மொழிப்போர் வரலாறு அறிவோம்! -15 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2 : தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்! -15 இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 3 மொழிப்போர் என்னும் பொழுது இந்தித்திணிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் மட்டும் பார்த்தால் போதாது. இதற்குக் காரணமான இந்தித் திணிப்புச் சூழல்களையும் நாம் பார்க்க வேண்டும். எனவே, முந்தைய கட்டுரை தொடர்பில் சில செய்திகளைப் பார்ப்போம். இவை முந்தைய கட்டுரையிலேயே இடம் பெற வேண்டியவைதாம். எனினும் இடம் இன்மை கருதி…

வெருளி நோய்கள் 1566-1570: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1561-1565 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1566-1570 ஒளிப்படிப் பொறி(Photocopier) குறித்த வரம்பற்ற பேரச்சம் படிப் பொறி வெருளி.சில வெருளிகளுக்குக் காரணம் கூறினாலும் காரணமின்றி வரும் பேரச்சம்தானே வெருளி. ஆதலின் இதற்கான பொதுவான காரணத்தைக் கூற முடியாது. இருப்பினும் படிப்பொறி மீதான பேரச்சத்திற்கு ஒருவர் கூறிய காரணம், சிறு அகவையில் அதில் வரும் ஒளி கண்களைக் குருடாக்கிவிடும் என்று அஞ்சியதாகவும் வளர்நத பின் அதற்கான வாய்ப்பு இல்லை என உணர்ந்தாலும் பேரச்சம் உள்ளத்தில் படிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.செராக்கசு(Xerox) என்பது தகவல் மேற்படுத்தும்…

வெருளி நோய்கள் 1561-1565 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1556-1560 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1561-1565 படப் பொறி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படப் பொறி வெருளி.சிலருக்கு ஒளிப்படம் எடுத்தால் வாழ்நாள் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒளிப்படம் பார்ப்பதவர்கள் அழகற்று இருப்பதாகவும் முதுமை தெரிவதாகவும் உணர்வார்கள் என்றெல்லாம் எண்ணியும் ஒளிப்படம் குறித்த பேரச்சம் சிலருக்கு இருக்கும். இத்தகையோர் ஒளிப்படம் எடுக்கும் படப்பொறி மீது தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர். படம் எடுக்கப் பயன்படும் ஒளிவீச்சாலும் படப்பொறி மீது அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.00 படர்வு ஆட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படர்வாட்ட…

வெருளி நோய்கள் 1556-1560 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1551-1555 : தொடர்ச்சி) 1556. பச்சைவெருளி – Chlorophobia / Prasinophobia பச்சை நிறம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பச்சை வெருளி. பச்சைப்பாம்பு கண்டு அஞ்சிப் பின்னர் பச்சை நிறம் என்றாலே அஞ்சுவோரும் உள்ளனர். chloros என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மஞ்சள் பச்சை நிறம். prasinos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பச்சை நிறம். சிலர் பாசிகம்(குளோரின்-chlorine) மீதான அளவுகடந்த பேரச்சம். எனவே, பாசிக வெருளி என்பதையும் Chlorophobia என்கின்றனர். 00 1557. பஞ்சுருண்டை வெருளி – Sidonglobophobia /…

நாலடி நல்கும் நன்னெறி 31. இருக்கும்போதே கொடுத்திடு! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 30 : பண்பாளர் நட்பு இருப்போர் பிறப்பை வெறுப்பதில்லை- தொடர்ச்சி) முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புளபின்னரும் பீடழிக்கும் நோயுள; – கொன்னேபரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. நாலடியார், பாடல் 92, அறத்துப்பால், ஈகை கருத்து: நம் எதிரே இறப்பு, மூப்பு, பிணி ஆகிய மூன்றும் காத்திருக்கின்றன. எனவே, கையில் செல்வம் அல்லது பொருள் அல்லது உணவு உள்ளபோதே, அதை மறைத்து வைக்காமல் பிறருக்குக் கொடுத்து  வாழ வேண்டும்.   பதவுரை கவிஞர் மாயவநாதன் “தனக்கு தனக்கு என்று…

வெருளி நோய்கள் 1551-1555 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1546-1550 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1551-1555 செய்திகளை நண்பர்களிடம் பகிர்வது தொடர்பான பேரச்சம் பகிர் வெருளி.நண்பர்களிடம் குறிப்பாகத் தோழிகளிடம் தம்மைப்பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வது குறித்துப் பெரிதும் கவலைப்படுவர்.சில செய்திகள் மூலம் தவறாக எடைபோடுவர் என்ற அச்சமும் சில செய்திகள் தொடர்பான தாழ்வு மனப்பான்மையும் வருவது இயற்கை.ami என்னும் பிரெஞ்சுச்சொல்லிற்கு நண்பர் எனப்பொருள்.00 பகு எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பகு எண் வெருளி.எண் வெருளி(Arithmophobia or Numerophobia), கணக்கு வெருளி (Mathemaphobia/Mathemophobia) உள்ளவர்களுக்குப் பகு எண் வெருளி வரும்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 27. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -3: இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 26. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -2: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 27. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -3 இலக்கணக் குறிப்புகளையும் சொல்லாக்கங்களையும் தெரிவிக்கும் பாதையில் இனிச் செல்லலாம் என எண்ணினேன். ஆனால், நாளும் படிக்கின்ற செய்திகளைப் பார்க்கும் பொழுது உள்ளம் நாளும் வேதனை யுறுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டில் தமிழே இல்லாத நிலை விரைவில் வந்து விடும் என்று கவலையாக உள்ளது. ஆங்கிலவழிச் சிந்தனையாலும் ஆங்கிலவழியாகத் தமிழ்த் தட்டச்சை…

வெருளி நோய்கள் 1546-1550 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1541-1545 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1546-1550 பகடை(dice) குறித்த வரம்பற்ற பேரச்சம் பகடை வெருளி.சூதிற்கு எதிராகத் திருவள்ளுவர் திருக்குறளில் சூது என்று ஓர் அதிகாரமே படைத்துள்ளார்.(அதிகாரம் 94).உருட்டப்படுகின்ற பகடையால் பொருளை வைத்துச் சூதாடும் பொழுது பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் புறத்தே செல்லும என்கிறார் திருவள்ளுவர்.உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்போஒய்ப் புறமே படும்(குறள் 933).என்பது அக்குறள்.நளவெண்பா, மகாபாரதக் கதைகளில் மன்னர்களே சூதால் யாவற்றையும் இழப்பது கூறப்பட்டுள்ளது.எனவே, பகடை யாடுவது குறித்து அஞ்சி விலக்குவது தேவையான ஒன்று. ஆனால், பகடையை…

சட்டச் சொற்கள் விளக்கம் 1061-1065: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1056-1060: தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1061-1065 1061. Appropriate levels   தக்க நிலைகள் பொருத்தமான நிலைகள் உரிய நிலைகள் சட்டச் சொல்லாடலில், “பொருத்தமான நிலைகள்” (appropriate levels) என்றால் பொதுவாகச் சட்ட முறையிலான தரநிலைகள் அல்லது அதிகார வரம்புப் படிநிலைகளை அஃதாவது வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களின் நிலைகளைக் குறிக்கிறது. சட்ட நடைமுறைகளைச் சரியாகக் கையாள்வதற்கு, ஒரு வழக்கு எந்த நிலையில் உள்ளது என்பதையும், அதில் எதை மெய்ப்பிக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்வது மிக இன்றியமையாததாகும். 1062. Appropriate…

வெருளி நோய்கள் 1541-1545 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1536-1540 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1541-1545 நோயர் வண்டி(ambulance) தொடர்பான வரம்பற்ற பேரச்சம் நோயர் வண்டி வெருளி.ambulance என்றால், இடம்விட்டு இடம் செல்லுதல், இடம் விட்டு இடம் பெயர்தல், நடத்தல், நடப்பதற்குப் பயன்படுத்துகிற எனப் பொருள்கள். அவசர நேர்வில் நோயாளிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு – அஃதாவது இல்லத்திலிருந்து அல்லது இருக்குமிடத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதால் நோயர் ஊர்தி எனப்பெற்றது. நாம் நேர் பொருளாகப் பாராமல் பயன்பாட்டு அடிப்படையில் அவசர மருத்துவ ஏந்து(வசதியு)ம் உடைய நோயாளிகளுக்கான ஊர்தியான இதனை நோயர் ஊர்தி…

வெருளி நோய்கள் 1531-1535 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1526-1530 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1531-1535 வியாழனின் உட்புற உலவியான நெருப்பு உலவி(Io)தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெருப்புலவி வெருளி.Io என்பது வியாழனின் மூன்றாவது பெரிய உலவி(moon)யாகும். மேலும் இது நமது சூரிய மண்டலத்திலேயே மிகவும் எரிமலைச் செயல்பாடு மிக்க கோளாகும். எனவே நெருப்புபோல் மிகுதியாக வெப்பமாக இருக்கும்.வியாழனின் ஆதிக்கத்தால் உடலில் கொழுப்பு, சருக்கரை அளவு, உடல் எடை அதிகரிக்கும்; ஞாபக மறதியும் குழப்பமும் மனக்கவலையும் ஏற்படும் எனக் கணியன்கள்(சோதிடர்கள்) கூறுகின்றனர். இதை நம்புவோர் வியானின் உலவி குறித்தும் பேரச்சம் கொள்கின்றனர்.00…

வெருளி நோய்கள் 1526-1530 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1521-1525  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1526-1530 நெடும்பாசி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடும்பாசி வெருளி.நெடும்பாசிகள் அழுகும்போது, நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன.இந்த வாயுக்களை மூச்சு இழுத்து விடுவதால் கடுமையான தலைவலி, குமட்டல், மூச்சிரைப்பு முதலியன ஏற்படும் எனப் பேரச்சம் கொண்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.00 நீண்ட ஒடுங்கிய வெள்ளை கருப்பு இறகுகளை உடைய ஒரு வகை நீள்வால் பறவையைப்(magpie) பார்த்தால் தீயது நிகழும் என்ற நம்பிக்கையில் அப்பறவையைக் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வது நெடுவாலி வெருளி.இலத்தீனில் ‘pica’ என்னும் சொல் மேகுபை(magpie) என்னும் பறவையைக்…