தோழர் தியாகு எழுதுகிறார் : கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு

(தோழர் தியாகு எழுதுகிறார் : இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்குசலைட்டுகள் செயல்படுகிறார்கள் – தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (2)(அ.2.) கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு இஃது எல்லாராலும் முடிவதில்லை. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இந்த நடவடிக்கைகளால் பொறியியல் தோழருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அதற்கு முன்னால் எங்களிடம், ‘ஒவ்வொருவரையாக அழிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு மாலையில் ஆரம்பித்து மறுநாள் காலைக்குள் ஒரு பகுதி நிலச்சுவான்தார்கள் அனைவரையும் அழித்து விட வேண்டும்’ என்பார். கபித்தலம் மூப்பனாரில் தொடங்கி பூண்டி வாண்டையார் வரை இருபதுக்கும் மேற்பட்ட நிலச்சுவான்தார்கள் பெயரையும் ஒரே இரவில்…

தோழர் தியாகு எழுதுகிறார் : இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்குசலைட்டுகள் செயல்படுகிறார்கள்

(தோழர் தியாகு எழுதுகிறார் : மா.இலெ.தான் சரி-தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (2)(அ.1.) நேர்காணல்: மினர்வா & நந்தன் இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்குசலைட்டுகள் செயல்படுகிறார்கள் அழித்தொழிப்புக்காக ஓரிடத்திற்குச் செல்லும் போது முன்பின் தெரியாதவர்களை எப்படி அணிதிரட்டினீர்கள்? அவர்கள் எந்த அரசியல் கொள்கையும் இல்லாதவர்களாகத்தானே இருந்திருப்பார்கள்? அஃது ஒரு கடினமான வேலைதான். எந்த அறிமுகமும் இல்லாமல் ஒரு சிற்றூருக்குச் சென்று தங்கி விட முடியாது. ஊரில் ஏற்கெனவே அறிமுகமான ஒருவர் எங்களை வேறு ஒரு பெயரில் அறிமுகப்படுத்தித்தான் ஊருக்குள் தங்க வைப்பார். பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள்தான்…

தோழர் தியாகு எழுதுகிறார் : மா.இலெ.தான் சரி

(தோழர் தியாகு எழுதுகிறார் : ஆயுதப் போராட்டமா, உற்பத்திப் பெருக்கமா – தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (1.4) தோழர் தியாகு எழுதுகிறார்மா.இலெ.தான் சரி இதன் விளைவாக அப்பாவை மன்னார்குடி தாண்டி பெருகவாழ்ந்தான் ஊருக்கு மாற்றி விட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் குடும்பம் இடம்பெயரவில்லை. அப்பா அந்த ஊரிலேயே தங்கி வேலை பார்த்து வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். இது எனக்கு நல்வாய்ப்பாய் அமைந்தது. அப்பாவிற்குப் பயந்து தினமும் வீட்டிற்கு வர வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அப்பா திங்கட்கிழமை காலை கிளம்பியதும்…

தோழர் தியாகு எழுதுகிறார் : ஆயுதப் போராட்டமா? உற்பத்திப் பெருக்கமா?

(தோழர் தியாகு எழுதுகிறார் : பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன்- தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (1.3) தோழர் தியாகு எழுதுகிறார்  ஆயுதப் போராட்டமா? உற்பத்திப் பெருக்கமா? அந்த நேரத்தில் தஞ்சையில் மூப்பனாரின் மாந்தோப்பில் ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. அதில் சி. சுப்பிரமணியம் பேசினார். உற்பத்திப் பெருக்கம்தான் சோசலிசத்திற்கான வழி என்பதுதான் அதன் சாறம். நிலச் சீர்திருத்தம்தான் முதலில் செய்ய வேண்டியது என நான் அவரிடம் வாதிட்டேன். அவர் சோவியத்து உருசியாவை ஒப்பிட்டுப் பேசினார். சோவியத்து உருசியாவில் எல்லாச் சீர்திருத்தத்திற்கு முன்பும் நிலச்சீர்திருத்தம் நடைபெற்றதாக நான் குறிப்பிட்டேன். நம் ஊரிலும்…

தோழர் தியாகு எழுதுகிறார் : பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன்

(தோழர் தியாகு எழுதுகிறார் : நக்குசலைட்டு பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன் – தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (1.2) தோழர் தியாகு எழுதுகிறார் பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன் குத்தூசி குருசாமி போன்றவர்கள் பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தார்கள். அதன் முதல் மாநாட்டில் விசயவாடா கோரே போன்றவர்களும் கலந்து கொண்டார்கள். அமீர்சானோடு நானும் அதில் கலந்து கொண்டேன். அதில் இலெனின், மார்க்குசு போன்றோரின் புத்தகங்கள் இருபத்தைந்து பைசாவிற்கு விற்கப்பட்டது. மார்க்சியத்தோடான முதல் அனுபவம் அப்படித்தான் ஏற்பட்டது. [அமீர்சான் வீட்டில்தான் காரல் மார்க்குசு படம் பார்த்தேன். “காட்டுக்கு ஒரு…

தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு 1/4

(தோழர் தியாகு எழுதுகிறார் : மாரிமுத்து புதைகுழியில் உறங்குகிறார்!-தொடர்ச்சி) சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அன்பர் சந்துரு எழுதுகிறார்…(தமிழாக்கம்: நலங்கிள்ளி) கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை!(கீழ்வெண்மணியில் 52 ஆண்டு முன்பு நடந்தது என்ன?) “நேற்று வரை நாங்கள் கொடுத்ததை வாங்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் இன்று எகிறுவது எப்படி?”வேளாண் தொழிலாளர்களுக்கு எதிரான அக்கிரமங்களுக்கும் சாணிப் பால் – சவுக்கடிக்கும் செங்கொடிச் சங்கம் முடிவு கட்டிய பின்னர் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பிய ஒரு நிலக்கிழாரின் பிதற்றலிலிருந்து எல்லாம் தொடங்கியது. உலகெங்கும் சமூகவியலர்கள் கீழ்வெண்மணிக் கொலைகள்…

தோழர் தியாகு எழுதுகிறார் : தொல். திருமாவுக்குத் திறந்த மடல்

(தோழர் தியாகு எழுதுகிறார் : பெரியகுளம் போராட்டக் களம்-தொடர்ச்சி) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்குத் திறந்த மடல் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு. என் கனிவான வணக்கத்தையும் அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்தினையும் ஏற்க வேண்டுகிறேன். உங்களுக்கிருக்கும் கடுமையான நேர நெருக்கடிக்கிடையே எனக்காகச் சில நிமையம் ஒதுக்கி, இந்தச் சுருக்கமான மடலைப் படிக்க வேண்டுகிறேன். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாரிமுத்து-மகாலட்சுமி சாதியாணவக் கொலைக்கு நீதி கோரி நடந்து வரும் தொடர் போராட்டத்தில் சென்ற 17/08/2023இல் நடைபெற்ற…

தோழர் தியாகு எழுதுகிறார் : பெரியகுளம் போராட்டக் களம்

(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (5) -தொடர்ச்சி) இனிய அன்பர்களே! பெரியகுளம் போராட்டக் களம் பெரியகுளத்தில் மகாலட்சுமி – மாரிமுத்து ஆணவப் படுகொலைக்கு நீதிகேட்டு – குறிப்பாக இந்த உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை அட்டவணைச் சாதிகள் அட்டவணைப் பழங்குடிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதியக் கோரி – ஆகட்டு திங்கள் 5ஆம் நாள் தொடங்கிய போராட்டம் இன்று வரை உறுதியாகத் தொடர்கிறது. இந்த இடைக்காலத்தில் நடந்துள்ள சில நிகழ்ச்சிகளை உடனுக்குடன் தாழி அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள…

தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (5)

(தோழர் தியாகு எழுதுகிறார் : நந்திதா அக்குசரின் பொதுக் குடியியல் கட்டுரை – தொடர்ச்சி) “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (5) இனிய அன்பர்களே! பொதுக் குடியியல் சட்டம் பற்றிய நந்திதா அக்குசரின் கட்டுரை (தாழி மடல் 288) படித்தீர்கள் அல்லவா? மீண்டும் படியுங்கள். பொதுக் குடியியல் சட்டம் பற்றிய வினாவைப் பாசக எதிர்ப்பு என்ற ஒற்றைக் கோணத்தில் பார்த்தல் எப்படிப் பிழையானது என்பதை விளங்கிக் கொள்ள அது உதவும். இயங்கியல் அணுகுமுறையோடு இச்சிக்கலில் நாம் முகங்கொடுக்க வேண்டிய முரண்பாடுகளையும்…

தோழர் தியாகு எழுதுகிறார் : நந்திதா அக்குசரின் பொதுக் குடியியல் கட்டுரை.

(தோழர் தியாகு எழுதுகிறார் : பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4) – தொடர்ச்சி) “பொதுக் குடியியல் சட்டத்தைப் பெண்கள் வேண்டுவது ஏன்? ” -நந்திதா அக்குசர் மதச் சுதந்திரம் பொதுக் குடியியல் சட்டத்தை மறுக்க முடியும் என்றால், எல்லா மதத்தினரும் பெண்களின் உரிமைகளையும் சுதந்திரமாக மீற முடியும் என்று அருத்தமா? பொதுக் குடியியல் சட்டம் தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் நாட்டைப் பற்றிக் கொண்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பெண் வெறுப்பாளர்களால் தூண்டப்படுகின்றன. சிறுபான்மை உரிமைகள் என்பதைப் பெண்களின் உரிமைகளுக்கு எதிராக…

தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4)

(தோழர் தியாகு பேசுகிறார்: இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி? – தொடர்ச்சி) “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4) இனிய அன்பர்களே! பொதுக் குடியியல் சட்டம் தொடர்பான உரையாடலை அது வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதமாகச் சுருக்கி விட முடியாது, ‘எடு அல்லது விடு’ என்று முடிவு காண முடியாது. ஆர்எசுஎசு – பாசக கும்பல் பொதுக் குடியியல் சட்டம் என்று சொல்கிறதே தவிர, அதற்கு எவ்வித விளக்கமும் தரவில்லை. வரைவு ஏதும் வெளியிடவில்லை. அவர்களின் நோக்கமும் நமக்குத்…

தோழர் தியாகு எழுதுகிறார் : அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா?

(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (2) – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா? வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு ஒரு துரும்பு கிடைத்தால் கூட தெப்பமாகத் தெரியும். அந்தத் துரும்பைப் பிடித்துக் கொண்டு கரையேறி விட முடியாதா என்றுதான் நினைப்பான். இனவழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டு ஆண்டுகள் பதினான்கு ஆன பிறகும் நீதியின் ஒளிக்கதிர் கண்ணுக்கு எட்டாத அவலநிலையில் இருக்கும் தமிழீழ மக்களுக்கு யாராவது தமிழினவழிப்பு என்று பேசி விட்டாலே மனம் நிறைந்து…