உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்) : சந்தர் சுப்பிரமணியன்
உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்) அந்நாளில் சீருள் – பூஞ் செந்தேனைக் கொண்டோள் ஔவை! பண்பாடி ஈர்க்கும் – பூம் பெண்வேங்கைச் சொற்கோ ஔவை! தன்வாழ்வில் மீளும் – ஊழ் வென்றேழ்மை கொன்றோள் ஔவை! பண்வானின் மீனுன் – பூ வெண்மேன்மைப் பொற்போ ஔவை? – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்
தமிழ்த்தாய் வணக்கம் 21-23 : நாரா. நாச்சியப்பன்
(தமிழ்த்தாய் வணக்கம் 16-20 தொடர்ச்சி) தமிழ்த்தாய் வணக்கம் 21-23 பூவுலகில் பேரறிஞர் புத்தாக்கம் செய்வதெலாம் நாவுலவு செந்தமிழில் நல்ல பெயரிட்டுக் கூற வியலாதாம் ! கோணல் மனங்கொண்டார் சீறா துறாரே தெளிவு (21) நல்ல தமிழிருக்க நாடிப் பிறமொழியை வல்லே வழங்கி வழக்காடும் – புல்லர்களைச் சேரா திருக்கநான் செந்தமிழே என்தாயே ! வாராய் துணையாக வா. (22) அறிவு பயத்தலால் அன்பு வளர்த்துச் செறிவு நிறைத்தலால் செந்தேன். இறுகியாங்கு என்றும் சிறத்தலால் என்தாய்த் தமிழின்வே றொன்றும் கொளாதென் உளம். (23) –பாவலர்…
சுந்தரச் சிலேடைகள் 9: சிவனும் தென்னையும்
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 9 சிவனும் தென்னையும் நீண்டிருக்கும், நீர்தரும் நீள்முடி கொண்டிருக்கும், ஆண்டிக்கும் வாழ்வளிக்கும் ,அன்பிருக்கும்,-தோண்டிடத்தான் வேரிருக்கும் ,தொல்லை வெளியேறும் நற்றென்னை பாரில் சிவனுக்கு ஈடு. பொருள் :- சிவன் – தென்னை. 1)இறைவன் புகழ் நீண்டது. அதற்கு எல்லை கிடையாது. தென்னையும் நீண்டு வளர்ந்திருக்கும். 2) சிவனை வணங்கத் திரு நீர் எனச் சிறப்பிக்கத்தகும் கங்கை நீர் கிடைக்கும். தென்னை இளநீர் தரும். 3 ) சிவன் நீண்ட சடைமுடி கொண்டிருப்பான். தென்னையும் நீண்ட தோகைகளை முடியாகக் கொண்டிருக்கும்….
திருக்குறள் அறுசொல் உரை : 124. உறுப்பு நலன் அழிதல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 15.கற்பு இயல் 124.உறுப்பு நலன் அழிதல் பிரிவைப் பொறாத தலைவியது கண்,தோள் நெற்றிஅழகு கெடுதல். (01-07 தலைவி சொல்லியவை) . சிறுமை நமக்(கு)ஒழியச், சேண்சென்றார் உள்ளி, நறுமலர் நாணின கண். பிரிவால் அழகுஇழந்த கண்கள், அழகுக்குவளை கண்டு வெட்கும். நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும், பசந்து பனிவாரும் கண். நிறம்மாறி நீர்சிந்தும் கண்கள்,…
கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 29 & 30
(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 29 & 30 இருபத்தொன்பதாம் பாசுரம் இளையாரையே இனிப் பயிற்றுவோம்! யாமும் பலவாற்றான் நல்லுரைகள் ஓதிநின்றோம்! தாமும் செவியுள் தமிழினத்தார் போட்டுவைத்தே ஆமாம் எனப்பகன்றார்; ஆயின்வழி ஏற்பாரோ? மீமிசை மீமிசை யாமுரையோம் அன்னவர்க்கே ! நீம மிகுவெழில் நன்முகச் சிற்றகவைத் தூமனத்து நன்னிலத்தில் தூவிடுவோம் நற்றமிழை! பூமி விதந்தேத்தப் பொற்புதல்வர் செய்வார்காண்! மேன்மை தமிழினம் பூணுமடி, எம்பாவாய் ! முப்பதாம் பாசுரம் இல்லமும் நாடும் ஓங்குக!…
எண்ணிக்கை – சந்தர் சுப்பிரமணியன்
எண்ணிக்கை ஒன்று – உலகின் சூரியன் ஒன்று! இரண்டு – இரவு பகலென் றிரண்டு! மூன்று – முத்தாய்த் தமிழ்காண் மூன்று! நான்கு – நாட்டில் பருவம் நான்கு! ஐந்து – அமைந்த புலன்கள் ஐந்து! ஆறு – அருசுவை வகைகள் ஆறு! ஏழு – இத்தரைப் பெருங்கடல் ஏழு! எட்டு – எதிர்படும் திசைகள் எட்டு! ஒன்பது – உடலின் வாசல் ஒன்பது! பத்து – பற்றிடும் விரல்கள் பத்து! – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம்…
சுந்தரச் சிலேடைகள் 8 : பல்லியும் காதலியும்
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 8 பல்லியும் காதலியும் உடலுயிர் கால்வைத்தே ஊர்ந்தோடும், வாழ்தல் திடங்கொண்டு முத்தமிடத் தீம்புண்.-விடமுண்டாம் சத்தமிட்டு முத்துருட்டும் சங்கச் சிரிப்பாலே ! உத்தமிக்குப் பல்லியுநே ரொப்பு. பொருள்: காதலி: 1)நம் மனத்தில் உடலில் ஒன்றாகி நினைவுகளில் இனிக்க அங்குமிங்கும் ஓடுவாள். 2) முத்தம் கடுமையானால் உதடுகள் புண்ணாகும். 3) காதல் விடத்தால் நோய்தருவாள் ; உயிரைக்கூட எடுப்பாள். 4) அவள் சிரிப்பு முத்துக்களை உருட்டிவிட்டதுபோல் இருக்கும். பல்லி: 1) சுவரில் இங்குமங்கும் ஓடும். 2) பல்லிகள் வாயிலிருந்து வரும் உமிழ்நீரானது…
தமிழ்த்தாய் வணக்கம் 16-20 : நாரா. நாச்சியப்பன்
(தமிழ்த்தாய் வணக்கம் 11-15 தொடர்ச்சி) தமிழ்த்தாய் வணக்கம் 16-20 பூங்காவில் வாழ்வோன் பொந்தனைய இல்லத்தே பாங்காய்ச் சுழல்விசிறி பாய்ச்சுவளிக்-கேங்குதல்போல் உள்ள தமிழ்நூல் உயர்வறியார்; வேற்றுமொழி யுள்ளித் திரிவார் உழன்று! (16) எண்ணி முயறால் இயலாத வொன்றில்லை வண்ணத் தமிழில் வடித்தெடுக்க – மண்ணில் அறிவுத் துறைச்சொல் அகராதி யாக்கம் உறல்கடிதோ அன்னய் உரை. (17) பெற்றதாய்க் காக.அறம் பேசும் வலிவற்றோர் முற்றும் அறிவில்லா மூடரெனக்-குற்றம் உரைப்பேனைச் சூழ்ந்தெதிர்க்க ஓரா யிரம்பேர் திரண்டாலும் அஞ்சேன் சிறிது. (18) எங்கும் தமிழாய்…
திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 15. கற்பு இயல் 123. பொழுது கண்டு இரங்கல் பிரிந்த காதலர், துயர்மாலைப் பொழுது கண்டு மனம்வருந்தல். (01-10 தலைவி சொல்லியவை) மாலையோ அல்லை; மணந்தார் உயிர்உண்ணும் வேலைநீ; வாழி! பொழுது. மாலையே நீ பொழுதே இல்லை; பிரிந்தார் உயிர்குடிக்கும் கூர்வேல். புன்கண்ணை வாழி! மருள்மாலை; எம்கேள்போல், வன்கண்ண தோநின் துணை? மாலையே! நீஏன் வருந்துகிறாய்?…
திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் : வெ. அரங்கராசன
(திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15.கற்பு இயல் 122. கனவு நிலை உரைத்தல் தலைவி, தான்கண்ட கனவு நிலைகளை, எடுத்து மொழிதல். (01-10 தலைவி சொல்லியவை) காதலர் தூதொடு வந்த கனவினுக்கு, யாதுசெய் வேன்கொல் விருந்து? காதலர் வரவைக் கூறிய கனாத்தூதுக்கு, என்ன விருந்திடுவேன்? கயல்உண்கண், யான்இரப்பத் துஞ்சின், கலந்தார்க்(கு), உயல்உண்மை சாற்றுவேன் மன். கண்கள் தூங்கின், நான்வாழ்வதைக் காதலர்க்குக்…
சொல்லடா! – சுரதா
சொல்லடா! – சுரதா கோங்கம் மலர் பூத்த-பசுங் குன்றம் முழுநிலவை வாங்கிப் புசிக்குதுபார்-குளிர் வண்ணப் பனிச்சிரிப்பே ! தீங்கனிச் செந்தமிழ்தான்-எங்கள் சிறப்பு விளக்கமென்றே மாங்கனி வாய் திறந்து- நான் மகிழ்ந்திடச் சொல்லாயோ! “இச்சகத் தார்க்குநாங்கள்-எதிலும் இளைத்தவ ரல்லகாண்! அச்சம் இடித்துவிட்டோம்- நாங்கள் ஆண்மை வரிப்புலிகள்: உச்சி இமயத்திலே-புகழ் ஒங்கும் மறக் குலத்தின் மச்சக் கொடிபறக்கும்’-என்று மாமல்லா நீ சொல்லடா! ‘வானை அளந்திடுவோம்-புது வையம் நிறுத்திடுவோம்! தேனைநிகர் தமிழ்க்குத்-துளி தீங்கு விளைப்போர் பெரும் ஆனைகள் போல்வரினும்- நாங்கள் ஆயிரம் சிங்கங்கள்தாம்”‘- எனச் சேனை…
தமிழ் வாழ்க! – வாணிதாசன்
தமிழ் வாழ்க! எடுப்பு தமிழைக் காப்போம் நாம் தாயடிமை போமே ! தாயடிமை போமே (தமிழைக்) மேல் எடுப்பு பூமியினில் தனித்தமி ழாலே பூரித்திடும் நம்மிரு தோளே ! நாமினிமேல் அஞ்சுதல் இலமே ! நாம்நமையே ஆண்டிடு வோமே ! ஏமம் நெஞ்சில் துள்ள ஏற்றமடை வோமே ! ஏற்றமடை வோமே ! (தமிழைக் ) அமைதி ஆரியத்தின் கலப்பத னாலே அடங்கியதே தமிழ்புவி மேலே ! ஒர்ந்துநாம் எல்லோரும் உழைப்போம் தமிழ்க்காக! . உழைப்போம் தமிழ்க்காக…
