ஒளவையார்: 7 : ந. சஞ்சீவி
(ஒளவையார்: 6 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 16 2. ஒளவையார் (தொடர்ச்சி) அதிகமானோ, அவர்மேல் சென்று தன் அருமந்த நாட்டைக் காக்கும் வழி கருதி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவனாய் வாளாவிருந்தான். அதிகர் கோமான் வாளாவிருத்தல் கண்டு, ஒளவையார் அவன் நெஞ்சில் கனன்றெரியும் ஆண்மைத் தீப்பொங்கி எரியும் வண்ணம் வீர மொழிகள் பல புகன்றார் : “வெண்காந்தள் பூவும் காட்டு மல்லிகையும் மணம் பரப்பும் மலைச்சாரலில் வாழும் மறப்புலி சீறினால் அதை எதிர்க்கும் மான் கூட்டமும் உளதோ? காய்கதிர்ச் செல்வன்…
ஔவையார் 7 – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார். : 16 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 15. தொடர்ச்சி) 3. ஔவையார் (தொடர்ச்சி) இனித் தமிழ்நாவலர் சரிதைக்கண், ‘பொய்யாமொழியார் பாதியும் ஔஒளவையார் பாதியுமாகப் பாடிய வெண்பா’ என்னுந் தலைப்பின்கீழ், ‘தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனேமண்ணா வதுஞ்சோழ மண்டலமே–பெண்ணாவாளம்பர்ச் சிலம்பி யரவிந்தத் தாளணியுஞ்செம்பொற் சிலம்பே சிலம்பு.’ என ஒரு பாட்டுக் காணப்படுவது. இஃது அம்பர்நகரத்திருந்த சிலம்பி என்பாளொருத்தியைப் புகழ்ந்து பாடியதாகும். இதனான் இவ்வௌவையார் பொய்யாமொழியார் காலத்தும் இருந்தனரென்பது அறியப்படுவது. பொய்யாமொழியார் சங்கம் ஒழிந்த காலத்தை அடுத்திருந்த புலவரென்பது அவர்…
ஒளவையார்:6 : ந. சஞ்சீவி
(ஒளவையார்: 5 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 15 2. ஒளவையார் (தொடர்ச்சி) இத்தகைய தலை சிறந்த வள்ளியோன் வீரத்தின் பெருமையையும் நாம் நன்கு அறிவோமல்லமோ? எழுவரொடு முரணி அவன் போர் புரிந்து கண்ட வெற்றியும் கோவலூரை நூறி அவன் கொண்ட கொற்றமும் என்றென்றும் அவன் புகழ் பேசுவன அல்லவோ? அத்த கைய போர் அடு திருவினாகிய பொலந்தார் அஞ்சியின் இணையற்ற வீரத்தை எத்தனையோ அருந்தமிழ்க் கவிதையால் பெருமிதம் தோன்றப் புகழ்ந்துள்ளார் ஒளவையார். அவற்றுள் எல்லாம் தலை சிறந்தது ஒன்று….
ஔவையார் 6 – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார் : 15 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 14. தொடர்ச்சி) 3. ஔவையார் (தொடர்ச்சி) ஔவையார் இத் திருக்கோவலூர்ப் பெருமணத்திற்குப்பின் யாண்டுச் சென்றன ரென்பது நன்கு உணரப்படவில்லை. சோணாட்டுத் திருத்தருப்பூண்டிச் சேகரத்து திருக்கடிக்குளம், திருவிடும்பாவனம் இவற்றுப்புறத்து வளவனாற்றின் கீழ்கரை-[*] யில் துளசியார் பட்டினம் என்ற ஊரில் இவ்வௌவையார் திருப்பெயரான் ஒரு சிறிய பழைய கோயி லிருப்பது கேட்கப்படுதலால் [*] இவர் ஆண்டுப்போய் விண்ணுலகெய்தினரோ என ஊகிக்கப்படுகிறார். இனி, இவர் ஓரூர்க்குச் செல்லும்போது இடைவழியில் வெயிலால் வியர்த்து வாடித் துவரப்பசித்து…
ஒளவையார்: 5 : ந. சஞ்சீவி
(ஒளவையார்:4: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 14 2. ஒளவையார் (தொடர்ச்சி) ஒளவையார் யாதும் அறியாதவராய் அக்கனியை உண்டு ஆராமகிழ்வு கொண்டு, “மன்னா, அமிழ்தினு மினிய சுவை மிக்க இக்கனியை எங்குப் பெற்றாய்?” என்று உள்ளமும் உடலும் அன்பாலுருகிக் கேட்டார். மன்னன் தலை வணங்கித் தமிழ்ப் பெருமாட்டியாரிடம் உண்மையை உரைத்து நின்றான். மன்னன் மொழிகள் கேட்டதும் ஒளவையாரின் உடல் புளகமெய்திற்று; “மன்னா, யாது செய்தனை! உலகு புரக்கும் வேந்தன் நீ, அருஞ்சுவைக் கனியை உண்டிருக்க வேண்டியவனும் நீயே. அதனை உண்டு நெடுங்காலம்…
ஔவையார் 5 – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார். : 14 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 13. தொடர்ச்சி) 3 . ஔவையார் (தொடர்ச்சி) இதனான் இவர் பாண்டி நாடு புகுதற்கு முன்னே வேற்றுநாட்டு ஊர்கள் பலவற்றிற்குச் சென்றிருந்தனர் எனவும் ஆண்டெல்லாமில்லாத நல்ல தமிழைப் பாண்டியநாட்டேதான் கண்டன ரெனவும், அக்காலத்து அம்பர்நகரத்து வளமையும் வண்மையு மிக்க குடிகள் பல இருந்தன எனவும், திருவாவினன் குடியில் முத்தீயோம்பும் நான்மறை யந்தணர் நிறைந்திருந்தனர் எனவும் அறியப்படும். நல்லிசைப் புலவர் பல்லோர் ஒருங்கு குழீஇத் தமிழாயுநன்னா டாதலின், “நின்னாட்டுடைத்து நல்லதமிழ்” என்றார்….
ஔவையார் 4 – இரா.இராகவையங்கார்
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 12. தொடர்ச்சி) 3. ஔவையார் (தொடர்ச்சி) இக்கதை, ‘எரி னியற்றுங் களைக்கோலை யீந்தன்ன மிட்டுநல்லபாரி பறித்தென்னும் பாடல்கொண் டோன்பண்பு சேர்பழையனூரி லிருப்பவ னௌவைதன் பாடற் குவந்தபிரான்மாரி யெனத்தரு கைக்காரி யுந்தொண்டை மண்டலமே.’ என்னும் தொண்டை மண்டல சதகச் செய்யுளானும் அறியப்படும். பின் அக்காரிக்கு ஆடு வாங்கிக்கொடுக்கவேண்டி வாதவன் வத்தவன் யாதவன் என்னும் மூவரிடத்துப்போய்க் கேட்க அவர்கள் கொடாமையாற் சேரநாட்டுச் சென்று வஞ்சிநகர்புக்கு ஆண்டுள்ள சேரன்பால், வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோ னாளையென்றான்யாதவர்கோன் யாதொன்று மில்லையென்றா–னாதலால்வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோ னாளையினும்யாதவர்கோ…
இளங்குமரனார்க்கு இணையவழியில் புகழ் வணக்கம் – 08.08.21 காலை 10.00
அன்புடையீர், வணக்கம். தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் வரும் ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணிப் பொழுதில் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கு நிகழ உள்ள நினைவேந்தல் தகவலிதழ் அனுப்பியிருந்தோம். ஐயாவிடம் பள்ளியில் பயின்ற மாணாக்கர்களும் ஆசானாக ஏற்றுக்கொண்டு கற்றவர்களும் நினைவுரை ஆற்ற உள்ளனர். அந்நிகழ்விற்கான இணைய வழிப் பதிவு விவரம் வருமாறு– கூட்ட எண் 864 136 8094 புகு எண் 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தமிழ்க்காப்புக் கழகம்
முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் 08.08.21
(தை 17, 1951 / 30.01.1930 ***ஆடி 09, 2052 / 25.07.2021) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இணையவழி நினைவேந்தல் ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணி கூட்ட எண் 864 136 8094 புகு எண் 12345 தலைமை & நினைவுரைஞர்கள் அறிமுக உரை : இலக்குவனார் திருவள்ளுவன் இணை நிகழ்த்துநர்: தோழர் தியாகு தொடக்க நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார் முதன்மை நினைவுரை : மாண்புமிகு கோ.தளபதி, ச.ம.உ நினைவுரைஞர்கள்:…
ஔவையார் 3 – இரா.இராகவையங்கார்
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 11. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார். : 12 3. ஔவையார் (தொடர்ச்சி) ஒரு காலத்தவரும் ஒரு தன்மையரும் ஆதல்பற்றி இவரது ஓருடற்பிறப்பு ஒருவழியான் வலிபெறுவதாகும். இப்பிறப்பையும் அதிகமான்பாலே பெரிதுமுறலாகும். அதுவும் அவன் பரிசில் நீட்டித்தபோது ஔவையார் அவனைச் சினந்து, அதிகமான், ‘தன்னறி யலன்கொல் என்னறி யலன்கொல்’ என்றது ஔவையார்க்கும் அவ்வதிகற்கும் உளதாகிய இவ்வுறவினையே குறிப்பாற் றெரித்துக் கூறப்பட்டதெனக் கொள்ளுதற்கும் இயைதலின் நீங்கும் என்க. இவ்வாறு கொள்ளுதலே பண்டுதொட்டு வழங்கும் உலகவழக்கிற்கும் செய்யுள்வழக்கிற்கும் இயைபுடைத்தாகும். ஔவையார் பெண்ணையாற்றங்…
ஒளவையார்:2 : ந. சஞ்சீவி
(ஒளவையார்:1: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 11 2. ஒளவையார் (தொடர்ச்சி) அதிகமான், அருளும் ஆண்மையும் ஒருங்கே வடிவெடுத்தாற்போன்று விளங்கிய கடையெழுவள்ளல்களுள் ஒருவனாய்த் திகழும் பெருமை பெற்றவன். தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அதிகமான் நாடு, புனல் வளமும் பூவார் காவின் அழகு வளமும் ஒரு சேரப்பெற்றுப் புலவர் பாடும் புகழ் படைத்திருந்தது. அதிகமான் நாடு பெற்றிருந்த இயற்கைத் திறத்தினும் அவன் நாட்டு மக்கள் பெற்றிருந்த ஆண்மைத் திறனும் அவர்கள் தலைவனான அதிகமான் கொடைத் திறனுமே பல்லாயிர மடங்கு பெரியனவாய்…
திருநகர் நூலகத்திற்குப் புலவர்மணி இளங்குமரனார் பெயர் சூட்டுக!
திருநகர் நூலகத்திற்குப் புலவர்மணி இளங்குமரனார் பெயர் சூட்டுக! அரசிற்கு வேண்டுகோள்! முதுபெரும் தமிழறிஞர் புலவர்மணி இரா.இளங்குமரனார் உடல் அரச வணக்கத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, புலவர்மணி மாணாக்கர் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாணாக்கர் சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி முதலானோர் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து பங்கேற்றனர். அறிஞரை மதிக்கும் முதல்வர் மு.க.தாலினுக்கும் அரசிற்கும் பாராட்டுகள். மறைந்த அறிஞர் நினைவாக அவர்வாழ்ந்த மதுரைையைச் சேர்ந்த திருநகரில் உள்ள கிளை நூலகத்திற்குப் புலவர்மணி இளங்குமரனார் நூலகம் என அவர் பெயரைச் சூட்டுமாறு தமிழ்க்காப்புக்கழகத்தின் தலைவரும்…