இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்! கார்த்திகை 1 அல்லது நவம்பர் 17 தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் பிறந்த நாள். இவ்வாண்டு அவரின் நூற்றுஏழாம் பிறந்த நாள். தமிழ்நலப் போராளியாக எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்தவர் பேரா.சி.இலக்குவனார். அவர் அறிவுரைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே எழுத்து என்பதற்கு எதிரான போர்க்குரலாகும். ஏதோ, இராசுட்டிரிய சேவா சங்கத்தின் அச்சுப்பதிப்பான பா.ச.க. அரசுதான் இவ்வாறு மொழித்திணிப்பில் ஈடுபடுவதாக இன்றைய தலைமுறையினர் எண்ணக்கூடாது. காங்கிரசு எனப்படும் பேராயக்கட்சியின் தலையாய…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 1/2 : செ. இரவிசங்கர்
பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 1/2 முன்னுரை: திருக்குறளுக்கு உரையெழுதிய பலருள் சி.இலக்குவனாரும் ஒருவர். தமிழுக்காகப் பணி செய்த மாபெரும் அறிஞர் இலக்குவனார் என்பதை இரா.நெடுஞ்செழியனாரின் கூற்றின் முலம் அறியலாம். “இலக்குவனாரின் தமிழறிவும்ஆற்றலும், துணிவும், திறமையும், அஞ்சாநெஞ்சமும், அன்புள்ளமும், விடா முயற்சியும், தொண்டு புரியும் சிறப்பும், தமிழுக்காகவும், தமிழர்க்காகவும் பாடுபடும் தன்மையும் பாராட்டிப் போற்றத்தக்கனவாகும்” என்கிறார். இது முற்றிலும் உண்மையாகவே அவரது தமிழ்ப்பணியைப் பார்க்கும்போது தெரிகிறது. இவ்வளவு திறமையும் உழைப்பும் கொண்ட இலக்குவனாரின் பணிகளுள் திருக்குறளுக்கு இயற்றியுள்ள உரைப் பணி போற்றத்தக்கதாகும். …
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 8/9 – பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 7/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 8/9 தாம் தமிழை விரும்புவதற்கான காரணங்களைத் தந்தை பெரியார் அடுக்கும்போதே, மொழி குறித்துக் கருத்தறிவிப்பது மொழியின் தத்துவத்திலுள்ள தன்னுடைய ஆசை மிகுதியின் பொருட்டே ஆகுமே தவிர, “நான் கூறப்போகும் தத்துவங்களை இலக்கண, இலக்கிய ஆதாரங்களுடன் விளக்குவது என்பது எனது தகுதிக்கு மேற்பட்ட காரியம். அதற்கு வேண்டிய இலக்கண இலக்கியங்களில் பாண்டித்தியமோ, ஆராய்ச்சியோ எனக்கில்லை. எனக்குத் தோன்றிய, என் பட்டறிவுக்கு எட்டிய செய்திகளைத்தான் நான் உங்களுக்கு…
புரட்சி எண்ணமும் செயலும் கொண்ட இலக்குவனார் – இரவி இந்திரன்
புரட்சி எண்ணமும் செயலும் கொண்ட இலக்குவனார் அஞ்சா நெஞ்சும் அதிஉயர் கல்விச் செறிவும் வரலாற்றுத் தெளிவும் ஒருங்கே உருவான அறிஞரின் கதை. (17.11.1909 – 03.09.1973) 1965, இந்தி எதிர்ப்புப் போராட்ட காலம். உளவுத்துறைக்கு ஒரு செய்தி வருகிறது. தமிழகமெங்கும் போராட்டத் தீ பரவிக்கொண்டிருக்கிறது. மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் எரிக்கப் போகிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. உடனே விழிப்படைந்த உளவுத்துறையினர் அறிஞர் அண்ணாவிடம் வருகிறார்கள். மாணவர்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளும்படி அறிக்கை விடும்படி கேட்கிறார்கள். மாணவர்களின்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 1/7 : இலக்குவனார்திருவள்ளுவன்
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 1/7 செந்தமிழ்மாமணி, செம்மொழிச்சுடர் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் பிறந்தநாள் பெருமங்கல நூறாம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து (2009) விழாக்கள் நடத்தப் பெறுகின்றன. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள், அ.இ.வானொலி நிலையம், சாகித்திய அகாதமி எனப் பல்வகைத் தரப்பினராலும் தமிழ்நாட்டில் நூற்றாண்டு விழா, கவியரங்கம், கருத்தரங்கம், உரையரங்கம் முதலானவற்றில் தமிழறிஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர்,…
அறிவோம் இசுலாம் : மணவிலக்கு(தலாக்கு) – பாத்திமா மைந்தன்
அறிவோம் இசுலாம் : மணவிலக்கு(தலாக்கு) மணமுறிவு / மணவிலக்கு என்பதைக் குறிக்க ‘தலாக்கு’ என்னும் அரபுச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘தலாக்கு’ எனும் சொல்லுக்கு, விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் என்பது பொருளாகும். இதை ‘விவாகரத்து’ என்ற வடமொழி சொல்லாலும் சுட்டுகிறோம். இச்சொல், திருமண ஒப்பந்தத்தை முறித்தல், இல்லற வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றைக் குறிக்கும். இசுலாத்தின் பார்வையில் இல்லறம் ஒரு நல்லறமாகவும், ஓர் ஒப்பந்தமாகவும் உள்ளது. இல்லற வாழ்வு நீடித்து நிலை பெற வேண்டும் என்பதால்தான் திருமணம் செய்வதை இசுலாம் ஊக்குவிக்கிறது. வாணாள்…
மலைபோல் பற்று எனக்கில்லை! – கெருசோம் செல்லையா
மலைபோல் பற்று எனக்கில்லை! மலையைப் பெயர்த்துக் கடலில் கொட்டும், மாபெரும் பற்றும் எனக்கில்லை. கலையழகுள்ள சிலைபோல் கட்டும், கைத்திறன் அறிவும் எனக்கில்லை. விலை மதிப்பில்லா பொருளாய்க் கிட்டும், விண்ணின் அன்பும் எனில் இல்லை. இலைபோல் கருகும் இவ்வாழ்வைக் காட்டும், இறைமுன் வந்தேன், குறையில்லை! – கெருசோம் செல்லையா
மறக்க முடியுமா? – பேராசிரியர் சி.இலக்குவனாரை : எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? : பேராசிரியர் சி.இலக்குவனார் அன்றைய தஞ்சை – இன்றைய நாகை மாவட்டம் திருத்துறைப் பூண்டிக்கு அருகில் வாய்மைமேடு என்ற ஊரில் வாழ்ந்த சிங்காரவேலு – இரத்தினத்தாச்சி இணையரின் இரண்டாம் மகனாகப் பிறந்தார் இலக்குவனார். இலட்சுமணன் என்ற இவரின் இயற்பெயரை, இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, இவரின் ஆசிரியரான தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவன் என்று மாற்றினார். கார்த்திகை 1, 1940 / 1909ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் பிறந்த இவரின் தொடக்கக் கல்வி, கண்ணுசாமி,…
முற்றுப்புள்ளி – கா.உயிரழகன்
முற்றுப்புள்ளி – கா.உயிரழகன் வரவை அழிக்கும் செலவுக்கும் கூட குடியை அழிக்கும் குடிக்கும் கூட உடலை அழிக்கும் புகைக்கும் கூட உறவை அழிக்கும் கெட்டதிற்கும் கூட பண்பாட்டை அழிக்கும் பழக்கத்திற்கும் கூட ஒழுக்கம் இன்மைக்கு வை முற்றுப்புள்ளியே! முரண்பாடுகள் முளைக்காமல் இருக்கக் கூட முறுகல்கள் தோன்றாமல் இருக்கக் கூட மோதல்கள் தொடராமல் இருக்கக் கூட முறிவுகள் மலராமல் இருக்கக் கூட சாவுகள் நிகழாமல் இருக்கக் கூட அமைதி இன்மைக்கு வை முற்றுப்புள்ளியே! நட்புகள் நலமாக அமையத் தான் உறவுகள் அன்பாக இணையத் தான் காதலும்…
இலக்குவனார் பெயர் நிலைக்கும்! – இளவரச அமிழ்தன்
இலக்குவனார் பெயர் நிலைக்கும்! கமழ்கின்ற செம்மொழிக்குப் பணிகள் செய்து களம்கண்ட பல்லோரும் பிறந்த நாட்டில் தமிழேதன் மூச்சென்று முழங்கி நின்ற தன்மான இலக்குவனார் தோன்ற லானார் தமிழ்க்காப்புக் கழகங்கள் தழைக்கச் செய்து தரமான மொழியினையே தமிழர் ஆள தமிழுக்கு அடுத்ததென ஆங்கி லத்தை தமிழர்கள் கற்றிடவும் வழிவ குத்தார்! தொன்மையான நாகரிகம் பண்பா டென்று தூயதமிழ் இலக்கணந்தான் கொண்ட தாலும் முன்தோன்றி மூத்தமொழி; என்னும் போழ்தில் மூத்தகுடி நம்குடியே! பெருமை பூண்டோம்! முன்னேற்றங் கருதியேதான் ஆங்கி லத்தை முனைப்புடனே போற்றிடுஅவ் வேளை தன்னில்…
ஈழத் தாயவளேதான் எங்கள் தாயம்மா! – அம்பாளடியாள்
ஈழத் தாயவளேதான் எங்கள் தாயம்மா! ஆழ்கடல் தனிலே அந்தப் பேதையின் குரலைக் கேட்டேன்! ஊழ்வினைப் பயனாய் எண்ணி உலகமே வெறுக்கக் கண்டேன்! வாழ்வினை அளிக்க வல்ல வசந்தமும் விலகிச் செல்ல மூழ்கிடும் திருநா டெம்மின் முகவரி என்றார் அம்மா! பொன்னென விளைந்த தேசம் பொலிவினை இழக்க நாளும் இன்னலைத் தொடுத்தார் அங்கே இதயமும் மரித்துப் போக! அன்னவர் செயலைக் கண்டே அடிமைகள் விழித்த தாலே வன்முறை பொலிந்தே இன்றும் வாழ்வினைப் பொசுக்கு தம்மா! கற்றவர் நிறைந்த பாரில் காத்திட ஒருவர் இன்றி குற்றமே பொலிந்து…
புரட்சியில் பூத்த மலர் இலக்குவனார் – க.இந்திரசித்து
புரட்சியில் பூத்த மலர் – க.இந்திரசித்து பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ் மொழியின் எழுச்சிக்கும், ஏற்றத்திற்கும் போராடிய போர்ப்படை மறவர்களின் வரிசையில் முன்னணியில் நின்றவர். கார்ல்மார்க்சு, இலெனின், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் ஏற்படும் உணர்ச்சியும், உந்துதலும், வேகமும், வீரமும், கிளர்ச்சியும், கிளர்ந்து எழுவதைப் போன்றே இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதும் தோன்றுகின்றன. என்னடா! இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்து மறைந்திருக்கிறாரே – அவரை நாம் மறந்திருக்கிறோமே’ என்னும் வியப்பும், வேதனையும் ஒருங்கே எழுகின்றன. காவிய தலைவனாகவே காட்சியளிக்கும்…