பொழிவது அனல் மழை தானே! -பவித்திரா நந்தகுமார்

பொழிவது அனல் மழை தானே! விடுதலை வேண்டி வீழ்ந்தவர் உணர்வைப் பாடிட வேண்டும் வா மழையே! விதைக்குள் வீரம் வெளிக்கிடும் நேரம் தழுவிட வேண்டும் வா மழையே! ஈழ மண்ணில் வீசுகின்ற காற்றும் கூட காவியம் ஈகம் செய்த மாவீரம் எங்கள் வாழ்வியம் மெல்ல சாரல் பூவைத் தூவிடு சாதனைகள் பாடிடு சந்ததியை வாழ வைக்கும் கல்லறையைத் தழுவிடு களம் பல ஆடித் தாய் நிலம் காத்த விழி தொட வேண்டும் வா மழையே! காவியப் பூக்கள் கால் தடம் தேடி கரைந்திட வேண்டும்…

சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! – பாவலர் கருமலைத்தமிழாழன்

சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! நீருக்குள் நிழல்தன்னைத் தேடல் போன்று நீர்த்துபோன அரசியலில் நியாயந் தன்னைப் பாருக்குள் கிடைக்குமென்று தேடு கின்றார் பரிதாப ஈழத்துத் தமிழ ரின்று ! வேருக்கு நீருற்றி ஐ.நா மன்றம் வேதனையைத் தீர்த்துவிடும் என்றி ருந்தால் பேருக்குத் தீர்மானம் போட்டோ மென்றே பெயர்த்திட்டார் நம்பிக்கை திட்ட மிட்டே ! பால்தருவார் பசிக்கென்று காத்தி ருக்கும் பச்சிளமைக் குழந்தைகள்போல் ஈழ மக்கள் ஆல்போன்று மன்றம்தாம் நிழலைத் தந்தே அநீதிக்குத் தண்டனைகள் வழங்கு மென்று கால்கடுக்க ஏக்கத்தில் நின்றி ருந்தால் கள்ளிப்பால்…

நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! கொடுவினையில், சதிவலையில் இறந்தவர்களை நினைக்கும்பொழுது தீவினையரை மறந்துவிடுவோமோ! கொலைக்குற்றவாளிகளுக்குக் கடுந்தண்டனை  கிடைக்க வேண்டாவா? அன்றுதானே நம் மனம் ஆறுதல் அடையும்!  இறந்தவர்களை நினைவுகூர்வோம்! இருப்பவர்களுக்குத் துணை நிற்போம்! இறந்தவர்கள் கனவை நனவாக்குவோம்! இருப்பவர்கள் வாழ்வை வளமாக்குவோம்! அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 625) – இலக்குவனார் திருவள்ளுவன்

முகிழ்த்து முழங்கிடும் மீண்டும் தமிழீழம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

முகிழ்த்து முழங்கிடும் மீண்டும் தமிழீழம்! முள்ளி வாய்க்காலில் முடங்கிய தமிழினம், துள்ளி மண்மீட்கத் துணிவுடன் எழுந்து, கள்ளச் சிங்களர் கயமைக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் புலன்கள் ஓயாது! முதிர்ந்த அறிவோடு தமிழினம் காத்திடும், மற்றொரு தலைவனை மீண்டும் பெற்று, மாற்றுச் சிந்தனை அரசியல் செய்து, முயன்று போராட்டம் தொடர்ந்து நடத்தினால், முன்பு வாய்க்காத மாபெரும் வாய்ப்புகள் மலர்ந்து மணம்வீசி முகிழ்க்கும் ஈழம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்! சடலம் ஆக்கிச் சிதைத்தானோ? ஐயோ! சிதைத்துச் சடலம் ஆக்கினானோ? சுவரில் அடித்த செம்மண் கலமாய், சிதறிக் கிடந்த உடல்கள் மீது, சிறுநீர் கழித்தும் அடங்கா வெறியில், சிரங்களை அறுத்து ஒருபுறம் குவித்து, சித்திரம் போன்ற நம்குலப் பெண்களின், செந்தமிழ் மார்பை அறுத்தானே! நீசன், செந்தமிழ் மார்பை அறுத்தானே! நாமும் செய்வ தறியாது திகைத்தோமே! சிதிலம் அடைந்த உயிர்கள் கண்டு, விதியென் என்றொதுங்கி  வீழ்ந்திட மாட்டோம், உதிரம் கொதித்துத் தமிழன்னை அருளால், விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்! சிறுவர், மழலையர்…

ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி ஏற்றது.

ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி  ஏற்றது.   ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமென்பதையும்; இடம்பெறும் தமிழர்இனவழிப்பிற்கான அனைத்துலக  உசாரணையை கோருமென்றும்கனடாவின் பழமைவாதக் கட்சி அறிவிப்பு:  சித்திரை 01, 2047 / 4.14.2016 அன்று நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில் கனடியத் தமிழர் தேசிய அவையும் (சூஊஊகூ)  கனடாவில் தமிழர்பகுதிகளைச் சார்புபடுத்தும் மார்க்கம், மிசிசாகா, பிராமிடன், ஆட்டாவாவைச் சேர்ந்த அமைப்புகளும் கனடாவின் பழமைவாதக் கட்சியின் தலைவி (உ)ரோணா அம்புரூசு அம்மையார் அவர்கள் உடனான உயர் மட்டச் சந்திப்பை மேற்கொண்டனர். இச்சந்திப்பில் தமிழர்…

முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்புக் கொடுந்துயரநாள்

தமிழின அழிப்பு நாளின் ௭(7)ஆம் ஆண்டு நினைவு நாள்! – பிரித்தானியாவில் அணி திரளுங்கள்!   தமிழின அழிப்பு நாளின் ௭(7)வது ஆண்டு நினைவு நாள் நெருங்குகிறது. இம்முறை, பிரித்தானியத் தலைமையமைச்சரின் (பிரதமரின்) வீடான எண்: 10, இடவுனிங்கு வீதியில் நினைவு நாள் நிகழ்வு இடம்பெற உள்ளது.   தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, இனப்படுகொலையை ஏழு ஆண்டுகள் ஆகிய நிலையில் தொடரும் இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாட்டை பிரித்தானியாவிடமும் பன்னாட்டு அரசுகளிடமும் தெரிவித்து, அதற்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டம் மாலை ஐந்து…

என்று முடியும் ஈழ ஏதிலியர் துயரம்? – இலக்குவனார் திருவள்ளுவன்

செய்தியும் சிந்தனையும் [செய்தி:  நண்பர்  இ.பு.ஞானப்பிரகாசன், மின்னம்பலம் (https://minnambalam.com/k/1459296056 )   தளத்தில் இருந்து பின் வரும் செய்தியை அனுப்பியிருந்தார்: திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் ஏதிலியர்கள் பதினான்கு பேர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொய் வழக்குப் பதிவு செய்து தங்களைச் சிறையில் அடைத்துள்ளதாகவும், தங்களை விடுவிக்கும் வரை காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மார்ச்சு 28, 29 ஆகிய இரண்டு நாட்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள், மூன்றாவது…

தமிழர் தேசத்திற்கான ஏற்பும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட வேண்டும்! – கடலோனியா நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்கான ஏற்பும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட வேண்டும்! – கடலோனியா  நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்கான ஏற்பும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட வேண்டுமென  இசுபெயின் நாட்டில் பிரிந்து செல்லும் உரிமை கோரிப் போராடும் கடலோனியா (Cataloniya) மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அல்போன்சு  உலோபெசு   தேனா தெரிவித்துள்ளார். கடந்த  பங்குனி 10, 2047 / மார்ச்சு 23, 2016  அன்று பிரித்தானியாவின் பாராளுமன்றத்தில் பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஒன்று கூடல் நடத்தப்பட்டது….

பாராளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு 23  பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஒவ்வோர் ஆண்டும் ஒழுங்கு செய்யப்பட்டு  நடாத்தப்படும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினருடனான சந்திப்பு 23 ஆம் நாள் பங்குனி மாதம் அன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானியத் தலைமையாளர் தாவீது கெமரொன் (David Cameron)  வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்றது. இந் நிகழ்விற்குத் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவர்   சேம்சு பெர்ரி (James Berry MP) தலைமை வகித்தார்.  தலைமை விருந்தினராகத் தெற்காசிய நாடுகளுக்கான வெளி நாட்டுத்துறை அமைச்சர் …

மனித நேயர் ஊடகப்போராளி மேத்தியூ இலீயை ஐ.நா. வெளியேற்றியது!

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த மேத்தியூ இலீயை ஐ.நா.வலுக்கட்டாயமாக வெளியேற்றியது!   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் வரை எல்லா அமைப்புகளும் ‘ஐக்கிய நாடுகள் அவையை நம்பினோர் கைவிடப்படார்’ என மக்களை ஏமாற்றி வருகின்றன. ௨௦௦௯ (2009)-ஆம் ஆண்டு இனப்படுகொலை தொடங்கிய நாளிலிருந்தே இந்த ஏமாற்று வேலை மிகு வேகத்தில் தொடங்கி விட்டது. புலிகளையும் அதன் தலைவர்களையும் மக்களோடு சேர்ந்து வன்னியில் குந்தியிருக்குமாறு இத்தலைமைகள் அறிவுரை வழங்கின. அங்கு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் அவையும் திடீரெனத் தோன்றிக் காப்பாற்றிவிடும் என்று ஏமாற்றினர்….

தாயகத் தாயே போற்றியம்மா! – பவித்ரா நந்தகுமார்

ஈழத்தாய்க்கு அகல் வணக்கம். பெண் எனும் பெருமை பெற்று மனைவி எனும் உரிமை கொண்டு பெற்றாயம்மா புலி எனும் வேங்கையை! இல்லறத்தில் இனியவளாக ஈழத்தின் தாயாக வாழ்ந்து விடைபெற்றீர்கள் இந்நாளில் தாய் கன்றோடு பசி மறக்க நீங்களோ சேயை சேவைக்காக அனுப்பினீர்கள் ஈழத்தின் விடிவு காண பெற்றவள் மனம் கல்லானதோ இல்லை பெரும் ஈக மனம் அம்மா உங்களுக்கு! பிரபாகரன் எனும் தலைவன் பெயர் உச்சரிக்க எமக்குத் தானமாகத் தந்தீர்கள் புலியாகச் சேயினை! கொடு நோய் உங்களை அழைக்க இந்தியக் கொடுங்கோல் உங்களை அவமதிக்க…