உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்) : சந்தர் சுப்பிரமணியன்

உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்) அந்நாளில் சீருள் – பூஞ் செந்தேனைக் கொண்டோள் ஔவை! பண்பாடி ஈர்க்கும் – பூம் பெண்வேங்கைச் சொற்கோ ஔவை! தன்வாழ்வில் மீளும் – ஊழ் வென்றேழ்மை கொன்றோள் ஔவை! பண்வானின் மீனுன் – பூ வெண்மேன்மைப் பொற்போ ஔவை?  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்

தமிழ்த்தாய் வணக்கம் 21-23 : நாரா. நாச்சியப்பன்

(தமிழ்த்தாய் வணக்கம் 16-20  தொடர்ச்சி) தமிழ்த்தாய் வணக்கம் 21-23   பூவுலகில் பேரறிஞர் புத்தாக்கம் செய்வதெலாம் நாவுலவு செந்தமிழில் நல்ல பெயரிட்டுக் கூற வியலாதாம் ! கோணல் மனங்கொண்டார் சீறா துறாரே தெளிவு (21)   நல்ல தமிழிருக்க நாடிப் பிறமொழியை வல்லே வழங்கி வழக்காடும் – புல்லர்களைச் சேரா திருக்கநான் செந்தமிழே என்தாயே ! வாராய் துணையாக வா. (22)   அறிவு பயத்தலால் அன்பு வளர்த்துச் செறிவு நிறைத்தலால் செந்தேன். இறுகியாங்கு என்றும் சிறத்தலால் என்தாய்த் தமிழின்வே றொன்றும் கொளாதென் உளம். (23) –பாவலர்…

சுந்தரச் சிலேடைகள் 9: சிவனும் தென்னையும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 9  சிவனும்  தென்னையும்   நீண்டிருக்கும், நீர்தரும் நீள்முடி கொண்டிருக்கும், ஆண்டிக்கும்  வாழ்வளிக்கும் ,அன்பிருக்கும்,-தோண்டிடத்தான் வேரிருக்கும் ,தொல்லை வெளியேறும்  நற்றென்னை பாரில்  சிவனுக்கு ஈடு. பொருள் :- சிவன் – தென்னை. 1)இறைவன் புகழ்  நீண்டது. அதற்கு எல்லை கிடையாது. தென்னையும் நீண்டு வளர்ந்திருக்கும். 2) சிவனை வணங்கத் திரு நீர் எனச் சிறப்பிக்கத்தகும் கங்கை நீர் கிடைக்கும். தென்னை இளநீர் தரும். 3 ) சிவன் நீண்ட சடைமுடி கொண்டிருப்பான். தென்னையும்  நீண்ட தோகைகளை முடியாகக் கொண்டிருக்கும்….

திருக்குறள் அறுசொல் உரை : 124. உறுப்பு நலன் அழிதல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் தொடர்ச்சி)       திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்  15.கற்பு இயல் 124.உறுப்பு நலன் அழிதல் பிரிவைப் பொறாத தலைவியது கண்,தோள் நெற்றிஅழகு கெடுதல்.   (01-07 தலைவி சொல்லியவை)         .      சிறுமை நமக்(கு)ஒழியச், சேண்சென்றார் உள்ளி,       நறுமலர் நாணின கண். பிரிவால் அழகுஇழந்த கண்கள், அழகுக்குவளை கண்டு வெட்கும்.   நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்,       பசந்து பனிவாரும் கண். நிறம்மாறி நீர்சிந்தும் கண்கள்,…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 29 & 30

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 29 & 30   இருபத்தொன்பதாம் பாசுரம் இளையாரையே இனிப் பயிற்றுவோம்! யாமும் பலவாற்றான் நல்லுரைகள் ஓதிநின்றோம்! தாமும் செவியுள் தமிழினத்தார் போட்டுவைத்தே ஆமாம் எனப்பகன்றார்; ஆயின்வழி ஏற்பாரோ? மீமிசை மீமிசை யாமுரையோம் அன்னவர்க்கே ! நீம மிகுவெழில் நன்முகச் சிற்றகவைத் தூமனத்து நன்னிலத்தில் தூவிடுவோம் நற்றமிழை! பூமி விதந்தேத்தப் பொற்புதல்வர் செய்வார்காண்! மேன்மை தமிழினம் பூணுமடி, எம்பாவாய் !   முப்பதாம் பாசுரம் இல்லமும் நாடும் ஓங்குக!…

எண்ணிக்கை – சந்தர் சுப்பிரமணியன்

எண்ணிக்கை   ஒன்று – உலகின் சூரியன் ஒன்று! இரண்டு – இரவு பகலென் றிரண்டு! மூன்று – முத்தாய்த் தமிழ்காண் மூன்று! நான்கு – நாட்டில் பருவம் நான்கு! ஐந்து – அமைந்த புலன்கள் ஐந்து! ஆறு – அருசுவை வகைகள் ஆறு! ஏழு – இத்தரைப் பெருங்கடல் ஏழு! எட்டு – எதிர்படும் திசைகள் எட்டு! ஒன்பது – உடலின் வாசல் ஒன்பது! பத்து – பற்றிடும் விரல்கள் பத்து!    – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம்…

சுந்தரச் சிலேடைகள் 8 : பல்லியும் காதலியும்

 சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 8 பல்லியும் காதலியும் உடலுயிர் கால்வைத்தே ஊர்ந்தோடும், வாழ்தல் திடங்கொண்டு முத்தமிடத் தீம்புண்.-விடமுண்டாம் சத்தமிட்டு முத்துருட்டும் சங்கச் சிரிப்பாலே ! உத்தமிக்குப் பல்லியுநே ரொப்பு. பொருள்: காதலி: 1)நம் மனத்தில் உடலில் ஒன்றாகி நினைவுகளில் இனிக்க அங்குமிங்கும் ஓடுவாள். 2) முத்தம் கடுமையானால் உதடுகள் புண்ணாகும். 3) காதல் விடத்தால் நோய்தருவாள் ; உயிரைக்கூட எடுப்பாள். 4) அவள் சிரிப்பு முத்துக்களை உருட்டிவிட்டதுபோல் இருக்கும். பல்லி: 1) சுவரில் இங்குமங்கும் ஓடும். 2) பல்லிகள் வாயிலிருந்து வரும் உமிழ்நீரானது…

தமிழ்த்தாய் வணக்கம் 16-20 : நாரா. நாச்சியப்பன்

 (தமிழ்த்தாய் வணக்கம் 11-15 தொடர்ச்சி)   தமிழ்த்தாய் வணக்கம் 16-20 பூங்காவில் வாழ்வோன் பொந்தனைய இல்லத்தே பாங்காய்ச் சுழல்விசிறி பாய்ச்சுவளிக்-கேங்குதல்போல் உள்ள தமிழ்நூல் உயர்வறியார்; வேற்றுமொழி யுள்ளித் திரிவார் உழன்று! (16)   எண்ணி முயறால் இயலாத வொன்றில்லை வண்ணத் தமிழில் வடித்தெடுக்க – மண்ணில் அறிவுத் துறைச்சொல் அகராதி யாக்கம் உறல்கடிதோ அன்னய் உரை.  (17)   பெற்றதாய்க் காக.அறம் பேசும் வலிவற்றோர் முற்றும் அறிவில்லா மூடரெனக்-குற்றம் உரைப்பேனைச் சூழ்ந்தெதிர்க்க ஓரா யிரம்பேர் திரண்டாலும் அஞ்சேன் சிறிது. (18)   எங்கும் தமிழாய்…

திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்    15. கற்பு இயல் 123.  பொழுது கண்டு இரங்கல்       பிரிந்த காதலர், துயர்மாலைப் பொழுது கண்டு மனம்வருந்தல். (01-10 தலைவி சொல்லியவை) மாலையோ அல்லை; மணந்தார் உயிர்உண்ணும்       வேலைநீ; வாழி! பொழுது. மாலையே நீ பொழுதே இல்லை; பிரிந்தார் உயிர்குடிக்கும் கூர்வேல்.   புன்கண்ணை வாழி! மருள்மாலை; எம்கேள்போல்,       வன்கண்ண தோநின் துணை? மாலையே!  நீஏன் வருந்துகிறாய்?…

திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் : வெ. அரங்கராசன

(திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல் :  தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15.கற்பு இயல் 122. கனவு நிலை உரைத்தல்   தலைவி, தான்கண்ட கனவு நிலைகளை, எடுத்து மொழிதல்.   (01-10 தலைவி சொல்லியவை) காதலர் தூதொடு வந்த கனவினுக்கு,       யாதுசெய் வேன்கொல் விருந்து? காதலர் வரவைக் கூறிய கனாத்தூதுக்கு, என்ன விருந்திடுவேன்?   கயல்உண்கண், யான்இரப்பத் துஞ்சின், கலந்தார்க்(கு),       உயல்உண்மை சாற்றுவேன் மன். கண்கள் தூங்கின், நான்வாழ்வதைக் காதலர்க்குக்…

சொல்லடா! – சுரதா

சொல்லடா! – சுரதா கோங்கம் மலர் பூத்த-பசுங் குன்றம் முழுநிலவை வாங்கிப் புசிக்குதுபார்-குளிர் வண்ணப் பனிச்சிரிப்பே ! தீங்கனிச் செந்தமிழ்தான்-எங்கள் சிறப்பு விளக்கமென்றே மாங்கனி வாய் திறந்து- நான் மகிழ்ந்திடச் சொல்லாயோ!   “இச்சகத் தார்க்குநாங்கள்-எதிலும் இளைத்தவ ரல்லகாண்! அச்சம் இடித்துவிட்டோம்- நாங்கள் ஆண்மை வரிப்புலிகள்: உச்சி இமயத்திலே-புகழ் ஒங்கும் மறக் குலத்தின் மச்சக் கொடிபறக்கும்’-என்று மாமல்லா நீ சொல்லடா!   ‘வானை அளந்திடுவோம்-புது வையம்  நிறுத்திடுவோம்! தேனைநிகர் தமிழ்க்குத்-துளி தீங்கு விளைப்போர் பெரும் ஆனைகள் போல்வரினும்- நாங்கள் ஆயிரம் சிங்கங்கள்தாம்”‘- எனச் சேனை…

தமிழ் வாழ்க! – வாணிதாசன்

தமிழ் வாழ்க! எடுப்பு தமிழைக் காப்போம் நாம் தாயடிமை போமே ! தாயடிமை போமே    (தமிழைக்)   மேல் எடுப்பு   பூமியினில் தனித்தமி ழாலே பூரித்திடும் நம்மிரு தோளே ! நாமினிமேல் அஞ்சுதல் இலமே ! நாம்நமையே ஆண்டிடு வோமே !   ஏமம் நெஞ்சில் துள்ள ஏற்றமடை வோமே ! ஏற்றமடை வோமே !   (தமிழைக் )   அமைதி   ஆரியத்தின் கலப்பத னாலே அடங்கியதே தமிழ்புவி மேலே ! ஒர்ந்துநாம் எல்லோரும் உழைப்போம் தமிழ்க்காக! . உழைப்போம் தமிழ்க்காக…