Thamizhannai01

பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்

     டெஞ்சியழுக் கேறா வியற்கலையே விஞ்சுநிறம்

தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம்

     தீயாது சொல்விளையுஞ் செய்யுளே வீயா

தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய்

     வருகுலமோ ரைந்தாயும் வந்தாய்

– தமிழ்விடு தூது: 17-19