காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் குறைக்கப்படாமல் தமிழ்நாடு அரசுவிழிப்போடு செயல்பட வேண்டும்
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் வேண்டுகோள்
காவிரி வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் (புரட்டாசி14, 2047/30.9.2016) கருநாடக அரசின் சட்டமுரண்செயல்களையும் நீதிமன்ற அவமதிப்புச் செயல்களையும் கடுமையாகக் கண்டித்தது ஆறுதல் தருகிறது.
நீதிபதிகள் தீபத்துமிசுரா யூ.யூ.இலலித்து அமர்வு, இது கடைசி எச்சரிக்கை என்று சொல்லிவிட்டு அட்டோபர் 1 முதல்6 வரை தமிழ்நாட்டிற்கு நொடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று கருநாடகத்திற்குக் கட்டளை இட்டிருப்பது வரவேற்தக்கது.
நடுவண் அரசு அட்டோபர் 4 க்குள் காவிரி மேலாண்மை வாரியம், மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழுஅமைத்து அறிக்கை தரவேண்டுமென்று கட்டளை இட்டிருப்பது பாராட்டுக்குரியது. காலந் தாழ்ந்த நீதி என்றாலும் தமிழ் நாட்டிற்குப் பயன் தரும் தீர்ப்பாகும். இதற்காகப் போராடிய, வாதாடிய அனைத்து உழவர் அமைப்புகள்,அனைத்து வணிகர் அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் அனைவர்க்கும்இந்த வெற்றியில் பங்கிருக்கிறது.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தனக்கான தலைமை வழக்கறிஞராகச் ...