திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல்தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி   திருக்குறள் அறுசொல் உரை 3.காமத்துப் பால்  15.கற்பு இயல்   120. தனிப்படர் மிகுதி   பிரிந்து  தனித்து  இருக்கும்    தலைவியிடம்  படரும்  மிகுதுயர்   (01-10 தலைவி சொல்லியவை)                    தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர், பெற்றாரே       காமத்துக் காழ்இல் கனி. காதலிப்பார் காதலிக்கப்பட்டால், அக்காதல், விதைகள் இல்லாச் சுவைப்பழம்.   வாழ்வார்க்கு வானம் பயந்(து)அற்(று)ஆல், வீழ்வார்க்கு       வீழ்வார்…

குட்டி அணில்குட்டி! – சந்தர் சுப்பிரமணியன்

  குட்டி அணில்குட்டி!    கிளைதாவிக் குதிக்கின்றாய்! குட்டி அணில் குட்டி! – நீ தலைகீழேன் நடக்கின்றாய்? குட்டி அணில் குட்டி!   முதுகின்மேல் மூன்றுவரி! குட்டி அணில் குட்டி! – நீ அதைஏனோ சுமக்கின்றாய்? குட்டி அணில் குட்டி!   அடைமழையில் நனைகின்றாய்! குட்டி அணில் குட்டி! – உன் குடைவாலைப் பிடிக்கலையோ? குட்டி அணில் குட்டி!   தொடவேண்டும் நானுன்னை! குட்டி அணில் குட்டி! – தொட விடுவாயோ சொல்லெனக்கு! குட்டி அணில் குட்டி!   – சந்தர் சுப்பிரமணியன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   பெரியார் அவர்கள், தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டுப் பிரிவினையை வேண்டப் போவதாக அறிவித்துள்ளார்கள். ஆனால், தேர்தலில் காங்கிரசுக்கட்சி வெற்றி பெற உழைத்துவிட்டுப் பின்னர்ப் பிரிவினை கேட்கப் போகிறேன் என்பது அறிவுக்குப் பொருந்துவதாக இல்லை. மொழிவழி மாநிலங்கள் உரிமையுடன் வாழ வேண்டுமானால் காங்கிரசுக்கட்சி மறையவேண்டும். காங்கிரசுக்கட்சியால்தான் மாநிலங்கள் உரிமையற்றுக் கிடக்கின்றன. ஒரே இந்தியா என்ற கொள்கையை உறுதியாகப்பற்றி நிற்கும் காங்கிரசை அகற்றினாலன்றிப் பிரிவினைக் கொள்கை வெற்றி…

அருளாழி நயந்தோய் நீஇ !

                    அருளாழி நயந்தோய் நீஇ ! அறவாழி பயந்தோய் நீஇ ! மருளாழி துறந்தோய் நீஇ ! மறையாழி புரந்தோய் நீஇ ! மாதவரில் மாதவன் நீஇ ! வானவருள் வானவன் நீஇ ! போதனரிற் போதனன் நீஇ ! புண்ணியருட் புண்ணியன் நீஇ !   வீரசோழியம், யாப்பருங்கலம் 11 உரை பெருந்தொகை தொகுப்பு: மு.இராகவையங்கார்: 188

ஆதி நீஇ ! அமலன் நீஇ !

                           ஆதி நீஇ ! அமலன் நீஇ !   ஆதி நீஇ ! அமலன் நீஇ ! அயனும் நீஇ ! அரியும் நீஇ ! சோதி நீஇ ! நாதன் நீஇ ! துறைவன் நீஇ ! இறைவன் நீஇ ! அருளும் நீஇ ! பொருளும் நீஇ ! அறிவன் நீஇ ! அநகன் நீஇ ! தெருளும் நீஇ ! திருவும் நீஇ ! செறிவும் நீஇ ! செம்மல் நீஇ !   வீரசோழியம்…

கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 – சந்தர் சுப்பிரமணியன் சொல்லுக்குள் கருத்தடைத்த தோட்டா சீறும் துப்பாக்கி அவர்கவிதை! துளைத்த போதும் மல்லுக்காய் முன்நிற்க மயங்கும் நெஞ்சம்! மரணத்தில் புதுநெறியை மலர வைக்கும்! வில்லுக்கு வளைகின்ற நாணைப் போலே வளையாது தலையெனினும் விரட்டும் அம்பை! அல்லுக்குள் வெளிச்சத்தின் ஆற்றல் காட்டும் அறிவுப்பூப் பூகம்பம்! அமைதிப் பூதம்! (19) கவிதைக்கென் றுதித்தாரா? கவிழ்ந்தோர் தம்மைக் கரைசேர்க்கச் செனித்தாரா கவிஞர் தாரா? புவியோர்க்காய்ப் பிறந்தாரா? பொதுமை தாராப் பொய்யகற்றப்…

சுந்தரச் சிலேடைகள் 2. நிலவும் கங்கையும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சுந்தரச் சிலேடைகள்   சிலேடை 2.  நிலவும் கங்கையும் ஓடும் வளமாக்கும் ஓங்குமீசன் மேலிருக்கும் நாடும் குளிர்வாய் நலந்தரும் -தேடும் புலவரின் நாளமெல்லாம் பூத்துக் குலுங்கும் நிலவொடு கங்கை நிலைத்து. பொருள்: கங்கை மேட்டுப்பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு ஓடும். நிலத்தை வளமாக்கும். ஈசன் தலையில் இருக்கும். நாடு நீர்ச்செழிப்பத்தால் குளிர்ச்சி அடையும். எல்லா உயிர்க்கும் நலம் பயக்கும். புலவர்கள் பாடுமாறு அமையும். கங்கை பாயுமிடமெல்லாம் செடிகொடிகள் பூத்துக் குலுங்கும். நிலவு கிழக்கிருந்து மேற்காக ஓடும். ஈசன் தலைமேலிருக்கும். காதலர்களுக்கும் மலர்களுக்கும் வளந்தரும்….

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18   பதினேழாம் பாசுரம் தமிழர் வீரக் குலத்தவர் தாழாது வாழ்ந்த தமிழ்க்குடி மாண்மறத்தால் வீழாத கூர்வேல், வாள் வெங்களத்து ஊடார்த்து வேழம், பரி, பகைவர் வீழ்த்திப் பொருதுயர்ந்தார்; ஏழை எனினுமொரு கோழையல்லா ஆண்குலத்தார், வாழாக் குழவியினை வாள்கீறி மண்புதைத்தார் ; ஆழி கடந்துநிலம் ஆணை செல,வென்றார்; பாழாய் உறங்குதியே! பாரோர்க் கிவையுணர்த்தக் கீழ்வான் சிவக்குமுனம் கீர்த்திசொல் எம்பாவாய்!   பதினெட்டாம் பாசுரம் நெஞ்சம் அஞ்சாத…

திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல்    திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்  15.கற்பு இயல்  பசப்புஉறு பருவரல்   பிரிந்த தலைவி, தன்உடலின் நிறமாற்றம் கண்டும், வருந்துதல்.   (01-10 தலைவி சொல்லியவை)         நயந்தவர்க்கு, நல்காமை நேர்ந்தேன்; பசந்தஎன்       பண்புயார்க்(கு) உரைக்கோ பிற? பிரிவுக்கு ஒப்பினேன்; பசலை படர்ந்தது; யாரிடம் உரைப்பேன்?   அவர்தந்தார் என்னும் தகையால், இவர்தந்(து),என்       மேனிமேல் ஊரும்…

விந்தைத் தமிழை விரும்பிப் போற்று ! – ‘வாசல்’ எழிலன்

விந்தைத் தமிழை விரும்பிப் போற்று ! – ‘வாசல்’ எழிலன்   அழகும் தமிழும் ஒன்றே தானாம் அறிவைச் சேர்க்க அதுவே தேனாம் பழகும் பாங்கில் பணிவே சீராம் பண்பை உரைக்கும் பகுத்தறி தேராம் உழவர் உணவை ஈட்டல் போல உணர்வைத் தமிழே உலகுக் கீட்டும் மழலை போல மகிழ்வைக் காட்டி மலரும் முல்லைபோல் மணத்தைஈட்டும் இளமை இனிமை இணைந்தே இருக்கும் இன்பம் துன்பம் ஒன்றாய்ப் பிணைக்கும் இலக்கை நோக்கும் இதயம்கொடுக்கும் இல்லற வாழ்வை என்றும் மிடுக்கும் கலக்க மில்லா நெஞ்சை நிறைக்கும் கலையாய் அறத்தைக்…

நல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே! – செந்தமிழினி பிரபாகரன்

நல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே! ஆராரோ ஆரிரரோ ஆராரோ யார் இவரோ? ஆராரோ நிலம் பறிக்க ஆராரோ அழுகின்றோம். கண்ணே நீ விழித்து விடு கண்ணீரை விட்டு விடு காலம் எங்கள் வசமாகும். அழுவதை நிறுத்தி விடு சொந்த மண்ணில் படை வரலாம் வெந்த புண்ணில் சீழ் வரலாம் ஆர் ஆற்றி தீருமம்மா ஆறாத எம் துயரம்? எமக்காக குரல் கொடுக்க எவர் குரலும் இரங்கவில்லை எதிர்காலம் இருண்டிடினும் எதிர் கொண்டு வெல்வோமடி! கண்ணே நீ எழுந்திடம்மா கண் விழித்துப் போராடு கண்ணுறங்க நேரமில்லை…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16 பதினைந்தாம் பாசுரம் தமிழே பிற உயிரினங்களிலும் ஐவண்ணப் பைங்கிளிபோல் ஐம்மிளிரும் நாயகியாள் ! தூவிறகு அன்னம்போல் தன்சொல் பிரித்துயர்வாள் ! ஓவியக்கண் பீலிப்புள் ஒய்யாரம் காட்டுதல்போல் மேவும் சபைதன்னில் மேதைமை செய்திடுவாள் ! மாவரசு சிங்கம்போல் மேலாண்மை கூடியவள் ! மூவாத ஆல்போல் மண்ணுள் விழுதூன்றிப் பாவாணர் போற்றப் பரந்துவிரிந் தோங்கிடுவாள் ! நாவால் தமிழன்னை நற்புகழ்சொல் எம்பாவாய் !   பதினாறாம் பாசுரம்…