தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி

தனித்தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி  பரிசு 3000.00  உரூ.   கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்:  ஆவணி 03, 2046 – 20.8.2015 முகவரி : முனைவர் க. தமிழ மல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம், 66,மாரியம்மன்கோயில்தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009          தொ:0413-2247072;  பேசி 9791629979 நெறிமுறைகள்: அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள் பிறமொழிப்பெயர்கள் கலவாத நடையில்எழுதப்படல்வேண்டும். கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும். ஒருபடியில்மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக. கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர் இருக்கக்கூடாது. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா தேர்தெடுக்கப்பட்டகதைகள் ‘வெல்லும்தூயதமிழ்’ மாதஇதழில் வெளியிடப்படும். நடுவர் தீர்ப்பே இறுதியானது . சிறுகதைப்படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும் பொறிஞர் இரா.தேவதாசு இவ்வாண்டு  பரிசுகள் வழங்குகிறார். இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500 உரூ. இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000 உரூ. இரண்டுமூன்றாம்பரிசுகள் 250.00= 500 உரூ.   க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ்இயக்கம்

வரன்கொடை கொடுமைக்கு முடிவே இல்லையா?

திருமணங்கள் நரகத்தில் முடிவாகின்றன! மகளிர் நாளில் திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை   திருமணங்கள்   உம்பர் உலகில்(சொர்க்கத்தில்) உறுதிசெய்யப்படுகின்றன என்பது மக்கள் நம்பிக்கை. சில பெண்கள் திருமணத்தால் நரகவேதனைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது இன்றைய வழக்கம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இளம்பெண்களைத் திருமணம் முடிப்பதும் அதன் பின்னர் அப்பெண்ணிற்கு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் மணவிலக்கு அளிப்பதும் வாழையடி வாழையாக இருந்துவருகிறது.   வரன்கொடை(வரதட்சணை) கொடுமை, மாமியார் கொடுமை, கணவன் கொடுமை ஆகியவற்றைப் பொறுத்துக்கொண்டாலும் ஏன் என்று கேள்விகேட்டால் திருமண விலக்கு அதாவது விவாகரத்து உடனடியாக வழங்கி…

தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி

தனித்தமிழ் இயக்கம் நடத்தும்  தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி முதற்பரிசு 500 உருவா; 2ஆம் பரிசு 300 உருவா;  3ஆம் பரிசு 200 உருவா.    நெறிமுறைகள் : நடுவர்களின்தீர்ப்பே இறுதியானது பிறமொழிச்சொற்கள்கலவாத தனித்தமிழில், பாடல்கள் அமைந்திருத்தல் வேண்டும். பாடல்கள்அறிவியல், விளையாட்டு, பகுத்தறிவு முதலிய பாடுபொருள்களைக் கொண்டு எளிமையாக இருத்தல் வேண்டும். இதுவரைவெளிவராத பாடல்களை மட்டுமே போட்டிக்கு அனுப்ப வேண்டும் பாடல்கள்தாளின் ஓருபக்கம் மட்டும் இருத்தல் வேண்டும். தாளின் பின்பக்கம் எதுவும் எழுதுதல் கூடாது. பாடல்களின்2 படிகளைக் கட்டாயம் அனுப்புக. ஒரு படியில் மட்டும் பெயர் முகவரி இருக்கலாம். இன்னொரு படியில் பெயர் போன்றவை இல்லாமல் வெறும் பாட்டு மட்டுமே இருத்தல் வேண்டும். 7. பாடல் ஆசிரியரின் ஒளிப்படம் இணைக்க வேண்டும். 8.  தழுவல், மொழிபெயர்ப்புகள்ஏற்கப்படா. 9. தேர்ந்தெடுக்கும்பாடல்கள் ‘வெல்லும் தூயதமிழ்’ மாத இதழில் வெளிவரும் 10. வெல்லும் தூயதமிழ்சிறுவர்பாடல் சிறப்பிதழ் விலை உருவா 20.00. விருப்பம்  உள்ளவர்கள் தொகை அனுப்பலாம். போட்டி முடிவுகள் மார்ச்சு 2015 இல் வெளிவரும். இப்போட்டிக்கான பரிசுகளை வழங்குபவர் :  தமிழ்மாமணி மா.தன.அருணாசலம், புதுச்சேரி. பாடல்களை அனுப்பவேண்டிய முகவரி : முனைவர் க. தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம்,  தொ.பே : 0413-2247072, 97916 29979 66, மாரியம்மன் கோயில்தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009   படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : மாசி 8, 2046 / பிப்ரவரி…

புதுச்சேரி பேருந்துநிலையத்தில் கழிப்பிடம் இல்லை! – வைகை அனிசு

புதுச்சேரி பேருந்துநிலையத்தில் கழிப்பிடம் இல்லாததால் பொதுமக்கள் முகம் சுளிப்பு   புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதிய பேருந்துநிலையத்தில் இலவசக் கழிப்பிட வசதி இல்லாததால் பட்டப்பகலில் ஆண்கள் பேருந்துநிலையத்தினுள் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பெண் பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் முகம் சுளிக்கின்றனர். புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரிக்கமேடு, கடற்கரை, ஆசிரமங்கள், தியானமண்டபங்கள், திரௌபதி அம்மன்கோயில் எனப் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும், வழிபாட்டுத்தலங்களும் உள்ளன. இதனைக் கண்டு களிப்பதற்குத் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை…

காலந்தோறும் முருகன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி), புதுச்சேரி மயிலம் பரிமளவேல் தமிழ் உயராய்வு மையம் தமிழ் இலக்கியங்களில் காலந்தோறும் முருகன் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் மார்கழி 6, 2045 / திசம்பர் 21, 2014 காலை 9.30 முதல் மாலை 4.30

சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டத் திரையிடல்

    புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டத் திரையிடல் நிகழ்ச்சி   தமிழிசை வளர்ச்சிக்கு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டவர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர்தம் நூற்றாண்டு நினைவாக அவரின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி கார்த்திகை 10, 2045 / 26.11.2014 மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தில் திரையிடப்பட்டது. முனைவர் க. தமிழமல்லன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ப. அருளி,  திரைப்பட இயக்குநர் குணவதிமைந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர்…

புதுச்சேரி அரசில் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க இயலாது

புதுச்சேரி அரசில் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க இயலாது என்றுகல்வியமைச்சர் தியாகராசன் 19.9.2014இல் புருசோத்தமன் ச.ம.உ கேள்விக்குவிடையளிக்கும் போது சட்டமன்றத்தில் சொன்னார். அதைத் திரும்பப்பெற வேண்டும்என்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கும் கோரிக்கை 32ஆண்டுக்கோரிக்கைஎன்றும் என்.ஆர். பேராயம் (என்.ஆர்.காங்)சட்டமன்றத்தேர்தலில் அளித்தஉறுதிமொழிகளில் ஒன்று தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்படும் என்பதாகும் என்பதையும் கல்வியமைச்சரிடம் தமிழமல்லன் எடுத்துக் காட்டி வலியுறுத்திச் சொன்னார். தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கும் உறுதிமொழியை முதல்அமைச்சர் அரங்கசாமி சட்டமன்றத்தில் 2007இல் அளித்துள்ளார் என்றும் எனவே மறுப்பை மறுஆய்வு செய்யவேண்டும் என்றும் 7.10.2014 அன்று கல்வி யமைச்சர் தியாகராசனிடம் நேரில் வேண்டுகோள் அளிக்கப்பட்டது….

புதுச்சேரியில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்தக்திற்கான ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி தனித்தமிழ் இயக்கம், கலைஇலக்கியப் பெருமன்றம்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து  புரட்டாசி 4, 2045 / 20.09.2014புதுச்சேரியில் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியும் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டியும் ஆர்ப்பாட்டம் செய்தன.  கவிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் திரளான தமிழார்வலர்கள் பங்கேற்றனர்.    

தமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்!

  புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி எளிமையானவர் என்ற பெயர் பெற்றுள்ளார். எனினும் தமிழ்நலப்பணிகளில் கருத்து செலுத்துவதில்லை என்றும் தமிழ்நலனுக்குக்கேடு தரும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும் தமிழன்பர்கள் கூறுகின்றனர். அவர், எக்கட்சியில் இருந்தால் என்ன தமிழ்ப்பகையான பேராயக்கட்சி(காங்.)-இல் ஊறியவர்தானே என்றும் விளக்குகின்றனர். தம்மீதுள்ள அவப்பெயரை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஐப்பசி 11, 2032 (27 அக்டோபர் 2001) – வைகாசி 3, 2037(17 மே 2006) காலத்தில் முதல் முறையும், வைகாசி 4, 2037 (18 மே 2006)– ஆவணி 20…