தாயுமானவர் – நா.இராசா இரகுநாதன்

தாயுமானவர் தமிழீழக் கரு சுமந்து தாயுமானவர் ! உயிர் மெய் ஆயுதம் -எனத் “தமிழுக்கு ” அனைத்துமானவர்! உலகத் தமிழர்களின் ஒற்றை முதுகெலும்பு ! தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் -இவை தமிழின் பெருமிதங்கள் இனி தலைவரின் வரலாறும்!   –  நா.இராசா இரகுநாதன்

அவனே உயிர்ப்பண் – இராசா இரகுநாதன்

தாயகமே தளையறு ! வளையாது வளரும் பனையே ! யாரை வரவேற்க வானை வளைக்கிறாய்? கார்த்திகைப் பூவே யாரைத் தழுவ -உன் காந்தள் விரல்கள் காற்றில் அலைகின்றன? உப்புக்கடலே! யாரை எதிர்நோக்கி எட்டிஎட்டிக் குதிக்கிறாய்? வன்னிக்காடே யாருக்கு மாலைசூட்ட மலர்ந்து கிடக்கிறாய்? ஆதியாழே! யார் இசைக்க சுரம் கூட்டுகிறாய் ? அமுதத் தமிழே ! எவர் எழுத காத்திருக்கிறாய்? விடுதலைப் பண்ணை! தளையறு ! தாயகமே தளையறு ! அணுக்கள் தோறும் அவன்உயிர்ப்பான் அவனே உயிர்ப்பண் ! இராசா இரகுநாதன்

அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று – பா சங்கிலியன்

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று அடிமைப்பட்ட தமிழனை அடங்கா தமிழனாக்கிய அண்ணலே நீர் நீடூழி வாழ்க! செந்தமிழர் புகழை பாரெங்கும் பரப்பிய வள்ளலே நீர் நீடூழி வாழ்க! சொல் வீரம் காட்டாத சொக்கத்தங்கமே செயல் தான் வீரமென செய்து காட்டிய செம்மலே நீர் பல்லாண்டு வாழ்க! – ‘சங்கிலியன் பாண்டியன்‎

துணிவு இழந்தவனுக்குச் சுண்டுவிரல்கூட எதிரிதான்

துணிவு    துணிந்தவனுக்குக் கடலின் ஆழம்கூட ஒரு சாண் வயிறு துணிவு இழந்தவனுக்கு மண்பானையின் ஆழம்கூட கடலின் ஆழம் என்பான்… துணிந்தவனுக்கு தலையெழுத்து ஒரு தடையில்லை.. துணிவு இழந்தவனுக்கு அவன் சுண்டுவிரல்கூட எதிரிதான் துணிந்தவனுக்கு ஒரு முறை மரணம்.. துணிவு இழந்தவனுக்கு நித்தம் நித்தம் மரணம்.. தவற்றைக் களையெடு சேமிப்பை விதைபோடு நீயும் துணிந்தவன்தான் வாழ்க்கையென்னும் பக்கத்தில் துணிந்தவன் வீழ்ந்தாலும் எழுவான்.. துணிவு இழந்தவன் எழுந்து எழுந்து வீழ்ந்துகிடப்பான்.. அகக்கண் திறங்கள் துணிவு பிறக்கும் புறக்கண் துறந்துவிடுங்கள்.. ஆக்கம் பிறக்கும்.. ஏன் என்ற கேள்வி பிறக்காவிடில் பிறக்காமலேயே இறந்துவிடுகிறது…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 08: ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 105 ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி) 8   பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றிய கவிஞர்கள் அனைவரும் தமிழ் மொழியின் சிறப்பையும் மறுமலர்ச்சியையும் சமூகச் சீர்திருத்தத்தையுமே தம்முடைய கவிதைக்குக் கருப்பொருளாகக் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக புலவர் குழந்தை, இ.மு. சுப்பிரமணியபிள்ளை, சாமி. சிதம்பரனார், வாணிதாசன், ச. பாலசுந்தரம் ஆகியோர் எழுதிய கவிதைகளைக் குறிப்பிடலாம். புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம்’ என்ற மிகப் பெரிய செய்யுள் நூலை எழுதி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள். இராவண காவியம் கம்பன் கவிக்கு…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 8 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 105  ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி) குற்றமொன் றில்லாக் குறுந்தொழில் புரியும் ஆளைக் கொன்றனர் ஆடலன் தப்பினன் எழிலர சிக்கோ ரிடுக்கணும் விளைத்தனர் எண்ணிய விளையும் இனிது முடித்திலர் துன்பக் கடலில் தோயப் புகுந்தனர் அறிவை யிழந்தனர் ஆண்மை குன்றினர் செய்வது யாவெனச் சிறிதும் அறிந்திலர் வாட்கிரை யான மகனை யாங்கே பறந்திடும் புட்கும் பாய்ந்திடும் நரிக்கும் இரையாய்க் கிடத்தி யேகினர். இல்லம் அடைந்தது மாங்கே அவனைச் சேணிடை “அவல் புரிய அனுப்பினோ ” மென்றனர் அவ்வித…

மாண் பெற முயல்பவர் மாணவர் – வ.உ.சிதம்பரனார்

மாண் பெற முயல்பவர் மாணவர் ஆவார் ஆணும் பெண்ணும் அது செயவுரியர் இளமைப் பருவம் இயைந்ததற்கே மற்றைய பருவமும் வரைநிலையிலவே அவர் கடன் விதியிலறிந்து நன்றாற்றல் அன்னை தந்தையரை ஆதியைத் தொழுதல் தீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல் தக்க ஆசிரியரால் இன்னியலறிதல் ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கு கைக்கொள்ளல் இறைவன் நிலையினை எய்திட முயறல் மாணவரியல், மெய்யறம்: ஈகச் செம்மல் அறிஞர் வ.உ.சிதம்பரம்(பிள்ளை)

‘நாங்கள்’ யார்? – அ.ஈழம் சேகுவேரா

‘நாங்கள்’ புசிப்பது தசை புணர்வது பிணம் முகர்வது இரத்தம் நாற் சுவர்களுக்குள் நடப்பதை நாற்சந்தியில் நடத்துவோம் அது ‘தாரமாக’ இருந்தாலும், மூலை முடுக்கெல்லாம் தேடி ஒதுங்கமாட்டோம் ‘தங்கை’ ஒருத்தி இருந்தால் அம்மணமாக்கி இரசிப்போம் ‘தோழி’ ஒருத்தி கிடைத்தால் அதிரப்புணர்வோம் நண்பர்கள் குழுவாகச் சேர்ந்தால் ‘தாயையும்’ கூட்டாகப் புணர்வோம் ‘அக்காளை’ நீலப்படம் எடுத்து காசு பார்ப்போம் ‘நாங்கள்’ யார்? பிரித்தானியாவின் ‘அலைவரிசை 4’ பார்த்திருந்தால், எங்கள் ‘குலம் கோத்திரம்’ பற்றியெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை! தாயகக் கவிஞர் அ.ஈழம் சேகுவேரா (இலங்கை, முல்லைத்தீவிலிருந்து) கருத்துகள் மற்றும்…

கடவுள் மொழிபேசும் கடவுள் – இரா. சத்திக்கண்ணன்

கடவுள் மொழிபேசும் கடவுள் என் கவனம் விழ கிட்டே தத்தித்தத்தி ஓடிவந்து கடவுள் மொழியில் பேசுகிறது வா வாவென கைகள் நீட்டுகையில் வெட்கப்பட்டு கண்களையும் கன்னங்களையும் மூடிக்கொள்கிறது அவ்வப்போது முன்தலையையும் மறைத்துக்கொள்கிறது சற்று கை நகர்த்தி இருக்கேனா ? என்று அடிக்கடிப் பார்த்துக்கொள்கிறது நான் பார்க்காததுபோல் நடிக்கும்போது உற்றுப்பார்க்கிறது துளிசத்தம் எழாமல் கைகொட்டுகிறது நான் சட்டென்று பார்க்கையில் அம்மாவின் பின்னால் ஓடி ஒளிந்துகொள்கிறது நான் நகரும்போது கண்ணில் ஏக்கம் தெறிக்க வழியனுப்புகிறது கையசைத்து! கடவுள் மொழிபேசிய கடவுள்!! – இரா. சத்திக்கண்ணன் தரவு: முதுவை…

வல்லானை வாழ்த்துவேன் -புலவர்மணி இரா.இளங்குமரன்

நறுந்தமிழைப் புத்துலகச் சொத்தாக்க முன்னிற்கும் முதன்மையர் உலகத்தார் பெரும்புகழுக் கிலாக்காவீர் என்றறிந்தோ, இன்றமிழுக் கிணையற்ற இலக்காவீர் என்றறிந்தோ, இலக்கியத்தில் தோய்ந்துதோய்ந் திதழ்களுடன் உயர்நூல்கள் இலக்குவணம் படைத்தருள்வீர், இனிதளிப்பீர் என்றறிந்தோ, நிலவுலகில் நேரற்ற நேயத்தொல் காப்பியமாம் இலக்கணத்தை மொழிபெயர்த தாய்ந்தற் களிப்பார்கள் பட்டமெனும் பாங்கறிந்தோ நும்பெயரை இலக்குவனென் றிட்டுள்ளார் நும்பெற்றோர் இசைபெற்ற பெற்றோரே‚ அவர்வாழ்வுப் பயனாகத், தவமாக, முகிழ்த் தோங்கும் ஐம்பதிற்று ஐந்தாண்டுப் பேரிளைஞ‚ பேரறிஞ‚ கைம்மாறு கருதாமல் கடனாற்றும் கடமைவீர‚ தாய்த்தமிழைக் கண்போலத் தனிக் காக்கும் தண்டமிழ‚ தாய்மொழியைக் கப்பார்க்குத் தலைவணங்கு தகவாள‚ தாய்மொழியைப்…

இனிதே இலக்கியம் – 11 : தமிழே இன்பம்! – முடியரசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

 11 : தமிழே இன்பம்! – முடியரசன்   தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு இலை என்றால் இன்பம் எனக்கு ஏது?   பாவேந்தர் மரபுக்கவிஞரான முடியரசன் அவர்களின் ‘முடியரசன் கவிதைகள்’ தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்.   “பிறவிகளுக்கெல்லாம் காரணமாகும் தாயைப்போன்று எங்களின் தாயாய் விளங்கும் மொழிகளின் தாயே! எங்களை இயக்கும் உயிரே! உன்னை வழங்கும் குழந்தையாகிய நான் பெறுதவற்கு அரிய பேறாய் எனக்குக் கிடைத்த செல்வமே!…