திருக்குறள் அறுசொல் உரை – 104. உழவு : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 104. உழவு உலகையே வாழ்விக்கும், உயிர்த்தொழில் உழவின் உயர்வு, இன்றியமையாமை. சுழன்றும் ஏர்ப்பின்ன(து) உலகம், அதனால், உழந்தும் உழவே தலை. உலகமே உழவின்பின்; துயர்தரினும், தலைத்தொழில் உழவையே செய். உழுவார் உலகத்தார்க்(கு) ஆணி,அஃ(து) ஆற்றா(து) எழுவாரை எல்லாம் பொறுத்து. எல்லாரையும் தாங்கும் உழவர்; உலகத்தேர்க்கு அச்சுஆணி ஆவர். உழு(து)உண்டு வாழ்வாரே வாழ்வார்…
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25 : தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16.20 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25 நல்லோர் நவிலும் நலம் பயக்கும் இன்குறளைக் கல்லார் அடையார் களிப்பு. அன்பும் அறிவும் ஆக்கமும் ஊக்கமும் பண்பும் குறளால் பெறு. 23. வள்ளுவனார் வாய்ச்சொல் வகையுறக் கற்பவர். உள்ளுவர் நல்வினை ஓர்ந்து. 24. இன்பக் கடல்காண்பர் என்றும் குறள் கற்பவர். துன்பம் தவிர்த்துவாழ் வார். 25. வையத்து வாழ்வாங்கு வாழ்ந்திடக் கற்றிடுவோம் தெய்வத் திருக்குறளைத் தேர்ந்து. தி.வே.விசயலட்சுமி பேசி –…
வரும் ஆண்டில் தென் குமரியில் உலகத் திருக்குறள் மாநாடு
தென் குமரியில் உலகத் திருக்குறள் மாநாடு மொரிசியசு நாட்டிலுள்ள புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அமைப்பு, சப்பானிய, கொரிய, சீனக் கூட்டுறவோடு சென்னையில் செயல்பட்டுவரும் ஆசியவியல் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களோடு இன்னும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த அமைப்புக்களும் இணைந்து அனைத்துநாட்டுக் கூட்டு முயற்சியாகத் தமிழகத்தின் தென்கோடிக் குமரியில் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டினை அடுத்து வரும் வைகாசி 03-05 / 2048 / 2017ஆம் ஆண்டு மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் மிகச் சிறப்பாக நடத்தவிருக்கின்றன. அனைத்துலகு நோக்கிய திருக்குறளின்…
திருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 102. நாண் உடைமை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 103. குடி செயல் வகை குடும்பத்தை, குடியை உயர்த்துவாரது செயற்பாட்டு ஆளுமைத் திறன்கள். ”கருமம் செய”ஒருவன், ”கைதூவேன்” என்னும் பெருமையின், பீ(டு)உடைய(து) இல். ”குடும்பக் கடமைசெயக் கைஓயேன்” என்பதே பெரிய பெருமை. ஆள்வினையும், ஆன்ற அறிவும், எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. நீள்முயற்சி, நிறைஅறிவு சார்ந்த தொடர்செயல் குடியை வாழ்விக்கும். “குடிசெய்வல்” என்னும்…
திருக்குறள் அறுசொல் உரை – 102. நாண் உடைமை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 102. நாண் உடைமை இழிசெயல் வழிவரும் அழியாப் பழிக்கு வெட்கி,அது ஒழித்தல். கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. பழிச்செயலுக்கு வெட்குவதே, வெட்கம்; மகளிர்தம் வெட்கம், வேறு.. ஊண்,உடை, எச்சம், உயிர்க்(கு)எல்லாம் வே(று)அல்ல; நாண்உடைமை மாந்தர் சிறப்பு. உணவு,உடை, பிறஎல்லாம் பொது; நாணம் மக்களுக்குச் சிறப்பு. ஊனைக் குறித்த…
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16-20 : தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16-20 16.பெருவாழ்வு வேண்டின் குறள்நயம் பேணித் திருவுடன் வாழ்தல் திறம். 17.வாழ்வாகி மெய்யாய் வளரொளியாய் நெஞ்சினில் வாழும் குறளை வழுத்து. 18. தேடுகின்ற மெய்ப்பொருள் யாவும் குறள்நூலில் ஓடிவந்து நிற்கும் உணர். 19. வள்ளுவன்சொல் ஓவியம் வண்ணமாய்த் தீட்டுவார் தெள்ளிய நெஞ்சுடை யார். 20. எப்பாலும் ஏற்கும் எழிலான இன்குறளைத் தப்பாமல் கற்போம் தெளிந்து. – புலவர் தி.வே.விசயலட்சுமி பேசி…
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15: தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15 குன்றாப் புகழும், குறையா வளமும் என்றும் குறளால் வரும். இசைபட வாழ்ந்திட இன்குறள் ஆய்வோரைத் திசையெலாம் வாழ்த்தும் தெரிந்து. பொருள்நலம் பெற்றுப் பொலிந்திடும் இன்குறள் இருளற ஓதுவோம் இனிது. முக்கனிபோல் பாநயத்தை மகிழ்ந்து சுவைத்திடின் எக்காலும் வாழ்வோம் இனிது. முப்பாலே தித்திக்கும், முக்கனியாய்ச் சொல்லினிக்கும் எப்போதும் ஏத்துவம் ஏற்று. – புலவர் தி.வே.விசயலட்சுமி பேசி -98415 93517.
வள்ளுவனார் அறத்துப்பால் – கு. நா. கவின்முருகு
வள்ளுவனார் அறத்துப்பால் 1. கற்றாரோ வள்ளுவனார் அறத்துப் பாலை கற்றிலாரும் அறத்தாள்வார் பெயரும் பெற்று சுற்றிடுவார் நிலமதிலே ஈகை இல்லா துப்பில்லா மானிடரும் மாடே ஒப்பர் பெற்றிடுவோம் நற்பெயரும் அவனின் பாவால் பேறுலகைக் காத்திடுமாம் அறமே செய்து சொற்றெடராய் அணிசெய்யும் அழகாய் நன்று தொடர்வதுவும் குறளோதிப் பணிந்து செய்ய. 2. கொன்றார்கு உய்வில்லை செய்த நன்றி கோமகற்கும் அதுவேயாம் மாற்று இல்லை சென்றார்க்கும் சிறப்பேயாம் கற்ற கல்வி தீமையிலாச் சொல்பகரின் செவியில் இன்பம் வென்றாரும் பகைமையுமே வலிமை கண்டே மேன்மக்கட் பேறுபெரும் அறமே…
திருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 100. பண்பு உடைமை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 101. நன்றி இல் செல்வம் பெற்றவர்க்கும், மற்றவர்க்கும் நன்மையால் உற்றதுணை ஆகாத பெரும்செல்வம் வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள், அஃ(து)உண்ணான், செத்தான்; செயக்கிடந்த(து) இல். இடம்நிறைத்த பெரும்பொருளை உண்ணான், எப்பயன் இல்லான்; செத்தான்தான். “பொருளான்ஆம் எல்லாம்”என்(று), ஈயா(து), இவறும், மருளான்ஆம் மாணாப் பிறப்பு. “செல்வத்தால் எல்லாம் ஆகும்”என, மயங்கும் கருமி, சிறப்புறான். ஈட்டம் இவறி, இசைவேண்டா ஆடவர் தோற்றம், நிலக்குப் பொறை….
திருக்குறள் அறுசொல் உரை – 100. பண்பு உடைமை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 99. சான்றாண்மை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 100. பண்பு உடைமை உலகத்தார் இயல்புகளை நன்குஅறிந்து நலஉணர்வுடன் பழகுதலைப் பெறுதல் எண்பதத்தால் எய்தல், எளி(து)என்ப, யார்மாட்டும், பண்(பு)உடைமை என்னும் வழக்கு. பண்புஉடைமை என்னும் வழக்கம், எளிமையாய்ப் பழகுவதால் வரும். அன்(பு)உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், இவ்இரண்டும், பண்(பு)உடைமை என்னும் வழக்கு. பண்பாளரின் இரண்டு சிறப்புகள்: அன்பும்,…
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 : தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 1 – 5 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6-10 நயங்கண்ட வள்ளுவர் நன்மணிபோல் நாமும் வயங்கண்டு கற்போம் விழைந்து. குறளே கொடுமை களைந்திடும் கூர்வாள், திறனை அறிவோம் தெளிந்து. போரற்று வையம் புதுவையம் ஆவதற்கே சீர்பெற்ற தீங்குறளே சிறப்பு. குறள்நெறி பேணின் குறையா வளங்கள் திறம்படப் பெறுவோம் தேர்ந்து. ஒன்றேமுக் காலடிநூல் காட்டும் அறநெறியால் வெல்வோம் விதிப்பயனை நாம். -புலவர் தி.வே.விசயலட்சுமி (பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11…
திருவள்ளுவரா வைத்தார், ஒரு பெயரில் ஈர் அதிகாரம்! – தமிழரசி
திருவள்ளுவரா வைத்தார்? ஒரு பெயரில் ஈர் அதிகாரம்! திருக்குறள் முழுவதையும் எப்போது படித்தேனோ அப்போதிருந்து இந்தக் கேள்வி என் நெஞ்சினில் எழுந்து என்னை மருட்டுகிறது. ஒரு பெயரை இரு அதிகாரத்திற்குத் திருவள்ளுவர் வைத்திருப்பாரா! என எண்ணிப் பார்க்கும்போது அது உங்களுக்கும் வியப்பைத் தரும். ஔவையாரால் “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டித் குறுகத் தறித்த குறள்” எனப் புகழப்பட்ட திருக்குறளில் ஒரே பெயரில் ஈர் அதிகாரம் எப்படி வந்தது? அதுவும் “குறிப்பு அறிதல்” என்னும் பெயரில் இருப்பது இன்னும் வியப்பைத் தருகிறது. எளியோரான…