(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 34 : முத்தக் கூத்தன் கொலை – தொடர்ச்சி

பூங்கொடி

7. கடல்நகர் புக்க காதை

கோமகன் துயிலாமை

          மலர்மலி காவுள் மங்கை பூங்கொடியின்

அலர்விழி அருளும் அந்தீங் கிளவியும்

பெறாஅது கோமகன் பெயர்ந்தோன் அக்கொடி

மறாஅது தன்னை மணங்கொள வழிவகை

          உன்னி உன்னி உறங்கா திருந்தனன்;

கன்னியர் நினைவுறின் கண்படை ஒல்லுமோ?     5

கதிரவன் எழுச்சி

          இருளின் கால்சீய்த் தெழுந்தனன் பரிதி;

மருள்கெட மக்கள் இமைகள் மலர்ந்தனர்;

தெருள்நிலை கண்டனர்; தேய்ந்த உணர்வெலாம்

          புதுநிறை வெய்தப் பூரித் தெழுந்தனர்;

கோமகன் ஒருவனோ கொடுந்துயர்ப் படுத்தும்

காமங் கதுவக் காலையின் எழுச்சி

அறியா னாகி அயர்ந்து கிடந்துழித்    10

கோமகனுக்கு அறிவுரை

          தாமரைக் கண்ணி தனிமையில் அணுகி     

          `நின்போற் செல்வர் நெறிதடு மாறி

வன்பாய்ப் புகுதல் வரன்முறை யாமோ?

மொழிவளம் பெறவும் மூடச் செயலால்

இழிநிலை யுற்றோர் எழுச்சி பெறவும்

தொண்டுகள் ஆற்றும் தூயவள், இல்லறம்  15

          பெண்டுகட் குரித்தெனப் பேசினும் பூங்கொடி    20

—————————————————————

          அந்தீம்கிளவி – அழகிய இனியசொல், பெறாஅது – பெறாமல், பெயர்ந்தோன் – சென்றவன், மறாஅது – மறுக்காமல், உன்னி – நினைத்து, கண்படை – உறக்கம், கால்சீய்த்து – அழித்து, தெருள் – தெளிவு, கதுவ – பற்ற, வன்பாய் – வன்முறையாகி.

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி