இலங்கையில் நீதி நிலை நிறுத்தப்படும் – கனடா உறுதி!
மனித உரிமை, சட்டம் ஒழுங்கு, சமயஉரிமை போன்றவற்றில் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள கனடா, இத்தகைய நிலைப்பாட்டில் இலங்கை அரசு போதிய பற்றுறுதியைக் காட்டவில்லை என்பதைக் காரணம் காட்டி, அண்மையில் இடம்பெற்ற பொதுவள மாநாட்டில் கனடியத் தலைமையாளர் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை எடுத்திருந்தது. இதற்கிணங்க, மனிதநேயம் மிக்க, கனடியத் தலைமையாளர் இசுடீபன் ஆர்பர் இனப்படுகொலை நாட்டில் கொலையாளிக்குத் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கும் பொதுவளஆய மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே! இருப்பினும், கனடாவில் சார்பில் கனடிய வெளியுறவு அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒபரோய்…
பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் மழலையர் கற்றல் கொண்டாட்டம்
பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் உலக மாந்த உரிமை நாளான திசம்பர் 10 அன்று ‘மழலையர் கற்றல் கொண்டாட்டம்’ சிறப்பாய் நடந்தது. திரைப்பட நடிகர் தோழர் இராமு அவர்களும் எழுத்தாளர் வழக்குரைஞர் நடராசன் அவர்களும் மழலைச் சொல் பதிப்பகம் தோழர் மலர்விழி அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். மழலையர் தங்களின் கற்றல் திறனை மகிழ்வாய் வெளிப்படுத்தினர். பல்வகைப் படங்களை, கற்றல் துணைக் கருவிகளை, விளையாட்டுப் பொருட்களை அடுக்கி, வகைப்படுத்தி, முறைப்படுத்தி தானாயும் தன் நண்பர்களோடு குழுவாயும் கற்று மகிழ்ந்த காட்சி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டது….
சிற்றிந்தியாவில் பேருந்துமோதி இளைஞர் மரணம் – வன்முறை வெடித்தது
சிங்கப்பூரில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரம்! இன்று (08.12.13) இரவு, பேருந்து மோதி இந்திய இளைஞர் ஒருவர் இறந்ததாகச் செய்தி பரவி அது கலவரமாக மாறியது. சிங்கப்பூரில் சக்திவேல் குமாரவேலு (அகவை 33) என்பவர், கடந்த ஈராண்டுகளாக, எங்கு அப்பு சூன் (Heng Hup Soon) என்னும் நிறுவனத்தில் கட்டடப்பணியாளராக வேலைபார்த்து வந்தார். இவரே அந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பேருந்து மோதி இறந்ததாகச் செய்தித்தாள்களில் வந்திருந்தாலும், அவரது முகத்தில் காயங்கள் இருந்தன என்றும் அவர் இறப்பு குடும்பத்தினர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் …
ஆவடியில் வட இந்தியர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் !
த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் கைது! ஆவடி இந்தியப் அரசுப் பாதுகாப்புத் துறை நிறுவனப் பணி வாய்ப்பில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் தளையிடப்பட்டுள்ளனர். சென்னை ஆவடியில் இந்திய அரசு பாதுகாப்புத்துறை நிறுவனம் (OCF) செயல்பட்டுவருகிறது. இதில் தையல் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புத் தேர்வு நடைபெற்றது. வேலை வாய்ப்பு பணித்தேர்வு எழுத இசைவளிக்கப்பட்ட 1800 பேரில் 1026 பேர் தமிழர்கள் அல்லாத, மலையாளிகள், கன்னடர்கள், மேற்குவங்கம், பீகார், மாகாராட்டிராவைச் சேர்ந்த வடஇந்தியர்கள்….
ஏற்காடு இடைத் தேர்தல்: அதிமுக வெற்றி – பரிசும் தண்டனையும்
ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோசா 1,42,771 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரைவிட 78116 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் மாறன் 64, 655 வாக்குகள் பெற்றார். இது கடந்த தேர்தலில் தி.மு.க. பெற்ற வாக்கை விடச் சற்றுக் குறைவே. வேறு முதன்மைக் கட்சிகள் போட்டியிடாத சூழலில் தி.மு.க. கூடுதல் வாக்குகளைப் பெறும் என எண்ணியவர்கள் ஏமாற்றத்தைத் தழுவினர். மூன்றாம் இடத்தில் வாக்கு அளிக்க விரும்பாதவர்கள் எண்ணிக்கை 4,431 ஆகஇடம் பெற்றுள்ளது. இனி், ஒவ்வொரு தேர்தலிலும் இப்பிரிவிற்கான வாக்கான எண்ணிக்கை…
10, 12 ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணைகள்
கருத்தூன்றிப் பயிலுக! கவனமாக எழுதுக! சிறப்பாகத் தேர்ச்சி பெறுக! வாழ்வில் உயர்க! என மாணாக்கர்களை ‘அகரமுதல’ வாழ்த்துகிறது! + 2 தேர்வு அட்டவணை தேர்வு நேரம்: காலை 10.00 மணி – நண்பகல் 1.15 மணி நாள் பாடம் மார்ச்சு 1 மொழித்தாள் 1 மார்ச்சு 4 மொழித்தாள் 2 மார்ச்சு 6 ஆங்கிலம் 1 மார்ச்சு 7 ஆங்கிலம் 2 மார்ச்சு 11 இயற்பியல், பொருளியல் மார்ச்சு 14 கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு…
சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கில் அரசு முனைப்புடன் வாதாட வேண்டும் : கலைஞர்
தமிழருக்கே உரிய சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு பணியாட்சியின்(நிருவாகத்தின்) கீழ்க் கொண்டு வந்து பணியாள்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தமிழக அரசு மூத்த வழக்குரைஞரை நியமித்து, முனைப்புடன் வாதாட வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு நியமித்த அதிகாரிபணியாண்மைபுரிய உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் வாதாடி…
பள்ளி மாணவர்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு
குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் கடந்த 30.11.2013 காரிக்கிழமையன்று பள்ளி குழந்தைகளுக்கான சித்த மருத்துவ ஆய்வு நடந்தது. சித்த மருத்துவர்கள் – மரு. மகேந்திரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. தாமோதரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. செயப்பிரதாப் (சித்த மருத்துவ இளவர்) வந்திருந்து மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு மருந்ததுகளை வழங்கினர். குன்றத்தூர் சீபா மருத்துவ ஆய்வகத்தினர் தேவையானவர்களுக்குக் குருதி, சருக்கரை, கொழுப்பு… போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு உதவினர். மருத்துவ ஆய்வில் 150 பள்ளிக் குழந்தைகளும் 200க்கும் மேற்பட்ட பொது மக்களும் பங்கேற்றுப்…
காவிரிபாயும் மாவட்டங்களில் நீருரிமை ஆர்ப்பாட்டங்கள்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கழிமுக மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் “இந்திய அரசே! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை! அரசமைப்புச் சட்டவிதி 355-இன் கீழ் கருநாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய 26 ஆ.மி.க (டி.எம்.சி) பாக்கித் தண்ணீரை திறந்துவிட கட்டளை இடு!” “உழவர்களின் பயிர்க் காப்பீடுத் திட்டத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கையைக் கைவிடு!” “இந்திய அரசே! தமிழர்களை வஞ்சிக்காதே!” “தமிழக அரசே! கருநாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய எஞ்சிய தண்ணீரைக் கேட்டுப் பெற உறுதியான நடவடிக்கை…
நீந்திக் கடந்த நெருப்பாறு – நூல் : வைகோ வெளியிட்டார்
சென்னையில் நீந்திக் கடந்த நெருப்பாறு – நூல் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை – எழும்பூரில் உள்ள தூய அந்தோணியார் அரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த குமாரனின் “நீந்திக் கடந்த நெருப்பாறு” எனும் நூலை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட,
மொரிசியசில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூண்
மொரிசியசின் பின்பேசின்(Beau Bassin)என்னும் நகரில் விடுதலைப்புலிகள் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் துயர நினைவுநாளான மே 18, 2012 இல் திறக்கப்பட்டது இது. மொரிசியசிலுள்ள பியூபேசின் உரோசு குன்று (Beau Bassin Rose Hill) நகர் மன்றம் உலகத்தமிழர்களின் போற்றுதலுக்கும் உலக மனித நேயர்களின் பாராட்டுதலுக்கும் உரித்தாகியுள்ளது.
இலங்கைக்குப் படைப்பயிற்சி – முதல்வர் எதிர்ப்பு
இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சியளிப்பது தொடர்பான, படைத்துறை ஒத்துழைப்புக் கொள்கையை மறு ஆய்வு செய்யுமாறு முதல்வர் செயலலிதா தலைமையாளர் மன்மோகன்சிங்கிற்கு மடல் அனுப்பி உள்ளார். இந்தியக் கடற்படை சார்பில், நடத்தப்பெறும் கடல்சார் பாதுகாப்பு தொழில் நுட்ப நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பில் (பி.டெக்.), இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் மத்திய அரசு இடம் அளிக்க உள்ளது.