யாதும் ஊரே யாவரும் கேளிர் 2/8 – கருமலைத்தமிழாழன்

யாதும் ஊரே யாவரும் கேளிர் 2/8 தலைவர் வணக்கம் நூலகராய்த்   தம்வாழ்வைத்   துவக்கி   நல்ல நூலாக   வாழ்பவர்தாம்   மோகன   ரங்கம் காலத்தை    வெல்கின்ற   கவிதை  நெய்து கவின்வனப்பைத்   தமிழுக்குச்   சேர்க்கும்   பாவோன் கோலத்தில்   எளிமையொடு   அரவ   ணைப்பில் கோப்பெருமான்   பிசிராந்தை   நட்பின்   பண்போன் மூலத்தொல்   காப்பியத்து   நூற்பா   போன்று முத்தமிழைக்   காப்பவர்தாம்   ஆலந்   தூரார் !   கவிதையொடு   நாடகங்கள்   புதினம்   என்று கருத்தான   படைப்புகளை   நாளும்   படைப்போன் நவிலுமாறு   சிறுகதைகள்   குறும்பா   என்று நாட்டோர்கள்   புகழுமாறு   படைத்த  ளிபோன் கவிதையிலே   நாடகத்தைச்   சிறுவர்க்  …

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) பேராசிரியர் இலக்குவனாரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும், தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும்  இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர் எம்போன்றோரை எள்ளியே தள்ளினர் எனப் பேராசிரியர் இலக்குவனார் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி)   இவ்வாறு பேராசிரியர் இலக்குவனார் தமிழ்க்கடமையே  கண்ணாகப் பணியாற்றினாலும் பணியிலும் சிக்கல்கள் தவறாமல் தொடர்ந்தன. ஆனால், முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் கருத்திற்கு இதைக் கொணரப் பேராசிரியர் இலக்குவனார் விழையவில்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆளும்கட்சியாய்த் தி.மு.க.மாறியதுமே “எங்களில் ஒருவர் நீங்கள்” எனக் கூறினார்கள். இவ்வாறு அமைச்சரவையில் பேராசிரியர் சேர வேண்டும் என்பதைப் பேரறிஞர் குறிப்பாக உணர்த்தினார். ஆனால் மூத்த தலைவர்கள் நீங்கள் அமைச்சர்களுக்கெல்லாம் அமைச்சராக விளங்குகிறீர்கள்; உங்களுக்குக் கட்சி அரசியல் ஒத்து…

யாதும் ஊரே யாவரும் கேளிர் 1/8 – கருமலைத்தமிழாழன்

யாதும் ஊரே யாவரும் கேளிர் 1/8 தமிழ்த்தாய் வாழ்த்து   புத்தமுதாய்   இலங்குதொன்மைத்    தமிழைப்   போல பூமிதனில்    வேறெந்த    மொழிதாம்   உண்டோ முத்தமிழின்    பிரிவைப்போல்    உலகந்    தன்னில் முகிழ்ந்துள்ள   மொழிகளிலே    பிரிவு    உண்டோ நித்திலமாய்   ஐந்துவகை    இலக்க    ணத்தை நீள்புவியில்    பெற்றவேறு    மொழிதான்    உண்டோ எத்தனையோ    மொழிகளினைத்    திணித்த    போதும் எழில்மாறாத்    தனித்தமிழ்போல்    வேறிங்    குண்டோ !   அகத்திற்கும்    புறத்திற்கும்    நெறிகள்    சொல்லும் அருந்தமிழைப்    போலெந்த    மொழியிங்    குண்டு தகவுடைய    திருக்குறள்போல்    வாழ்வைக்    காட்டும் தனிநூல்கள்    வெறெந்த    மொழியி    லுண்டு நகமகுட     விரல்கள்போல்   …

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) 3.ஒருமைப்பாட்டு உணர்வு – தொடர்ச்சி   மேலும் அவர் தெரிவிக்கும் விருப்பங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய நல்ல எண்ணங்களே. ஆகும்.   வேற்றுமைகள் ஒய்ந்திட வேண்டும்-ஈன             வேண்டா மதச் சாதி சாய்ந்திட வேண்டும் போற்றும் சமநிலை வந்திட வேண்டும்-கல்விப்             புத்தம் புதுமைகள் பூத்திட வேண்டும்! அறியாமைப் பேய்களை அகற்றிட வேண்டும் நம்மின்                 அன்னை பாரதத்தின் உண்மைக் கிராமங்கள் நெறிமுறைகளைப் பேணிட வேண்டும்-என்றும்                …

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) 3.ஒருமைப்பாட்டு உணர்வு   தமிழ்மொழி உணர்வும், தமிழ் இனப்பற்றும், மிகுதி யாகப் பெற்றுள்ள கவிஞர் சேதுராமன் குறுகிய நோக்கு டையவர் அல்லர். பரந்த இந்திய உணர்வும் கொண்ட வராக அவர் விளங்குகிறார். “இந்தியா என்பதொரே நாடு-ஒங்கும் இமயமுதல் குமரிவரை எங்களுடை வீடு! உந்தி எழுந்தே உழைப்பைத்தேடு-என்றும் உலரெங்கில் நமது புகழ் நிலைத்திடவே கூடு!” என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ. வறுமை மிகுந்த நாடாக இருக்கிறது இந்தியா. இந்நாட்டின் எண்ணற்ற ஏழை…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா)     பேரறிஞர் அண்ணா பேராசிரியர் இலக்குவனாரிடம் பேசி அவருக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முதலான ஏதேனும் ஒரு பணியைத் தர முதலில் எண்ணினார். பெருந்தலைவர் காமராசர் இருந்த பொழுதே தடைநோக்கில் இருந்த அதிகாரக் கூட்டத்தார் கடும்போட்டி இருப்பதால் இவரை அமர்த்த இயலாது எனக் கூறினர். எத்தனைப் போட்டியாளர் இருப்பினும் தமிழுக்காகப் போர்க்களங்களைக் கண்டு சிறைவாழ்க்கையும் பதவி இழப்புகளும் உற்ற பேராசிரியர் இலக்குவனாருக்கு இணையாக அவர்கள் வருவார்களா என எண்ணவில்லை.  …

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 8/8 – கருமலைத்தமிழாழன்

(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 7/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 8/8     தொல்காப்பி    யர்மொழியை  வள்ளு  வர்தம் தொல்குறளை    கம்பர்சொல்   கவிந  யத்தை உள்ளத்தை   உருக்குகின்ற   தேவா   ரத்தை உரிமைப்பா   பாரதியை   தாசன்  தம்மை எல்லைக்குள்   இல்லாமல்   ஞால   மெல்லாம் எம்மொழியில்   படிப்பதற்கும்   இணைய   மென்னும் நல்வலையுள்   வளங்களுடன்   நுழைந்த   தாலே நற்றமிழோ    உலகமொழி   ஆன   தின்று !     பிறமொழியின்   அறிவெல்லாம்   இணையத்   தாலே பிறக்குமினி   தமிழினிலே!   உலகந்   தன்னில் சிறகடிக்கும்   புதுமையெல்லாம்   ஒருநொ  …

அவியினும் வாழினும் என்? – தமிழ்சிவா

அவியினும் வாழினும் என்? – தமிழ்சிவா   வா சாதித் தேரிழித்து நடுத்தெருவில் நிறுத்து இல்லாதோர் இயலாதோர் வீடு வாசல் கொளுத்து ! எடு கசடுகளே தலைவனெனப் புகழ்ந்து விழா எடு ! விடு மானம் பழம் அறிவு புகழ் பீடோடு பிறவும் விடு! செய் பாழும் சிலைக்குப் பாலூற்றிப் பரவல் செய்! வாழும் தொண்டர்க்கு வரிசையுடன் பாடைசெய்! பெருமக்கள் காட்டிய நல்வழியைப் பெருவிருப்புடனே  நிரவல் செய்! தடு தமிழினத்தில் யாரேனும் தகுதியால் உயர்ந்தாலும் உள்ளுக்குள் நல்லறிவு தன்மானம் புகுந்தாலும் ஓடோடித்தடு! நடு பொதுத்தெருவில்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)  ‘தமிழ் நடைப் பாவை’யின் எளிமைக்கும் இனிமைக்கும், கருத்து நயத்துக்கும் சொல்லோட்டத்துக்கும் இவை நல்ல எடுத்துக்காட்டுக்கள் ஆகும். பாவை முழுவதுமே படித்துச் சுவைத்து இன்புறத்தக்க இலக்கிய விருந்தாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் நடைப் பயணம் மேற்கொண்ட பெருங்கவிக்கோ தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்காக உலகநாடுகளில் சுற்றித் திரிகின்றார். உலகக் கவிஞர் மன்றங்களிலும் மாநாடுகளிலும் தமிழ் முழக்கம் செய்கின்றார். இது குறித்து அவர் பாடியிருப்பது நினைவுகூரத்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ)  – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங)     பேராசிரியர் திருப்பரங்குன்றம் தொகுதியில் நிற்பதாக அறிவித்ததால், வாக்குகள் பிரிந்து ஓரிடத்தை இழக்க வேண்டி வரும் எனத் தி.மு.க.தலைவர்கள் அஞ்சினர். பிற இடங்களிலும் பேராசிரியர் ஆதரவின்றி வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும் என்று கவலைப்பட்டனர். எனவே, போட்டியிடும் அறிவிப்பைத் திரும்பப் பெறுமாறும் தம் பரப்புரையால் நாடு தழுவிய வெற்றியைத் தி.மு.க.விற்கு ஈட்டித் தருமாறும் வேண்டினர். பேராசிரியர் இலக்குவனார் தி.மு.க. தன்னை ஆதரிக்கட்டும் என்றார். தேர்தல் இல்லாமலேயே பேராசிரியரை நாடாளுமன்ற…

புள்ளிகளும் கோலங்களும் ! – மெல்பேன் செயராசர்

புள்ளிகளும் கோலங்களும் ! வெள்ளை மனத்தினிலே கறுத்தப்புள்ளி வந்துவிட்டால் வினையாவும் குடிபுகுந்து விட்டதென  நாம்நினைப்போம் புள்ளியினால் கோலங்கள் மாறுவதைக் கண்டுவிட்டால் நல்லபுள்ளி வருவதற்கு நாம்முயன்று நிற்போம் ! புள்ளியினால் கோலங்கள் புறப்பட்டு வந்துநிற்கும் புள்ளியது பிழைத்துவிடின் அலங்கோலம் ஆகிவிடும் புள்ளியினை நாமென்றும் எள்ளிநகை யாடிவிடின் நல்லகோல மெல்லாமே நரகலோக மாகிவிடும் ! நல்லவராய் இருப்போரை நல்லபுள்ளி எனவழைப்போம் வல்லவராய் இருப்போரும் நல்லபுள்ளி ஆகிடுவார் சொல்லவல்ல விசயமெல்லாம் நல்லபுள்ளி பெற்றுவிடும் நல்லபுள்ளி நிறைந்துவிடின் நன்மையங்கே குவிந்துவிடும் ! எழுத்துக்குப் புள்ளிவைத்தால் மெய்யெழுத்தாய் மிளிர்ந்துவிடும் இழுக்குடைய செயல்செய்தால்…