சுந்தரச் சிலேடைகள் 14. நங்கையும் நாணலும் – ஒ.சுந்தரமூர்த்தி
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 14 நங்கையும் நாணலும் கொண்டையதோ வெண்பூக்கள் கொண்டிருக்கும், நாடலுறும் கெண்டைகளும் உள்ளிருக்கக் கேள்வியெழும் – பண்டையரின் பாவிருக்கும், பங்கமிலாப் பண்பிருக்கும், பெண்ணினத்தைக் காவிருக்கும் நாணலெனக் காட்டு . பொருள் – நங்கை பெண்கள் தலைவாரிக் கொண்டையிட்டுப் பெரும்பாலும் வெண்பூக்களைச் சூடிக் கொள்வார்கள். விரும்பத் தகுந்த புருவத்திற்குக் கீழே இமைகளின் காவற்கு உள்ளே கெண்டை மீனையொத்த கண்கள் பல கேள்விகளை அசைவில் கேட்கும். பண்டை இலக்கியங்களில் பெண்ணின் பெருமை போற்றாத புலவர்களே இல்லை. பெண் மென்மையானவள்; நல்ல பண்பு நலன்களைக்…
திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிவுறுத்தல் : தொடர்ச்சி) 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 129. புணர்ச்சி விதும்பல் பிரிந்து கூடிய காதலர், கலந்து இன்புறத் துடித்தல். (01-08 தலைவி சொல்லியவை) உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும், கள்ளுக்(கு)இல், காமத்திற்(கு) உண்டு. நினைத்த, பார்த்த உடனேயே, மகிழ்விப்பது கள்இல்லை; காதலே. தினைத்துணையும் ஊடாமை வேண்டும், பனைத்துணையும் காமம் நிறைய வரின். பனைஅளவுக் கூடல் ஆசைவரின், தினைஅளவும் ஊடல்…
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 தலைமை வணக்கம் சித்தர்தம் மறுபிறவி ஆனை வாரி சிந்தனையின் தோற்றந்தான் ஆனை வாரி புத்தர்தம் உள்ளந்தான் ஆனை வாரி புதுக்கருத்தை விதைப்பவன்தான் ஆனை வாரி புத்தகங்கள் தோழன்தான் ஆனை வாரி புதுமைகளைப் படைப்பவன்தான் ஆனை வாரி முத்தமிழர் கண்டதமிழ் மருத்து வத்தை முதன்மையென உணர்த்துபவன் ஆனை வாரி ! திருக்குறளைத் தேசியநூல் ஆக்கு தற்குத் தில்லியிலே போராட்டம் செய்த வல்லோன் அருங்குறளை ஆங்கிலத்தில் மொழிபெ யர்த்தே…
யாரைத் தேர்வு செய்வார்? – கெருசோம் செல்லையா
யாரைத் தேர்வு செய்வார்? நல்லார் கெட்டார் என்றிருவர் நடக்கும் தேர்தலில் போட்டியிட்டால், எல்லா வாக்கும் பெற்றவராய், ஏய்க்கும் கெட்டவர் வென்றிடுவார்! இல்லா நேர்மை இவ்வுலகில், இறைமகன் இயேசுவே நின்றாலும், பொல்லார் வாக்கு தரமாட்டார்; புனிதரைத்தான் கொன்றிடுவார்! – கெருசோம் செல்லையா
இத்தகையோர் இருப்பதைவிட இறப்பது நன்றே! – பாவேந்தர் பாரதிதாசன்
இத்தகையோர் இருப்பதைவிட இறப்பது நன்றே! வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர் ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப் பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர் ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே. 6 மிகுகோவில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர், தகுமாறு மணம்புரிவோர், கல்விதரும் கணக்காயர், தம்மா ணாக்கர், நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ? நல்வாழ் வுக்கோர் புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர்உயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 7 மகிழ்ச்சிசெய வருங்கூத்தர், மாத்தமிழை…
சுடும்! சுடும்! சுடும்! – மு இராமச்சந்திரன்
சுடும்! சுடும்! சுடும்! சுடும் சுடும் நீரும் சுடும் நெருப்பும் சுடும் நேர் நேர் நின்றால் நட்பும் சுடும்! வாயும் சுடும் வரவும் சுடும் வரம்புகள் மீற நிழலும் சுடும் ! காற்றும் சுடும் கவிதைகள் சுடும் கசடரைப் பார்த்தால் நெஞ்சும் சுடும் ! பூவும் சுடும் பொழுதும் சுடும் பொதுவில் நில்லா மன தைச் சுடும் ! அன்பும் சுடும் ஆசையும் சுடும் அழகே இல்லா நடையும் சுடும் ! சுடும் . சுடும் . போரும் சுடும் பொழுது போக்காய் செய்வது…
தேர்வுக்கொள்கை : இடைப்பாடியார், செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப் பாராட்டுகள்!
தேர்வுக்கொள்கை : இடைப்பாடியார், செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப் பாராட்டுகள்! நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்றார் ஔவையார்(மூதுரை 10). வல்லார் ஒருவர் உளரேல் அவர் செயலால் எல்லார்க்கும் விளையும் நன்மை என நாம் சொல்லலாம். பணியாற்றும் இடங்களில் எல்லாம் பாங்குடன் செயல்படும் திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறைச் செயலர் பொறுப்பேற்ற பின்னர், பள்ளிக்கல்வித்துறை, நூலகத்துறை முதலானவற்றில் அனைத்துத் தரப்பாரும் போற்றும் வண்ணம் நற்செயல்கள் புரிந்து வருகின்றார். பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், கல்விநலனில் கருத்து செலுத்தும் வண்ணம்…
இரசினி கட்சி அரசியலில் இறங்கினால் என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்
இரசினி கட்சி அரசியலில் இறங்கினால் என்ன? சிவாசி (இராவு) கயக்குவாடு(Shivaji Rao Gaekwad) என்னும் இயற்பெயர் கொண்ட நடிகர் இரசினிகாந்து அல்லது இரசினிகாந்தன், 160 திரைப்படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் மிகச்சிறந்த நடிகர். திரைத்துறையில் காலடி எடுத்து வைத்ததுமே அரசியல் உலகில் காலடி எடுத்து வைக்க ஆசைப்படும் இன்றைய சூழலில் அவருக்கும் அரசியல் உலகில் அரங்கேற்றம் காண ஆசைவருவதில் வியப்பில்லை. ஆனால், ஒரு புறம் ஆசையும் மறுபுறம் அச்சமுமாக இருதலைக் கொள்ளி எறும்பாக அவர் இருப்பதால் அரசியல் பூச்சாண்டி காட்டுவதுபோல் நடந்துகொள்கிறார். மக்கள்திலகம்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) சீராட்டப்பட வேண்டியவரைச் சிறைக்கு அனுப்பிப் பணிநீக்கமும் செய்தமை குறித்துப் பின்வருமாறு பேராசிரியர் இலக்குவனாரே குறிப்பிட்டுள்ளார்: “தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயில வாரீர்” என மாணவரை நோக்கி அன்போடு அழைக்கப் புறப்பட்டேன். தமிழ் வழியாகப் பயிலத் தம் மக்களை ஊக்குவிக்க வேண்டும் எனப் பெற்றோரை நோக்கி உற்ற வேண்டுகோள் விடுக்க ஊர்கள் தோறும் நடக்கப் புறப்பட்டேன். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவத் தெருக்கள் தோறும் செந்தமிழ் முழங்க வேண்டுமெனச்…
பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 – முனைவர் நா.இளங்கோ
(பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 1940 தொடங்கிப் பாவேந்தர் தம்மை முழுமையான திராவிட இயக்கக் கவிஞராக, தமிழ்த் தேசியம் நாடும் கவிஞராக, தனித் தமிழ்நாடு அல்லது தனித் திராவிடநாடு கோரும் கவிஞராகத் தம்மை அடையாளப் படுத்திக்கொண்டார். ஆனாலும் தாம் சார்ந்த தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கம் காண விரும்பும் குமுகாயமாக அவர் சமத்துவக் குமுகாயத்தைக் காட்டத் தவறியதே இல்லை. பாவேந்தர் பாடல்கள் வழி ஊற்றம் பெற்ற திராவிட இயக்கத்தினர் அனைவரும் பொதுவுடைமைச் சமூகமே, திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதாக உணர்ந்தார்கள். ஆனால்…
திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிவுறுத்தல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல் தொடர்ச்சி) 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 128. குறிப்பு அறிதல் காதலர் தம்தம் உள்ளத்துள்ள் குறிப்புகளைக், குறிப்பாக உணர்த்தல் (01-05 தலைவன் சொல்லியவை) கரப்பினும், கைஇகந்(து) ஒல்லாநின் உண்கண், உரைக்கல் உறுவ(து)ஒன்(று) உண்டு. மறைத்தலையும் மீறி, உன்கண்கள் குறிப்பு ஒன்றைச் சொல்லுகின்றன. கண்நிறைந்த காரிகைக் காம்(பு)ஏர்தோள் பேதைக்குப், பெண்நிறைந்த நீர்மை பெரிது கண்கொள்ளா அழகுக் காதலிக்குப் பெண்மை நிறைபண்பே, பேர்அழகு….
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) நமது மொழி உயர் வென்று சொல்லி, நாள் கழித் தோம்; குறை களைந்தோமில்லை என்று குறிப்பிட்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அதே குறையை பெருங்கவிக்கோவும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தமிழ் தொன்மை மொழியென்றோம் தமிழர் முன் இனம் என்றோம் அமிழ்தம் எம்மொழி என்றோம் அழகாகப் பாட்டிசைத்தோம்! புவனமிதில் நம் தமிழ்தாய் பவனிவர என்செய்தோம்? என்று கேட்கிறார். மேலும் அவர் சுட்டுகிறார் :…