நீந்திக் கடந்த நெருப்பாறு – நூல் : வைகோ வெளியிட்டார்

சென்னையில் நீந்திக் கடந்த நெருப்பாறு – நூல் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை – எழும்பூரில் உள்ள தூய அந்தோணியார் அரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த குமாரனின் “நீந்திக் கடந்த நெருப்பாறு” எனும் நூலை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட,

மொரிசியசில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூண்

  மொரிசியசின் பின்பேசின்(Beau Bassin)என்னும் நகரில் விடுதலைப்புலிகள் நினைவுத்தூண்  அமைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் துயர நினைவுநாளான மே 18, 2012 இல் திறக்கப்பட்டது இது. மொரிசியசிலுள்ள பியூபேசின் உரோசு குன்று (Beau Bassin Rose Hill) நகர் மன்றம் உலகத்தமிழர்களின் போற்றுதலுக்கும் உலக மனித நேயர்களின் பாராட்டுதலுக்கும் உரித்தாகியுள்ளது. 

இலங்கைக்குப் படைப்பயிற்சி – முதல்வர் எதிர்ப்பு

  இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சியளிப்பது தொடர்பான,  படைத்துறை ஒத்துழைப்புக் கொள்கையை மறு  ஆய்வு செய்யுமாறு  முதல்வர் செயலலிதா  தலைமையாளர் மன்மோகன்சிங்கிற்கு மடல் அனுப்பி உள்ளார். இந்தியக் கடற்படை சார்பில், நடத்தப்பெறும்  கடல்சார் பாதுகாப்பு தொழில் நுட்ப  நான்கு ஆண்டுகள்  பட்டப்படிப்பில் (பி.டெக்.), இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும்  மத்திய அரசு  இடம் அளிக்க உள்ளது. 

தமிழ்ப்படநிலையத்தின் செயல்பாடுகள்

தமிழ்ப்படநிலைய 6 ஆம் ஆண்டுத் தொடக்க விழா!!! தமிழ்ப்படநிலையத்தின் (Tamil Studio)  ஆறாம் ஆண்டுத் தொடக்க விழா, நவம்பர் 23, சனிக்கிழமை மாலை, சென்னையில் க.க.நகரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் இராம் பங்கேற்றார். தமிழ்ப்படநிலையத்தின் செயல்பாடுகள் வருமாறு:-   2008, நவம்பர் 23 ஆம்  நாள் குறும்பட / ஆவணப்படங்களுக்கான இணையத்தளமாகத்  தொடங்கப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டே மாற்றுத் திரைப்படத்திற்கான இயக்கமாக மாறியது.நவம்பர், 2013 இல் தமிழ்ப்படநிலையம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தது. இன்றுவரை: * 750 நிகழ்ச்சிகள், * 2100 குறும்படங்கள்…

முறையற்ற நடவடிக்கைகள்: மூவரையும் விடுதலை செய்க!

– நீதிநாயகம் கே.சந்துரு  இராசீவு கொலைவழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தைத் திருத்தியதாக மத்தியப் புலனாய்வுப் பணியகத்தின்(சி.பி.ஐ.) அப்போதைய கண்காணிப்பாளர் தியாகராசன் தெரிவித்துள்ளார். இது குறித்து நீதிநாயகம் கே.சந்துரு அதிர்ச்சியைத் தெரிவித்து மூவரையும் விடுதலை செய்யுமாறு பின்வருமாறு கருத்து தெரிவித்து வேண்டி உள்ளார்:

மதுமயக்கத்தில் மலைப்பாம்பிற்கு இரையானார்

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் குடிபோதையில் உறங்கி கொண்டிருந்த ஒருவரை மலைப்பாம்பு ஒன்று விழுங்கி விட்டது. வனப்பகுதி அருகே உள்ள இடத்தில் மது அருந்திவிட்டு மயக்கத்தில் அயர்ந்துவிட்டவரையே மலைப்பாம்பு  விழுங்கியுள்ளதாக ஊரினர் தெரிவித்துள்ளனர். பாம்பின் வயிற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாகவிம் தெரிவிக்கப்படுகிறது.

“தமிழக அரசு மூவர் தூக்கை நீக்க வேண்டும்”

 உயிர்வலி ஆவணப்படவிழாவில் தோழர் கி.வெங்கட்ராமன்  உரை!   இராசீவு கொலை வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் குறித்தும், மரண தண்டனை ஒழிப்பு குறித்தும் பேசுகின்ற ‘உயிர்வலி’ ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வும், நீதிபதி வீ.ஆர்.கிருட்டிணய்யர் அவர்களின் 99ஆவது பிறந்தநாள் விழாவும் விருதுகள் வழங்கும் விழாவும் 24.11.2013 சென்னையில் நடைபெற்றது. சென்னை பிட்டி.தியாகராயர் அரங்கில், மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்

 சீனத் தமிழ் வானொலி பொன்விழா போட்டி – அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 பரிசுகள்!

சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் முதல் நாள்  தொடங்கியது. 1963-2013 ஆகசுட்டுஉடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில் சீன வானொலித் தமிழ் பிரிவு பல்வேறு போட்டிகளை நடத்தியது.  இந்தப் போட்டிகளில் உலக வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  பொன்விழா கட்டுரைப் போட்டி, ஊடக போட்டிகள், பொது அறிவுப் போட்டி என்று நடத்தியது.   பொன்விழப் போட்டிக்கான முதல் பரிசை அமெரிக்கா வாழ் தமிழரான ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ பெற்றுள்ளார்.  பொன் விழா கட்டுரையின் ஊடகப் பரிசான சிறப்புப்…

இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! -இராமதாசு கண்டனம்.

தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! இராமதாசு கண்டனம்.   தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு  விலக்கிக் கொள்ள வேண்டும் என பாமாக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள இந்திய கடற்படை கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கடல்சார் பாதுகாப்பு தொழில்நுட்ப படிப்பில் சிங்களக் கடற்படையினர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்

உணர்ச்சியற்ற மத்திய அரசால் இலங்கைப் படை அட்டூழியம்: முதல்வர் காட்டம்

  மீனவர்கள் மீட்பு தொடர்பாகத் தமிழக முதல்வர் இந்தியத்தலைமையாளருக்கு  மீண்டும் மடல் எழுதி உள்ளார். ” இலங்கைக் கடற்படையினரின், சட்ட  மீறல் நடவடிக்கையால், இலங்கைச் சிறையில் வாடும், தமிழக மீனவர்களின் எண்ணிக்கை,  பெருகியபடி உள்ளது. இதுபோன்ற  நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க, மத்திய அரசு, இலங்கைக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அத்துடன், தூதரக அளவில், பேச்சு நடந்தி,  இச்சிக்கலுக்கு நிலையான தீர்வு காண வேண்டும். ஆனால், மத்திய அரசு, தொடர்ந்து கண்டு கொள்ளாமல் இருப்பது, தமிழக மீனவர்களிடம், கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில்,…

கவிஞர் செயபாலன் இன்று விடுதலை செய்யப்படலாம்

  மாங்குளத்தில் தளையிடப்பட்ட கவிஞர்  செயபாலன் இன்று வவுனியாவிலிருந்து கொழும்புக்குப் பயங்கரவாதத் தடுப்புக் காவலரால் கொண்டு செல்லப்படுகிறார்.   ‘தினக்கதிர்’ இதழ் சார்பில் செயபாலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தன்னை இன்று விடுதலை செய்வதாகக் காவல் துறையினர் கூறியிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  கொழும்பு கொண்டு செல்லப்படும் கவிஞர் செயபாலன் சிறிலங்கா குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் இதனையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா அல்லது குடிவரவு அதிகாரிகள் அவர் மீது ஏதாவது குற்றச்சாட்டை சுமத்தி வழக்கு தொடர்வார்களா என்பது தெரியவில்லை.  அவர் இன்று…

இனப்படுகொலைக்காகச் சீன முன்னாள் அதிபரைக் கைது செய்ய உத்தரவு

இனப்படுகொலைக்காகச் சீன முன்னாள் அதிபரையும், பிற தலைவர், அதிகாரிகளையும் கைது செய்ய இசுபெயின் நீதிமன்றம் உத்தரவு திபெத்தில் இனப்படுகொலை நடத்தியதாக சீன முன்னாள் அதிபர்  சியாங்கு செமீன், முன்னாள்  தலைமையாளர் (இ)லீ பெங்கு, முன்னாள் பாதுகாப்பு-காவல்துறைத் தலைவர் கியாவு  சி, திபெத்து முன்னாள்பொதுவுடைமைக் கட்சித் சென் கியான், முன்னாள் குடும்பத் திட்ட இயக்குநர் பென் பெல்யூன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று  இசுபெயினில் உள்ள திபெத்துக்கு ஆதரவான அமைப்பு அங்குள்ள நீதிமன்றத்தில்  வழக்கு பதிவு செய்தது. இதற்கிணங்க இந்து ஐவரையும்…