கலைச்சொல் தெளிவோம்! 123. தேரை வெருளி-Bufonophobia
தேரை(10) என்னும் உயிரினமும் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். தேரைஅல்லது தேரையினம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் தேரை வெருளி-Bufonophobia – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள் : Haptephobia, Aphephobia & Chiraptophobia
கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள் தீண்ட(3), தீண்டல்(1), தீண்டலின்(4), தீண்டவர்(1), தீண்டற்கு(1), தீண்டா(1), தீண்டாது(1), தீண்டி(21), தீண்டிய(3), தீண்டு(1)தீண்டு்ம் (1), தொடு(10), தொடுதல்(2), எனப் பல சொற்கள் தொடுதலைக்குறிக்கும் வகையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. பிறரால் தொடப்படுவது குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் தீண்டுகை வெருளி-Haptophobia/Haphephobia/ Haptephobia அல்லது தொடுகை வெருளி–Aphephobia/ Aphenphosmphobia அல்லது தீண்டல் வெருளி-Chiraptophobia எனப்பெறும். [தீண்டு > தீண்டுகை+ வெருளி; தொடு> தொடுகை+ வெருளி] – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் தெளிவோம்! 114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள்
கலைச்சொல் 114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள் எமி யேந்துணிந்த வேமஞ்சா லருவினை (குறிஞ்சிப். 32). எமியம் (8), எமியேம்(1), எமியேன்(1), தமி (3) தமித்தது(1), தமிய(3), தமியம்(2), தமியர்(11), தமியள்(6), தமியன்(5), தமியார் (1), தமியென்(1), தமியேம்(1), தமியேன்(1), தமியை(4), தமியோர்(3), தமியோன்(1), தனி(27), தனித்தலை(1), தனித்து(4), தனித்தனி(1), தனிப்போர்(1), தனிமை(3), தனியவர்(1), தனியன்(2), தனியே(3), தனியை(2), தனியோர்(2) ஆகிய சொற்கள் தனி என்னும் அடிப்படையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. தனிமையினால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம். தனியர் வெருளி-Anuptaphobia எமிய வெருளி- Eremo…
கலைச்சொல் தெளிவோம்! 113. தற்பாலுறவு வெருளி-Homophobia
கலைச்சொல் 113. தற்பாலுறவு வெருளி-Homophobia தன் (319), தன்முன் (1), தனக்கு(14), ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பெற்றுள்ளன. பால் என்னும் சொல் 152 இடங்களில் பயன்படுத்தப் பெற்றிருந்தாலும், பசும்பால், கள்ளிப்பால் போன்ற பால் நீர்மங்களையும், பகுத்தல் என்னும் பொருளிலும்தான் கையாளப்பட்டுள்ளன. பகுத்தலைக் குறிக்கும் பால் என்பதன் அடிப்படையில்தான், ஆண்பால் முதலான ஐந்து பால்பாகுபாடுகளும் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, பால் என்பது பாலினத்தைக் குறிக்கும் நடைமுறை சங்கக் காலத்திலும் இருந்துள்ளது. உறவு என்னும் சொல் ஓரிடத்தில் கையாளப்பட்டுள்ளது. தன் கடைத் தோன்றி,…
கலைச்சொல் தெளிவோம்! 105. கீறல் வெருளி 106. குருதி வெருளி107. கூட்ட வெருளி 108. கோழி வெருளி
கலைச்சொல் 105.கீறல் வெருளி-Amychophobia பொதியில் முனிவன் புரை வரைக் கீறி (பரிபாடல் : 11.11) என வருகிறது. கீறு>கீறல்+வெருளி கீறல் வெருளி-Amychophobia கலைச்சொல் 106. குருதி வெருளி-Hemophobia/Hematophobia குருதி என்னும் சொல்லை 66 இடங்களிலும், குருதித்து(1), குருதிய(1) ஆகியசொற்களையும் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ளனர். குருதியைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய குருதி வெருளி-Hemophobia/Hematophobia கலைச்சொல் 107. கூட்ட வெருளி-Ochlophobia/Demophobia/Enochlophobia ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து (பதிற்றுப்பத்து : 72.12) மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய (பதிற்றுப்பத்து : 88.24)…
கலைச்சொல் தெளிவோம்! 109. சல வெருளி;110. சாவு வெருளி;111. சிவப்பு வெருளி;112. சூன்று வெருளி
கலைச்சொல் 109. சல வெருளி-Hydrophobia தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார் (பரிபாடல் : 90) சல சல என்று ஓடிச் செல்வதால் நீருக்குச் சலம் எனப் பெயர் வந்ததென்பர் அறிஞர்கள். சலத்தைக்கண்டு ஏற்படும் இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் சல வெருளி-Hydrophobia [சல வெருளி என்பது நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்குத் தண்ணீரைக் கண்டால் ஏற்படும் பேரச்சம். இதனைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி சல பய ரோகம் என்று குறிக்கிறது.] கலைச்சொல் 110. சாவு வெருளி -Necro Phobia/Thanato Phobia/ Thantophobia…
கலைச்சொல் தெளிவோம்! 101. கருதுபு வெருளி 102. கழுது வெருளி 103. காற்று வெருளி104. பறத்தல் வெருளி
101. கருதுபு வெருளி/கருத்து வெருளி-Allodoxaphobia/ Ideophobia கருதி (2), கருதிய (1), கருதியது (1), கருதியாய் (1), கருதின் (1), கருதுபு(1), கருதும் (2), கருதுவிர்(1) என்னும் சொற்களைச் சங்கப் பாடல்களில் பயன்படுத்தி உள்ளனர். எண்ணிக் கருதுவதால் வருவதுதானே கருத்து. சிலருக்குக் கருத்தைக் கேட்டாலேயே தேவையற்ற பேரச்சம் ஏற்படும். கருத்துகள், அறிவாராய்ச்சித் திறன் ஆகியவற்றால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் கருதுபு வெருளி/கருத்து வெருளி-Allodoxaphobia/ Ideophobia 102. கழுது வெருளி-Demonophobia/Daemonophobia கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக்காஞ்சி 633) கழுது புகவயர…
கலைச்சொல் தெளிவோம்! 99& 100. ஒளி வெருளி-Photo Phobia; ஒளிர்வு வெருளி-Photoaugliaphobia
99& 100. ஒளி வெருளி-Photo Phobia ஒளிர்வு வெருளி-Photoaugliaphobia ஒள் (118), ஒள்வானமலை(1), ஒளி(76), ஒளிக்கும் (6), ஒளித்த (6), ஒளித்தன்று (1), ஒளித்தாள் (1), ஒளித்தி (1), ஒளித்து (9), ஒளித்தென (1), ஒளித்தேன் (1), ஒளித்தோள் (2), ஒளிப்ப (3), ஒளிப்பன (1), ஒளிப்பார் (1), ஒளிப்பான் (1), ஒளிப்பின் (1), ஒளிப்பு (1), ஒளிப்பேன் (1), ஒளியர் (1), ஒளியவை (1), ஒளியோர் (1), ஒளிர் (13), ஒளிர்வரும் (3), ஒளிரும் (1), ஒளிவிட்ட (2), ஒளிறு (41),…
கலைச்சொல் தெளிவோம்! 98. இரைச்சல் வெருளி-Acousticophobia
98. இரைச்சல் வெருளி-Acousticophobia பரிபாடல் திரட்டு இரண்டாம் பாடலில் ஆரவார ஒலி இரை எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இரை என்னும் சொல்லடிப்படையில் பிறந்த சொல்லே இரைச்சல். இரைச்சலைக் கேட்கும் பொழுது ஏற்படும் பேரச்சம் இரைச்சல் வெருளி. இரைச்சல் வெருளி-Acousticophobia – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் தெளிவோம்! 97. ஒலி வெருளி-Phonophobia
97. ஒலி வெருளி-Phonophobia ஒலி (115), ஒலிக்குங்கால் (1), ஒலிக்குந்து 92), ஒலிக்கும் (19), ஒலித்த (1), ஒலித்தல் (1), ஒலித்தன்று (1), ஒலித்து (9), ஒலிந்த (2), ஒலிப்ப (29), ஒலிப்பர் (1), ஒலிபு (1), ஒலிய (1), ஒலியல் (5), ஒலிவரும் (9) என ஒலிபற்றிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. சான்றுக்குச் சில: ஓங்கு திரை ஒலி வெரீஇ, (பொருநர் ஆற்றுப்படை : 206) ஒலி முந்நீர் வரம்பு ஆக (மதுரைக் காஞ்சி : 2) கல்லென்று இரட்ட, புள்ளினம்…
கலைச்சொல் தெளிவோம்! 96. எண் வெருளி-Arithmophobia
கலைச்சொல் தெளிவோம்! 96. எண் வெருளி எண்(19), எண்கை(1), எண்பதம்(1), எண்பேரெச்சம் (2), எண்மர்(2) என எண்ணிக்கை தொடர்பான சொற்களைச் சங்கப்பாடல்களில் காணலாம். எண் என்பது எண்ணிக்கை பொருளுடன், எட்டு என்ற எண்ணிக்கை, எளிமை ஆகிய பொருள்களையும் தரும் வகையில் சொற்கள் உள்ளன. எண்களைப் பற்றியும் சிலர் அஞ்சுவர். இவ்வாறு எண் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம், எண் வெருளி-Arithmophobia – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் தெளிவோம்! 95. உருமு வெருளி -Brontophobia
95. உருமு வெருளி-Brontophobia உருமு பற்றிய சங்கஇலக்கிய அடிகள் வருமாறு: உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் (நற்றிணை : : 104:10) உருமுப் படு கனலின் இரு நிலத்து உறைக்கும் (ஐங்குறுநூறு :: 320:3) உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு, கொளை புணர்ந்து (பதிற்றுப்பத்து : : 30: 42) உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி, ( கலித்தொகை : : 45: 3) உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் (அகநானூறு : :92:11) இடி…