இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 40 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 39 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி) பழந்தமிழ்’ – 40 பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி சில வேர்ச்சொற்களில் மூல உயிர் மாறுவதனால் சொல்வடிவம் வேறுபட்டுப் பொருள் வேறுபாட்டை அறிவிக்கும். குறில் நெடிலாகவோ, நெடில் குறிலாகவோ மாறுதலைடையும். மின் என்பது மீன் என்று ஆகியுள்ளது. காண் என்பது கண் என்று ஆகியுள்ளது. கெடு என்பது கேடு என்றும், உண் என்பது ஊண் என்றும் வந்துள்ளமை காண்க. தன்மை முன்னிலை இடப்பெயர்கள் வேற்றுமை…
தமிழ்நாடும் மொழியும் 40 : தமிழ் இலக்கண வளர்ச்சி
(தமிழ்நாடும் மொழியும் 39 : நாடகத்தமிழ்– தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 4. தமிழ் இலக்கண வளர்ச்சி தமிழ் முப்பகுப்புடையது என முன்னர்க் கண்டோம். தொன்றுதொட்டே நம் புலவர் பெருமக்கள் தமிழை மூவகைத் துறைகளில் வளம்படச் செய்துவந்திருக்கின்றனர். தமிழ் இயலிசை நாடகம் என மூவகையாக வளர்ந்து ஓங்கிச் செழித்திருக்கிறது. இனி இம் மூவகைத் தமிழ் இலக்கணங்களின் வளர்ச்சியைப் பார்ப்போம். இன்று இயற்றமிழிலே இலக்கண நூல்கள் மிகவும் பெருகி உள்ளன. இயற்றமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணமென ஐந்து வகைப்படும். எழுத்துக்கும் சொல்லுக்கும் தனி…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 5
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 4 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி : களம் : 5 காட்சி : 5அரண்மனை – அரசனும் அமைச்சனும்அறுசீர் விருத்தம் அமைச்சன் : வாடிய முல்லையைக் கண்டேவாய்த்தநற் றேரங்கே நிறுத்திநீடிய புகழ்கொண்ட பாரிநிறுவிய தமிழ்மரபில் வந்தோய்கூடிய காதலரைக் கொன்றேகொடும்பழி ஏற்றிடலும் நன்றோதேடிய பெருமையெலாந் தீரத்திக்கெலாம் பழிவந்து சேரும் எண்சீர் விருத்தம் அரசன்: தமிழ்காக்கும் முனைப்பினிலேதடையேது மில்லைதமிழ்ப்புலவோர் நிலைகாக்கமறுப்பேது மில்லைஇமிழ்கடல்சூழ் புவியினுக்கேஉயிராவா னென்றேஇறையாகும் மன்னவரைச்சொன்னவரும் நல்லதமிழ்காத்த புலவர்தாம்அவ்வுரையுந் தீதோஅடிமரத்தை நுனியிருந்துவெட்டுதல்நன் றாமோஉமிழ்நீராய் மன்னர்குலம்வீழுமாயின்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 709- 715
(தமிழ்ச்சொல்லாக்கம் 704-708தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 709- 715 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 709. க.ப. சந்தோசம் – மகிழ்நன் (1934) மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்நூலிலே தொகுக்கப் பெற்ற கட்டுரைகள் அனைத்தும் சைவசித்தந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் பத்தாண்டுகளாக வெளியிடப் பெற்றுவரும் செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கள் தாளிற்கு யான் இடையிடையே எழுதி…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 37 : சிதம்பர உடையார்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 36: களத்தூரின் அமைப்பு – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 21சிதம்பர உடையார் என் தந்தையார் களத்தூரில் நந்தன் சரித்திரம் நடத்தியபொழுது வந்து கேட்டவர்களுள் சிதம்பர உடையா ரென்பவர் ஒருவர். அவர் அவ்வூருக்கு வடபாலுள்ள மறவனத்த மென்னும் ஊரிலிருந்த பெரிய தனவான். சிவபக்தி மிக்கவர். எப்போதும் விபூதி, உருத்திராட்ச தாரணத்தோடே இருப்பார். ஏழைகள்பால் அன்பும் இரக்கமுமுடையவர். பிறருடைய கண்ணைக் கவரும் சிவந்த நிறத்தினர். அவருக்கு நான்கு குமாரர்களும் நான்கு குமாரிகளும் இருந்தனர். நான்கு பிள்ளைகளுக்காக நான்கு வீடுகள் ஒரு சிறகிலும்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 39: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 38: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி) பழந்தமிழ்’ – 39 பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி வினைச்சொல் தன்மையை அடையுங்கால் காலம் காட்டும் உருபைப் பெறவேண்டியுள்ளன. பகுதியுடன் கால எழுத்தும் சேருங்கால் அவை இரண்டையும் பொருந்தச் செய்ய வேறொரு எழுத்தும் வேண்டப்படுகின்றது. நினை இறந்த காலத்தை அறிவிக்குங்கால் நினைந்து என்று உருப்பெறுகின்றது. த் இறந்த காலம் காட்டுவது. அதனைப் பகுதியுடன் இணைக்க ந் வேண்டியுள்ளது. ஆனால் எதிர்கால எழுத்தை இணைக்குங்கால் அதுவே இரட்டித்து விடுகின்றது. நினை+ப்+ப=நினைப்ப. முற்றுச் சொல்லாகுங்கால் அச்சொல் திணை,…
தமிழ்நாடும் மொழியும் 39: நாடகத் தமிழ்
(தமிழ்நாடும் மொழியும் 38: முத்தமிழ் – தொடர்ச்சி) நாடகத் தமிழ் தொடர்ச்சி பிற்காலச் சோழர்களிலே வீரமும் ஈரமும் பெரும் புகழும் கொண்டு வாழ்ந்த இராசராச சோழன், அவன் மகன் இராசேந்திர சோழன் ஆகிய இரு மன்னர் காலத்திலும் திருவிழாக் காலங்களில் இராசராசேசுவரன், இராசராச விசயம் முதலிய நாடகங்கள் நல்ல முறையில் நடிக்கப்பெற்றன என்பதும், சிறந்த நடிகர்களுக்குப் பல பரிசில்களும் தானியங்களும் வழங்கப்பட்டன என்பதும் அக்காலக் கல்வெட்டுக்களினால் தெரிகின்றன, இவ்வாறு சீரும் சிறப்புமாக விளங்கிய நாடகம் பிற்காலத்தில் சமணர் கொள்கையாலும் பாமரர்களாலும் இழிந்த நிலை அடையலாயிற்று. இதனால்…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 4
(புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 3 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி : களம் : 5 காட்சி : 4 நாற்சந்தி – பொதுமக்கள், மோனைப்புலவன்அறுசீர் விருத்தம் முதியோன்1: ஆவதும் அழிவதும் பெண்ணாலேஆன்றோர் பலரும் சொன்னாரேகாவது காக்கும் வலியின்றிக்காளை காதல் வயப்பட்டான்காவலன் மனத்தை அறியாளாய்க்கன்னி காதல் கொண்டிட்டாள்மேவன எண்ணா தரசனுந்தான்மிகையாய்த் தண்டம் வித்திட்டான் எண்சீர் விருத்தம்மோனை: ஆணுக்கும் பெண்ணுக்குங்காத லின்றேல்அன்றுமுதல் இன்றுவரைஉலக மில்லைவீணுக்குப் பெண்ணடிமைஉள்நு ழைத்தார்விடிவிலையே சாதியிழிவுக்கிங்கு மட்டும்நாணுமின்றிச் சுந்தரர்க்குக்காதல் தூதுநடராசர் நடந்ததாகப்புராணஞ் சொல்லும்சாணுக்குங் குறைவானவயிற்றைக் காக்கச்சாற்றிவைத்த தல்லாமல்பயன்வே றுண்டோ…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 704-708
(தமிழ்ச்சொல்லாக்கம் 699 -703 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 704-708 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 704. Picture Gallery – ஓவியக்கூடம் பேர் பெற்ற பெரியாரால் தீட்டப்பட்ட ஓரழகிய ஓவியம் இருந்தது. ஒரு கோடீசுவரன், கலைகளின் அருமை சிறிது மறியாதவன், புகழ் கருதி அதை வாங்கித் தன் ஓவியக் கூடத்தில் (Picture Gallery)…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 36: களத்தூரின் அமைப்பு
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 35 தொடர்ச்சி) அத்தியாயம் 20 தொடர்ச்சி களத்தூரின் அமைப்பு களத்தூர் சீவநதியாகிய வடவெள்ளாற்றின் கரையிலுள்ளது. பலவகை சாதியினரும் நிரம்பப் பெற்றது. முகம்மதியர்கள் கொடிக்கால் வைத்துக்கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தனர். அவர்களிற் சிலர் தமிழ்நூற் பயிற்சியுடையவர்களாக இருந்தனர். அவ்வூரில் ஓர் அக்கிரகாரம் உண்டு. அதில் சிரீ வைணவர்கள், மாத்துவர்கள், தெலுங்கர்கள், மார்த்தர்கள் என்னும் வகையினர் வாழ்ந்து வந்தனர். சிவ விட்ணு ஆலயங்களில் விட்ணு ஆலயம் பிரபலமானது. துருக்கை முதலிய தெய்வங்களின் ஆலயங்களும் உண்டு. பல இடங்களில் நந்தவனங்களும் தோட்டங்களும் இருந்தன. களத்தூரைச்…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 34: புலவரும் ஊர்ப்பெயரும்
( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 33 தொடர்ச்சி) புலவரும் ஊர்ப்பெயரும் புலவரும் ஊர்ப்பெயரும் சங்க இலக்கியம் என்று சொல்லப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் நூல்களில் பல புலவர்கள் இயற்றிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அன்னவருள் ஊர்ப் பெயராற் குறிக்கப் பெற்றவர் சிலர். ஊர்ப் பெயரோடு தொடர்ந்த இயற் பெயர்களாற் குறிக்கப் பெற்றவர் சிலர். அப் பெயர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த இடம் பெறுவனவாகும். பொதும்பிற் புலவர் பொதும்பில் கிழார் என்பது ஒரு பழம் புலவர் பெயர். அவரும், அவர் மைந்தராகிய…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 38: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு தொடர்ச்சி
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 37: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு- தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 38 9. பழந்தமிழ்ச் சொல் அமைப்பு- தொடர்ச்சி இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு ஏற்றம் தரும் நோக்கோடு உட்பிணைப்பு மொழியே உயர் நாகரிகத்தைக் காட்டும் என்று கூறியதை அறிஞர் உலகம் ஏற்காது. தமிழ்மொழி ஒட்டுநிலைக்குரியதாகக் காணப்படுவதால் தமிழர் நாகரிகத்தால் தாழ்ந்தவர் என்று கூறிவிடுதல் பொருந்தாது. தமிழில் ஒட்டுநிலையும் உள்ளது; உட்பிணைப்பு நிலையும் உள்ளது. தெளிவான முறையில் பொருளை விளக்கவும் சொற்களை உருவாக்கவும் துணைபுரிவது ஒட்டுநிலையேயாகும். தெளிவுக்கும் எளிமைக்கும் இனிமைக்கும்…
