இணையத்தில் ஏமாந்துவிடாதீர்கள் உறவுகளே! – யாழ்ப்பாவாணன்

இணையத்தில் ஏமாந்துவிடாதீர்கள் உறவுகளே! இணைய வழித் தொடர்புகள் அடிக்கடி வந்து சேரும் அதில் வந்துள்ள மடல்களில் தன்னைக் கட்டு, தன் பிள்ளையைக் கட்டு, அழகான அக்காவைக் கட்டு, தங்கச்சியைக் கட்டு என்றவாறு விண்ணப்பங்கள் பல… ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று எனக்கும் மனைவி இருக்கென்றேன்! மனைவிக்கும் இவற்றைக் காட்டி கதைத்துச் சிரித்து மகிழ்வேன்… இணையத்தில் இப்படிப் பல உங்களுக்கும் வந்து சேரும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்… அப்பிள் திறன்பேசி, அப்பிள் மடிக்கணினி அனுப்புவதாக ஒருத்தி கனடா விமான ஓட்டியாம் மனைவியும் உடன்பட்டாள் நானும் அனுப்பு…

நீ உயர - கவிஞர் சீனி நைனா முகமது

நீ உயர உயரத் துடிக்கிறாய் உரிய வழியெது உனக்குத் தெரியுமா தம்பி – கொஞ்சம் உட்கார்ந்து முதலில் சிந்தி உயர்வுத் தாழ்வுக்கோர் உண்மைக் காரணம் உள்ளத்தில் இருக்குது தம்பி – அதை ஒழுங்கு படுத்துநீ முந்தி வெள்ளத்தின் அளவே தாமரை மலருமே வெருங்குளமானால் அழியும் – புது வெள்ளத்தில் மீண்டும் தழையும் உள்ளத்தில் உயர்ந்தால் உயர்ந்திடும் வாழ்க்கை உன்வச மாகிடும் உலகம் – இதை உணரத் திருக்குறள் உதவும் நல்லதை நினைத்து நல்லதை உரைத்தால் நல்லவை வந்துனை சேரும் – நீ நடந்தால் வாழ்த்துகள்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.18 – 1.6.22

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.13 – 1.6.17 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் ஷ வேறு வண்ணம்           18.     ஏடுகை யில்லா ரில்லை யியலிசை கல்லா ரில்லை                  பாடுகை யில்லா யில்லை பள்ளியோ செல்லா ரில்லை                  ஆடுகை யில்லா ரில்லை யதன்பயன் கொள்ளா ரில்லை                  நாடுகை யில்லா ரில்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா.           19.     தமிழென திருகட் பார்வை தமிழென துருவப் போர்வை                  தமிழென துயிரின் காப்புத்…

எழிற்றமிழ்   வேந்தன்   இளங்குமரனார்     இசையுடன்   வாழ்வர் !  – புலவர் பழ. தமிழாளன்

                  எழிற்றமிழ்   வேந்தன்   இளங்குமரனார்   இசையுடன்   வாழ்வர்  ! (திருவள்ளுவர் ஆண்டு 2053 கடகம் (ஆடி) 8, 24.07.2022 ஞாயிறு அன்று பாவாணர் இயக்கத் திங்கள் கூட்டத்தில்  செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் முதலாம் நினைவேந்தல் நிகழ்வில் பாடப்பெற்ற பா) 1. தொடக்கநிலை ஆசானாய்ப் பணியதனை   ஏற்றே      தொல்தமிழ மாணவர்க்கே தமிழறிவை  ஊட்டி    நடமாடும் பல்கலையாய் நாட்டகத்தே தோன்றி      நாடுதமிழ்ப்  பல்கலையில் பணியுமதும்  ஏற்று    முடமானோர்  முனைப்புறவே முதுகெலும்பும்   நிற்க       முதுமைவரை  பணியாற்று  மூதறிஞர்…

  புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6. 13 – 1.6. 17

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 13.     ஈங்கொரு புதுமை யில்பொரு ளுவமை                       யெனத்தகு சிறுமுகை மணம்போற்                  பாங்கொடு மக்கள் பற்பல பெற்றும்                       பழமையென் றளவிடு மகவுந்                  தாங்கிய தாவிற் கன்னியா யிளமை                       ததும்பிடுந் தண்டமிழ்த் தாயை                  நீங்கிய விளமைச் சிறியவ ருலக                       நெறியிலா ரொத்துளே மெனலே.           14.     வண்புகழ் மூவ ரொடுதமிழ்க் குயிரை                       வழங்கிய…

தமிழினமே பெருமையுறத் தமிழ்நாடு பிறந்ததுவே! – கிருட்டிண திலகா

பா வகை: கலி மண்டிலம்.      தமிழினமே பெருமையுறத் தமிழ்நாடு பிறந்ததுவே! ஆண்டதொரு ஆங்கிலேயர்              ஆட்சியிலே வைத்தாரே..    வேண்டாத மதராசு            வென்றதொரு   பெயர்மாற்றம்.      நீண்டகாலப்   போராட்டம்             நிலைத்தது     நற்பெயராய்க்      கொண்டதொரு   தமிழ்மொழியால்                  கண்டோமே    தமிழ்நாடு. 2.   சங்கரலிங்    கனாரேற்றார்              சாகும்வ     ரைஉண்ணாது       மங்காதப்    புகழ்பெற்றார்.               மகத்தான    உயிர்நீத்தார்.       தங்கமான சின்னதுரை               தந்தாரே   தீர்மானம்.        எங்கெங்கும் தமிழ்நாடு                இசையாகப்  பரவியது. 3. நிதியமைச்சர்   பேசினாரே             …

நிலையில்லை எதுவும்…! அமுதா பொற்கொடி

நிலையில்லை எதுவும்…! மணம்வீசும் மலர்கள் மாலையில் வாடும் வனம்சூழும் குயிலோசை குரல்வளை ஓயும் தனம்கோடி குபேரமும் தெருக்கோடி சேரும் மனம்கூடிய பாசமும் பசபசப்பாய்ச் சோரும் கட்டிய கோட்டைகள் தரைமட்டமாகும் ஒட்டிய ஒட்டடைகள் ஒவ்வாமையாகும் வாட்டிக் கூட்டி வகுத்த போகம் வட்டியும் முதலுமாய்க் கைவிட்டுப் போகும் ஆய்விழிப் பார்வை அந்தகம் ஆகும் வாய்வழிப் புன்னகை உதட்டோடு குன்றும் நோய்நொடி அகன்று நூறாண்டு கடந்தாலும் மெய்வற்றி உலர்ந்து பாடையில் போகும் நேற்றைய நிகழ்வுகள் இன்று புரையும் இன்றைய நடப்புகள் நாளை திரையும் முந்தை கடந்தவை காலத்தால் கரையும்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3- 1.6.7 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம்           8.     ஒருமொழி யேனு மினையநாள் காறு                      முலகெலாந் தேடியு மடையா                 இருவகைக் கைகோ ளன்பினைந் திணையோ                      டெழுதிணை யகம்புற மென்னும்                 பொருளினை யுடைய பழந்தமிழ்த் தாயைப்                      பொருளிலா ளெனப்புகல் பொய்யர்                 மருளினை யுண்மைப் பொருளென மதிப்போர்                      மதியினுக் குவமையம் மதியே.           9.     பேசுநற் குணமு மெழுதெழில் வனப்பும்                      பெரியர்சொற்…

கூட்டை எரிக்கும் சிறகுகள்!- கிருட்டிண திலகா

கூட்டை எரிக்கும் சிறகுகள்! வேலியுமே பயிர்களைத்தான்   கெடுக்கும் காலம்.      வெள்ளாட்டை வளர்ப்போனே           அழிக்கும் கோலம். கூலியின்றி   ஏமாற்றிப் பிழைக்கும்    கூட்டம்.         குடிவைத்த வீட்டினையே          எரிக்கும்   நாட்டம். வாலில்லாக்    குரங்கினத்துப் பகையை        அன்று         வாலிதனை மாய்த்ததுபோல்  மறைந்திருந்து            அழிக்கத்    தோன்றும். சூலியென  ஆங்காரம் எழுமே     நெஞ்சில்.         சூழ்பகையும் அழிந்திடுமே             வலியும்  மிஞ்சில்! *பொய்சொல்லி ஆட்சியேறிப் பிழைக்கும்    கூட்டம்.        போக்கற்ற  வழியினிலே        பணத்தைக்   கட்டும். மெய்வருத்தி   உழைப்போர்மேல் வரியைக்  கூட்டி…       …

தமிழ்ப்பகை தாள்  பற்றுவோன்  பதர் ! – பழ.தமிழாளன்

தமிழ்ப்பகை தாள்  பற்றுவோன்  பதர் ! 1. தமிழ்ப்பகை கால்வீழ்வான் நற்றமிழ                                                   னாகான் உமிழும்வாய்   எச்சி    உணர். 2. தன்மானம்   அற்றே    தகுசீர்  பகுத்த                                                 றியான் என்னிருந்தும்  இல்லானே  தேர். 3. ஈராயிரம்   ஆண்டின்    தமிழ்ப்பகை                                        கால்வீழ்வான் தேரான்   தெளிவில்லான்  தேர். 4. இனம்வீழ்த்த  எண்ணிடும்  ஆரியத்தின்                                                       தாளை மனமொப்பிச்  செல்வானே   மண். 5. நற்றமிழை   முற்றுமே   ஞாலத்                                           தழிப்பானைப் பற்றுவான்   என்றும்   பதர். 6. ஈன்றெடுத்த  தாயை  இழிவுசெய்வான்                                           கால்வீழ்வான் மாண்பில்   மகனாவன்   மன்…

பேசின.. பேசின.. – மு. இராமச்சந்திரன்

பேசின.. பேசின.. அச்சமும் கவலையும் நோய்களும் பேசின அடிதடி கலகமும் வறுமையும்  பேசின மக்களும் பேசினர் மனத்தோடு அழுகையும் மறதியில் மறந்துமாய்ப் போக்குகளுமாய்.. வந்தவர் பேசினர் வாழ்க்கையின் நெருக்கமாய்   வாய்மட்டும் பேச்சுமாய் வறட்டுகள் புரட்டுமாய் கற்றவர் பேசினர் கலைகளும் இழப்புமாய் காலமும் பேசிட வம்புமாய் வழக்குமாய் எல்லாமும் பொதுவென்னும் ஏக்கமும் கலக்கமும் இன்னலே செய்கின்ற வழக்கமே வரவுமாய் நேர்மைகள் பேசின யாரோடும் கூட்டுமாய் நெகிழ்ச்சியில் ஆடின போதனையும் வழக்கமாய் அன்புமே பேசிட மொழியின்றித் தயக்கமாய் அறிவுமே ஆடுது தள்ளாட்ட முழக்கமாய் கொடுமைகள் கொடியேந்தி…

காப்பியாற்றுப்படை – (உ)ருத்திரா

காப்பியாற்றுப்படை நெடுங்காந்தள் மூசிய அடைகரை அன்ன‌வால் இயற்றிய வளைஇளம் நெற்றிகண்விழித்தாங்கு மொழி ப‌டாத்து மடமைகாப்பியாறு இமிழ்தரு இன்னொலியின்கதுப்பு சிவந்தவள் மணிகிளர் காட்சி.கழைபடுத்த பாம்பின் நுண்ணுரி சுற்ற‌இலஞ்சி நீழல் குவி இணர் கவிக்க‌எழிலுண் மைக்கடல் எறிதிரை ஏய்ப்ப‌குணில் பாய் முரசம் உள்ளொலி எதிர‌மழைக்கண் கொண்டு பேய்வெள்ளருவிமலர் பொருது மற்று மண் பொருது இறங்கிபொறிப்பரல் முரல  நீர்வழி போன்ம்நீடிய நெஞ்சின் அளியவள் காட்சி.முதிர்கான் போழ்ந்த வெண்ணிய காலைமுழைகள் ஒளியும் அதிர்செவி முயலாய்காட்டி காட்டி மறைக்கும் மன்றிடைகள்ளநகையாள் அவிழ்தரும் நகையுடன்சிந்திய சொல்லில் வித்திய முதிர்நெல்விளைதரும் என்று பலவு வீழ்த்த‌படப்பை…