பொழிவது அனல் மழை தானே! -பவித்திரா நந்தகுமார்

பொழிவது அனல் மழை தானே! விடுதலை வேண்டி வீழ்ந்தவர் உணர்வைப் பாடிட வேண்டும் வா மழையே! விதைக்குள் வீரம் வெளிக்கிடும் நேரம் தழுவிட வேண்டும் வா மழையே! ஈழ மண்ணில் வீசுகின்ற காற்றும் கூட காவியம் ஈகம் செய்த மாவீரம் எங்கள் வாழ்வியம் மெல்ல சாரல் பூவைத் தூவிடு சாதனைகள் பாடிடு சந்ததியை வாழ வைக்கும் கல்லறையைத் தழுவிடு களம் பல ஆடித் தாய் நிலம் காத்த விழி தொட வேண்டும் வா மழையே! காவியப் பூக்கள் கால் தடம் தேடி கரைந்திட வேண்டும்…

கடவுளாய் நின்ற மழை! – தமிழ்சிவா

மழை உச்சந்தலையில் உட்கார்ந்து கிச்சுகிச்சு மூட்டும் ஒரு குழந்தை மழை! காலை நேரத்தில் ‘கோல’ப்பெண்களுடன் கொஞ்சி விளையாடும் ஒரு குறும்பு மழை! காயசண்டிகைக் கடலை நேயமுடன் நெருங்கி முத்தமிடும் ஒரு முத்து மழை! அரசியல் பிழைத்தோர்க்கு வாரக்கணக்கில் வகுப்பெடுக்கும் ஒரு புரட்சி மழை! ஆறுகளைக் கூறுபோட்ட அறிவிலார் மூளைக் கழிவுகளை அகற்றும் ஒரு துப்புரவு மழை! செம்புலப் பெயல்நீராய்த் தோன்றிச் சங்கப்புலவர்க்குக் காதல்சொன்னது ஓர் அந்தி மழை! முத்தொழில் செய்து கடவுளாய் நின்ற மழை! களவாடப்பட்ட எல்லாவற்றையும் மீட்டெடுக்க மீண்டும் மீண்டும் பெய்யெனப்பெய்து வென்ற…

நான் கடலுக்கே போகிறேன்! – மாவீரன் மணிகண்டன்

‪ அழைத்ததால் வந்தேன்! வழியடைத்துத் துரத்துகிறாயே! நெஞ்சுருகிக் குமுறியதால்தானே வந்தேன்! பஞ்சம் என்று கதறியதால்தானே வந்தேன்! கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன், உனக்காகக் கீழ் இறங்கினேன்! கொஞ்சமும் நினைவு இல்லையா? வஞ்சனை செய்கிறாயே… என்னை அழைத்து விட்டு…! வறண்ட என் நிலக் காதலி நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்…. சுரண்டி அவள் மேனியெல்லாம் பைஞ்சுதையாலே(சிமெண்டாலே) போர்த்தி வைத்தாய்! நனைத்து அணைப்பதாலே உடல் குளிர நலம் கொள்வாள்! அனைத்தும்  மறுதலித்து, கடல் சேரவே வழி செய்தாய்! குளம் குட்டை ஏரியென அங்கங்கே தங்கியிருந்தேன்! வளம் கொழித்த அத்தனைக்கும் பங்கம்…

மழையே ! – க.தமிழமல்லன்

ஓலமிட் டழுதிடும் உன்மகற் குதவுநீ! மண்மேல் மட்டும் மழைநீ பெய்தால் மக்களுக் கெதுவும் சிக்கல் இல்லை! மனைக்குள் புகுந்தாய், மாடியில் ஏறினாய், மயக்கிடும் திருடன் புகுவது போலே! மகிழுந் தெல்லாம் மறைந்து மூழ்கிட, மழையே பொழிந்தாய்! மடைகளை உடைத்தாய், ஏரியைத் திறந்தாய், ஏழையர் வாட, மாரியே வெளுத்தாய்! மாந்தர் வாழ்க்கை, குலையச் செய்தாய்! தலைமேல் ஏறினாய்! நிலைமையோ மோசம்! தலைநகர் எங்கே? மின்விசை உணவு,வெண்பால்,குடிநீர் என்னும் தேவைகள் எங்கே தொலைத்தாய்? பேருந் தில்லை, சிற்றுந் தில்லை! யாரும் பணத்தை எடுத்திட வழியிலை ! கன்னெய்…

புறப்படு புறப்படு பேய்மழையே! – மு.பாலசுப்பிரமணியன்

புறப்படு புறப்படு பேய்மழையே! வா வா மழையே என்றழைத்தோம் வந்து கொட்டித் தீர்க்கின்றாய் சாவா வாழ்வா நிலை எமக்கு சற்றே பொறுக்க மாட்டாயா? போய்வா என்றே சொல்கின்றோம் புறப்படு புறப்படு பேய்மழையே! தாய்பிள்ளை முதியவர் தவிக்கின்றார் தாமதம் இனியும் ஏன் மழையே ஊடகம் முழுதும் உன்னாட்சி உயிருக்கு போராடும் நிலையாச்சு நாடகம் ஏனோ பேய்மழையே நலங்கெட பெய்தல் முறையாமோ? எங்கே பேரிடர் என்றாலும் எங்கள் மக்கள் உதவிடுவார் இங்கே வெள்ளம் சூழ்கையிலே எங்கே போவார் எம்மக்கள்? இயற்கையே சீற்றம் குறைத்துவிடு இனியும் வேண்டாம் விளையாட்டு…

நெடுந்துயர் அகன்றேயோடும் ! – எம்.செயராமன்

வான்முகில் வளாது பெய்கவென வாயார வாழ்த்துப் பாடி வையத்தில் விழாக்கள் தோறும் மனமாரப் பாடி நிற்போம் வாழ்த்தினைக் கேட்டு விட்டு வானுறை தேவர் எல்லாம் வையகம் வாழ்க எண்ணி மாமழை பொழியச் செய்வர் வறண்டு நிற்கும் பூமியெல்லாம் வான் மழையைக் கண்டுவிட்டால் மகிழ்வு கொண்டு வானோக்கி மனதார நன்றி சொல்லும் வயல்நிறையும் குளம் நிறையும் வயலுழுவார் மனம் மகிழும் தினமும் மழை பெய்கவென தீர்மானம் எடுத்தும் நிற்பார் அகமகிழ வைக்கும் மழை ஆபத்தைத் தந்த திப்போ அனைவருமே மழை பார்த்து அலமந்தே நின்று விட்டார்…

மழை வேண்டும்!

ஊசி போல மின்னி மின்னி                 ஊர் செழிக்கப் பெய்யும் மழை காசு போல மின்னி மின்னி                 காடு செழிக்கப் பெய்யும் மழை பணம் போல மின்னி மின்னி                 பட்டண மெல்லாம் பெய்யும் மழை தேச மெல்லாம் செழித்திடவே                 செல்ல மழை பெய்ய வேண்டும் செல்ல மழை பெய்திடவே                 குளங்க ளெல்லாம் பெருக வேண்டும் பெருகி நின்ற குளங் களிலே                 பெருமை யோடு ஆட வேண்டும் – நாட்டுப்புறப் பாடல்  

தேவதானப்பட்டியில் தென்னை மரங்கள் கருகின!

தேவதானப்பட்டிப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை! இடிவிழுந்து தென்னை மரங்கள் கருகின!   தேவதானப்பட்டிப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்தது. தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த சில வாரங்களாகக் கோடை வெயில் வாட்டி எடுத்தது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல அவதிப்பட்டனர். இந்நிலையில் கடந்தவாரம் மாலை 5.00 மணியளவில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது. அதன் பின்னர் பயங்கரக் காற்று வீசியது. அக்காற்றால் ஆங்காங்கே உள்ள விளம்பரப் பதாகைகள், தற்காலிகப் பந்தல்கள், கோயில் விழாக்களுக்கு அமைக்கப்பட்ட பந்தல்கள் சாய்ந்தன.   இந்நிலையில்…

தேனியில் சீர்கெட்ட அரசுப்பேருந்துகள்

தேனிப் பகுதியில் பேணுகையின்றி இயங்கும் அரசுப்பேருந்துகள்   தேனிப்பகுதியில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் பேணப்படாமல் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.   தேவதானப்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டியில் இருந்து கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டியில் இருந்து பொம்மிநாயக்கன்பட்டி வழியாக குள்ளப்புரம் செல்கின்ற அரசுப்பேருந்துகள் தக்கமுறையில் பேணப்படுவதில்லை. இதனால் மழைக் காலங்களில் பேருந்துகளில் மழைத்தண்ணீர் கூரையின் வழியாக வந்து பொதுமக்கள் குடைபிடித்துச்செல்லும் அவலநிலை உள்ளது.   சில பேருந்துகளில் இருக்கைகள் உடைந்துள்ளன; உடைந்த இருக்கைகளின் இரும்புத்துகள்கள் பயணிகளுக்கு இரத்தக்காயம் ஏற்படுத்திவிடுகிறது. மேலும் பேருந்தின் நடுப்பகுதி, ஓட்டுநர் அண்மையில் பெரிய பெரிய…

தேனிப் பகுதியில் தொடர்மழை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தேனிப்பகுதியில் பகுதியில் தொடர்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டிப் பகுதிகளில் தொடர்ந்து இரவு பகலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் விட்டு விட்டும் சில இடங்களில் விடாமல் தொடர்ந்தும் மழை பெய்துவருகிறது. இதனால் சில்வார்பட்டி, குள்ளப்புரம், தேவதானப்பட்டி முதலான பகுதிகளில் உள்ள கண்மாய்கள், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்மழை காரணமாகப் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கின்றனர். மேலும் பண்டிகைக்காலத்தில் யாரும் வெளியே தலைகாட்டமுடியாத அளவிற்கு மழை பொழிவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

தேனிப் பகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகள்-பொதுமக்கள் அவதி

தேனிப் பகுதியில் கடந்த சில நாளாகப் பெய்த மழையின் காரணமாகச் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.    இருவழிச்சாலை அமைக்கும் பணியும் புறவழிச்சாலை அமைக்கும் பணியும் நடைபெற்றது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து தேவதானப்பட்டி வரை சாலைவேலைகள் நடைபெற்றன. அதன் பின்னர் அப்பணி நிறுத்தப்பட்டது. அப்போது இருந்தே தேவதானப்பட்டிச் சாலைகள் பழுதடைந்தன.  இருவழிச்சாலை அமைக்கப்படும்போது அச்சாலை செப்பனிடப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்தது. தற்பொழுது அந்தப்பணி நிறுத்தப்பட்டது. இதனால் தேவதானப்பட்டியிலிருந்து பெரியகுளம் வரை செல்லும் சாலையும், தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை செல்லும் சாலையும் பழுதடைந்துள்ளன….