ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3   ஒரே பொருளைச் சுட்டும் பல்வேறு சொற்களும்  பல்வேறு பொருள்களை உணர்த்தும் ஒரே சொல்லும் உள்ள நிலைமை அனைத்து மொழிகளிலும் காணப்பெறும் இயல்புதான்.  இந்நிலைமையைத் தமிழிலும் மிகுதியாய்க்; காண்கிறோம். இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருளை உணரும் நிலை வெளிப்படையாய் இருப்பின் குறையொன்றும்  இல்லைதான். ஆனால், அதே நேரத்தில் பொருளை உணரும் இடர்ப்பாடு இருப்பின் சொற்களஞ்சியத்தை வளப்படுத்த வேண்டியது இன்றியமையாதது அல்லவா?   ஒரு சொல்-பல்பொருள் என்ற நிலைமை கலைச்சொற்களைப் பொருத்தவரை தவிர்க்கப்பட்டாக  வேண்டும். கலைச்சொற்கள் குழப்பமின்றித்…

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா : இணையவழி உரையாடல் காணுரைகள்

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா   இணையவழி உரையாடல் காணுரைகள்   மலேசியாவின் இரண்டாம் பெரிய நகராமான பேராக்கில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உலகத்தமிழிணையமாநாடு  ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. இது குறித்துச் சென்னையில் ஆடி 21, 2048 ஞாயிறு  ஆக.06, 2017  அன்று மாலை நடைபெற்ற இணைய வழிஉரையாடல் பதிவுகள்.   உரையாளர் மரு.மணவை மு.செம்மல் கருத்துரை https://www.facebook.com/DrSemmal/videos/1488288084570609/   https://www.facebook.com/DrSemmal/videos/1488288084570609/ நெறியாளர் இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துரை https://www.facebook.com/DrSemmal/videos/1488290941236990/   https://www.facebook.com/DrSemmal/videos/1488290941236990/…

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல்

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல் நாள் : ஆடி 21, 2048 ஞாயிறு  ஆக.06, 2017 மாலை 6.00 – 7.30 இடம் : வெள்ளை மாளிகை, மணவை முசுதபா நினைவகம் ஏஈ 103. 6 ஆவது தெரு, பத்தாவது முதன்மைச்சாலை, அண்ணாநகர் மேற்கு, சென்னை 600 040 நேரலை/ உரையாடலில் பங்கேற்க இணைய  முகவரி : https://www.fb.com/DrSemmal பதிவான காணொளிகளைக் காண : https://www.youtube.com/user/naalayatamil இணைய உரையாடலில் பங்கேற்க அழைக்கிறோம்! http://www.wtic.my/

விட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி

  விட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி [படங்களை அழுத்தின் சற்றுப்பெரிய அளவில் காணலாம்.]

சங்க இலக்கியம் பாடப்பட்ட காலமும் தொகுக்கப்பட்ட காலமும் வெவ்வேறு! – பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்

சங்க இலக்கியம் பாடப்பட்ட காலமும் தொகுக்கப்பட்ட காலமும் வெவ்வேறு! – பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்

உதவி கேட்கும் முன்னாள் போராளி அன்பரசன் என்னும் கிருபாகரன் செல்லத்துரை

அன்புடையீர் வணக்கம்.  அன்பரசன் என்னும் முன்னாள் போராளி எழுதியுள்ள  மடலைப் படிக்கவும்.  இவர் 2016 மார்ச்சு மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்தமாதிரி சென்ற கிழமை இவர் ஒரு   நேர்ச்சியில்(வாகன விபத்தில்) சிக்கி யாழ்ப்பாணம் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  மிதிவண்டியில் சென்றுகொண்டு இருந்த இவரை எதிரே வந்த  ஊர்தி  மோதியுள்ளது. சென்ற சனிக்கிழமை அவருக்கு அறுவை  மருத்துவம் செய்யப்பட்டது. எனக்குக் காலும் கையும் இருக்கிறது நான் உழைத்து முன்னேறுவேன் எனச் சொல்லிவந்த அவருக்கு இந்த நேர்ச்சி/விபத்து இடியாக இறங்கியுள்ளது….

துபாயில் சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா

துபாயில்  சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா துபாய் : துபாயில் பணிபுரிந்து வரும் திருமதி.  சோபியாவின் கவிதை நூல் தொகுப்பு ‘ கனலி’ ஆனி 15, 2048 /  29.06.2017 வியாழக்கிழமை மாலை துபாய் வசந்த பவன் உணவகத்தில் வெளியிடப்பட்டது. ஓசூரைச் சேர்ந்த இவர்  சார்சாவில் தமிழ்  ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். துபாய் அல்நாதா வசந்தபவனில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காப்பியக்கோ.திரு சின்னா சர்ப்புதீன் கலந்து கொண்டார். அபுதாபியைச் சேர்ந்த எழுத்தாளர்  (இ)யூசுப்பு தலைமையேற்றார். திருமதி. செசிலாபானு, ஆசிப் மீரான் ,…

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா: பேராளர் கட்டணமும் புரவலர் நன்கொடையும்

இணையத்தமிழார்வலர்களுக்கு, வணக்கம்.      மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் உலகத்தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (கல்வியியல், தொழில் நுட்பப்பிரிவு) உலகத் தமிழ் இணைய மாநாட்டை ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய மூன்றுநாள் கோலாலம்பூரில் நடத்த வுள்ளது. தமிழ்க்கணிமைஆய்வு தொடர்பாகக் கருத்தரங்கம், பயிலரங்கங்கள் நடைபெறவுள்ளன.    தமிழறிஞர்கள், தமிழ்க் கணிமை வல்லுநர்கள், பேராசிரியர்கள்,ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவரும் உலகளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.   கட்டுரை வர  வேண்டிய நாள் : ஆனி 31, 2048…

புள்ளிகளும் கோலங்களும் ! – மெல்பேன் செயராசர்

புள்ளிகளும் கோலங்களும் ! வெள்ளை மனத்தினிலே கறுத்தப்புள்ளி வந்துவிட்டால் வினையாவும் குடிபுகுந்து விட்டதென  நாம்நினைப்போம் புள்ளியினால் கோலங்கள் மாறுவதைக் கண்டுவிட்டால் நல்லபுள்ளி வருவதற்கு நாம்முயன்று நிற்போம் ! புள்ளியினால் கோலங்கள் புறப்பட்டு வந்துநிற்கும் புள்ளியது பிழைத்துவிடின் அலங்கோலம் ஆகிவிடும் புள்ளியினை நாமென்றும் எள்ளிநகை யாடிவிடின் நல்லகோல மெல்லாமே நரகலோக மாகிவிடும் ! நல்லவராய் இருப்போரை நல்லபுள்ளி எனவழைப்போம் வல்லவராய் இருப்போரும் நல்லபுள்ளி ஆகிடுவார் சொல்லவல்ல விசயமெல்லாம் நல்லபுள்ளி பெற்றுவிடும் நல்லபுள்ளி நிறைந்துவிடின் நன்மையங்கே குவிந்துவிடும் ! எழுத்துக்குப் புள்ளிவைத்தால் மெய்யெழுத்தாய் மிளிர்ந்துவிடும் இழுக்குடைய செயல்செய்தால்…

சுவிசு நாட்டில் கலை இலக்கியப் பெருவிழா

சுவிட்சர்லாந்தில் பெரன் (Bern) நகரில் இனிய நந்தவனம் நடத்தும் கலை இலக்கியப்  பெருவிழா புரட்டாசி 08-15, 2048 / செட்டம்பர் 24 – அத்தோபர் 01, 2017 அன்புடன் இனிய நந்தவனம்

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா:ஆய்வுச் சுருக்க நாள் நீட்டிப்பு

  உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு, மலேசியா உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாளில் நடைபெற உள்ள உலகத்தமிழ் இணைய மாநாட்டிற்கான ஆய்வுச் சுருக்கம் அனுப்பும் இறுதி நாள்  ஆனி 13, 2048 /30  சூன் 30, 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளோர்  விரைவாக அனுப்ப வேண்டப்படுகின்றனர். கட்டுரை வரப் பெற்ற 3 நாளில் ஏற்பும் அறிவிக்கப்பெறும். முழுமையான கட்டுரை வர  வேண்டிய நாள் :…