நெல்லை குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளை நடத்தும் இலக்கியப் போட்டி

(2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கவிதைப்போட்டி – பரிசளிப்பு விழா) ‘ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்’ என்னும் தலைப்பில் 24 வரிகளுக்கு மிகாமல் மரபுக் கவிதை ஒன்று எழுதி அனுப்ப வேண்டுகிறோம். படைப்பாளர் முகவரியும் கடவுச்சீட்டு அளவுள்ள ஒளிப்படமும் தனித்தாளில் படைப்பு தம்முடையதே என்ற உறுதிமொழியும் இணைத்திட வேண்டும். கவிதை உள்ள தாளில் பெயர், முகவரி குறிப்புகள் எவையும் இருக்கக்கூடாது. கவிதை முழு வெள்ளைத் தாளில் எழுதியோ தட்டச்சு செய்தோ கணிணி அச்சு செய்தோ மூன்று படிகள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல்பரிசாக…

உலகெங்கிலும் தூய தமிழ் பரவட்டும்! – யாழ்ப் பாவாணன்

    வானில் இருந்து இறங்கிய மழையோடு வந்து வீழ்ந்தவன் நான் அல்லன் பெற்றவர்கள் ஈன்ற பின்னர் தெருவெளி அங்காடியில் விற்ற நூல்களை வேண்டிப் படித்துப் பொறுக்கிய அறிவைப் பிறருக்கு வழங்குவதே என் பணி! “பிறமொழிச் சொல் அகராதி” என்ற நூலைப் படித்துப் பொறுக்கியதில் இருந்து: ஆங்கிலத்தில் “சுகர்ட்” என்பது தமிழில் அரைப் பாவாடையே..!. இந்தியில் “சோடி” என்பது தமிழில் ‘இணை’ என்பதையே! பாரசீக மொழியில் “லுங்கி” என்பது தமிழில் மூட்டுவேட்டியே! உருது மொழியில் “தமாசு” என்பது தமிழில் வேடிக்கையே! அரபி மொழியில் “சாமீன்”…

தோழர்ஆனைமுத்து – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தோழமையோடு பழகுகின்ற தோழர்ஆனைமுத்து  -புதுவைத் தமிழ்நெஞ்சன் பகுத்தறிவுப் பெட்டகம் சிந்தனைக் கருவூலம் தோழர் ஆனைமுத்து மாந்தநேயத் தொடர்பை ஏற்படுத்தும் அறிவுப் பாலம் ஓய்வறியா அவருழைப்பை சொல்லும் இந்த ஞாலம் அறிவே துணையெனச் சொல்லுவார் மடமையை பகுத்தறிவுத் தீயில் தள்ளுவார் ஆரியத்தை வீழ்த்தி வெல்லுவார் அறியாமையைக் கொய்வார் ஆரியத்தை வைவார் இனமான ஆடையினை நெய்வார் அறிவு மழையை அகத்தினிலே பொழிவார் குரலில் இடி..! போடுவது பொடி..! ஆனைமுத்தைப் படி..!

தமிழ்மொழி – தமிழ் நூல்கள் தனிச்சிறப்பும் திருக்குறள் அறப்பெரும் சிறப்பும்

  – தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ –  திருப்புகழ் இசைப்பா 1. உலக முதல்மொழி! நமது தமிழ்மொழி! உரிமை தரு மொழி! உயர்வு பெறு மொழி! மலரும் அறிவெழில்! பொழியும் நறுமொழி – மலைபோல 2. மணிகள் ஒளிதிகழ் அரிய அறமொழி! மகிழப் பலகலை உணர்வுதரு மொழி! மருவும் உயிரெலாம் பயிலவரும் மொழி! – வளம்நாடும் 3. பலநல் லறிவுளோர் பரவும் பெருமொழி! பயனுணரும் கலை அறிஞர் புகழ்மொழி! பரிவோ டருள்புரி பழமை(த்) தமிழ்மொழி! – பயில்வோர்கள் 4. பழைய குறை –…

மனத்தில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்) மின்னூல் வெளியீடு

  முகம்மது அலியின்   மனத்தில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்)   மின்னூல் வெளியீடு(FreeTamilEbooks.com) சென்னை   திரு முகம்மது அலி தன் வலைத்தளத்தில்(http://anbudanseasons.blogspot.in ) எழுதிய கட்டுரைகளையும கவிதைகளையும் மின்நூல்  வடிவில் கொண்டு வந்துள்ளார்.   கட்டணமின்றிப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்குப் பின்வரும் வலைவரியில் காண்க: http://freetamilebooks.com/ebooks/manadhil-tondriya-ennangal/

திகட்டாத் தமிழிதழ் – (உ)ருத்ரா இ.பரமசிவன்

அகர முதல வெறும் அகட விகடம் அல்ல. அகலத் தமிழின் அகழ்வாராய்ச்சித் திகழ் ஒளி வீசும் திகட்டாத் தமிழிதழ். பனை ஏடுகளின் மன ஏடுகள் மடல் அவிழ்க்கும் மங்கா விளக்கின் மாணிக்கச்செவ்விதழ். வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்

வாழி வாழி நீவிர் – (உ)ருத்ரா இ.பரமசிவன்

அன்புள்ள திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே! துரும்பு அசையும் தூசு அசையும் அதையும் விட‌ துல்லியமாய் அசையும் தமிழின் எழுத்தும் சொல்லும் உங்கள் இதயத்தில் தான் முதலில் அசைகிறது. உங்கள் அருந்தமிழ்ப்பணி தொடர‌ வாழி வாழி நீவிர் நீடுழி நீடூழி வாழ்வீர். அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்

நாம் இரண்டல்ல ஒன்று – செந்தமிழினி பிரபாகரன்

நாம் இரண்டல்ல ஒன்றெனச் சொல்லுங்கள். கடற்கோள்கள் பிரித்த தமிழாண்ட தேசங்கள்.. அடிமை தேசங்களாய்… அவனியில் இன்று.. ஆயினும் உணர்வழியா இனமாய்.. ஒன்றெனச் சொல்லுங்கள். உரத்துச் சொல்லுங்கள்.. எங்கள் இனம் இன்று ஒன்றானதென்று! இல்லை என பார்ப்பவர்கள் பகைவர்கள்! . பிரித்துப் பார்ப்பவர்கள் பித்தர்கள்…!! ஒன்றான மாந்தர் ஒன்றுபட்ட இனம்.. ஒற்றை தாய் மொழி.. கடல் பிரித்த தேசங்கள்.. இரண்டானாலும் தமிழினம் என்றும்… ஒரு குடி காண்! ஒற்றுமை ஒன்றே உயர்வெனக் கொண்ட வேற்றுமை இல்லா தமிழர் நாம்!.. ஒன்றே எம் இலக்கு. விடுதலை எம்…

எல்லாளன் ஆள்வார் – தமிழ் மகிழ்நன்

சிங்களன்நீ தமிழன்நான் தீங்கெமக்குச் செய்தாய்! சிங்களமே உன்நாடு! நாடெமெக்கு ஈழம்! கங்குலென்றும் பகலென்றும் பாராது நின்று காட்டினிலும் களத்தினிலும் கடுந்துன்பம் வென்று பொங்கிவரும் காட்டாறு போல்புலிகள் வருவார்! புத்துயிரை ஊட்டியினி புதுயீழம் பெறுவார்! மங்கிடாத புகழுடைய தமிழீழ நாடு மாவீரர் படைத்திடுவார் நடுங்கியினி ஓடு! முள்ளி வாய்க்கால் போர்முனையில் முழுவெற்றி என்றே மூர்க்கன்நீ முதிர்ச்சியின்றி முழங்குகிறா யின்று! கள்ளரைப்போல் வல்லரசர் களமாட வென்றாய்! கதறிநீயும் அழுதலறித் தோற்றோடி வீழ்வாய்! வெள்ளம்போல் மாவீரர் விளைகின்ற மண்ணில் வீணன்நீ வெகுவிரைவில் வீழ்ந்தழிவாய் எண்ணு! துள்ளுகின்ற சிங்களனுன் துடுக்குயினி…

எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! – ஆதிரை

  முனகல்களோடு புலர்ந்து கொண்டிருந்த பொழுதை மூர்ச்சையாக்கி புதைத்த அந்த நாள் பால் குடிப்பதற்காக, சடலத்தின் உடலை உறிஞ்சிய பச்சை மண்ணின் வறண்ட அதரங்கள் கனவுகளைச் சுமந்த பாவாடை மலர்களின் நீலம் பாய்ந்த நயனங்கள் வெட்டிய நெஞ்சின் முட்டிய உறுதியின் அடையாளமாய் கருகிய மீசைகள் சுருங்கிய தோலும் சுருங்காத கனவும் தேக்கிய  இதயங்கள் எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! மரணம் அடுக்கி மாளிகை கரசேவக இனவெறிப் பேய்கள் குருட்டு மொழியின் கதறல்களுக்கு இன்னும் வெளிச்சமிடாத பச்சைத் துரோகங்கள் மே 18 சிந்திய செந்துளிகள் அமைதியடையும்…

“அகர முதல” கண்டு மலைத்தேன்.

“அகர முதல” விரித்த அருந்தமிழ் கண்டு மலைத்தேன். நூல் விரித்தன்ன‌ மணிநீர் அருவி நுழை படுத்தாங்கு மெல்லிமிழ் தும்பி புன்கால் குடைதர‌ நுண்புலம் அதிர்ந்து விண் விதிர்த்தாங்கு பொதிகை அடுக்கம் பரல் நரல் தமிழின் பொறி கிளர்ந்தன்ன‌ பொற்றமிழ் கண்டு களி மிகுதலுற்றேன். புல்லுள் கல்லுள் புள்ளுள் குன்றுள் அமிழ்தமிழ் ஈண்டு அகவுதல் கேட்டு அக மகிழ்வுற்றேன். வாழ்த்துக்களுடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்

இடர்கள் தந்தபோதும்…,எம் இலட்சியத் தாகம் தீராது – ஈழப்பிரியன்

அன்று…., கோயில் மணி ஓசையிலும், குயில்களின் இன்னிசையிலும், மங்கள வாத்திய இசையிலும் , மலர்ந்திடும் எங்கள் காலை…., இன்று…, கூவி வரும் செல்(பீரங்கி) ஓசையிலும், பறை எழுப்பும் அவல வசையிலும் , ஐயோ …என்ற அலறலிலும், விடிகிறது எங்கள் காலை. யுத்தத்தின் வடுக்கள்…. அடுத்தவன் கை ஒன்றை எடுத்து தன் கையோ? என ஏங்கும் ஒருவன் அங்கே…! பிணமாய்க் கிடக்கும் ஒருவனுக்கு ……, அவன் குடலே மாலையாய் கழுத்தில் அங்கே…! தமிழன் அல்லவா…..? இறந்தும் அவன் பறவைகளுக்குத் தீனி தருகின்றான். பிணக்குவியல் அகற்ற அந்த…

1 5 6 7 9