ஓ நந்திக்கடலே! – மட்டு மதியகன்

பார்வைக்காக விடப்பட்ட போர்க்கருவிகள் பாரிலிருந்து வந்த இராணுவ மேதைகள் மலைத்துப் போயினர் கொள்ளிக்கட்டைகளாக அள்ளி அடுக்கப்பட்ட வித்துடல்களைச் சுமந்த இயந்திர வண்டி கொலைகாரக்கொடியவன் இளம் பெண்ணை இழுத்து வருகிறான் நிருவாணமாக வீரமாது வித்தாகி விழுந்து கிடக்கிறாள் படிந்த குருதியோடு ஈரேழு வயதான எங்கள் பாலகன் பசியால் ஏதோ சுவைக்கும் புகைப்படம் பிஞ்சி மார்பில் பஞ்சு ரவை வேட்டுககள் ஏந்தியபடி வீரமரணம் போர் வீரர்கள் அடுக்கப்பட்டுகிடக்கும் அநியாயமான காட்சி இறந்த மங்கையின் மார்பில் நல் குலம் பெறாத நாசிக்காரன் காலை ஊன்றிய புகைப்படம் உயிருக்காய்ப் போராடும்…

கனவோ நனவோ – கிரிசாசன்

கண் கொண்டு பார்க்கவே கூசும் – அக் காட்சிப்படங்களைப் பார்ப்பவர் நெஞ்சம் புண்பட உள்ளமும் நோகும் – தேகம் புல்லரித்தே கூட அச்சமும்கொள்ளும் விண்கண்ட ஓலங்கள் யாவும் – வான வீதியிலே எங்கும் கேட்பது போலும் எண்ணம்  பிரமித்து நிற்கும் – அங்கே என்ன நடந்தது காணவிழைந்தேன் நட்ட நடுநிசி நேரம் – ஒரு நாளில் துணிவுடன் சென்றுமடைந்தேன் கொட்டும்மழை பெய்தபின்பு – பனி கூதலிடப் புகைபோலும் நிசப்தம் வட்டமதி மேலே நிற்க – அதன் வீசுமொளிதனில் சென்ற இடமோர் வெட்ட வெளிப்பிரதேசம் –…

அவன் வருகின்றான்!…. – கசமுகன் பிள்ளயாந்தம்பி

  தமிழர்களை அழிப்பேன் தமிழையும் அழிப்பேன் தணிக்கைகள் பல செய்வேன் தமிழ் இனத்தை தவி தவிக்கச் செய்து தரணியில் இல்லையெனச் செய்வேன்!….என்று தனி மனித உரிமைகளைத் தட்டிக் கழித்தான் தனி நாடு கேட்டோம் தத்துவங்கள் பல பேசி, தந்திரங்கள் என நினைத்து, தரித்திரத்தைத் தேடிக் கொண்டான்!…. தமக்கென இருக்கிறான் ஒருவன் தக்க சமயத்தில் வருவான் தயக்கமென்ன தமிழா! தலை நிமிர்ந்து நில்லு தமிழ் இனத்தின் தனித்துவத்தைச் சொல்லு உலகிற்கு!…. http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=211614

பதுங்கு குழி

பதுங்கு குழியில் அடைக்கலம் நாடுவது பயத்தால் அல்ல.. உன் மீதான வஞ்சத்தை அடைகாக்க.. நாங்கள்-நீ விட்டுச்சென்ற மிச்சம் அல்ல.. எனது தலைவனின் எண்ணத்தின் எச்சம்..! நன்றி : மதுசூதனன் http://tamilmadu.blogspot.in/2011/09/blog-post_4489.html

குறுந்தகவல் பாக்கள்

  முடி சூடிய தமிழினம் முள்வேளி கம்பிக்குள் ! – ஈழபாரதி, புதுக்கோட்டை ** சிங்களப் பெண்கள் உதட்டுச் சாயம் ஈழத் தமிழர் குருதியில்! – கணேசன், காங்கேயம் ** பனிக்குடம் உடைத்து தொப்புள் கொடி அறுத்தார்கள் துடிக்கிறது ஈழம்! – அமீர்சான், திருநின்றவூர் ** அம்மணமாய்-தமிழன் அகிலமே பதைக்கிறது உடன் பிறப்புக்கு, தமிழ் மாநாடு! – ஏழைதாசன், புதுக்கோட்டை – 2 ** புத்தத் தேசத்திற்கு ஆயுதம் கொடுத்தது காந்தி தேசம்! – எசு.விசயகுமார், புதுக்கோட்டை ** அனாதையாக அமைதி தத்தெடுக்கத் துடிக்கும்…

ஈழத்தின் கண்ணீர்தானோ !

  அலைகள் தழுவும் தேசத்தில் கொலைகள் தொடர்வதும் ஏனோ? விடுதலை வேண்டி வாழும் மாந்தர்க்கு உரிமை மறுப்பது தருமம்தானோ? நாற்புறம் சூழ்ந்த கடல் நீரினிலே உவர்ப்பை நிறைத்தது எங்கள் கண்ணீர்தானோ?   – விக்கி         http://eelamkavithaigal.blogspot.in/2009/12/blog-post_5528.html  

முள்ளிவாய்க்கால் ஓரத்திலே – ஓவியா

  விடிவு முடிவான காலத்திலே அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள் முதுமையான பசுமை நினைவைச் சுமக்கும் வாய்க்கால் இப்போது பயங்கரமாய் இரத்தம் கலந்த சிவப்பாய் மனிதரை அல்ல சடலங்களைச் சுமக்கிறது   கந்தகப்புகையை சுவாசித்து வாழ்ந்த மக்கள் கையில்லாமலும் காலில்லாமலும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள் தரவு : (இ)லியோ நன்றி : leomalar.blogspot.com http://www.yarl.com/forum3/?showtopic=103383

என் தேசக் காற்றே..! – நா.நிரோசு

    செந்தமிழ் பேசும் என்தேசக் காற்றே செங்கடல் தாண்டி வந்து என்தேகம் தூண்டிவிடு…! ஈழமண்ணின் ஈரம் கொண்டு இந்தப் பாலை மண்ணை பனிமலர்த் தோட்டமாய் மாற்றிவிடு…! தாயகம் தாண்டி வந்து தவிதவிக்கும் நேரம் இது தடையின்றித் தாவிவந்து – என் தலையைக் கோதிவிடு…! அம்மாவின் கைச்சோறு அன்பான சாப்பாடு அந்தநாள் நினைவுகளை அள்ளிவந்து ஊட்டிவிடு…! ஆண்டுகள் பல கடந்தாலும் அன்பு நெஞ்சங்கள் மறந்தாலும் என்தமிழே நீமட்டும் என்னோடு வாழ்ந்துவிடு…! http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=211564

மாண்டுபோன‌ மாந்த நேயம் – நற்றமிழன்

  எனது தாயைக் கற்பழிக்கின்றான் சிங்களவன் என் கண்முன்னே முரளீதரன் பந்துவீச்சில் இந்தியனொருவன் தனது ஆட்டத்தைப் பறிகொடுத்து வெளியேறுகின்றான் வருந்துகின்றான் நண்பன்(?) இந்தியனுக்காக‌ மன்னியும் நண்பனை! சாக்கடையிலிருந்து தாய்ப்பால் பருகியவனவன்! இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கியவர்கள் அம்பானியும், அகில உலகமும் பார்வையாளனாக மட்டும் இங்கே மாண்டுபோன‌ மாந்த நேயமும் ,,,,,, http://natramizhan.wordpress.com/category/%E0%AE%88%E0%AE%B4%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D/

உடைத்தெறி வேலிகளை! – கார் முகிலன்

நாம் புதைந்த இடத்தில் இன்னும் புழுதி அடங்கவில்லை நீங்கள் தூக்கிச் சென்ற எம்முடல் ஈரம் காயவில்லை இன்னும் கொதிக்கிறது என் குருதி எழுந்து போராட உடலுடைந்து பிணமாய்க் கிடக்கிறேன் கல்லறையில் மனம் உடையாமல் முடிந்தால் எனக்கோர் புது உடல் தாருங்கள்! ஈழம் அமைக்கிறேன் பாருங்கள்! என் இனிய ஈழ உறவுகளே என் கல்லறையில் – பூ வைக்கும் பெண்டுகளே உம் மானம் காக்க வருகிறேன் சிங்களவன் வாலை அடக்க எழுகிறேன் தீயில் நீராடிய என் சகோதரன் பக்கத்தில் உறங்குகிறான் பாருங்கள் கரும்புலியாய் வெடித்தவன் அவன்…

நாங்கள் மனிதரில்லை! – பா. உதயகுமார், நோர்வே

ஓர் கொடிய நீண்ட இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டிருந்தது முள்ளிவாய்க்கால். இறந்த தாயின் முலையில் குழந்தை பால் குடிக்க இழுத்து வந்து நெருப்பு மூட்டினர் இருளின் நடுவே சிலுவை தாங்கி இறைவன் வருவான் என நிலவைப் பார்த்தோம் கண்களை மூடி இது உன் விதி என்றது எங்களின் வீட்டினுள் யூதர்கள் நுழைந்தனர் யேசுவைக் கேட்டனர் ஆயிரம் ஆயிரம் சிலுவையில் அவர்களை அறைந்தனர் அடையாளம் காட்ட யூடாசு வந்தான் மாவீரன் கல்லறையில் மீண்டும் இரத்தம் வடிய உயிர்த்திருந்தவர்களை இன்னொருமுறை புதைத்தனர் கனவுகள் உடைந்து…

முள்ளிவாய்க்கால் உனக்கே சொந்தம் – கவிதை

  தமிழன் செந்நீரும் கண்ணீரும் சிந்திய முள்ளிவாய்க்கால் நினைவுகளை மறக்கமுடியுமா? அந்த நினைவுகளை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது அனுபவித்தவர்கள் இப்போதும் அநாதைகளாய்த்தான் அந்தரிக்கிறார்கள்!!! முள்ளிவாய்க்கால் கடற்கரை ஓரங்களில் ஐயோ.. அம்மா.. ஆ… என்ர பிள்ளை.. என்ர அம்மா.. என்ர அப்பா.. என்ர அண்ணா…….ஐயோ………. நான் என்ன செய்வேன்………………………….. என்ற அவலக்குரல்கள்தான் அதிகரித்தன அந்த நாட்களில் அப்போது கந்தகக் குண்டுகள் அப்பாவித் தமிழர் உடல்களை துளைத்துத் துவம்சம் செய்து சிதைத்து மமதை கொண்டன. காரணம் அங்கே ஏவப்பட்ட குண்டுகள் அனைத்தும் இனவாதக் குண்டுகளே அதனால்தான்…

1 5 6 7 9