என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! இன்று(ஆடி 19 / சூலை 4) முதல் நான்கு நாள் அமெரிக்க நாட்டில் சிகாகோவில் உலகத்தமிழர்கள் ஒன்றுகூடும் தமிழர் விழா நடைபெறுகிறது. தமிழறிஞர்களைப் புறக்கணித்துள்ளதாக உள்நாட்டுத் தமிழறிஞர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தொடர் படைப்பாளர்கள் வரை வருத்தம் உள்ளது. என்றாலும், சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! குழுக்கள் பொறுப்புகளில் ஈழத்தமிழர்களைப் புறக்கணித்ததாக அவர்களிடையே பெரும் ஆதங்கம் உள்ளது. என்றாலும் உலக மாநாட்டை நடத்துவது அரிதான செயல் என்ற அளவில் மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! கவியரங்கம், தமிழிசை, மரபிசை,…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180  தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190 (குறள்நெறி) பிறர் பொருளை விரும்பி அறமற்ற செயல் புரியாதே! உன்னிடம் இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பாதே! பிறர் பொருள் விரும்பி வெறிச்செயல் செய்யாதே!   அருள்வழி நின்றாலும் பிறர்  பொருள் விரும்பாதே! பிறர் பொருளைக் கொண்டு செல்வம் சேர்க்காதே! செல்வம் குறைய வேண்டாமெனில் பிறர் பொருளை விரும்பாதே! (செல்வம் சேரப்) பிறர் பொருள் விரும்பா அறவாணராய் வாழ்! அழிவு வரப் பிறர் பொருள் விரும்பு! வெற்றிக்குப்பிறர் பொருள் விரும்பாதே! முன்னால் இழித்துச்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 (குறள்நெறி)  பொறாமையால் அல்லவை செய்யாதே! (துன்பம் தரும்)  அழுக்காறு வேண்டா உனக்கு! சுற்றம் கெட வேண்டுமாயின்  பிறருக்குக் கொடுப்பதைத் தடு! செல்வம் சேர வேண்டாமெனில், பிறர் செல்வம் கண்டு பொறாமை  கொள்! நடுவுநிலை தவற விரும்பாவிடில், பிறர் பொருள் விரும்பாதே! பொறாமையாளனின் செல்வமும் பொறாமையற்றவனின் கேடும் மாறும். அழிவினுள் தள்ளும் அழுக்காறு கொள்ளாதே! (உயர வேண்டுமெனில்,) பொறாமை கொள்ளாதே! உன் குடி அழிய வேண்டுமாயின், பிறர் பொருள் விரும்பு! பிறர் பொருள்…

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் நாளை (ஆனி 04 / சூன் 19) நடை பெறுகிறது. இது பா.ச.க.வின் புதிய திட்டம் அல்ல. அதன் முந்தைய ஆட்சியிலேயே 2021 வரை நடக்க வேண்டிய மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை இவ்வாண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து  நடத்த முயன்றது. இப்பொழுது தன் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் தொடக்கததிலேயே இதற்கான முயற்சியில் இறங்கி…

கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?]

கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?] திருமாவளவன் விளக்கம் சரிதானே! தீவிரவாதத்திற்கும் பயங்கர வாதத்திற்குமான விளக்கத்தை முனைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதற்காக அவர் மீது வழக்கு தொடுத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. நான் அரசிலறிவியலைத் துணைப்பாடமாக எடுத்துப் படித்துள்ளேன்.அப்பொழுதிருந்தே தீவிரவாதியையும் பயங்கரவாதிகயையும் ஒன்றுபோல் கூறும் பழக்கம் தவறு என்ற கருத்து உடையவன். சில இடங்களில் இது குறித்துப் பேசியும் எழுதியும் உள்ளேன். இப்பொழுது வி.சி.க.தலைவர் இந்த விளக்கத்தைக் கூறுவது…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160  தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 (குறள்நெறி)  நற்குணம் நீங்காமல் காத்திடப் பொறுமையைக் காத்திடு!. பொறுத்தவரைப் பொன்போல் போற்று! ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்து என்றும் புகழ் பெறு! பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே! செருக்கினை வெல்ல பொறு! துறவியினும் தூயராகத் தீச்சொல் தாங்கு! தீச்சொல் பொறு! அழுக்காறு இன்மையை ஒழுக்காறு ஆகக் கொள்! இணையற்று வாழ அழுக்காறு இன்றி இரு! அறன் ஆக்கம்  வேண்டுமெனின், பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாதே!   (தொடரும்)இலக்குவனார்…

முனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்!

முனைவர் இரா.மோகன்பிரியா விடை பெற்றார்! எழுத்தாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், தமிழ்த் தேனீ பேராசிரியர் முனைவர் இரா.மோகன் இன்று(வைகாசி 29,2050 / 12.06.2019)  காலை மாரடைப்பால் மரணமுற்றார். நேற்று நெஞ்சகநோய்ப் பாதிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் இன்று திரும்பவில்லை.  ஆய்வு மாணாக்கர்களுக்கு வழிகாட்டியாகவும் நூல்களுக்கு அணிந்துரை, திறனாய்வு, மதிப்புரை வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்துபவராகவும் நகைச்சுவை மன்றத்தில் பங்கேற்று நகைச்சுவை வாணர்களின் ஊக்குநராகவும் புன்னகையுடனும் பண்புடனும் அனைவருடனும் பழகும் தோழராகவும் சிறந்து விளங்கிய முனைவர் இரா.மோகன் தமிலுகில் இருந்து பிரியா விடை பெற்றார். செளராட்டிரக்…

கருத்துக் கதிர்கள் 09-11: இலக்குவனார் திருவள்ளுவன் [09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை. 10. இளைய உறுப்பினருக்கு அமைச்சர் பதவி தருவதில் தவறில்லை. 11. இராசன் செல்லப்பாவின் குரல் சரியே! ]

கருத்துக் கதிர்கள் 09-11  [09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை. 10. இளைய உறுப்பினருக்கு அமைச்சர் பதவி தருவதில் தவறில்லை. 11. இராசன் செல்லப்பாவின் குரல் சரியே! ] 09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை.  பா.ச.க.வின் கடந்த ஆட்சியிலும் அமைச்சரவையில் தமிழர்களுக்கு உரிய முதன்மை தரவில்லை. இப்பொழுது அடியோடு பங்களிப்பு தரவில்லை. பிற மாநிலத்தைச் சேர்ந்த தமிழர் இருவர் அமைச்சரவையில் இருப்பது மகிழ்ச்சிதான். எனினும் இவர்களைத் தமிழ்நாட்டின் சார்பாளர்களாகச் சிறிதும் கருத இயலாது.  இன்றைய நிதியமைச்சர் முன்பு…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160 (குறள்நெறி)  நம்பியவர் மனைவியை நாடாதே! பிறன்மனை புகுந்து  சிறியோன் ஆகாதே! பிறர் மனைவியை நாடாதே! பிறர் மனைவியை விரும்பாதே! அறவாழ்வு வேண்டுமெனில், பிறர்மனைவியை விரும்பாதிரு!   (அறத்தைத் தழுவப்,) பிறர் மனைவியைத் தழுவாதே!   பிறர் மனைவியை விரும்பா அறம் புரி! தோண்டுநரைத் தாங்கும் நிலம்போல் இகழ்வாரைத் தாங்கு! பிறர் தீங்கைப் பொறுத்தலினும் மற! அறிவின்றித் தீங்கிழைப்போரைப் பொறு!  (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170]

வெருளி அறிவியல் 34 – 37 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல்  –  31-33 தொடர்ச்சி) வெருளி அறிவியல் 34 – 37  34. ஆண்வெருளி– Androphobia/Arrhenphobia/Hominophobia ஆண்களைக் கண்டால் ஏற்படும் அச்சம் ஆண் வெருளி. ஆண்களைக் கண்டு அஞ்சுவது குறித்துக் கூறுவதால் இது பெண்களுக்கு வரும் எனப் புரிந்து கொள்ளலாம். ஆடவர் தங்களை அடக்கி ஒடுக்குவார்கள், துன்பம் இழைப்பார்கள், தவறாக  நடந்து கொள்வார்கள், தவறான முறையில் பழகி அவப்பெயர் ஏற்படுத்துவார்கள் என்று பல வகைகளில் ஆண்கள் மீது வரும் பேரச்சம். இத்தகையோர் ஆண்கள் மீதுள்ள அச்சத்தால் பொது வண்டிகளில் ஏறாமல் பெண்கள் வண்டிகளில்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 (குறள்நெறி)  (ஆக்கம் சேரவேண்டுமெனில்,) அழுக்காறு கொள்ளாதே! (உயர்வு வேண்டுமெனில்,) ஒழுக்கம் இல்லாதிராதே! (இழிவின் துன்பம் அறிந்து) ஒழுக்கம் தவறாதே! ஒழுக்கத்தால் மேன்மையுறு! ஒழுக்கந்தவறிப் பழி அடையாதே! (நன்றே தரும்) நல்லொழுக்கம் பேணு! (துன்பமே விளைவிக்கும்) தீயொழுக்கம் நீக்கு! தவறியும் இழிந்தன பேசாதே! உலகத்தாரோடு இணங்கி வாழ்! பிறர் மனைவியை விரும்பாதே! (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160]

வெருளி அறிவியல் 31 – 33 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல்  முந்தைய பகுதி தொடர்ச்சி) வெருளி அறிவியல் 31 – 33   31.ஆடை வெருளி – Vestiphobia ஆடை குறித்த அளவுகடந்த பேரச்சம் ஆடை வெருளி. குழந்தைப்பருவத்தில் உடை உடுத்துவது குறித்த எரிச்சல் விருப்பமின்மை முதலியன வளர்ந்து இத்தகைய பேரச்சத்தை உருவாக்குவதும் உண்டு. படைத்துறை முதலான சீருடைத் துறைகளில் பணியாற்றுவோருக்கு ஆடை வெருளி உள்ளது. தாய் அல்லது தந்தைக்கு ஆடை வெருளி இருந்தால் பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். புதுவகை ஆடைகளைக் கண்டு எரிச்சலுற்று ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர். vestis…