summer_breeze01


 

செந்தமிழ் பேசும்
என்தேசக் காற்றே
செங்கடல் தாண்டி வந்து
என்தேகம் தூண்டிவிடு…!

ஈழமண்ணின் ஈரம் கொண்டு
இந்தப் பாலை மண்ணை
பனிமலர்த் தோட்டமாய்
மாற்றிவிடு…!

தாயகம் தாண்டி வந்து
தவிதவிக்கும் நேரம் இது
தடையின்றித் தாவிவந்து – என்
தலையைக் கோதிவிடு…!

அம்மாவின் கைச்சோறு
அன்பான சாப்பாடு
அந்தநாள் நினைவுகளை
அள்ளிவந்து ஊட்டிவிடு…!

ஆண்டுகள் பல கடந்தாலும்
அன்பு நெஞ்சங்கள் மறந்தாலும்
என்தமிழே நீமட்டும்
என்னோடு வாழ்ந்துவிடு…!

http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=211564

eezham-with-prapakaran01