வெருளி அறிவியல் 34 – 37 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல்  –  31-33 தொடர்ச்சி) வெருளி அறிவியல் 34 – 37  34. ஆண்வெருளி– Androphobia/Arrhenphobia/Hominophobia ஆண்களைக் கண்டால் ஏற்படும் அச்சம் ஆண் வெருளி. ஆண்களைக் கண்டு அஞ்சுவது குறித்துக் கூறுவதால் இது பெண்களுக்கு வரும் எனப் புரிந்து கொள்ளலாம். ஆடவர் தங்களை அடக்கி ஒடுக்குவார்கள், துன்பம் இழைப்பார்கள், தவறாக  நடந்து கொள்வார்கள், தவறான முறையில் பழகி அவப்பெயர் ஏற்படுத்துவார்கள் என்று பல வகைகளில் ஆண்கள் மீது வரும் பேரச்சம். இத்தகையோர் ஆண்கள் மீதுள்ள அச்சத்தால் பொது வண்டிகளில் ஏறாமல் பெண்கள் வண்டிகளில்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 (குறள்நெறி)  (ஆக்கம் சேரவேண்டுமெனில்,) அழுக்காறு கொள்ளாதே! (உயர்வு வேண்டுமெனில்,) ஒழுக்கம் இல்லாதிராதே! (இழிவின் துன்பம் அறிந்து) ஒழுக்கம் தவறாதே! ஒழுக்கத்தால் மேன்மையுறு! ஒழுக்கந்தவறிப் பழி அடையாதே! (நன்றே தரும்) நல்லொழுக்கம் பேணு! (துன்பமே விளைவிக்கும்) தீயொழுக்கம் நீக்கு! தவறியும் இழிந்தன பேசாதே! உலகத்தாரோடு இணங்கி வாழ்! பிறர் மனைவியை விரும்பாதே! (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160]

வெருளி அறிவியல் 31 – 33 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல்  முந்தைய பகுதி தொடர்ச்சி) வெருளி அறிவியல் 31 – 33   31.ஆடை வெருளி – Vestiphobia ஆடை குறித்த அளவுகடந்த பேரச்சம் ஆடை வெருளி. குழந்தைப்பருவத்தில் உடை உடுத்துவது குறித்த எரிச்சல் விருப்பமின்மை முதலியன வளர்ந்து இத்தகைய பேரச்சத்தை உருவாக்குவதும் உண்டு. படைத்துறை முதலான சீருடைத் துறைகளில் பணியாற்றுவோருக்கு ஆடை வெருளி உள்ளது. தாய் அல்லது தந்தைக்கு ஆடை வெருளி இருந்தால் பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். புதுவகை ஆடைகளைக் கண்டு எரிச்சலுற்று ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர். vestis…

தேசியக் கல்வித் திட்டம் 2019 – புதிய கல்லறையில் பழைய பெட்டி : இலக்குவனார் திருவள்ளுவன்

தேசியக் கல்வித் திட்டம் 2019 – புதிய கல்லறையில் பழைய பெட்டி மனிதனை மனிதனாக வாழச் செய்வது கல்வி. கல்வி அவரவர் பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப அமைந்தால்தான் கல்வியில் சிறந்து சிறந்த மனிதனாக வாழ முடியும். இந்தியா பல தேசிய இன வழி மாநிலங்கள் இணைந்த ஆட்சிப் பரப்பாக உள்ளது. எனவே, கல்வியும் தேசிய இனங்களுக்கேற்ப மாறி அமையும். ஆனால், ஒரே நாடு, ஒரே மொழி என்ற சட்டத்திற்குள் கல்வியை மாற்ற முயலும் பொழுது கல்வி முறை சீரழிகிறது. மனிதக் குலமும் நலங்குன்றுகிறது. மத்திய…

கருத்துக் கதிர்கள் 06-08 – இலக்குவனார் திருவள்ளுவன் [06. திருமாவளவன் அவை நடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா? 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!]

கருத்துக் கதிர்கள் 06-08 : [06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா? 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!]  06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும்.  நாடாளுமன்றத்தில் அவைத் தலைவரும் துணைத் தலைவரும் இல்லாத நேரங்களில் அவையை நடத்துவதற்காக அவை நடத்துநர் பட்டிப்பு (Panel of Chairpersons) உருவாக்குவர். பதின்மருக்குக் குறையாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவர். அவைத்தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவி ஒழிவிடமானால், இவர்கள் அந்த இடத்திற்கு…

அ.ம.மு.க.வினர் தளர வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

அ.ம.மு.க.வினர் தளர வேண்டா!   பதவி பறிக்கப்பட்டவர்களில் சிலராவது வெற்றி காண்பர். கணிசமான வாக்குகளைப் பெற்று  கருதத்தக்க இடத்தைப் பெறலாம் என எண்ணிய தினகரனின் அ.ம.மு.க. பாதாளத்தில் விழுந்துள்ளது. ஒரு தொகுதியில்கூடப் பிணைத்தொகையைத் திரும்பப் பெறும் வகையில் வாக்குகளைப் பெறவில்லை. சில இடங்களில் நான்காவது இடமும் ஐந்தாவது இடமும் பெற்றுள்ளது. இந்தத் தோல்வி அடுத்தடுத்த சூழ்ச்சி வலைகளால் உருவானது. என்றாலும் சூழ்ச்சியையும் வெல்வதுதானே திறமை. இனி, சூழ்ச்சிகளை வெல்லும் வகையில் திறமாகச் செயல்பட்டால் கட்சி வளரும். “வீழ்வது இயற்கை. எழுவதே வாழ்க்கை” என்று தன்னம்பிக்கை…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்  131-140 (குறள்நெறி)  (செல்வர்க்கே செல்வமான) பணிவைக் கடைப்பிடி! (ஆமைபோல்) ஐம்பொறி அடக்கு! நாவைக் காக்காது துன்பத்தைச் சேர்த்துக் கொள்ளாதே! (நன்றெல்லாம் நீக்கும்) தீச்சொல் ஒன்றும் சொல்லாதே! நாவினால் பிறரைச் சுடாதே! (அறவாழ்வு தேடி வர,) அடக்கமுடன் வாழ்! நல்லொழுக்கத்தை உயிரினும் மேலாய் மதி! ஒழுக்கத்தை எல்லா இடத்திலும் துணை வரச் செய்! ஒழுக்கமுடைமையை உயர் குடிமையாகக் கருது! ஒழுக்கம் தவறாதே! (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150]

கருத்துக் கதிர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்[1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி. 2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3. மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும். 4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.]

கருத்துக் கதிர்கள் : 1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி.  2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3.  மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும்.  4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.   தமிழிசைக்கு அமைச்சர் பதவி : தேர்தலில் தோற்றால் அமைச்சர் அல்லது ஆளுநர் ஆக்குவது ஆளும் கட்சிகளின் மரபுதான். அந்த வகையில் பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவி மரு. தமிழிசை செளந்தரராசனை அமைச்சராக்குவது பா.ச.க.விற்கு நல்லது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பா.ச.க.வின் தலைவராகத் தமிழிசை அமர்த்தப்படவேண்டும் என எழுதியிருந்தோம். அப்பொழுது எச்சு.இராசா…

தேர்தல்: கருதியனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல்: கருதியனவும் நிகழ்ந்தனவும் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த பொழுது நான் புறநகர் ஒன்றில் இருந்தேன். என் அலைபேசியில் இணைய இணைப்பு சரியாகக் கிடைக்கவில்லை. எனவே, முடிவுகளைப் பார்க்க இயலவில்லை. ஆனால், அன்பர்கள் சிலர் அடுத்தடுத்து ஒரே மாதிரி பேசினர். நான் அவர்களுக்கு ஒரே மாதிரிதான் மறுமொழி உரைத்தேன். அவர்கள், “நீங்கள் தேர்தல்பற்றியும் “பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது!” என்றும் எழுதியவை மிகச் சரி. ஆனால், பா.ச.க. அல்லவா பெரும்பான்மை பெற்று வருகிறது” என்றனர். நான் அதற்குப் “பா.ச.க. கட்சி அளவில் பெரும்பான்மை…

மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்! மாநிலக்கட்சிகள் கூட்டமைப்பு அமைத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்!   மாநிலக்கட்சிகள் கூட்டமைப்பு அமைத்திடுக! தமிழ்நாடு-புதுவையில் ஓரு தொகுதி நீங்கலாக அனைத்திலும் தி.மு.க. கூட்டணியை வாகை சூட வைத்துள்ளார் மு.க.தாலின்.  அவரது தனித்தன்மையை ஏற்க வேண்டுமே தவிர, அவரின் தந்தை கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். எனினும் அவ்வாறு ஒப்பிட்டுப் பேசுநருக்கும் விடையிறுக்கும் முகமாக வெற்றிக் கனிகளைப் பறித்துள்ளார். சிறப்பான வெற்றிக்கு அடிததளமாகவும் அரணாகவும் இருந்த மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்.  தலைமைய(மைச்ச)ர் பதவி ஆசையில் கூட்டணிக்கு உடன்படாத மே.வங்க, உ.பி.  முதலான வட மாநிலத் தலைவர்கள் மு.க.தாலின் வழியைப்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 (குறள்நெறி)  நடுவுநிலை தவறிக் கேடு அடையாதே! நடுவுநிலையாளர் தாழ்வை இழிவாக எண்ணாதே! (சமன்கோல் போல்) ஒரு பக்கம் சாயாமையை அணியாகக் கொள்! சொல்தவறாமையை மனம் கோணாமையுடன் இணை!  நடுவுநிலைமை வாணிகமே மேற்கொள்! அடக்கத்தால் உயர்வு கொள்! அடங்காது சிறுமை கொள்ளாதே! அடக்கத்தைக் காத்திடுக. நல்வழியிலான அடக்கம்  கொள்! மலையிலும் உயர்வான அடக்கம்  கொண்டு வாழ்! (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140]

நரேந்திர(மோடி)க்குப் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

நரேந்திர(மோடி)க்குப் பாராட்டுகள்! எண்ணிய இலக்கை அடைந்து வெற்றி காண வாழ்த்த வேண்டும். இலக்கை அடைந்து விட்டார் என்றால்  – வெற்றி கண்டுவிட்டார் என்றால்  – பாராட்ட வேண்டும். அந்த வகையில் இரண்டாம் முறையாகத் தலைமை யமைச்சர் பொறுப்பேற்கும் வகையில் வெற்றி கண்டுள்ள நரேந்திர(மோடி)க்குப் பாராட்டுகள்! இலக்கு மட்டுமல்ல, இலக்கை அடையும் வழியும் நேர்மையானதாக – அறவழிப்பட்டதாக – இருக்க வேண்டும் என்பது தமிழர் நெறி. “எந்த வழியில் சென்றேனும் இலக்கை அடை” என்பது ஆரிய நெறி. இன்றைய தேர்தல் நெறி என்பது இரண்டாம் வகையைச்…