(திருக்குறள் அறுசொல் உரை – 99. சான்றாண்மை  தொடர்ச்சி)

attai_kuralarusolurai

திருக்குறள் அறுசொல் உரை

2. பொருள் பால்  
13.குடி இயல்

   அதிகாரம் 100. பண்பு உடைமை

 உலகத்தார்  இயல்புகளை   நன்குஅறிந்து

  நலஉணர்வுடன் பழகுதலைப் பெறுதல்

 

  1. எண்பதத்தால் எய்தல், எளி(து)என்ப, யார்மாட்டும்,

     பண்(பு)உடைமை என்னும் வழக்கு.

        பண்புஉடைமை என்னும் வழக்கம்,

        எளிமையாய்ப் பழகுவதால் வரும்.

 

  1. அன்(பு)உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், இவ்இரண்டும்,

     பண்(பு)உடைமை என்னும் வழக்கு.

        பண்பாளரின் இரண்டு சிறப்புகள்:

        அன்பும், உயர்குடிப் பிறப்பும்.

 

  1. உறுப்(பு)ஒத்தல், மக்கள்ஒப்(பு) அன்(று)ஆல்; வெறுத்தக்க

     பண்(பு)ஒத்தல், ஒப்ப(து)ஆம் ஒப்பு.

        உறுப்புக்களால் அல்ல; உயரிய

        பண்பால் ஒத்தாரே, நிறைமக்கள்.

 

  1. நயனொடு, நன்றி புரிந்த பயன்உடையார்,

    பண்புபா ராட்டும் உலகு.

        விருப்புடன் நன்மை செய்து,

        பயன்தருவார் பண்பு, பாராட்டப்படும்.

 

  1. நகைஉள்ளும், இன்னா(து) இகழ்ச்சி; பகைஉள்ளும்

     பண்(பு)உள பா(டு)அறிவார் மாட்டு.

        வேடிக்கை என்றாலும், இகழாதே;

        பகைவரையும், பண்பார் இகழார்.

 

 

  1. பண்(பு)உடையார்ப் பட்(டு)உண்(டு) உலகம்; அதுஇன்றேல்,

     மண்புக்கு மாய்வது மன்.

        பண்பாளிகளால் உலகம் உள்ளது;     

        இல்லை என்றால் அழிந்திருக்கும்.

 

  1. அரம்போலும் கூர்மையர் ஏனும், மரம்போல்வர்,

     மக்கள்பண்(பு) இல்லா தவர்.

        அரம்போல் கூர்அறிவார் ஆயினும்,

        மரம்போல்வார் மனிதம் இல்லார்.

 

  1. நண்(பு)ஆற்றார் ஆகி, நயம்இல செய்வார்க்கும்,

     பண்(பு)ஆற்றார் ஆதல் கடை.

        நட்புக் கொள்ளாது, பகைமை

        கொள்வாரொடும் பண்புடன் பழகு.

 

  1. நகல்வல்லர் அல்லார்க்கு, மாஇரு ஞாலம்,

     பகலும்,பால் பட்(டு)அன்(று) இருள்.

        சிரித்துப் பழகத் தெரியார்க்கு,

        பகலும் இருள்நிறை இரவுதான்.

 

  1. பண்(பு)இலான் பெற்ற பெரும்செல்வம், நல்பால்

      கலம்தீமை யால்திரிந்(து) அற்று.

        அழுக்குப் பாத்திரப்பால் கெடல்போல்,

        ஒழுக்குஇலான் செல்வமும் கெட்டு,விடும்.

 

பேரா.வெ.அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம்)