நாடிவந்து நிற்குமன்றோ! – மெல்பேண் செயராமர்

              நாடிவந்து நிற்குமன்றோ!                நாநயம் இருந்துவிட்டால்              நாணயம் நமக்குவரும்              பேய்மனம் கொண்டுவிட்டால்              பிணம்போல ஆகிடுவர்              தூய்மையது மனமேறின்              துட்டகுணம் மறைந்துவிடும்    …

இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது! – மெல்பேண் செயராமர்

இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது!    கருங்கூந்தல் நிறைந்திருக்க கன்னமதில் குழிகள்விழ விளியிரண்டும் மீனெனவே வெண்மைநிற முகத்தினிலே    மருண்டோடி பார்த்திருக்க    வட்டநிலா வருவதுபோல் இடைஇருந்தும் தெரியாமல் அவள்வருவாள் நடைபயின்று    அதைக்காண ஆவலுடன்   அன்றாடம் காத்திருப்பேன் !    பலபேர்கள் வந்தாலும்    பார்த்துவிடா என்பார்வை    இவள்மட்டும் வந்தவுடன்    எனைமீறிச் சென்றுவிடும்    நினைவெல்லாம் அவளாக    நிறைந்திருக்கும் காரணத்தால்    அவள்வருகை மட்டுமெந்தன்    அகத்தினுள்ளே புகுந்துவிடும் !    சிலவேளை அவள்பார்ப்பாள்    பலவேளை நான்பார்ப்பேன்  …

குதித்தெழுந்து வாருங்கள் ! – மெல்பேண் செயராமர்

குதித்தெழுந்து வாருங்கள் !   படித்தவரும் குடிக்கின்றார் பாமரரும் குடிக்கின்றார் அடுத்துவரும் விளைவுபற்றி ஆருமே மனத்திலெண்ணார் குடிபற்றித் தெரிந்திருந்தும் குடியொழிக்க மறுக்கின்றார் அடியோடு குடியொழித்தால் அனைவர்க்கும் ஆனந்தமே !   குடித்திவிடும் வேளையிலே குணமெல்லாம் மாறிவிடும் அடித்துடைத்து அத்தனையும் அவர்நாசம் செய்திடுவார் பிடித்தமுள்ளார் முன்னாலும் பேயாக மாறிடுவார் எடுத்துரைக்கும் எச்சொல்லும் ஏறிவிடா அவர்களுக்கு !   அம்மாவை மதியார்கள் அப்பாவை மதியார்கள் ஆர்வந்து நின்றிடினும் அவர்மதிக்க மாட்டார்கள் என்னதான் செய்கின்றோம் என்பதையும் அறியாது ஈனத்தனமாக எத்தனையோ செய்து நிற்பார் !   கொலைகூடச் செய்திடுவார்…

சிறக்க வாழ்ந்திட ! – மெல்பேண் செயராமர்

சிறக்க வாழ்ந்திட !   மதுவைநீ நாடாதே மதிகெட்டுப் போய்விடுவாய் மங்கையரை நாடுவதால் வலியுனக்கு வந்துவிடும் சதிசெய்யும் குணமுடையார் சகவாசம் தனைவிடுத்தால் சரியான வழிநடக்கத் தானாகப் பழகிடுவாய் ! ஏழ்மைநிலை இருப்பாரை இரக்கமுடன் அணைத்துவிடு எதிரியென எவரையுமே என்றும்நீ எண்ணாதே சோதனைகள் வந்திடினும் சோர்ந்துவிடா திருந்துவிடின் சாதனையின் நாயகனாய்த் தலைநிமிர நின்றிடுவாய் ! அறத்தினைநினை அன்பையணை சிரத்தையுடன்நீ சிறந்தனதேர்ந்திடு இறப்பினைப்பற்றி எண்ணாதிருந்திடு சிறக்கவாழ்ந்திடச் சிந்தனைசெய்திடு ! அரக்கக்குணத்தை அடியோடழித்திடு உரக்கவுண்மையை வாழ்வினிலுரைத்திடு குறைக்குள்சென்றிடா மனத்தைத்தடுத்திடு சிறக்கவாழ்ந்திடச் சிந்தையைச் செலுத்திடு ! தாழ்வுமனப்பான்மையினைத் தானழித்துநில்லு வீழ்கின்றஎண்ணம்வரின்…