சைவ முன்னேற்றச் சங்கத்தின் தைப்பொங்கல் திருநாள்
அன்புடையீர், அருள்மிகு சிவகாமி அம்பாள் இணை சிதம்பரேசுவரர் ஆலயத்தில் சைவ முன்னேற்றச் சங்கத்தின் தைப்பொங்கல் திருநாள் தை 01, 2049 ஞாயிற்றுக்கிழமை 14.01.2018 மாலை 6.00 மணிமுதல் சிறப்பாக நடைபெறவுள்ளது. தமிழர் திருநாளை – உழவர் திருநாளை உற்சாகமாகக் கொண்டாட அனைவரையும் வரவேற்கிறோம். திருவாட்டி தயாளன் செயற்பொறுப்பர் சைவமுன்னேற்றக்கழகம், ஐக்கிய அரசு.
இலண்டன் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா
இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள்
இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை – சனவரி மாதம் 2-ஆம் நாள், தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்த இரீயூனியன் நாட்டைச் சார்ந்த தமிழன்பர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான் சாமுவேல் வரவேற்று அறிமுக உரை நடத்தினார். தமிழன்பர்களின் குழுத்தலைவரான அருட்திரு இயோ.நீலமேகம், இரீயூனியன் நாட்டில் தமிழ்மக்களிடம் தமிழ் இல்லா நிலை குறித்து விளக்கினார். அவர்களின் இப்போதைய மொழியான கிரயோல் மொழியில் குழுவினர் தங்களை அறிமுகப்படுத்தித் தெவிவித்த…
18 ஆவது பொங்கல் விழா, இலண்டன்
18 ஆவது பொங்கல் விழா, இலண்டன் தை 01, 2049 ஞாயிற்றுக்கிழமை சனவரி 14, 2018 பிற்பகல் 3.00 – இரவு 7.00 கீழைஆம் (East Ham) தமிழ்க்குமுகாயம்
2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் – யாழ்பாவாணன் வெளியீட்டகம் படத்திற்குக் கவிதை எழுதுங்கள் படத்தைப் பார்த்தீர்களா? நம்ம பிள்ளைகள் பூங்காக்கள் போய் காதலில் மூழ்கித் தங்களை மறந்து தவறு செய்த பின், செய்த தவற்றின் பரிசாகக் கிடைத்த குழந்தைகளைத் தெருவில் போட்டுச் செல்கின்றனர். இந்நிலை மேற்கத்தியப் பண்பாட்டில் இருந்து தமிழ் பண்பாட்டிற்குத் தொற்றிய நஞ்சு தான். இந்த நஞ்சுப் பழக்க வழக்கங்களைத் தமிழ் பண்பாட்டிலிருந்து விரட்ட வேண்டும். இந்தப் பணியை மேற்கொள்ளப் பாவலர்கள்/கவிஞர்கள்…
இரீயூனியன் பெருமக்களுக்குப் பாராட்டுவிழா – சென்னை
மார்கழி 24, 2048 திங்கள் 08.01.2018 அறிஞர் அண்ணா பொதுநல மன்றம், ஆர்க்காட்டுச்சாலை, வடபழனி பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் சார்பில் அருட்திரு இயோ.நீலமேகம் தலைமையில் வந்துள்ள இரீயூனியன் பெருமக்களுக்குப் பாராட்டுவிழா
சங்கக்காலத்தமிழரின் சடங்குகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
மார்கழி 20,21, 2048 * வியாழன், வெள்ளி * சனவரி 4,5, 2018 தமிழ் உயராய்வு மையம் திரு சேவுகன் அண்ணாமலை கல்லூரி மலேசியா தமிழ் இலக்கியக் கழகம் மலேசியா இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் “சங்கக்காலத்தமிழரின் சடங்குகள்”
மோடி அரசின் முத்தலாக்கு தடைச் சட்டக் கண்டனப் பொதுக்கூட்டம்,குவைத்து
குவைத்து தமிழ் அமைப்புகள் & அரசியல் கட்சிகள் பங்கேங்கும் மோடி அரசின் முத்தலாக்கு தடைச் சட்டக் கண்டனப் பொதுக்கூட்டம் நாள் & நேரம் : மார்கழி 20, 2048 04.01.2018 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல்… இடம்: கு.த.ச.(K-TIC) தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்து இந்திய இறையாண்மையைக் காக்க, வேற்றுமையில் ஒற்றுமையைப் பேண, அநீதிக்கான எதிர்ப்பைப் பதிவு செய்ய குவைத்து வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இதையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு அலைகடலெனத் திரண்டு வருக! தேசம் காப்போம்! நேசம் வளர்ப்போம்!!…
இரீயூனியன் நாட்டுத் தமிழர்களுடன் சந்திப்பும் கலந்துரையாடலும், சென்னை
பேரன்புடையீர், வணக்கம். வரும் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை சனவரி மாதம் 2-ஆம் நாள், சென்னை இரீயூனியன் நாட்டைச் சார்ந்த 10 தமிழர்கள் தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்து இரீயூனியன்-தமிழக நல்லுறவு குறித்து ஆசியவியல் நிறுவன வளாகத்தில் தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளனர். இச்சந்திப்பும் கலந்துரையாடலும் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும். இதில் பங்கேற்றுத் தமிழக-இரீயூனியன் நல்லுறவு வலுப்பெறவும், தமிழர் பண்பாடு இரீயூனியன் நாட்டில் வளம்பெறவும் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் மிக்க நன்றி….
வாசிப்புப் போட்டி – 2017 தேர்வு மதிப்பீடு
வாசிப்புப் போட்டி – 2017 தேர்வு மதிப்பீடு வலைவழி வாசிப்புப் போட்டி என்பது இலகுவானதல்ல. நூல்களை வாசித்து வினாக்களுக்கான விடைகளை அந்நூல்களில் இருந்து பொறுக்கி எமக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த முயற்சியில் இறங்குவோர், வாசிப்பைச் சரியாக மேற்கொள்ள வேண்டும். உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, வாசிப்பு மாதமாகிய ஐப்பசி (Oct) இல் அறிவித்து நடாத்தப்பட்ட ‘வாசிப்புப் போட்டி – 2017‘ இற்கான முடிவுரையை இப்பகுதியில் தருகின்றேன். இப்போட்டியில் நிறைவடையத்தக்க வகையில் விடை கிடைக்காத போதும் (அதாவது, நூல்களை வாசித்து நூலாசிரியர்களின்…
2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்னூல் வெளியீட்டுப் பணி ஊடாக “மதுவை விரட்டினால் கோடி நன்மை!” என்ற மின்னூல் வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/12/2017 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம். ஏற்கெனவே, இம்மின்நூல் வெளியீடுபற்றிக் கீழ்வரும் இணைப்புகளில் அறிவித்துவிட்டோம். கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. https://www.facebook.com/yarlpavanan/posts/1780289532013328 https://yarlpavanan.wordpress.com/2017/12/02/உங்களுக்குக்-கவிதை-எழுத/ http://www.ypvnpubs.com/2017/12/blog-post.html மதுவினால் உடல் நலம், மக்கள் நலம், நாட்டு நலம் கெடுமென்றும் மதுவினால் சீர்கெட்ட நிலைமைகளைச்…
இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !
இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புதிய இடைக்கால அரசமைப்புச் சட்ட அறிக்கையில் இடம்பெறும் ‘பிரிக்கப்படாத, பிரிக்கவொண்ணாத ஒரே நாடு’ என்ற சொல்லாட்சியையும், முறையீடு எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்து எழுநூற்று ஐந்து (1,705) சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகளாவிய முறையில் ஒருங்கிணைந்த 1,705 சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டை கடந்த திசம்பர் 8 ஆம் நாளன்று ஐ.நாவில் அளித்துள்ளனர். இது…
