இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் நிறைவு – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 23 – நிறைவு திறனாய்வு (தொடர்ச்சி) இலக்கியத்தின் சமுதாய உள்ளடக்கம் பற்றிய கோட்பாடுகளும் அணுகு முறைகளும் இங்கு வளர்ச்சியடைந்தது போல் இலக்கியத்தின் உருவம் பற்றிய விமர்சனக் கோட்பாடுகளும் ஈழத்தில் இக்காலப் பகுதியில் வளர்ச்சியடைந்தன. இலக்கிய வடிவங்கள், இலக்கியப் பாகுபாடு, இலக்கிய ரசனை என்பவை பற்றிய சிந்தனைகளை இவை உள்ளடக்கின. இவ்வகையில் கவிதைக் கோட்பாடுகளை வகுத்துக் கூறும் முருகையனின் ஒரு சில விதி செய்வோம், முருகையனும், கைலாசபதியும் எழுதிய கவிதை நயம், ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன. கைலாசபதியின்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 664 – 672 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  658 – 663 இன் தொடர்ச்சி) 664. சிறப்புச் சொல்லியல் gélōs, gélōtos என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் சிரிப்பு. onomato-என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் பெயர், சொல். இங்கே சிறப்புச் சொல்லைக் குறிக்கிறது. சிறப்புச் சொல் தோற்றவியல் என முதலில் குறித்திருந்தேன். இப்பொழுது சுருக்கிச் சிறப்புச்சொல்லியல் எனக் குறித்துள்ளேன். சொல்லியல் என்றால் வேர்ச் சொல்லியல் முதலியவற்றோடு குழப்பம் நேரலாம். எனவே, அவ்வாறு குறிப்பிடவில்லை. Onomatology  665. சிறு கோல் centimetre 666. சிறு தட்பியல் காண்க…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 54

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 53. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி   ஆனாலும் இவ்வளவு தெளிவு ஏற்படவில்லையே என்று உணர்ந்தேன். சிலர் நூல்களைப் படிப்பதால் மூளையில் இன்னும் கொஞ்சம் சரக்குச் சேர்த்துக் கொள்கிறார்கள். என் நிலைமை அப்படித்தான் இருந்தது. என் நிலை மட்டும் அல்ல. பெரும்பாலும் நிலை அதுதான். அதனால்தான் படிப்பு என்பது ஒரு சுமையாகத் தோன்றுகிறது. பாக்கிய அம்மையார் படித்த புத்தகங்களின் கருத்துகளை உணர்ந்தார்; தெளிவு பெற்றார். எங்கள் கல்விச் சுமை, உடம்பில் தோன்றும் தொந்தியும் வீண் தசைகளும்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 658 – 663: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  641 – 657 இன் தொடர்ச்சி) 658. சாறுண்ணியியல் Sapro என்னும் பழங்கிரேக்கச் சொல் அழுகிய, பதனழிந்த பொருள்களைக் குறிக்கிறது. இங்கே சாறு என்பது நற்சாற்றினைக் குறிக்க வில்லை. பதனழிந்த அழுகிய பொருள்கள் வெளிப்படுத்தும் நீர்மத்தைக் குறிக்கிறது. இத் தகைய நீரினை உண்ணும் உயிரினங்களைப்பற்றிய துறை. எனவே, அழுகியபொருள் துறை என்று சொல்லாமல் சாறுண்ணி யியல் எனப்படுகிறது. Saprobiology 659. சிதட்டியல் பார்வையின்மையியல், குருட்டியல்  எனப்படுகின்றன. நானும் முதலில் குருட்டியல் என்றே குறித் திருந்தேன். குருடு என்று சொல்வதில்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 641 – 657 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  623 – 640 இன் தொடர்ச்சி) 641. சமநிலையற்ற வெப்ப இயங்கியல் Nonequilibrium thermodynamics 642. சமநிலையியல் ísos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் சமம். Isostatics 643. சமய ஒழுக்கவியல் Religious ethics 644. சமய விழாவியல் Heortology – விழா இயல், சமய விழாவியல், விழா விளக்கவியல் என மூ வகையாகக் கூறப்படுகிறது.  விழாவியலில் சமய விழாவும் அடங்கும். விழா வளைசலியல்  (Festive ecology) எனத் தனியாக விழா குறித்த இயல் இருப்பதால் இதனைச் சமயவிழாவியல்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 29

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 28 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம்  11 தொடர்ச்சி   மனச்சான்றே பூரணிக்கு எதிரியாகி அவளை வாட்டியது. இரண்டு கைகளாலும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அவள். வேதனைச் சுமை மண்டையை வெடிக்கச் செய்துவிடும் போல் இருந்தது. சைக்கிள் ரிக்குசா ஓடிக் கொண்டிருந்தது. சைக்கிள் ரிக்குசாவுக்கு முன்னும் பின்னும் இரண்டு பக்கங்களிலும் சாவி கொடுத்த கடிகாரம் போல் மதுரை நகரம் இயங்கிக் கொண்டிருந்தது. மதுரை நகரத்து வாழ்வு ஓடிக் கொண்டிருந்தது. ரிக்குசாவுக்கு வாடகையைக் கொடுத்து அனுப்பிவிட்டு அவள் வீட்டு…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.16-20

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 11-15 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் தென்பாலி 16 இடைநில மைந்துநா றெண்ணரு கல்லிற் படவொளி மேய பவளமு முத்தும் கொடுகுட நாட்டுக் கொழும்பொரு ளோடு கடல்வளங் கண்டு களித்ததந் (நாடே,   பெருவளம் தென்பாலி 17.குணகரை குன்றங் குறும்பனை யோடு மணமிகு தெங்க மதுரைமுன் பாலை இணருபின் பாலையோ டேழ்தலை மேய உணவமல் நாற்பதோ டொன் பது நாடே. 18.கொல்லம் தோடு குமரி முதலா மல்லன் மிகும்பன் மலைவள…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 623 – 640: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  615 – 622 இன் தொடர்ச்சி) 623. கோட்பாட்டு உளவியல் நேர்பொருள் தூய உளவியல் என்பதாக இருந்தாலும் கோட்பாடு சார்ந்த இயல் என்பதால் கோட்பாட்டு உளவியல் எனப்படுகிறது. Pure Psychology 624. கோபுர இயல் Pyrgology 625. கோமாளி யியல் Clownology 626. கோரைப்புல்லியல் Caricology 627. கோல் Metre 628. கோழிப்பண்ணைப் பொருளியல் Poultry economics 629. கோழியின மரபியல்  Poultry genetics 630. கோளியல் Planetology 631. கோள் இயற்பியல் Planetary physics   632….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  615 – 622 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  608 – 614  இன் தொடர்ச்சி) 615. கைவரிஇயல் chiro-  என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கை.உள்ளங்கையில் உள்ள கோடுகள்/வரிகள் – இரேகைகள் மூலம் ஒருவரின் எதிர்காலத்தைக் கணிக்கும் கலையைக் குறிக்கிறது. எனவே, கைவரியியல் எனலாம். Chirology 616. கைவினைநுட்பியல் Craft Technology 617. கொடியியல்  vexillum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கொடி. எனவே கொடியியல் – Vexillology எனப்பட்டுள்ளது. Vexillology 618. கொப்பூழ்க்கொடி இயல் placenta  என்பதை அணையம், ஊட்டத்திண்டு, ஒட்டிடம், கருக்குடை, கருவளர் படலப்பை,…

ஈழத்துத் திறனாய்வு (தொடர்ச்சி) – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 22 திறனாய்வு 4 தேசிய இலக்கியக் கொள்கை இறுக்கமான அரசியல் சார்பை வௌிக்காட்டாததால் பொதுவாக எல்லாராலும் அஃது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் முற்போக்கு இலக்கியக் கொள்கை திட்டவட்டமான அரசியல் சார்பை உள்ளடக்குவதனால் அதற்கு எதிரான இலக்கியக் கோட்பாடுகள் உருவாகுவதற்கு அது வழிகோலியது. அந்த வகையில் 1960 களின் பிற்பகுதியில் ஈழத்து விமர்சன உலகில் இரண்டு புதிய இலக்கியக் கொள்கைகள் முன்வைக்கப் பட்டன. ஒன்று நற்போக்கு இலக்கியம், மற்றது பிரபஞ்ச யதார்த்த வாதம். நற்போக்கு இலக்கியக் கொள்கையை முன்வைத்தவர்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  608 – 614  : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  594 – 607 இன் தொடர்ச்சி) 608. கூலவியல் céréale என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் கூலம் (தானியம்)தொடர்பான. Cerealogy/ Cereology 609. கூளவியல் crappe என்னும் பழம் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் கூளம்(குப்பை). Crapology 610. கெலுடிக்கு சடங்கியல் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவிலும் மத்திய ஐரோப்பாவிலும் கி.மு.500 முதல் கி.பி. 500 வரை இருந்த மொழி, அம்மொழி பேசும் மக்கள், அவர்களின் சமயம் கெலுடிக்கு ஆகும். இச்சமயச் சடங்குகளை ஆராயும் துறை கெலுடிக்கியல். கெலுடிக்கு(Celtic) சமயத் தலைவரை…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 53

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 52. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி   முதலில் தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொன்னபோது எனக்கு அவர்மேல் வெறுப்புத் தோன்றியது. அன்பும் இரக்கமும் இல்லாத கல் நெஞ்சராக இருக்கிறாரே. கதர் உடுத்தும் காந்தி நெறியராக இருந்தும் இப்படி நடக்கக் காரணம் என்ன என்று வருந்தினேன். அடிப்படைக் காரணத்தை நான் உணரவில்லை. ஆனால் பாக்கிய அம்மையார் எவ்வாறோ உணர்ந்து கொண்டார். அதனால்தான் அந்தப் போக்கில் பேசி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அம்மையாரின் நுட்பமான…