வல்லானை வாழ்த்துவேன் -புலவர்மணி இரா.இளங்குமரன்

நறுந்தமிழைப் புத்துலகச் சொத்தாக்க முன்னிற்கும் முதன்மையர் உலகத்தார் பெரும்புகழுக் கிலாக்காவீர் என்றறிந்தோ, இன்றமிழுக் கிணையற்ற இலக்காவீர் என்றறிந்தோ, இலக்கியத்தில் தோய்ந்துதோய்ந் திதழ்களுடன் உயர்நூல்கள் இலக்குவணம் படைத்தருள்வீர், இனிதளிப்பீர் என்றறிந்தோ, நிலவுலகில் நேரற்ற நேயத்தொல் காப்பியமாம் இலக்கணத்தை மொழிபெயர்த தாய்ந்தற் களிப்பார்கள் பட்டமெனும் பாங்கறிந்தோ நும்பெயரை இலக்குவனென் றிட்டுள்ளார் நும்பெற்றோர் இசைபெற்ற பெற்றோரே‚ அவர்வாழ்வுப் பயனாகத், தவமாக, முகிழ்த் தோங்கும் ஐம்பதிற்று ஐந்தாண்டுப் பேரிளைஞ‚ பேரறிஞ‚ கைம்மாறு கருதாமல் கடனாற்றும் கடமைவீர‚ தாய்த்தமிழைக் கண்போலத் தனிக் காக்கும் தண்டமிழ‚ தாய்மொழியைக் கப்பார்க்குத் தலைவணங்கு தகவாள‚ தாய்மொழியைப்…

இனிதே இலக்கியம் – 11 : தமிழே இன்பம்! – முடியரசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

 11 : தமிழே இன்பம்! – முடியரசன்   தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு இலை என்றால் இன்பம் எனக்கு ஏது?   பாவேந்தர் மரபுக்கவிஞரான முடியரசன் அவர்களின் ‘முடியரசன் கவிதைகள்’ தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்.   “பிறவிகளுக்கெல்லாம் காரணமாகும் தாயைப்போன்று எங்களின் தாயாய் விளங்கும் மொழிகளின் தாயே! எங்களை இயக்கும் உயிரே! உன்னை வழங்கும் குழந்தையாகிய நான் பெறுதவற்கு அரிய பேறாய் எனக்குக் கிடைத்த செல்வமே!…

மனத்தோடும் மணம் பேச வருவானே! – (உ)லோக நாதன்

மனத்தோடும் மணம் பேச வருவானே! மூவாறு வயது தொட்டு யாராரோ பெண் கேட்டார்கள் பெண்ணை மட்டுமல்ல…. பொன்னும் பொருளும் கூட ஊனமுள்ள பெண்ணென்று உயர்ந்து கொண்டே போகிறது வீடு வாசல் சொத்தென்றும் ஊர்திகூட வேண்டுமாம் கைக்கூலியாய்! அழகில் ஓர் குறையில்லை அறிவிலும் ஓர் குறையில்லை அன்பில் கூடக் குறையில்லை அப்புறம் என்ன குறையோ? ஊனம் கேட்டுப் பெற்ற வரமா? கடவுள் கொடுத்த சாபமா? பெற்றோரின் பாவமா?-அது துய்ப்போரின் பலனா? இயற்கை தந்த பரிசை இழித்துரைக்கும் இனமே இதயம் தொட்டுச் சொல்லுங்கள் உங்கள் பிள்ளை இப்படி இருந்தால்…..!!??…

தமிழோடு வந்தோம்! தமிழோடு வாழ்வோம்! – வசந்தகுமார்

கொஞ்சு தமிழே… என் நாவில் தித்தித்தாய் தமிழாலே நமது புதிய வாழ்வை நாம் இன்று படைப்போம் உயிரொன்று பிறந்தது ஆதி காலத்தில் மனிதனாய்த் திரிந்தது பரிணாமத்தில் அவர் நாகரிகமடைந்தது தமிழ்ச் சங்கக் காலத்தில் மனிதனை வடித்தது மொழியே அந்த மொழிகளில் மூத்தது தமிழே தமிழே  முதலே அரைகுறை மொழிகளுக்கிடையே முழு இலக்கணம் கண்டது முதலே தமிழே உயர்வே காதல் வந்தால் நம் கன்னித் தமிழால் கவிதை பாடு கைகூடும் ஒரு நாள் உலகினுக்கே தமிழ் பழமை அந்தப் பழமையினும் தமிழ் இளமை மாற்றார் உணர்வார்…

சோறு போடுமா தமிழென்று கேட்கலாமோ? – யாழ்ப்பாவாணன்

தமிழ் சோறு போடுமா என்றே தமிழர் தான் பாடுகிறார் இன்றே                             (தமிழ்)   வழித்தோன்றல் வழிவந்து வாழ்நாளில் பேசிநின்று வழிநெடுக நடைபோட முயன்றால் தமிழனென்று ஆளுயர அறிவுயரத் தலைநிமிரத் துணைநின்று ஒத்துழைத்த தமிழைச் சோறுபோடு என்கிறாயே! நானும் தான் கேட்கிறேன் இங்கே!                                            (தமிழ்)   சுற்றும் உலகில் பிறமொழி பேசிநின்று உலகம் சுற்றி வருகையில் தமிழனென்று வயிற்றை நிரப்ப வழியேதும் இல்லையென்று சோறு போடுமா தமிழென்று கேட்கலாமோ? நானும் தான் கேட்கிறேன் இங்கே!                                            (தமிழ்)  …

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 7 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி)     மகிழ்ச்சி ததும்பும் மாநட் பினர்போல் வேடிக் கையுடன் வியப்புச் சொற்களும் கலந்துரை யாடியே காத்தவீ ரனுக்குப் பலியிடுங் கடாவைப் பொலிவுறச் செய்து இழுத்துச் செல்லு மேழை களிடை 6 துள்ளுங் கடாப்போல் தோற்றம் விளைத்து அடைந்தனர் முடிவில் யாருமில் காட்டை. அவருடை தங்கை யவனுடை மையலில் வீழ்க் காரணம் விளைத்த பிழைக்கு பழிகொள வெண்ணினர் விழிக ளழன்றன ஒருவரை யொருவ ருற்று நோக்கினர் கைகள் சென்று கைவாள் தொட்டன…

மானமிகு மறவன் இலக்குவனார் ! – மா. கந்தையா –செயா

 தோற்றம்: கார்த்திகை 01, 1940 / நவம்பர் 17, 1909 மறைவு ஆணி 18, 2004 / செத்தம்பர் 03, 1973   மானமிகு  மறவன்  இலக்குவனார் ! ஏனத்தைத்  தூக்கிக்கல்லுக்கு  எழுச்சிப்பா  பாடும்மண்ணில் வானத்தை நோக்கி வணங்கி வழியனுப்பும்மன ஊனமுற்றோர் உலவிடும் ஈனமனத்தாரை இனமொதுக்கி வானமே வீழ்ந்தாலும் தான்வீழா தகைமையாளர் ! ” அள்ளிக்கொள் அருந்தமிழைவிலை சொல்லிக்கொடு ” எனப்பெரும் புள்ளிகள் கூறும்போதுஎரி கொள்ளியால் சுட்டெரிப்பார் . வெள்ளிநிற மீசைமேலுதட்டில் துள்ளித்துடிக்கும் சினம்கொண்டால் அள்ளி யணைத்துத்தமிழை சொல்லிவளர்ப்பதில் தாயாவாள் ! வாய்மையே வெல்லுமென்ற…

கவிதைக்கு அழிவில்லை! – -முனைவர் இராம.குருநாதன்

சீறிப் பாய்வேன் தமிழாலே! காற்றும் மழையும் அழித்தாலு்ம் – என் கவிதைக் கனலுக் கழிவில்லை ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை – இனி உறைக்குள் போட மனமில்லை மண்ணும் மலையும் சரிந்தாலும் – என் மானிடப் பார்வைக் கழிவில்லை விண்ணும் கடலும் திரண்டாலும் – என்னுள் விரியும் கவிதைக் கழிவில்லை வெட்டிப் பொழுது போக்குவதை – நான் வீணாய் என்றும் கழித்ததில்லை கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி -என்றும் கூர்மை வாளாய் க் களமிறங்கும் சொல்லும் பொருளும் உள்ளவரை – என்னுள் தொடரும் சமூகச் சிந்தனைகள் வெல்லும்…

சந்தனப்பேழைகளே! திருமுகம் காட்டுங்கள்! – கண்ணன் நாகராசு

சந்தனப்பேழைகளே! திருமுகம் காட்டுங்கள்!   தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!  கண்ணன் நாகராசு

தமிழரை வலிமை கொள்ளச் செய்குவாய்! – நாமக்கல் கவிஞர்

5,6/6 இளந்தமிழனுக்கு ஓடி ஓடி நாட்டி லெங்கும் உண்மை யைப்ப ரப்புவாய்; ஊன மான அடிமை வாழ்வை உதறித் தள்ள ஓதுவாய்; வாடி வாடி அறம்ம றந்து வறுமைப் பட்ட தமிழரை வாய்மை யோடு தூய்மை காட்டும் வலிமை கொள்ளச் செய்குவாய்; கூடிக் கூடிக் கதைகள் பேசிச் செய்கை யற்ற யாரையும் குப்பை யோடு தள்ளி விட்டுக் கொள்கை யோடு நின்றுநீ பாடிப் பாடித் தமிழின் ஓசை உலக மெங்கும் பரவவே பார்த்த யாரும் வார்த்தை கேட்டுப் பணியு மாறு சேவைசெய்.       5 தமிழ னென்ற…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 6 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 103  ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 6   அழகிய தையலை யன்புடன் மணக்க செம்ம லெவனுமி ச்சிறந்த நகரில் மனப்பெரு மையுடன் மகிழ்ந்து வருவன் மணத்தால் நமது பணத்தைப் பகுக்க எண்ணினோ மல்ல; எண்ணி னவளும் வேளி ரொருவனை விரும்பி மணப்பின் பெருமை யுமுண்டு பெரும்பய னுறுவோம். அவ்வித மின்றி யனைவரும் வெறுக்க அழகிய தங்கை யற்பக் கூலியை சிறுத்துப் பெருத்துஞ் செல்வ மிலானை மணந்தால் வருவது மானக் கேடென எழிலர சிக்குறு மின்ப வாழ்விற் சிறுதி…

கார்த்திகை மாதம்..கனவுகள் ஊர்வலம் போகும் மாதம்! – மு.வே. (இ)யோ

இது மாவீரர் மாதம் கார்த்திகையில்.. கடலடிக்கும்..ஓசை.. காதைப் பிளக்கும்.. வாடைக் காற்றில் பனை ..அடித்து மேளங்கள் கொட்டும்.. விளை நிலங்கள் எங்கும்.. தினை வெடித்துப் பறக்கும்.. சம்பா நெற்கதிர்கள்.. தலை சாய்த்து -புலி வீரர்களை வணங்கும்.. இளங் குமரி.. வடலியிலே.. ..காகங்கள் அமர்ந்திருந்து.. கட்டிய முட்டிகளில்.. கள்ளடித்து.. ..மயங்கி.. புல்லரிக்கும் ..பாடல்களை பாடும்….! கருவேல மரங்களும்.. முல்லைகளும் முருங்கைகளும்.. தெருவோர வாகை மரங்களும்.. முள் முருக்கைகளும் .. பொன்னலரிச் செடிகளும் பெரு மழையைக் கண்டு.. நாணி..நெளிந்து..நடனம் ஆடிக்.. காதலால்.. சிலிர்த்து.. தழைத்து..மகிழ்ந்து.. பூக்களைச் சொரியும்…