செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின்

தனித்தன்மையைக் காக்க இணையுமாறு

வேண்டுகோள்!

அன்புடையீர்,

வணக்கம்.

தமிழ்நாட்டில்(சென்னையில்) இயங்கும் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தைத் திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும்  முயற்சியில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை இறங்கியுள்ளதை அறிவீர்கள்.

  தமிழ்வளர்ச்சிப்பணிகளையும் ஆய்வுப்பணிகளையும் முற்றிலும்  நிறுத்துவதற்கான முயற்சி இது. இதனை முறியடிக்கும் வகையில் வரும் ஞாயிறு ஆடி 07, 2048 / 23.07.207 அன்று  முற்பகல் சென்னையில் தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள், அனைத்திந்தியத் தமிழ்ப்பேரவை ஆகிய உறுப்பு அமைப்புகள் சார்பாகக் கூட்டம் நடத்த உள்ளோம். இதில் இணைய விரும்பும் அமைப்புகள், அழைப்பிதழில் குறிப்பதற்காகத் தங்கள்அமைப்பின் பெயர்,  பேசி எண், மின்(னஞ்சல்முக)வரி, முகவரி முதலிய விவரங்களை 9884481652 எண்ணிற்கு க்குறுந்தகவல் அனுப்பி அல்லது  thiru2050@gmail.com  மின்வரிக்குத்  தெரிவிக்க வேண்டுகின்றோம். இடம் முடிவானதும் தெரிவிக்கப்படும்.

  இது தொடர்பான தீர்மானத்தை வழி மொழியும் வகையில் நேரக்கட்டுப்பாட்டுடன் 5 நிமையம் பேச விழைவோர் தங்கள் பெயர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டப்படுகின்றனர்.

“உதவாதினி ஒரு தாமதம்”

“கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம்

தலையிட்டுக் கிளர்ச்சி செய்க”

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

புதுச்சேரி சுகுமாறன்

இறைஎழிலன்

அமிழ்த இளவரசன்

மாம்பலம் சந்திரசேகர்

முத்துசெல்வன்