேன் இணையில்லாத் தமிழ்காக்கும் கணையாக விளங்கிய கால்வழி நடத்தும் இணையஇதழ் என்றும் அணையாமல் துலங்க திணையளவாய் வாழ்த்துகிறோம் தீந்தமிழில் !
மாவீரர் வாழும் பூமி! மறுபடியும் துளிர்க்கும்!!
– புலவர் சா இராமாநுசம் மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பக்சே பாவீநீர் மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம் மீள ஆட்சி புரிவாரே