கருத்து வெளியிடுகின்ற தகுதி முரளிதரனுக்கு இல்லை: து. இரவிகரன்

தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தை பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை. என்று வடமாகாண அவையின் ஆளும்கட்சி  உறுப்பினர் து.இரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பின்வருமாறு அவர் கண்டித்துள்ளார். இலங்கை  மட்டைப்பந்தாட்ட வீரர்  முத்தையா முரளிதரன் தனது குடும்பத்தில் ஒருவருக்கு இசைப்பிரியாவின் கதியோ பாலச்சந்திரனின் கதியோ நேர்ந்திருந்தால், அப்போதும் இவ்வாறு தான் பேசுவாரா? வடகிழக்கு மக்களின் அவலங்களையும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தையும் பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற…

நெடுமாறன் முதலான 81 பேருக்குப் பிணை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவரை இடிப்பதை எதிர்த்து போராடியபோது கைதான உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் முதலான 81 பேருக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி சி.டி.செல்வம  புதன்கிழமை  பிணையில் விடுவித்து  உத்தரவிட்டார். அரசு வழக்குரைஞர் பிணைக்கு மறுப்பு தெரிவித்த  போதும்,  முறையீட்டாளர்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்குள் நுழையமாட்டார்கள் என்ற உறுதியை அவர்களின் வழக்குரைஞர் சந்திரசேகரன்  அளித்ததன் அடிப்படையில் நீதிபதி பிணை விடுவிப்பு வழங்கினார். மேலும் முன்பிணைகோரி  புதிய பார்வை ஆசிரியர் முனைவர் நடராசன்  முறையிட்டதில், நீதிபதி செல்வம், அவருக்கு முன் பிணை…

பெரிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும்!’: முதல்வரின் அறிவுரைக் கதை

 சென்னை : “வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும்போது வருத்தப்படாதீர்; முயலுங்கள்! அதைவிடப் பெரிய வாய்ப்பு, உங்களைத் தேடி வரும்,” என, முதல்வர் செயலலிதா, அறிவுரை வழங்கினார்.  சென்னையில், மூன்று அமைச்சர்கள் – புதுச்சேரி ச.ம.உ. இல்லத் திருமண விழா, நேற்று நடந்தது. விழாவில், முதல்வர் செயலலிதா, மணமக்களை வாழ்த்திப் பேசும்போது, கதை கூறி, அனைவருக்கும் அறிவுரை வழங்கினார்.அக்கதை வருமாறு: ஒரு கணிணி நிறுவனத்தில், தரை துடைக்கும் பணியாளராக, ஒருவர் பணி புரிந்து வந்தார். அந்த நிறுவனத்திற்குப், புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணிபுரியும்,…

முதல்வர் தொடங்கிய நல்லுதவித் திட்டங்கள்

  கொசுக்களை ஒழிக்க 5.5 நூறாயிரம் நொச்சிச் செடி வழங்கும் திட்டம், வீடுகளில் 6.5 நூறாயிரம் பப்பாளி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம், 710 இளைஞர்கள் பயிற்சி பெறச் சென்னை  மாநகராட்சியின் கட்டணமில்லாப் பயிற்சி மையம் ஆகியவற்றை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

கூடங்குளம் – இவர்களைக் கண்காணிப்பது யார் ?

இவர்களைக் கண்காணிப்பது யார் ? கூடங்குளம் அணுஉலையிலிருந்து தொடர்ந்து வெளியேறும் வெப்பநீர். தொடரும் அலட்சியம்…!   அணுஉலையைச் சுற்றிய  ஊர்களில் கடந்த வாரம் 4000 அயிரைக்கல் (கிலோகிராம்) வரை பிடிப்பட்ட மீன்கள் இந்த வாரம் வெறும் 400 அயிரைக்கல் மட்டுமே பிடிப்பட்டுள்ளன. வெப்பநீரின் சுடும்தன்மையால் மீன்கள் ஆழ்கடல் நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. விரைவில் இப்பகுதி மீனில்லாக் கடலாக மாறும் சூழ்நிலை உள்ளது. கூடங்குளம் மக்கள்வாழ்நிலமாக மாறுவது எப்போது?

மேனாள் தமிழ் ஒலிபரப்பாளர் கௌசி இரவிசங்கர் காலமானார்.

தமிழ்த் தேசிய ஊடக உலகில்புகழ் பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசிஇரவிசங்கர் அவர்கள் காலமானார்.  பன்னாட்டு ஒலிபரப்பு அவையின் தமிழ் (ஐ.பி.சி) ஒலிரபரப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கௌசி இரவிசங்கர் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரி.ரி.என்) கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் கௌசி இரவிசங்கர் தொகுத்து வழங்கினார். 2002ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முகமாலையில் யாழ் – கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பொழுது அங்கிருந்தவாறு ரி.ரி.என் தொலைக்காட்சிக்கும்,ப.ஒ.அ.(ஐ.பி.சி) வானொலிக்கும் நிகழ்வுகளை அவர் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர்க் கிளிநொச்சியில் நடைபெற்ற…

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி

தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?   1. கவிதை எந்தப் பா வகையிலேயும் (புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.  2. 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  3.    அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை            மட்டுமே அனுப்புக!  4. கடைசி நாள் : 31.12.2013.  5. உங்களின் தெளிவான அஞ்சல் முகவரி,     மின்னஞ்சல் (e-mail),                  அலைபேசி விவரங்களைக் குறிப்பிடுக. பரிசுத் தொகை முதல் பரிசு உருவா 500 இரண்டாம் பரிசு உருவா 300 மூன்றாம் பரிசு உருவா…

மன்மோகன் சிங்கு ஏமாற்றிவிட்டார் : கண்டுபிடித்த கலைஞரின் காட்டம்

இராசபட்சவுக்குத் தலையையும் தமிழர்களுக்கு வாலையும் காட்டித் தலைமையாளர் ஏமாற்றிவிட்டார் : கண்டுபிடித்த கலைஞரின் காட்டம்         திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதி அவர்கள், இராசபட்சவுக்குத் தலையையும் தமிழர்களுக்கு வாலையும் காட்டித் தலைமையாளர் ஏமாற்றிவிட்டதாக, மன்மோகன்சிங்கிற்கு எதிரான காட்டமான அறிக்கை விட்டுள்ளார். இது தொடர்பிலான அவர் அறிக்கை வருமாறு:- கனடா, பிரிட்டன், மொரீசியசு, திரினிடாட்டு, ஆசுதிரேலியா போன்ற நாடுகளும், உலகத் தமிழர்களும் தெரிவித்த எதிர்ப்புக்குப் பிறகும் இலங்கையில்  பொதுவளஆய மாநாடு நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டின் ஒரே சிறப்புஇராசபட்சவுக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலையும்,…

இலங்கைப் போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும்: சிதம்பரம்

  குற்றவாளியே நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்! இலங்கையில் மனித உரிமைகளை மீறியவர்களை, அந்நாட்டு அரசு கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார். மேலும், “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையானஉசாவல் தேவை” என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில்  நடைபெற்ற இரண்டாவது தெற்கு ஆசிய மாநாட்டில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக முழுமையாக உசாவல் நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இலங்கை அரசுக்கு உள்ளது”…

பன்னாட்டு வணிகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள்’ விழா

தில்லி பிரகதித் திடலில் நடைபெற்றுவரும் இந்திய-பன்னாட்டு வணிகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள்’ விழாவை தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புச் சார்பாளர் எசு.டி.கே. சக்கையன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி-செய்தித் துறை செயலாளர் முனைவர்  மு.இராசாராம் தலைமையில் விழா நடைபெற்றது. தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் சசுபீர் சிங்கு பசாசு, துணை இயக்குநர் கு.தாணப்பா, செய்தி விளம்பரத் துறை உதவி இயக்குநர் முத்தையா  முதலானோர் பங்கேற்றனர். விழா நடைபெற்ற திறந்தவெளி அரங்கில் பரதநாட்டியம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை முதலான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன….

நெல்லையை உலுக்கிய தமிழர்களப் பேரணி

 தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளை முன்னிட்டுத் தமிழர்களம், திருநெல்வேலி நகரில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியது.  தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.  பொதுவளஆய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்தும், முள்ளிவாய்க்கால் முற்றத்தை தமிழக அரசு இடித்ததைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரியும், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் கோரியும், தமிழகப் பள்ளிகளில் அரசே முன்னின்று நடத்தும் தமிழ் அழிப்பு-ஆங்கிலத் திணிப்பை எதிர்த்தும், தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் தொடர்பாகவும் பேரணியில்…

அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்பட 11 பேர் போட்டி

ஏற்காடு (தனி) தொகுதிக்குப் புதிய சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த அக்டோபர் 4-  இல் வெளியிடப்பட்டது. இதன்படி, ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, அதிமுக (பெ.சரோசா), திமுக (வெ.மாறன்) வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.